Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம்
மூன்றாவது - ஆரணிய காண்டம்
(இரண்டாம் பகுதி) , படலங்கள் 7-11

rAmAyaNam
of kampar /canto 3 (AraNiya kAnTam), part 2
(paTalams 7-11, verses 3164-3809)
In tamil script, unicode/utf-8 format



    Acknowledgements:
    Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for
    providing us with a romanized transliterated version of this work and for permissions
    to publish the equivalent Tamil script version in Unicode encoding
    We also thank Mr. S. Govindarajan for proof-reading the Tamil script version
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2012.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are


    http://www.projectmadurai.org/


கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - மூன்றாவது - ஆரணிய காண்டம்
(இரண்டாம் பகுதி) /படலங்கள் 7- 11


3.7 . மாரீசன் வதைப் படலம் 3164 -3416

3.8 . சடாயு உயிர் நீத்த படலம் 3417 - 3641

3.9 . அயோமுகிப் படலம் 3642 - 3742

3.10 . கவந்தன் வதைப் படலம் 3743 -3800

3.11 . சவரி பிறப்பு நீங்கு படலம் 3801- 3809


3.7 . மாரீசன் வதைப் படலம் (3164 -3416)

சூர்ப்பணகை வந்தபொழுது இராவணன் இருந்த நிலை (3164-3186)



3164 - இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை
        மறந்தனள் , போர் இராமன் துங்க
வரைப் புயம் அத்து இன் இடை கிடந்த பேர் ஆசை
        மனம் கவற்ற , ஆற்றாள் ஆகித்
'' திரைப் பரவைப் பேர் அகழித் திருநகரில்
        கடிது ஓடிச் சீதை தன்மை
உரைப்பென் '' எனச் சூர்ப்பணகை வர , இருந்தான்
        இருந்த பரிசு உரைத்தும் , மன் , ஓ . - 3.7.1



3165 - நிலை இலா உலகினிடை நிற்பனவும்
        நடப்பனவும் நெறியின் ஈந்த
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது ,
        நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல்
உலைவு இலா வகை உழந்த தருமம் என ,
        நினைந்த எலாம் உதவும் தச்சன்
புலன் எலாம் தெரிப்பது , ஒரு புனை மணி மண்டபம்
        அதனில் பொலிய , மன் , ஓ . - 3.7.2



3166 - புலியின் அதள் உடையானும் , பொன் ஆடை
        புனைந்தானும் , பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர் ; தேவரின் இங்கு
        யாவர் இனி நாட்டல் ஆவார் ?
மெலியும் இடை , தடிக்கும் முலை , வேய் இளந் தோள் ,
        சேய் அரிக்கண் , வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத
        மகுடம் நிரை வயங்க , மன் , ஓ . - 3.7.3



3167 - பண்டு அலங்கு திசைக் களிற்றின் பணை மருப்பின்
        இணை ஒடியப் படர்ந்த பொன் தோள்
விண் தலங்கள் உற வீங்கி , ஓங்கு உதய மால்
        வரையின் விளங்க , மீதில்
குண்டலங்கள் , குல வரையை வலம் வருவான்
        இரவி கொழுங் கதிர் சூழ் கற்றை
மண்டலங்கள் பன்னிரண்டும் நால் ஐந்து ஆய்ப்
        பொலிந்த என வயங்க , மன் , ஓ . - 3.7.4



3168 - வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின்
        தொகை வழங்க , வயிரக் குன்றத்
தோள் எலாம் படி சுமந்த விட அரவின் படம்
        நிரையின் தோன்ற , ஆன்ற
நாள் எலாம் புடை தயங்க , நாம நீர்
                இலங்கையில் தான் நலங்க இட்ட
கோள் எலாம் கிடந்த நெடுஞ் சிறை
அன்ன நிறை ஆரம் குலவ , மன் , ஓ . - 3.7.5



3169 - ஆய்வு அரும் பெருவலி அரக்கர் ஆதியோர்
நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால் ,
தேய்வு உறத் தேய்வு உறப் பெயர்ந்து , செஞ் சுடர்
ஆய் மணிப் பொலன் கழல் அடி நின்று ஆர்ப்பவே . - 3.7.6



3170 - மூவகை உலகினும் முதல்வர் முந்தையோர் ,
ஓவலர் உதவிய பரிசின் ஓங்கல் போல் ,
தேவரும் அவுணரும் முதலினோர் திசை
தூவிய நறுமலர்க் குப்பை துன்னவே . - 3.7.7



3171 - இன்ன போது இவ் வழி நோக்கும் என்பதை
உன்னலர் , கரம் தலம் சுமந்த உச்சியர் ,
மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள்
துன்னினர் முறை முறை துறையில் சுற்றவே . - 3.7.8



3172 - மங்கையர் திறத்து ஒரு மாற்றம் கூறினும் ,
தங்களை ஆம் எனத் தாழும் சென்னியர் ,
அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர் ,
சிங்க ஏறு எனத் திறல் சித்தர் சேரவே . - 3.7.9



3173 - அன்னவன் அமைச்சரை நோக்கி , ஆண்டு ஒரு
நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர் ,
'' என்னைகொல் பணி ? '' என இறைஞ்சுகின்றனர்
கின்னரர் , பெரும் பயம் கிடந்த நெஞ்சினர் . - 3.7.10



3174 - பிரகர நெடுந்திசைப் பெருந்தண்டு ஏந்திய
கரதலத்து அண்ணலைக் கண்ணின் நோக்கிய
நரகினர் ஆம் என நடுங்கும் நாவினர் ,
உரகர்கள் , தம் மனம் உலைந்து சூழவே . - 3.7.11



3175 - திசை உறு கரிகளைச் செறுத்துத் தேவனும் ,
வசை உறக் கயிலையை மறித்து , வான் எலாம்
அசை உறப் புரந்தரன் அடர்த்த தோள்களின்
இசையினைத் தும்புரு இசையின் ஏத்தவே . - 3.7.12



3176 - சேண் உயர் நெறிமுறை திறம்பல் இன்றியே
பாணிகள் பணி செயப் பழுது இல் பண்ணிடை ,
வீணையின் நரம்பிடை விளைந்த தேமறை ,
வாணியின் , நாரதன் செவியின் வார்க்கவே . - 3.7.13



3177 - மேகம் என் துருத்தி கொண்டு ,
        விண்ணவர் தருவும் விஞ்சை
நாகமும் சுரந்த தீம் தேன் ,
        நறும் புனலோடு அளாவித்
தோகையர் துகிலில் தோயும்
        என்பது ஓர் துணுக்கத்தோடும் ,
சீகர மகர வேலை
        காவலன் சிந்த , மன் , ஓ . - 3.7.14



3178 - நறை மலர்த் தாதும் , தேனும்
        நளிர் நெடு மகுட கோடி
முறை முறை இறைஞ்சச் சிந்தி
        முரிந்து உகும் மணியும் , முத்தும் ,
தறையிடை உகாத முன்னம்
        தாங்கினன் தழுவி வாங்கித்
துறை தொறும் தொடர்ந்து நின்று
        சமீரணன் துடைப்ப , மன் , ஓ . - 3.7.15



3179 - மின்னுடை வேத்திரக் கையர் , மெய்புகத்
துன் நெடுங் கஞ்சுகத் துகிலர் , சோர்வு இலர் ,
பொன்னொடு வெள்ளியும் புரந்தர ஆதியர்க்கு
இன் இயல் முறை முறை இருக்கை ஈயவே . - 3.7.16



3180 - சூலமே முதலிய துறந்து , சுற்றிய
சேலையால் , செறிய வாய் புதைத்த செங்கையன் ,
தோல் உடை நெடும் பணை துவைக்கும் தோறு எலாம் ,
காலன் வந்து இசைக்கும் நாள் கடிகை கூறவே . - 3.7.17



3181 - நயம் கிளர் நானம் நெய் அளாவி , நந்தல் இல்
வியன் கருப்பூரம் மென் பஞ்சி மீக் கொளீஇக்
கயங்களில் மரை மலர்க் காடு பூத்து என ,
வயங்கு எரிக் கடவுளும் விளக்கம் மாட்டவே . - 3.7.18



3182 - அதிசயம் அளிப்பதற்கு அருள் அறிந்து , நல்
புதிது அலர் கற்பகத் தருவும் , பொய் இலாக்
கதிர்நெடு மணிகளும் , கறவை ஆன்களும் ,
நிதிகளும் , முறை முறை நின்று , நீட்டவே . - 3.7.19



3183 - குண்டலம் முதலிய குலம் கொள் பேர் அணி
மண்டிய பேர் ஒளி வயங்க வீசலால் ,
'' உண்டு கொல் இரவு இனி உலகம் ஏழினும் ?
எண் திசை மருங்கினும் இருள் இன்று '' என்னவே . - 3.7.20



3184 - கங்கையே முதலிய கடவுள் கன்னியர் ,
கொங்கைகள் சுமந்து , இடை கொடியின் ஒல்கிடச்
செங்கையின் அரிசியும் மலரும் சிந்தினர் ,
மங்கலம் முறை முறை கூறி வாழ்த்தவே . - 3.7.21



3185 - ஊருவில் தோன்றிய உயிர்பெய் ஓவியம் ,
காரினில் செருக்கிய கலாப மஞ்ஞை போல் ,
வார் விசி கருவியோர் வகுத்த பாணியின் ,
நாரியர் , அரும் நடம் நடிப்ப நோக்கியே . - 3.7.22



3186 - இருந்தனன் , உலகங்கள் இரண்டும் ஒன்றும் , தன்
அருந்தவம் உடைமையின் , அளவு இல் ஆற்றலில்
பொருந்திய இராவணன் , புருவக் கார்முகக்
கருந் தடங் கண்ணியர் கண்ணின் வெள்ளம் அத்து ஏ . - 3.7.23
சூர்ப்பணகை இலங்கை நகரின் வடக்கு வாயிலை அடைதல் (3187-3188)



3187 - தங்கையும் , அவ் வழித் தலையில் தாங்கிய
செங்கையள் , சோரியின் தாரை சேர்ந்து இழி
கொங்கையள் , மூக்கினள் , குழை இல் காதினள் ,
மங்குலின் ஒலிபடத் திறந்த வாயினள் . - 3.7.24



3188 - முடை உடை வாயினால் முறையிட்டு , ஆர்த்து எழு
கடை யுகம் கடல் ஒலி காட்டக் காந்துவாள் ,
குடதிசைச் செக்கரின் சேந்த கூந்தலாள் ,
வடதிசை வாயிலின் வந்து தோன்றினாள் . - 3.7.25
சூர்ப்பணகை தோற்றங்கண்டு இலங்கை நகரமக்கள் துயருறல் (3189-3207)



3189 - தோன்றலும் , தொல் நகர் அரக்கர் தோகையர்
ஏன்று எதிர் , வயிறு அலைத்து , இரங்கி ஏங்கினார் ;
மூன்று உலகு உடையவன் தங்கை மூக்கு இலள் ,
தான் தனியவள் வரத் தரிக்க வல்லரோ ? - 3.7.26



3190 - பொருக்கென நோக்கினர் , புகல்வது ஓர்கிலர் ,
அரக்கரும் இரைத்தனர் , அசனி ஆம் எனக்
கரத்தொடு கரங்களைப் புடைத்து , கண்களில்
நெருப்பு எழ விழித்து , வாய் மடித்து நிற்கின்றார் . - 3.7.27



3191 - '' இந்திரன் மேலதோ ? உலகம் ஈன்ற பேர்
அந்தணன் மேலதோ ? ஆழியானதோ ?
சந்திர மவுலிபால் தங்குமே கொல் ஓ ?
அந்தரம் '' என்று நின்று அழல்கின்றார் சிலர் . - 3.7.28



3192 - '' செப்பு உறற்கு உரியவர் தெவ்வர் யார் உளர் ?
முப்புறத்து உலகமும் அடங்க மூடிய
இ புறத்து அண்டத்தோர்க்கு இயைவது அன்று இது ;
அ புறத்து அண்டத்தோர் ஆர் ? '' என்றார் சிலர் . - 3.7.29



3193 - '' என்னையே !' இராவணன் தங்கை ' என்ற பின் ,
' அன்னையே ! ' என்று அடி வணங்கல் அன்றியே ,
உன்னவே ஒண்ணுமோ ஒருவரால் ? இவள்
தன்னையே அரிந்தனள் தான் '' என்றார் சிலர் . - 3.7.30



3194 - '' போர் இலான் புரந்தரன் , ஏவல் பூண்டனன் ;
ஆர் உலாம் நேமியான் , ஆற்றல் தோற்று போய்
நீரினான் ; நெருப்பினான் பொருப்பினான் ; இனி
ஆர் கொல் ஆம் ஈது ? '' என அறைகின்றார் சிலர் . - 3.7.31



3195 - '' சொல் பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமே ?
இல் பிறந்தார் தமக்கு இயைவ செய்திலள் ,
கற்பு இறந்தாள் எனக் கரன் கொலாம் இவள்
பொற்பு இறந்த ஆக்கினன் புகன்று '' என்றார் சிலர் . - 3.7.32



3196 - ' தத்து உறு சிந்தையர் , தளரும் தேவர் இப்
பித்து உற வல்லரே ? பிழைப்பு இல் சூழ்ச்சியார் ,
முத்திறத்து உலகையும் முடிக்க எண்ணுவார் ,
இத்திறம் புணர்த்தனர் ' என்கின்றார் சிலர் . - 3.7.33



3197 - '' இனி ஒரு கற்பம் உண்டு என்னின் அன்றி ஏ ,
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ ?
பனி வரு கானிடைப் பழிப்பு இல் நோன்பு உடை
முனிவரர் வெகுளியின் முடிபு '' என்றார் சிலர் . - 3.7.34



3198 - கரை அறு திருநகர்க் கருங்கண் நங்கைமார்
நிரை வளைத் தளிர்களை நெரித்து நெக்கனர் ,
பிரை உறு பால் என , நிலையில் பின்றிய
உரையினர் , ஒருவர்முன் ஒருவர் முந்தினார் . - 3.7.35



3199 - முழவினில் , வீணையில் , முரல் நல் யாழினில் ,
தழுவிய குழலினில் , சங்கில் , தாரையில்
எழு குரல் இன்றியே , என்றும் இல்லது ஓர்
அழு குரல் பிறந்தது அவ் இலங்கைக்கு அன்று , அரோ ! - 3.7.36



3200 - கள்ளுடை வள்ளமும் , களித்த தும்பியும் ,
உள்ளமும் ஒரு வழி கிடக்க ஓடினார் ,
வெள்ளமும் நாண் உற விரிந்த கண்ணினார் ,
தள்ளுறும் மருங்கினர் , தழீஇக் கொண்டு ஏங்கினார் . - 3.7.37



3201 - நாந்தக உழவர்மேல் நாட்டும் தண்டத்தர் ,
காந்திய மனத்தினர் , புலவி கை மிக
சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக ,
வேந்தனுக்கு இளையவள் தாளின் வீழ்ந்தனர் . - 3.7.38



3202 - பொன் தலை மரகதப் பூகம் நேர்வு உற
சுற்றிய மணி வடம் தூங்கும் ஊசலின்
முற்றிய ஆடலின் முனிவு உற்று ஏங்கினார் ,
சிற்றிடை அலமரத் தெருவு சேர்கின்றார் . - 3.7.39



3203 - எழு என மலை என எழுந்த தோள்களைத்
தழுவிய வளைத் தளிர் நெகிழத் தாமரை
முழு முகத்து இரு கயல் முத்தின் ஆலிகள்
பொழிதரச் சிலர் உளம் பொருமி விம்முவார் . - 3.7.40



3204 - '' நெய்ந் நிலைய வேல் அரசன் , நேருநரை இல்லான் ,
இ நிலை உணர்ந்தபொழுது எ நிலையன் ? '' என்னா ,
மை நிலை நெடுங்கண் மழை வான் நிலையது ஆகப்
பொய் நிலை மருங்கினர் புலம்பினர் , புரண்டார் . - 3.7.41



3205 - மனம் தலைவரும் கனவின் இன் சுவை மறந்தார் ,
கனம் தலைவரும் குழல் சரிந்து , கலை சோர ,
நனம் தலைய கொங்கைகள் ததும்பிட , நடந்தார் ,
அனந்தல் இள மங்கையர் , அழுங்கி அயர்கின்றார் . - 3.7.42



3206 - '' அம் கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன்
தங்கை நிலை இங்கு இது கொல் ? '' என்று தளர்கின்றார் ,
கொங்கை இணை செங்கையின் மலைந்து , குலை கோதை
மங்கையர்கள் நங்கை அடி வந்து விழுகின்றார் . - 3.7.43



3207 - '' இலங்கையில் விலங்கும் இவை எய்தல் இல என்றும் ,
வலம் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்ன ,
நலம் கையில் அகன்றதுகொல் , நம்மின் ? '' என நைந்தார் ,
கலங்கல் இல் கருங்கண் இணை வாரி கலுழ்கின்றார் . - 3.7.44



3208 - சூர்ப்பணகை இராவணனடிகளில் விழுந்து புரளுதல்
என்று , இனைய வன் துயர் இலங்கை நகர் எய்த ,
நின்றவர் இரும் தவரொடு ஓடும் நெறி தேடக்
குன்றின் அடி வந்துபடி கொண்டல் என , மன்னன்
பொன் திணி கரும் குழல் விழுந்தனள் , புரண்டாள் . - 3.7.45
இராவணன் வெகுளியின் விளைவு (3209-3212)



3209 - மூடினது இருள் படலை மூவுலகும் முற்றச்
சேடனும் வெரு கொடு சிரக் குவை நெளித்தான் ,
ஆடின குலக் கிரி , அருக்கனும் அயிர்த்தான் ,
ஓடின திசைக் கரிகள் , உம்பரும் ஒளித்தார் . - 3.7.46



3210 - விரிந்த வலயங்கள் மிடை தோள் படர , மீது இட்டு
எரிந்த நயனங்கள் எயிறின் புறம் எரிப்ப ,
நெரிந்த புருவங்கள் நெடு நெற்றியினை முற்றத்
திரிந்த புவனங்கள் , வினை தேவரும் அயர்த்தார் . - 3.7.47



3211 - தென் திசை நமன்தன் ஒடு தேவர் குலம் எல்லாம் ,
'' இன்று இறுதி வந்தது நமக்கு '' என இருந்த ;
நின்று உடல் நடுங்க , உயிர் விம்மி நிலை நில்லாது ,
ஒன்றும் உரையாடல் இலர் உம்பரினொடு இம்பர் . - 3.7.48



3212 - இராவணன்' இது செய்தார் யார் ? ' என வினவுதல்
மடித்த பில வாய்கள் தொறும் வந்து புகை முந்தத்
துடித்த தொடர் மீசைகள் சுறு கொள உயிர்ப்பக்
கடித்த கதிர் வாள் எயிறு மின் கனல , மேகத்து
இடித்த உருமு ஒத்து உரறி ,'' யாவர் செயல் ? '' என்றான் . - 3.7.49



3213 - சூர்ப்பணகை கூறுதல்
'' கானிடை அடைந்து புவி காவல்புரிகின்றார் ,
மீன் உடை நெடும் கொடியினோன் அனையர் , மேல் கீழ்
ஊன் உடை உடம்பு உடைமையோர் உவமை இல்லார் ,
மானிடர் , தடிந்தனர்கள் வாள் உருவி ;'' என்றாள் . - 3.7.50



3214 - இராவணன் மீட்டும் வினாவுதல்
'' செய்தனர்கள் மானிடர் '' எனத் திசை அனைத்தும்
எய்த நகைவந்தது ; எரி சிந்தின கண் எல்லாம் ;
'' நொய்து அவர் வலி தொழில் ; நுவன்ற மொழி ஒன்றோ ?
பொய் தவிர் ; பயத்தை ஒழி ; புக்க புகல் '' என்றான் . - 3.7.51
சூர்ப்பணகை மீண்டும் கூறுதல் (3215-3220)



3215 - '' மன்மதனை ஒப்பர் மணி மேனி ; வட மேருத்
தன் மதன் அழிப்பர் திரள் தோளின் வலி தன்னால் ;
என் அதனை இப்பொழுது இசைப்பது ? உலகு ஏழின்
நல் மதன் அழிப்பர் ஒர் இமைப்பின் நனி வில்லால் . '' - 3.7.52



3216 - '' வந்தனை முனித்தலைவர்பால் உடையர் ; வானம் அத்து
இந்துவின் முகத்தர் ; எறி நீரில் எழும் நாளக்
கந்த மலரைப் பொருவு கண்ணர் , கழல் , கையர் ;
அந்தம் இல் தவத் தொழிலர் ; ஆர் அவரை ஒப்பார் ? '' - 3.7.53



3217 - '' வற்கலையர் , வார்கழலர் , மார்பின் அணி நூலர் ,
வில் கலையர் , வேதம் உறை நாவர் , தளிர் மெய்யர் ,
உற்கு அலையர் , உன்னை ஒர் துகள் தனையும் உன்னார் ,
சொல் கலை எனத் தொலைவு இல் தூணிகள் சுமந்தார் . '' - 3.7.54



3218 - '' ’ஆறும் மனம் அஞ்சினம் அரக்கரை ' எனச் சென்று
ஏறும் நெறி அந்தணர் இயம்ப ,' உலகு எல்லாம்
வேறும் ' எனும் நுங்கள் குலம்' வேரொடும் அடங்கக்
கோறும் ' என முந்தை ஒரு சூளுறவு கொண்டார் . '' - 3.7.55



3219 - '' மாரர் உளரே இருவர் ஓர் உலகின் வாழ்வார் ?
வீரர் உளரே அவரின் வில்லதனின் வல்லார் ?
ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ? ஐயா !
ஓரொருவரே இறைவர் மூவரையும் ஒப்பார் . '' - 3.7.56



3220 - '' தரா வலய நேமி உழவன் தயரதப் பேர்ப்
பராவரு நலத்து ஒருவன் மைந்தர் , பழி இல்லார் ,
விராவரு வனத்து அவன் விளம்ப உறைகின்றார் ,
இராமனும் இலக்குவனும் என்பர் பெயர் '' என்றாள் . - 3.7.57



3221 - இராவணன் நொந்து கூறுதல் (3221-3224)
'' மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால்
அரிந்தவரும் மானிடர் , அரிந்தும் உயிர்வாழ்வார் ;
விருந்து அனைய வாளொடும் விழித்து , இறையும் வெள்காது
இருந்தனன் இராவணனும் இன் உயிர் கொடு இன்னும் ! '' - 3.7.58



3222 - '' கொற்றம் அது முற்றி , வலியால் அரசு கொண்டேன்
உற்ற பயன் மற்று இது ; ஒல்கா உரை இறந்தேன் ;
முற்ற உலகத்து முதல் வீரர் முடி எல்லாம்
அற்ற பொழுதௌ அத்து இது பொருந்தும் எனல் ஆமே ? '' - 3.7.59



3223 - '' மூளும் உளது ஆய பழி என் வயின் முடித்தோர்
ஆளும் உளவாம் , அவரது ஆர் உயிரும் உண்டாம் ,
வாளும் உளது , ஓத விடம் உண்டவன் வழங்கும்
நாளும் உள , தோளும் உள , நானும் உளென் அன்றோ ? '' - 3.7.60



3224 - '' புத்துறவு உறப் பழி புகுந்தது என நாணித்
தத்துறுவது என்னை ? மனனே ! தளரல் ; அம்மா !
எ துயர் உனக்கு உளது ? இனிப் பழி சுமக்கப்
பத்து உள தலைப் பகுதி ; தோள்கள் பல அன்றோ ! '' - 3.7.61



3225 - இராவணன் மீட்டும் வினாவல்
என்று உரைசெயா , நகைசெயா , எரி விழிப்பான் ,
'' வன் துணை இலா இருவர் மானிடரை வாளால்
கொன்றிலர்களா , நெடிய குன்றுடைய கானில்
நின்ற கரனே முதலினோர் நிருதர் ? '' என்றான் . - 3.7.62
சூர்ப்பணகை கரன் முதலியோர் இறந்தமை சொல்லல் (3226-3227)



3226 - அற்று அவன் உரைத்தலோடும் ,
        அழுது இழி அருவிக் கண்ணள் ,
எற்றிய வயிற்றள் , பாரின்
        இடை விழுந்து ஏங்குகின்றாள் ,
'' சுற்றமும் தொலைந்தது ஐய !
        நொய்து '' எனச் சுமந்த கையள் ,
உற்றது தெரியும் வண்ணம்
        ஒருவகை உரைக்கலுற்றாள் . - 3.7.63



3227 - '' சொல் என் தன் வாயில் கேட்டார் ,
        தொடர்ந்து எழு சேனையோடும்
கல் என்ற ஒலியில் சென்றார் ,
        கரன் முதல் காளை வீரர்
எல் ஒன்று கமலச் செங்கண்
        இராமன் என்று இசைத்த ஏந்தல்
வில் ஒன்றில் கடிகை மூன்றில்
        ஏறினர் விண்ணின் '' என்றாள் . - 3.7.64



3228 - இராவணன் இரக்கமும் வெகுளியும் ஒருங்கெய்துதல்
தார் உடைத் தானையோடும் தம்பியர் , தமியன் செய்த
போரிடை மடிந்தார் என்ற உரை செவி புகாத முன்னம் ,
காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்குமா போல் ,
நீரொடு நெருப்புக் கான்ற நிறைநெடுங் கண்கள் எல்லாம் . - 3.7.65



3229 - இராவணன் சூர்ப்பணகையை நீ அவர்க்கு இழைத்த குற்றம் என் ? என வினவுதல்
ஆ இடை எழுந்த சீற்றத்து
        அழுந்திய துன்பம் ஆழித்
தீயிடை உகுக்கும் நெய்யில்
        சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய ,
'' நீ இடை இழைத்த குற்றம்
        என்னை கொல் ? நின்னை இன்னே
வாய் இடை இதழும் மூக்கும்
        வலிந்து அவர் கொய்ய ? '' என்றான் . - 3.7.66



3230 - சூர்ப்பணகை தன்பால் குற்றம் புகுந்தவாறு கூறுதல்
'' என் வயின் உற்ற குற்றம் ,
        யாவர்க்கும் எழுத ஒண்ணாத்
தன்மையன் இராமனோடும்
        தாமரை தவிரப் போந்தாள் ,
மின் வயின் மருங்குல் கொண்டாள் ,
        வேய்வயின் மென்தோள் கொண்டாள் ,
பொன் வயின் மேனி கொண்டாள் ,
        பொருட்டினால் புகுந்தது '' என்றாள் . - 3.7.67
சூர்ப்பணகை இராவணனிடம் சீதையின் அழகினை விரித்துரைத்தல் (3231-3242)



3231 - '' ஆர் அவள் ? '' என்னலோடும்
        அரக்கியும் ,'' ஐய ! ஆழ்ந்து
தேர் ; அவள் திரண்ட கொங்கை
        செம்பொன் செய் குலிகச் செப்பு ;
பார் அவள் பாதம் தீண்டப்
        பாக்கியம் படைத்தது , அம்மா !
பேர் அவள் சீதை '' என்று
        வடிவு எலாம் பேசலுற்றாள் . - 3.7.68



3232 - '' காமரம் முரலும் பாடல் ,
        கள் எனக் கனிந்த இன் சொல் ,
தேம் மலர் நிரந்த கூந்தல் ,
        தேவர்க்கும் அணங்கு ஆம் என்னத்
தாமரை இருந்த தையல்
        சேடி ஆம் தரமும் அல்லள் ;
யாம் உரை வழங்கும் என்பது
        ஏழைமை பாலது அன்று , ஓ . '' - 3.7.69



3233 - '' மஞ்சு ஒக்கும் அளக ஓதி ; மழை ஒக்கும் வடித்த கூந்தல் ;
பஞ்சு ஒக்கும் அடிகள் , செய்ய பவளத்தை விரல்கள் ஒக்கும் ;
அம் சொற்கள் அமுதில் அள்ளிக் கொண்டவள் வதனம் , ஐய !
கஞ்சத்தின் அளவிற்று ஏனும் , கடலினும் பெரிய கண்கள் . '' - 3.7.70



3234 - '' ஈசனார் கண்ணின் வெந்தான்
        என்னும் இது இழுதைச் சொல் ; இவ்
வாசம் நாறு ஓதியாளைக்
        கண்டனன் , வவ்வல் ஆற்றான் ,
பேசலாம் தகைமைத் தல்லாப்
        பெரும்பிணி பிணிப்ப , நீண்ட
ஆசையால் , அழிந்து தேய்ந்தான்
        அநங்கன் அவ் உருவம் அம்மா ! '' - 3.7.71



3235 - '' தெவ் உலகத்தும் காண்டி , சிரத்தினில் பணத்தினோர்கள்
அ உலகத்தும் காண்டி , அலைகடல் உலகில் காண்டி ,
வெவ் உலை உற்ற வேலை , வாளினை வென்ற கண்ணாள் ,
எ உலகத்தாள் ? அங்கம் யாவர்க்கும் எழுத ஒணாதாள் . '' - 3.7.72



3236 - '' தோளையே சொல்லுகேன் ஓ ?
        சுடர் முகத்து உலவுகின்ற
வாளையே சொல்லுகேனோ ?
        அல்லவை வழுத்துகேனோ ?
மீளவும் திகைப்ப தல்லால்
        தனி தனி விளம்பல் ஆற்றேன் ;
நாளையே காண்டி அன்றே ?
        நான் உனக்கு உரைப்பது என்னோ ? '' - 3.7.73



3237 - '' வில் ஒக்கும் நுதல் என்றாலும் ,
        வேல் ஒக்கும் விழி என்றாலும் ,
பல் ஒக்கும் முத்து என்றாலும் ,
        பவளத்தை இதழ் என்றாலும் ,
சொல் ஒக்கும் ; பொருள் ஒவ்வா ஆல் ;
        சொல்லலாம் உவமை உண்டோ ?
நெல் ஒக்கும் புல் என்றாலும் ,
        நேர் உரைத்தாக வற்றோ ? - 3.7.74



3238 - '' இந்திரன் சசியைப் பெற்றான் ;
        இருமூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையைப் பெற்றான் ;
        தாமரைச் செங்கணானும்
செம் திரு மகளைப் பெற்றான் ;
        சீதையைப் பெற்றாய் நீயும் ;
அந்தரம் பார்க்கின் , நன்மை
        அவர்க்கு இலை ; உனக்கே ஐயா ! '' - 3.7.75



3239 - '' பாகத்தில் ஒருவன் வைத்தான் ;
        பங்கயம் அத்து இருந்த பொன்னை
ஆகம் அத்து இல் ஒருவன் வைத்தான் ;
        அந்தணன் நாவில் வைத்தான் ;
மேகத்தில் பிறந்த மின்னை
        வென்ற நுண் இடையை , நீயும் ,
மாகத் தோள் வீர ! பெற்றால் ,
        எங்ஙனம் வைத்து வாழ்தி ? '' - 3.7.76



3240 - '' பிள்ளை போல் பேச்சினாளைப்
        பெற்றபின் பிழைக்கல் ஆற்றாய் ,
கொள்ளை போகின்ற செல்வம்
        அவளுக்கே கொடுத்தி ; ஐய !
வள்ளலே ! உனக்கு நல்லேன் ,
        மற்று நின் மனையில் வாழும்
கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம்
        கேடு சூழ்கின்றேன் . அன்று ஏ . '' - 3.7.77



3241 - '' தேர் தந்த அல்குல் சீதை ,
        தேவர்தம் உலகின் , இம்பர் ,
வார் தந்த கொங்கையார் தம்
        வயிறு தந்தாளும் அல்லள் ;
தார் தந்த கமலத் தாளைத்
        தருக்கினர் கடையச் சங்க
நீர் தந்தது , அதனை வெல்வான்
        நிலம் தந்து , நிரம்பிற்று , அன்று , ஏ . '' - 3.7.78



3242 - '' மீன்கொண்டு ஊடாடும் வேலை
        மேகலை உலகம் ஏத்தத்
தேன்கொண்டு ஊடாடும் கூந்தல் , சிறு
        இடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ ;
        உன் வாள் வலி உலகம் காண ,
யான் கொண்டு ஊடாடும் வண்ணம் ,
        இராமனைத் தருதி என்பால் . '' - 3.7.79



3243 - '' தருவது விதியே என்றால் ,
        தவம் பெரிது உடையர் ஏனும் ,
வருவது வரும் நாள் அன்றி ,
        வந்து கைகூட வற்றோ ?
ஒருபது முகமும் , கண்ணும் ,
        உருவமும் , மார்பும் , தோள்கள்
இருபதும் , படைத்த செல்வம்
        எய்துவது , இனி நீ , எந்தாய் ! '' - 3.7.80



3244 - '' 'இன்னவள் தன்னை உன்பால்
        உய்ப்பல் ' என்று எடுக்கல் உற்ற
என்னை அவ் இராமன் தம்பி ,
        இடை புகுந்து , இலங்கு வாளால்
முன்னை மூக்கு அரிந்து விட்டான் ;
        முடிந்தது என் வாழ்வு ; முன் நின்
சொன்ன பின் உயிரை நீப்பான்
        துணிந்தனென் '' என்னச் சொன்னாள் . - 3.7.81
சூர்ப்பணகை மாற்றம் கேட்ட இராவணனுக்குக் காமம் மிகுதல் (3245-3250)



3245 - கோபமும் , மறனும் , மானக்
        கொதிப்பும் , என்று இனைய எல்லாம் ,
பாபம் நின்றிடத்து நில்லாப்
        பெற்றி போல் பற்று விட்ட ;
தீபம் ஒன்று ஒன்றை உற்றால்
        என்னலாம் செயலில் புக்க
தாபமும் காம நோயும்
        ஆர் உயிர் கலந்த . அன்று , ஏ . - 3.7.82



3246 - கரனையும் மறந்தான் ; தங்கை
        மூக்கினைக் கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான் ; உற்ற
        பழியையும் மறந்தான் ; வெற்றி
அரனையும் கொண்ட காமன்
        அம்பினால் , முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான் . கேட்ட
        மங்கையை மறந்து இலாதான் . - 3.7.83



3247 - சிற்று இடை சீதை என்னும்
        நாமமும் சிந்தை தானும்
உற்று , இரண்டு ஒன்றாய் நின்றால் ,
        ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன
மற்று ஒரு மனமும் உண்டோ ?
        மறக்கலாம் வழி மற்று யாதோ ?
கற்றனர் ஞானம் இன்றேல் காமம்
        அத்து ஐ கடக்கலாமோ ? - 3.7.84



3248 - மயில் உடைச் சாயலாளை
        வஞ்சியாமுன்னம் , நீண்ட
எயில் உடை இலங்கை நாதன் ,
        இதயம் ஆம் சிறையில் வைத்தான் ;
அயில் உடை அரக்கன் உள்ளம் ,
        அவ் வழி மெள்ள மெள்ள
வெயில் உடை நாளில் உற்ற
        வெண்ணெய் போல் வெதும்பிற்று . அன்று , ஏ . - 3.7.85



3249 - விதியது வலியினானும் ,
        மேல் உள விளைவினானும் ,
பதி உறு கேடு வந்து
        குறுகிய பயத்தினானும் ,
கதி உறு பொறியின் வெய்ய
        காமம் நோய் , கல்வி நோக்கா
மதி இலி மறையச் செய்த
        தீமை போல் வளர்ந்தது . அன்று , ஏ . - 3.7.86



3250 - பொன் மயம் ஆன நங்கை
        மனம் புகப் புன்மை பூண்ட
தன்மையோ , அரக்கன் தன்னை
        அயர்த்தது ஓர் தகைமை ஆல் ஓ ,
மன்மதன் வாளி தூவி
        நலிவது ஓர் வலத்தன் ஆனான் ?
வன்மையை மாற்றும் ஆற்றல்
        காம அத்து ஏ வதிந்தது . அன்றே ? - 3.7.87



3251 - இராவணன் தன் கோயில் அடைதல்
எழுந்தனன் இருக்கை நின்று ; ஆண்டு ,
        ஏழ் உலகத்துளோரும்
பொழிந்தனர் ஆசி ஓசை ;
        முழங்கின சங்கம் எங்கும் ;
பொழிந்தனர் பூவின் மாரி
        போயினர் புறத்தோர் எல்லாம் ;
அழிந்து அழி சிந்தையோடும்
        ஆடகம் கோயில் புக்கான் . - 3.7.88



3252 - இராவணன் காமநோய் மேலும் முதிர்தல் (3252-3257)
பூவினால் வேய்ந்து செய்த
        பொங்கு பேர் அமளிப் பாங்கர்த்
தேவிமார் குழுவும் நீங்கிச்
        சேர்ந்தனன் ; சேர்தலோடும்
நாவி நாறு ஓதி நவ்வி ,
        நயனமும் குயமும் புக்குப்
பாவியாக் கொடுத்த வெம்மை
        பயப்பயப் பரந்தது அன்றே . - 3.7.89



3253 - நூக்கல் ஆகலாத காதல் நூறு நூறு கோடியாய்ப்
பூக்க , வாச வாடை வீசு சீதம் நீர் பொதிந்த மென்
சேக்கை வீ கரிந்து , திக்கயங்கள் எட்டும் வென்ற தோள் ,
ஆக்கை தேய , உள்ளம் நைய , ஆவி வேவது ஆயினான் . - 3.7.90



3254 - தாது கொண்ட சீதம் மேவு சந்து , சந்த மென் தளிர் ,
போது , கொண்டு அடுத்தபோது , பொங்கு தீ மருந்தினால்
வேது கொண்டது என்ன , மேனி வெந்து வெந்து , விம்மு தீ
ஊது வன் துருத்திபோல் , உயிர்த்து உயிர்த்து , உயங்கினான் . - 3.7.91



3255 - தாவியாது , தீது எனாது , தையலாளை மெய் உறப்
பாவியாத போது இலாத பாவி , மாழை , பானல் , வேல் ,
காவி , ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால் ,
ஆவி சால நொந்து நொந்து , அழுங்குவானும் ஆயினான் . - 3.7.92



3256 - பரம் கிடந்த மாதிரம்
        பரித்த பாழி யானையின்
கரம் கிடந்த கொம்பு ஒடிந்து
        அடங்க வென்ற காவலன் ,
மரம் குடைந்த தும்பிபோல்
        அநங்கன் வாளி வந்து வந்து
உரம் குடைந்து நொந்து நொந்து
        உளைந்து உளைந்து ஒடுங்கினான் . - 3.7.93



3257 - '' கொன்றை துன்று கோதையோடு ஒர்
        கொம்பு வந்து என் நெஞ்சு இடை
நின்றது உண்டு கண்டது '' என்று
        அழிந்து அழுங்கும் நீர்மையான் ,
மன்றல் தங்கு அலங்கல் மாரன்
        வாளி போல , மல்லிகைத்
தென்றல் வந்து எதிர்ந்தபோது
        சீறுவானும் ஆயினான் . - 3.7.94



3258 - இராவணன் மாளிகையினின்று நீங்கி ஒரு சோலையினை அடைதல்
அன்னகாலை , அங்குநின்று
        எழுந்து , அழுங்கு சிந்தையான் ,
'' இன்ன ஆறு செய்வென் '' என்று ஒர்
        எண் இலான் , இரங்குவான் ,
பன்னு கோடி தீப மாலை ,
        பாலையாழ் பழித்த சொல்
பொன் அனார் எடுக்க , அங்கு , ஒர்
        சோலை ஊடு போயினான் . - 3.7.95



3259 - இராவணன் புக்க சோலையின் இயல்பு (3259-3260)
மாணிக்கம் பனசம் ; வாழை
        மரகதம் ; வயிரம் தேமா ;
ஆணி பொன் வேங்கை ; கோங்கம்
        அரவிந்த ராகம் ; பூகம்
சேண் உற்ற நீலம் ; சாலம்
        குருவிந்தம் ; தெங்கு வெள்ளி ;
பாணித் தண் பளிங்கு நாகம் ;
        பாடலம் பவளம் . மன் , ஓ . - 3.7.96



3260 - இராவணன் அச்சோலையுள் அமைந்த மண்டபத்துள்ள படுக்கையினை அடைதல்
வான் உற நிவந்த செங்கேழ்
        மணிமரம் துவன்றி , மாக
மீனொடு மலர்கள் தம்மில்
        வேற்றுமை தெரிதல் தேற்றாத்
தேன் உகு சோலை நாப்பண் ,
        செம்பொன் மண்டபம் அத்து உள் , ஆண்டு ஓர்
பால்நிற அமளி சேர்ந்தான்
        பையுள் உற்று உயங்கி நைவான் . - 3.7.97



3261 - அச்சோலை புள்ளொலி அற்றதாதல்
கனிகளின் , மலரின் வந்த
        கள் உண்டு , களிகொள் அன்னம் ,
வனிதையர் மழலை இன்சொல்
        கிள்ளையும் , குயிலும் , வண்டும்
இனியன மிழற்றுகின்ற
        யாவையும் ,' இலங்கை வேந்தன்
முனியும் ' என்று அவிந்த வாய ,
        மூங்கையர் போன்ற அன்றே . - 3.7.98



3262 - இராவணனுக்கு அஞ்சிப் பனிப்பருவம் நீங்க வேனில் வருதல்
பருவத்தால் வாடைவந்த
        பசும்பனி , அநங்கன் வாளி
உருவிப் புக்கு ஒளித்த புண்ணில்
        குளித்தலும் , உளைந்து விம்மி ,
'' இருதுத்தான் யாது அடா ? '' என்று
        இயம்பினன் ; இயம்பலோடும் ,
வெருவிப் போய்ச் சிசிரம் நீங்கி ,
        வேனில் வந்து இறுத்தது அன்றே . - 3.7.99



3263 - இராவணன் வேனிலால் வெதும்பல் (3263-3264)
வன் பணை மரமும் தீய ,
        மலைகளும் குளிர , ஆழும்
மென் பனி எரிந்தது என்றால் ,
        வேனிலை விளம்பல் ஆமோ !
அன்பு எனும் விடம் உண்டாரை
        ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ ,
இன்பமும் துன்பம்தானும்
        உள்ளத்தோடு இயைந்த அன்றே ? - 3.7.100




3264 - மாதிரம் அத்து இறுதி காறும் ,
        தன் மனத்து எழுந்த மையல்
வேதனை வெப்பம் செய்ய ,
        வேனிலும் வெதுப்புங் காலை ,
'' யாது இது ? இங்கு இதனின் முன்னைச்
        சிசிரம் நன்று ; இதனை நீக்கிக்
கூதிர் ஆம் பருவம் தன்னைக்
        கொணருதிர் விரைவின் '' என்றான் . - 3.7.101



3265 - கூதிர்ப்பருவமும் வேதனைதர , இராவணன் பருவங்களை அகற்றக் கட்டளையிடுதல்
கூதிர் வந்து அடைந்த காலை
        கொதித்தன குவவுத் திண் தோள் ;
'' சீதமும் சுடுமோ ? முன்னைச்
        சிசிரமே காண் இது '' என்றான் ;
'' ஆதியாய் ! அஞ்சு மன்றே
        அருள் அலது இயற்ற '' என்ன ,
'' யாதும் இங்கு இருது ஆகாது ;
        யாவையும் அகற்றுக '' என்றான் . - 3.7.102



3266 - பருவம் நீங்கிய நிலையில் உலகத் தோற்றம்
என்னலும் , இருது வெல்லாம்
        ஏகின ; யாவும் தத்தம்
பன்ன அரும் பருவம் செய்யா ,
        யோகி போல் பற்று நீத்த ;
பின்னரும் உலகம் எல்லாம்
        பிணிமுதல் பாசம் வீசித்
துன் அருந்தவத்தின் எய்தும்
        துறக்கம்போல் தோன்றிற்று . அன்றே . - 3.7.103



3267 - பருவங்கள் நீங்கிய நிலையிலும் இராவணன் வருந்தல்
கூலத்தார் உலகம் எல்லாம்
        குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க ,
நீலத்து ஆர் அரக்கன் மேனி
        நெய் இன்றி எரிந்தது ; அன்றே
காலத்தால் வருவது ஒன்றோ ?
        காமத்தால் கனலும் வெம் தீ
சீலம் அத்து ஆல் அவிவது அன்றிச்
        செய்யத்தான் ஆவது உண்டோ ? - 3.7.104



3268 - உழையர் செய்த உபசாரங்களால் துயர்நீங்காத இராவணன் சந்திரனைக் கொணரும்படி கூறல்
நாரம் உண்டு எழுந்த மேகம்
        தாமரை வளையம் நானச்
சாரம் உண்டிருந்த சீதச்
        சந்தனம் தளிர் மென் தாதோடு
ஆரம் உண்டிருந்தும் சிந்தை
        அயர்கின்றான் அயல் நின்றாரை
'' 'ஈரம் உண்டு ' என்பர் ; ஓடி
        இந்துவைக் கொணர்திர் '' என்றான் . - 3.7.105
சந்திரன் தோன்றுதல் (3269-3271)



3269 - வெம் , சினத்து அரக்கன் ஆண்ட
        வியன் நகர் மீது போதும்
நெஞ்சு இலன் ஒதுங்குகின்ற
        நிறைமதியோனை நேடி ,
' அஞ்சலை வருதி ; நின்னை
        அழைத்தனன் அரசன் ' என்னச்
சஞ்சலம் துறந்து , தான் அச்
        சந்திரன் உதிக்கல் உற்றான் . - 3.7.106



3270 - அயிர் உறக் கலந்த நல் நீர்
        ஆழி நின்று ஆழி நீத்துச்
செயிர் உறக் கலந்தது ஆண்டு ஓர்
        தேய்வு வந்து உற்ற போழ்தில்
வயிரம் உற்று உடைந்து சென்றோர்
        வலியவற் செல்லுமா போல்
உயிர் தெறக் காலன் என்பான்
        ஒத்தனன் உதயஞ் செய்தான் . - 3.7.107



3271 - பரா வரும் கதிர்கள் எங்கும்
        பரப்பி மீப் படர்ந்து , வானில்
தராதலத்து எவரும் பேணா
        அவனையே சலிக்கும் நீரால் ,
அரா அணைத் துயிலும் அண்ணல் ,
        காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி
இராவணன் உயிர்மேல் உய்த்த
        திகிரியும் என்னல் ஆனான் . - 3.7.108



3272 - இராவணன் நிலவால் வருந்தல் (3272-3275)
அருகு உறு பாலின் வேலை
        அமுது எலாம் அளைந்து வாரிப்
பருகின பரந்து பய்ந்த
        நிலாச் சுடர்ப் பனிமென் கற்றை ,
நெரி உறு புருவச் செம் கண்
        அரக்கற்கு நெருப்பின் நாப்பண்
உருகிய வெள்ளி அள்ளி
        வீசினால் ஒத்தது . அன்றே . - 3.7.109



3273 - மின் நிலம் திரிந்தது அன்ன விழு நிலா , மிதிலை சூழ்ந்த
செந்நெல் அம் கழனி நாடன் திருமகள் செவ்வி கேளா ,
நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை நாளும் தோலாத்
துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் எனச் சுட்டது அன்றே . - 3.7.110



3274 - கரும் கழல் காலன் அஞ்சும் காவலன் , கறுத்து நோக்கித்
தரும் கதிர்ச்' சீத யாக்கைச் சந்திரன் தருதிர் ' என்ன ,
முருங்கிய கனலின் மூரி விடத்தினை முகக்கும் சீற்றம் அத்து
அரும் கதிர் 'அருக்கன்தன்னை ஆர் அழைத்தீர்கள் ? ' என்றான் . - 3.7.111



3275 - அவ் வழிச் சிலதர் அஞ்சி ,' ஆதியாய் ! அருள் இல்லாரை
இ வழி தருதும் என்பது இயம்பலாம் இயல்பிற்று அன்று ; ஆல் ,
செம் வழி கதிரோன் என்றும் தேரின்மேல் அன்றி வாரான் ;
வெவ் வழித்து எனினும் , திங்கள் விமானம் அத்தி இன் மேலது ' என்றார் . - 3.7.112



3276 - இராவணன் சந்திரனோடு நொந்து கூறல் (3276-3278)
பணம் தாழ் அல்குல் பணி மொழியார்க்கு
        அன்புபட்டார் படும் காமக்
குணம் தான் முன்னம் அறியாதான் ,
        கொதியாநின்றான் , மதியாலே
தண் அம் தாமரையின் தனிப் பகைஞன்
        என்னும் தன்மை ஒருதானே
உணர்ந்தான் ; உணர்வுற்று , அவன்மேல் இட்டு
        உயிர் தந்து உய்க்க உரைசெய்வான் . - 3.7.113



3277 - ' தேயா நின்றாய் , மெய் வெளுத்தாய் ,
        உள்ளம் கறுத்தாய் , நிலைதிரிந்து
காயா நின்றாய் , ஒரு நீயும்
        கண்டார் சொல்லக் கேட்டாயோ ?
பாயாநின்ற மலர் வாளி
        பறியாநின்றார் இன்மையால் ,
ஓயா நின்றேன் ; உயிர் காத்தற்கு
        உரியார் யாவர் ? உடுபதியே ! ' - 3.7.114



3278 - ஆற்றார் ஆகில் தம்மைக் கொண்டு
        அடங்காரோ ? என் ஆர் உயிர்க்குக்
கூற்றாய் நின்ற குலச் சனகி
        குவளை மலர்ந்த தாமரைக்குத்
தோற்றாய் ; அதனால் அகம் கரிந்தாய் ,
        மெலிந்தாய் , வெதும்பத் தொடங்கினாய் !
மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் ,
        வெற்றி ஆக வற்று ஆமோ ? - 3.7.115



3279 - சந்திரனும் இரவும் மறையச் சூரியனும் பகலும் தோன்றுதல்
என்னப் பன்னி , இடர் உழவா ,
        ' இரவோடு இவனைக் கொண்டு அகற்றி ,
முன்னைப் பகலும் பகலோனும்
        வருக ' என்றான் ; மொழியாமுன் ,
உன்னற்கு அரிய உடுபதியும்
        இரவும் ஒளித்த ; ஒரு நொடியில்
பன்னற்கு அரிய பகலவனும்
        பகலும் வந்து பரந்த ; ஆல் . - 3.7.116



3280 - விடியற்கால வருணனை . சூரியன் உதித்தலால்
தாமரை மலர்தலும் , ஆம்பல் குவிதலும்
இருக்கின் மொழியார் எரி முகம் அத்து இன்
        ஈந்த நெய்யின் அவிர் செம் பொன்
உருக்கி அனைய கதிர் பாய
        அனல்போல் விரிந்தது உயர் கமலம் ;
அருக்கன் எய்த அமைந்து அடங்கி
        வாழாது , அடாத பொருள் எய்திச்
செருக்கி , இடையே திரு இழந்த
        சிறியோர் போன்ற செம் ஆம்பல் . - 3.7.117



3281 - சந்திரன் ஒளிமழுங்கி மறைதல்
நாணி நின்ற ஒளி மழுங்கி ,
        நடுங்காநின்ற உடம்பினன் ஆய்ச்
சேணில் நின்று புறம் சாய்ந்து ,
        கங்குல் தாரம் பின் செல்லப்
பூணின் வெய்யோன் ஒரு திசை ஏ
        புகுதப் போவான் , புகழ்வேந்தர்
ஆணை செல்ல நிலை அழிந்த
        அரசர் போன்றான் அல் ஆண்டான் . - 3.7.118



3282 - அகால சூரியோதயத்தில் மகளிர் நிலை (3282-3284)
மணந்த பேர் அன்பரை மலரின் சேக்கையுள்
புணர்ந்திலர் இடை ஒரு வெகுளி பொங்கலால் ;
கணம் குழை மகளிர்கள் , கங்குல் நீங்கிட ,
உணர்ந்திலர் ; கனவினும் ஊடல் தீர்ந்திலர் . - 3.7.119



3283 - தள்ளுறும் உயிரினர் , தலைவர் நீங்கலால்
நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலார்
கொள்ளையின் அலர் கரும் குவளை நாள் மலர்
கள் உகுவன எனக் கலுழும் கண்ணினார் . - 3.7.120



3284 - அணை மலர்ச் சேக்கையுள் ஆடல் தீர்ந்தனர் ,
பணைகளைத் தழுவிய பவள வல்லி போல் ,
இணை மலர்க் கைகளின் இறுக இன் உயிர்த்
துணைவரைத் தழுவினர் , துயில்கின்றார் சிலர் . - 3.7.121



3285 - யானைகளின் நிலை
அளி இனம் கடம் தொறும் ஆர்ப்ப , ஆய் கதிர்
ஒளி பட , உணர்ந்தில உறங்குகின்றன ,
தெளிவு இல இன் துயில் விளையும் சேக்கையுள்
களிகளை நிகர்த்தன களிநல் யானையே . - 3.7.122



3286 - விளக்குகள் ஒளி மழுங்கினமை
விரிந்து உறை துறை தொறும் விளக்கம் யாவையும் ,
எரிந்து இழுது அ•கல , ஒளி இழந்தன ;
அரும் துறை நிரம்பிய உயிரின் அன்பரைப்
பிரிந்து உறைதரும் குலப் பேதைமாரினே . - 3.7.123



3287 - காலையில் மலரும் மலர் மலராமை
புனைந்து இதழ் உரிஞ்சு உறு பொழுது புல்லியும்
வனைந்தில , வைகறை மலரும் மா மலர் ,
நனந்தலை அமளியில் துயிலும் நங்கைமார்
அனந்தரின் நெடும் கண் ஓடு ஒத்தவாம் அரோ . - 3.7.124



3288 - மக்கள் துயிலுணராமை
இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும் ,
நிச்சயம் பகலும் தம் இமைகள் நீங்கல ,
பிச்சையும் இடுதும் என்று உணர்வு பேணலா
வச்சையர் நெடும் மனை வாயில் மானவே . - 3.7.125



3289 - நேமிப்புள் பகல் வரவால் மகிழ்தல்
நஞ்சு உறு பிரிவின நாளின் நீளம் ஓர்
தஞ்சு உற , விடுவது ஓர் தயாவு தாங்கலால் ,
வெம் சிறை நீங்கிய வினையினார் என
நெஞ்சு உறக் களித்தன நேமிப்புள் எலாம் . - 3.7.126



3290 - மலர்கள் விரியாமையால் வண்டுகள் வருந்தல்
நாள் மதிக்கு அல்லது நடுவண் எய்திய
ஆணையில் திறக்கிலா அலரில் பாய்வன ,
மாண் வினை பயன்படா மாந்தர் வாயில் சேர்
பாணரில் தளர்ந்தன பாடல் தும்பியே . - 3.7.127



3291 - மருளும் தெருளும் உற்ற மங்கையர் நிலை
அரு மணிச் சாளரம் அதனின் ஊடு புக்கு
எரி கதிர் , இன் துயில் எழுப்பி எய்தவும் ,
மருளொடு தெருள் உறும் நிலையர் ; மங்கையர் ,
தெருள் உற மெய் பொருள் தெளிந்திலார் இன் ஏ . - 3.7.128



3292 - யாமக்கணக்கரும் கோழியும் துயின்றமை
ஏவலின் வன்மையை எண்ணல் தேற்றலர்
நாவலர் இயற்றிய நாளின் நாம நூல்
காவலின் நுனித்து உணர் கணிதம் மாக்களும்
கூவுறு கோழியும் துயில்வு கொண்டவே . - 3.7.129



3293 - பகற்பொழுதும் இராவணன் வருந்தி இது சூரியனன்று சந்திரனே யெனல்
இனையன உலகினில் நிகழும் எல்லையில் ,
கனை கழல் அரக்கனும் கண்ணின் நோக்கினான் ,
நினைவுறும் மனத்தையும் நெருப்பில் தீய்க்கும் ஆல்
அனைய அத் திங்களே ஆகுமால் என்றான் . - 3.7.130



3294 - உழையர் சூரியனே எனல்
திங்களோ அன்று இது ; செல்வ ! செங்கதிர் ;
பொங்கு உளைப் பச்சை அம் புரவித் தேரது ; ஆல்
வெம் கதிர் சுடுவதே ; அன்றி , மெய் உறத்
தங்கு தண் கதிர் சுட தகாது என்றார் சிலர் . - 3.7.131



3295 - இராவணன் பிறைமதியை அழைக்கும்படி கூறுதல்
நீலச் சிகரக் கிரி அன்னவன் , ' நின்ற வெய்யோன்
ஆலத்தினும் வெய்யன் ; அகற்றி , அரற்றுகின்ற
வேலைக் குரலைத் தவிர்கென்று விலக்கி , மேலை
மாலைப் பிறை பிள்ளையை கூவுதிர் வல்லை '' என்றான் . - 3.7.132



3296 - பிறைத்தோற்றம் (கவிக்கூற்று)
சொன்னான் நிருதர்க்கு இறை , அ மொழி சொல்லலோடும் ,
அ நாள் இன் நிரம்பிய அம்மதி , ஆண்டு ஒர் வேலை
முந்நாளின் இளம் பிறையாகி முளைத்தது , என்றால் ,
எ நாள் உம் அருந்தவம் அன்றி இயற்றல் ஆமோ ? - 3.7.133



3297 - பிறைவர இராவணன் வருந்தல் (3297-3299)
குடபாலின் முளைத்தது கண்ட குணங்கள் தீயோன் ,
வடவா அனல் ; அன்று எனின் , மண் பிடர் வைத்த பாம்பின்
விடம் வாள் எயிறு ; அன்று எனின் என்னை வெகுண்டு , மாலை
அட , வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் . அன்று ஏ . - 3.7.134



3298 - தாது உண் சடிலத் தலைவைத்தது , தண் தரங்கம்
மோதும் கடலிற்கு இடை முந்து பிறந்தபோதே
ஓதும் கடுவைத் தன் மிடற்றின் ஒளித்த தக்கோன் ,
' ஈதும் கடுவாம் ' என எண்ணிய எண்ணம் அன்றோ . - 3.7.135



3299 - உரும் ஒத்த வலம் அத்து உயிர் நுங்கிய திங்கள் ஓடித்
திருமு இச்சிறு மின் பிறை , தீமை குறைந்தது இல்லை !
கருமைக் கறை நெஞ்சினின் நஞ்சு கலந்த பாம்பின்
பெருமைச் சிறுமைக்கு ஒரு பெற்றி குறைந்தது உண்டோ ? - 3.7.136



3300 - இராவணன் பிறையை அகற்றி இருளைத் தருக எனல்
' கன்னக் கனியும் இருள் தன்னையும் காண்டும் ; அன்று , ஏ
முன்னைக் கதிர் நன்று ; இது அகற்றுதிர் ; முன்பு சான்ற
என்னைச் சுடும் என்னின் , இவ் ஏழ் உலகத்தும் வாழ்வோர்
பின்னைச் சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ ? ' - 3.7.137



3301 - இருள் வருணணை(கவிக் கூற்று) (3301-3302)
ஆண்டு அ பிறை நீங்கலும் , எய்தியது அந்தகாரம் ;
தீண்டற்கு எளிதாய்ப் பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி ,
வேண்டில் கரபத்திரத்து ஈர்ந்து விழுத்தல் ஆகிக்
காண்டற்கு இனிது ஆய்ப் பல கந்து திரட்டல் ஆகி . - 3.7.138



3302 - முருடு ஈர்ந்து உருட்டற்கு எளிது என்பது என் ? முற்றும் முற்றிப்
பொருள் தீங்கு இல் கேள்விச் சுடர் புக்கு வழங்கல் இன்றிக்
குருடு ஈங்கு இது என்னக் குறிக்கொண்டு , கண்ணோட்டம் குன்றி ,
அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது என்பது அவ் அந்தகாரம் . - 3.7.139



3303 - இருளின் தோற்றங் கண்டு இராவணன் கூறுதல் 3303 , 3304
விள்ளாது செறிந்து இடை மேல் உற வீங்கி , எங்கும்
நள்ளா இருள் வந்து அகல் ஞாலம் விழுங்கலோடும் ,
' எள்ளா உலகு யாவையும் யாவரும் வீவது என்பது
உள்ளாது , உமிழ்ந்தான் விடம் உண்ட ஒருத்தன் ' என்றான் . - 3.7.140



3304 - வேலைத் தலை வந்து ஒருவன் வலியால் விழுங்கும்
ஆலத்தின் அடங்குவது அன்று இது ; அறிந்து உணர்ந்தேன் .
ஞாலம் அத்து ஒடு விண்முதல் யாவையும் நாவின் நக்கும்
காலக் கனல் கார்விடம் உண்டு கறுத்தது அன்று ஏ . - 3.7.141



3305 - சீதையின் உருவெளிப்பாடு கண்ட இராவணன் கூறுதல் (3305-3309)
அம்பும் அனலும் நுழையாக் கன அந்தகாரத்து
உம்பர் மழை கொண்டு , அயல் ஒப்பு அரிது ஆய துப்பின்
கொம்பர் , குரும்பைக் குலம் கொண்டது , திங்கள் தாங்கி ,
வெம்பும் தமியேன்முன் , விளக்கு எனத் தோன்றும் அன்று ஏ . - 3.7.142



3306 - மருள் ஊடு வந்த மயக்கோ ! மதி மற்றும் உண்டோ !
தெருளாது , இது என்னோ ? திணி மை இழைத்தாலும் ஒவ்வா
இருளூடு இரு குண்டலம் கொண்டும் இருண்ட நீலச்
சுருளோடும் வந்து ஒர் சுடர் மா மதி தோன்றும் அன்றே . - 3.7.143



3307 - புடைகொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும்
இடை கண்டிலம் ; அல்லது எல்லாவுருவும் தெரிந்தாம் ;
விடம் நுங்கிய கண் உடையார் இவர் மெல்ல மெல்ல
மடம் மங்கையராய் என் மனத்தவர் ஆயினார் ஏ . - 3.7.144



3308 - பண்டே உலகு ஏழினும் உள்ள படைக் கணாரைக்
கண்டேன் ; இது போல்வது ஒர் பெண் உருக் கண்டிலேன் ஆல் ;
உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற
வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்று ஏ . - 3.7.145



3309 - இராவணன் சூர்ப்பணகையை அழைத்துவரக் கட்டளையிடுதல்
பூண்டு இ பிணி யான் உறுகின்றது தான் பொறாதாள் ,
தேண்டிக்கொடுவந்தனள் ; செய்வது ஒர் மாறும் உண்டோ !
காண்டற்கு இனியாள் உருக் கண்டவட் கேட்கும் ஆற்றால்
ஈண்டு இப்பொழுதே விரைந்து எங்கையைக் கூவுக என்றான் . - 3.7.146



3310 - சூர்ப்பணகை இராவணன்பால் வருதல்
என்றான் ; எனலும் , கடிது ஏகினர் கூவும் எல்லை ,
வன் தாள் நிருதக் குலம் வேர் அற மாய்த்தல் செய்வாள் ,
ஒன்றாத காமம் கனல் உள் தெறலோடும் நாசி
பொன் தாழ் குழை தன்னொடும் போக்கினள் போய்ப் புகுந்தாள் . - 3.7.147



3311 - இராவணனுக்கும் சூர்ப்பணகைக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் (3311-3316)
பொய் நின்ற நெஞ்சில் கொடியாள் புகுந்தாளை நோக்கி ,
நெய் நின்ற கூர் வாளவன் , நேர் உற நோக்கு நங்காய் !
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர்
இந்நின்றவள் ஆம் கொல் இயம்பிய சீதை ? என்றான் . - 3.7.148



3312 - ' செம் தாமரை கண்ணொடும் செம் கனி வாயினோடும்
சந்து ஆர் தடம் தோளொடும் தாழ் தடக் கைகளோடும்
அம் தார் அகலம் அத்து ஒடும் அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன் , ஆகும் அவ் வல் வில் இராமன் ' என்றாள் . - 3.7.149



3313 - பெண் பால் உரு நான் இது கண்டது ; பேதை ! நீ ஈண்டு
எண்பாலும் இலாதது ஒர் ஆண் உரு என்றி ; என்னே !
கண் பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை
மண் பாலவர் ஏ கொல் ! விளைப்பவர் மாயை ? என்றான் . - 3.7.150



3314 - ' ஊன்றும் உணர்வு அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி ,
ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு
ஏன்று உன் எதிரே விழி நோக்கும் இடங்கள் தோறும்
தோன்றும் அனையாள் ; இது தொல் நெறித்து ஆகும் ' என்றாள் . - 3.7.151



3315 - அன்னாள் அது கூற ,
        அரக்கனும் ,' அன்னது ஆக ;
நின்னால் அவ் இராமனைக்
        காண்குறும் நீர் என் ? ' என்றான் ;
' எந்நாள் அவன் என்னை இத்
        தீர்வு அரும் இன்னல் செய்தான் ,
அ நாள் முதல் யானும்
        அயர்த்திலன் ஆகும் ' என்றாள் . - 3.7.152



3316 - ' ஆம் ! ஆம் ! அது அடுக்கும் ; என் ஆக்கையொடு ஆவி நைய
வேமால் ; வினையேற்கு இனி என் விடிவாகும் ? ' என்னக்
' கோமான் உலகுக்கு ஒரு நீ குறைகின்றது என்னே ?
பூ மாண் குழலாள் தனை வவ்வுதி போதி ' என்றாள் . - 3.7.153



3317 - சூர்ப்பணகை நீங்க இராவணன் வருந்தல்
என்றாள் , அகன்றாள் ; அவ் அரக்கனும் ஈடு அழிந்தான் ;
ஒன்றானும் உணர்ந்திலன் , ஆவி உலைந்து சோர்ந்தான் ;
நின்றாரும் நடுங்கினர் ; நின்று உள நாளினாலே
பொன்றாது உளன் ஆயினன் அத்துணை ; போலும் அன்று ஏ . - 3.7.154



3318 - இராவணன் சந்திரகாந்த மண்டபம் அமைக்கும்படி சொல்லல்
இறந்தார் பிறந்தார் என
        இன் உயிர் பெற்ற மன்னன் ,
மறந்தான் உணர்ந்தான் , அவண்
        மாடு நின்றாரை நோக்கிக்
'''கறந்தால் என நீர்தரு
        சந்திரகாந்தத்தாலே
சிறந்து ஆர் மணி மண்டபம்
        செய்க '' எனச் செப்புக ' என்றான் . - 3.7.155



3319 - தெய்வத்தச்சன் சந்திரகாந்த மண்டபம் அமைத்தல் (3319-3320)
வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான் ,
சிந்தா வினை அன்றியும் , கைவினையாலும் செய்தான் .
அம் தாம நெடுந்தறி ஆயிரத்தால் அமைந்த
சந்து ஆர் மணி மண்டபம் தாமரையோனும் நாண . - 3.7.156



3320 - காந்தம் அமுதின் துளி கால்வன கால மீனின் ,
வேந்தன் ஒளி அன்றியும் மேலொடு கீழ் விரித்தான் ,
பூ தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான் ,
ஏந்தும் மணிக் கற்பகச் சீதளக் கா இழைத்தான் . - 3.7.157



3321 - இராவணன் மண்டபங் காண வருதல்
ஆணிக்கு அமை பொன் கை மணிச் சுடர் ஆய் விளக்கம் ,
சேண் உற்று இருள் சீப்பன தெய்வ மடந்தைமார்கள்
பூணிற் பொலிவார் புடை ஏந்திடப் பொங்கு தோளான் ,
மாணிக்க மானம் அத்து இடை மண்டபம் காண வந்தான் . - 3.7.158



3322 - இருள் நீங்குதல் (3322-3323)
அல் ஆயிர கோடி அடுக்கியது ஒத்ததேனும் ,
நல்லார் முகம் ஆம் நளிர் வால் நிலவு ஈன்ற நாமப்
பல் ஆயிர கோடி பனி சுடர் ஈன்ற ; திங்கள்
எல்லாம் உடன் ஆய் இருள் ஓடி இரிந்தது அன்று ஏ . - 3.7.159



3323 - பொற்பு உற்றன மா மணி ஒன்பதும் , பூவின் நின்ற
கற்பம் தரு வின் கதிர் நாள் நிழல் கற்றை நாற ,
அல் பற்று அழியப் பகல் ஆக்கியது ; ஆல் ; அருக்கன்
நிற்பத் தெளிகின்றது நீள்சுடர் மேன்மையன்றோ ! - 3.7.160



3324 - இராவணன் மண்டபத்தை அடைதல்
ஊறு ஓசை முதல் பொறி யாவையும் ஒன்றின் ஒன்று
தேறா நிலை உற்றது ஓர் சிந்தையன் , செய்கை ஓரான் ,
வேறு ஆய பிறப்பு இடை வேட்கை விசித்தது ஈர்ப்ப
மாறு ஓர் உடல் புக்கு என மண்டபம் வந்து புக்கான் . - 3.7.161



3325 - இராவணன் மலர்ச்சேக்கை சேர்தல்
தண்டல் இல் தவம் செய்வோர்தாம்
        வேண்டின தாயின் நல்கும்
மண்டல மகர வேலை ,
        அமுதொடும் வந்தது என்னப்
பண் தரு சுரும்பு சேரும்
        பசு மரம் உயிர்த்த பசுமை பொன்
தண் தளிர் மலரில் செய்த
        சீதளச் சேக்கை சார்ந்தான் . - 3.7.162



3326 - தென்றல் வருதல்
நேர் இழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி ,
வேரி அம் சரளச் சோலை வேனிலான் விருந்து செய்ய ,
ஆர்கலி அழுவம் தந்த அமிழ்து என , ஒருவர் ஆவி
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் , வந்து இறுத்தது அன்று ஏ . - 3.7.163



3327 - இராவணன் தென்றலால் வருந்திக் கூறுதல் (3327-3330)
சாளரத் தூடு வந்து தவழ்தலும் , தரித்தல் தேற்றான் ,
நீள் அரத்தங்கள் சிந்தி , நெருப்பு உக நோக்கும் நீரான் ,
வாழ் மனைப் புகுந்தது ஆங்கு ஓர் மாசுணம் வரக் கண்டன்ன
கோள் உறக் கொதித்து விம்மி உழையரைக் கூவிச் சொன்னான் . - 3.7.164



3328 - ' கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினைக் குப்புற்று என்னத்
தேவரின் ஒருவன் என்னை இன்னலும் செயத் தக்கானோ ?
ஏவலின் அன்றித் தென்றல் எவ் வழி எய்திற்று ? ' என்னாக்
காவலின் உழையர் தம்மைக் கொணருதிர் கடிதின் என்றான் . - 3.7.165



3329 - அவ்வழி உழையர் ஓடி ,
        ஆண்டு அவர்க் கொணர்தலோடும் ,
வெம் வழி அமைந்த செம் கண்
        வெரு உற நோக்கி , வெய்யோன்
' செம் வழி தென்றலாற்குத்
        திருத்தினீர் நீர்கொல் ? ' என்ன ,
' இவ் வழி இருந்த காலைத்
        தடை அவற்கு இல்லை ' என்றார் . - 3.7.166



3330 - ' வேண்டிய நினைந்து செய்வான்
        விண்ணவர் வெருவார் என்றால் ,
மாண்டது போலும் கொள்கை ,
        யான் உடை வன்மை ; வல்லைத்
தேண்டினீர் , திசைகள் தோறும்
        சேண் உற விசையின் செல்குற்று ,
ஈண்டு இவன் தன்னைப் பற்றி
        இரும் சிறை இடுதிர் ' என்றான் . - 3.7.167



3331 - இராவணன் அமைச்சரை அழைமின் எனல்
' காற்றினோன் தன்னை வாளா
        முனிதலின் , கண்டது இல்லை ;
கூற்றும் வந்து என்னை இன்னே
        குறுகும் ஆல் ; குறித்த ஆற்றால்
வேல் தரும் கருங்கண் சீதை
        மெய் அருள் புனையேன் என்றால் ,
ஆற்றலால் அடுத்தது எண்ணும்
        அமைச்சரைக் கொணர்திர் ' என்றான் . - 3.7.168



3332 - அமைச்சர் வருதல்
ஏவின சிலதர் ஓடி ஏ எனும் துணையில் , எங்கும்
கூவினர் ; கூவலோடும் குறுகினர் , கொடித் திண் தேர்மேல்
மாவினில் சிவிகைதன்மேல் மழை மதம் களிற்றின் ; வையத்
தேவரும் வானம் தன்னில் தேவரும் சிந்தை சிந்த . - 3.7.169



3333 - இராவணன் மாரீசனிருக்கையடைதல்
வந்த மந்திரியரோடு
        மாசு அற மனத்தின் எண்ணிச்
சிந்தையில் நினைந்த செய்யும்
        செய்கையன் , தெளிவு இல் நெஞ்சன்
அந்தரம் செல்வது ஆண்டு ஓர்
        விமானத்தில் , ஆரும் இன்றி ,
இந்தியம் அடக்கி நின்ற
        மாரீசன் இருக்கை சேர்ந்தான் . - 3.7.170



3334 - மாரீசன் இராவணனை உபசரித்து அவன் வந்த காரியம் வினவுதல் (3334-3335)
இருந்த மாரீசன் , வந்து அவ் இராவணன் எய்தலோடும் ,
பொருந்திய பயத்தன் , சிந்தை பொருமுற்று , வெருவுகின்றான் ,
கருந்தட மலை அன்னானை எதிர்கொண்டு , கடன்கள் யாவும்
திருந்திடச் செய்து , செவ்வித் திரு முகம் நோக்கிச் செப்பும் . - 3.7.171



3335 - ' சந்த மலர்த் தண் கற்பக நீழல் தலைவற்கும்
அந்தகனுக்கும் அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய் !
இந்த வனத்து என் இன்னல் இருக்கைக்கு எளியோரின்
வந்த கருத்து என் ? சொல்லுதி ' என்றான் மருள்கின்றான் . - 3.7.172



3336 - இராவணன் மாரீசனிடம் தான் வந்த காரியம் கூறுதல் (3336-3339)
ஆனது அனைத்தும் ; ஆவி தரித்தேன் , அயர்கின்றேன் ;
போனது பொற்பும் ; மேன்மையும் அற்றேன் புகழோடும் ;
யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் ; இனி என் ? ஆ
வானவருக்கும் நாண அடுக்கும் வசை அம்மா . - 3.7.173



3337 - வன்மை தரித்தோர்மானிடர் ; மற்று அங்கு அவர் , வாளால்
நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார் ;
என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன்மேல் ஓர்
புன்மை தெரிப்பின் வேறு இனி மற்று என் ? புகழ் வேலோய் . - 3.7.174



3338 - திருகு சினத்தார் , முதிர மலைந்தார் , சிறியோர் நாள்
பருகினன் என்றால் வென்றி நலத்தில் பழி அன்றோ ?
இருகை சுமந்தாய் ! இனிதின் இருந்தாய் ! இகல் வேல் உன்
மருகர் உலந்தார் ; ஒருவன் மலைந்தான் வரி வில்லால் . - 3.7.175



3339 - ' வெப்பு அழியாது என் நெஞ்சும்
        உலந்தேன் ; விளிகின்றேன் ;
ஒப்பு அழிவு என்றே போர் செயல்
        ஒல்லேன் ; உடன் வாழும்
துப்பு அழி செவ்வாய் வஞ்சியை
        வௌவத் துணை கொண்டிட்டு ,
இப் பழி நின்னால் தீரிய
        வந்தேன் . இவண் ' என்றான் . - 3.7.176



3340 - இராவணன்பால் மாரீசன் கூறுதல் (3340-3351)
இச் சொல் அனைத்தும் சொல்லி , அரக்கன் எரிகின்ற
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்னக் கிளராமுன் ,
சிச்சி எனத் தன் மெய்ச் செவி பொத்தித் தெருமந்தான் ,
அச்சம் அகற்றிச் செற்ற மனத்தோடு அறைகின்றான் . - 3.7.177



3341 - மன்னா ! நீ நின் வாழ்வை முடித்தாய் ! மதி அற்றாய் ,
உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன் ;
இன்னாதேனும் யான் இது உரைப்பன் இதம் என்னச்
சொன்னான் அன்றே அன்னவனுக்குத் துணிவு எல்லாம் . - 3.7.178



3342 - அற்ற கரத்தோடு உன் தலை நீயே அனல் முற்றிப்
பற்றினை உய்த்தாய் , பற்பல காலம் பசி கூர
உற்று உயிர் உள்ளே தேய உலந்தாய் , பினை அன்றோ
பெற்றனை செல்வம் ; பின் அது இழந்தால் பெறலாம் ஓ . - 3.7.179



3343 - திறத் திறனாலே செய் தவம் முற்றித் திரு உற்றாய் ;
மறத் திறனாலே சொல்லுதி ; சொல் ஆய் மறை வல்லாய் !
அறத் திறனாலே எய்தினை அன்று ஓ அது ; நீயும்
புறத் திறனாலே பின்னும் இழக்கப் புகுவாயோ ? - 3.7.180



3344 - நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார் , நடை அல்லா
வாரம் கொண்டார் , மற்று ஒருவற்கு ஆய் மனை வாழும்
தாரம் கொண்டார் என்று இவர் தம்மைத் தருமம் தான்
ஈரும் கண்டாய் ! கண்டகர் உய்ந்தார் எவர் ? ஐயா ! - 3.7.181



3345 - அந்தரம் உற்றான் அகலிகை பொற்பால் அழிவுற்றான் ;
இந்திரன் ஒப்பார் எத்தனையோர் தாம் இழிபு உற்றார் ?
செம் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார் ?
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் , மதி அற்றாய் . - 3.7.182



3346 - செய்தாயேனும் , தீவினையோடும் பழி அல்லால்
எய்தாது எய்தாது ; எய்தின் , இராமன் , உலகு ஈன்றான்
வைதால் அன்ன வாளிகள் கொண்டு உன் வழியோடும்
கொய்தான் அன்றே கொற்றம் முடித்து உன் குழு எல்லாம் . - 3.7.183



3347 - என் தான் என்னே எண்ணலையோ ? நீ ; கரன் என்பான்
நின் தானைக்கு மேல் உளன் என்னும் நிலை அம்மா !
தன் தானைத் திண் தேரொடு மாளத் தனு ஒன்றால்
கொன்றான் , முற்றும் கொல்ல மனத்தில் குறிகொண்டான் . - 3.7.184



3348 - வெய்யோர் யாரே வீர விராதன் துணை வெய்யோர் ?
ஐயோ போனான் அம்பொடும் உம்பர்க்கு அவன் ; என்றால் ,
' உய்வார் யாரே ? நம்மின் ' எனக் கொண்டு , உணர்தோறும்
நையா நின்றேன் ; நீ இது , உரைத்து நலிவாயோ ? - 3.7.185



3349 - மாண்டார் மாண்டார் ; நீ இனி மாள்வார் தொழில் செய்ய
வேண்டா வேண்டா ; செய்திடின் உய்வான் விதி உண்டோ ?
ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் ; அறம் நோனார்
ஈண்டார் ஈண்டார் ; நின்றவரெல்லாம் இலர் அன்றோ ? - 3.7.186



3350 - எம்பிக்கும் என் அன்னை தனக்கும் இறுதிக்கு ஓர்
அம்பு உய்க்கும் போர் வில்லி தனக்கும் அயல் நிற்கும்
தம்பிக்கும் என் ஆண்மை தவிர்ந்தே தளர்கின்றேன் ;
கம்பிக்கும் என் நெஞ்சு ; அவன் என்றே கவல்கின்றேன் . - 3.7.187



3351 - நின்றும் சென்றும் வாழ்வன யாவும் நிலையா ஆய்
பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் ! புலையாள் தன் கு
ஒன்றும் உன்னாய் ; என் உரை கொள்ளாய் ; உயர் செல்வத்து
' என்றும் என்றும் வைகுதி ; ஐயா ! இனி ' என்றான் . - 3.7.188



3352 - இராவணன் மாரீசனை முனிந்து கூறுதல் (3352-3353)
' கங்கை சடை வைத்தவனொடும் கயிலைவெற்பு ஓர்
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணித் தோள் ,
இங்கு ஒர் மனிதற்கு எளிய என்றனை ' எனத் தன்
வெம் கண் எரியப் புருவம் மீது உற விடைத்தான் . - 3.7.189



3353 - ' நிகழ்ந்ததை நினைத்திலை ; என் நெஞ்சின் நிலை அஞ்சாது
இகழ்ந்தனை ; எனக்கு இளைய நங்கை முகம் எங்கும்
அகழ்ந்த வரை ஒப்பு உற அமைத்தவரை ஐயா !
புகழ்ந்தனை ; தனிப்பிழை ; பொறுத்தனென் இது ' என்றான் . - 3.7.190



3354 - மாரீசன் இராவணனிடம் மீட்டும் கூறல் (3354-3360)
தன்னை முனிவுற்ற தறுகண் தகவு இலோனைப்
பின்னை முனிவுற்றிடும் எனத் தவிர்தல் பேணான் ,
' உன்னை முனிவுற்று , உன குலத்தை முனிவுற்றாய் ,
என்னை முனிவுற்றிலை ; இது என் ? ' என இசைத்தான் . - 3.7.191



3355 - ' எடுத்த மலையே நினையின் ,'' ஈசன் இகல் வில்லாய்
வடித்த மலை , நீ இது வலித்தி '' என வாரிப்
பிடித்து அமலை நாண் இடை பிணித்து , ஒருவன் மேல் நாள்
ஒடித்த மலை , அண்டம் முகடு உற்ற மலையன்றோ ? ' - 3.7.192



3356 - ' யாதும் அறியாய் ; உரைகொளாய் ; இகல் இராமன்
கோதை புனையா முன் உயிர் கொள்ளை படும் அன்றே !
பேதை மதியால்'' இ•து ஒர் பெண் உருவம் '' என்றாய் !
சீதை உருவோ ? நிருதர் தீ வினை அது அன்றோ ? - 3.7.193



3357 - ' உஞ்சு பிழையாய் உறவினோடும் என உன்னா ,
நெஞ்சு பறை மோதும் ; அது நீ நினையகில்லாய் ;
அஞ்சும் எனது ஆர் உயிர் ; அறிந்து அருகு நின்றார்
நஞ்சு நுகர்வாரை'' இது நன்று '' எனலும் நன்றோ ? ' - 3.7.194



3358 - ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும் மற்றைத்
தேசம் முதல் முற்றும் ஒர் இமைப்பின் உயிர் தின்ப ,
கோசிகன் அளித்த கடவுள் படை , கொதிப்போடு
ஆசு இல , கணிப்பு இல , இராமன் அருள் நிற்ப . - 3.7.195



3359 - ஆயிரம் அடல் கை உடையானை மழுவாளால்
ஏ எனும் உரைக்குள் உயிர் செற்ற எதிரில்லான்
மேய விறல் முற்றும் , வரி வெம் சிலையினோடும்
தாயவன் வலி தகைமை யாம் உறு தகைத்தோ . - 3.7.196



3360 - வேதனை செய் காம விடம் மேலிட மெலிந்தாய் ;
தீது உரை செய்தாய் ; இனைய செய்கை சிதைவு அன்றோ ?
மாதுலனும் ஆய் , மரபின் முந்தை உற வந்தேன் ,
ஈது உரைசெய்தேன் ; அதனை எந்தை ! தவிர்க என்றன் . - 3.7.197



3361 - இராவணன் மீட்டும் மாரீசனொடு சினந்து கூறுதல் (3361-3364)
என்ன உரை அத்தனையும் எத்தனையும் எண்ணிச்
சொன்னவனை ஏசின அரக்கர் பதி சொன்னான் ;
அன்னை உயிர் செற்றவனை அஞ்சி உறைகின்றாய்
உன்னை ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ . - 3.7.198



3362 - திக்கயம் ஒளிப்ப , நிலை தேவர் கெட , வானம்
புக்கு , அவர் இருக்கை புகைவித்து , உலகம் யாவும்
சக்கரம் நடத்தும் எனையோ தயரதன்றன்
மக்கள் நலிகிற்பர் ? இது , நன்று ; வலி அன்று ஓ ? - 3.7.199



3363 - மூவுலகினுக்கும் ஒரு நாயகம் முடித்தேன் ;
மேவலர் கிடைக்கின் இதன்மேல் இனியது உண்டோ ?
ஏவல் செயகிற்றி ; எனது ஆணை வழி எண்ணிக்
காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ ? - 3.7.200



3364 - ' மறுத்தனை எனப் பெறினும் , நின்னை வடி வாளால்
ஒறுத்து , மனம் உற்றது முடிப்பென் ; ஒழிகல்லேன் ;
வெறுப்பன கிளத்தல் உறும் இ தொழிலை விட்டு , என்
குறிப்பின் வழி நிற்றி , உயிர் கொண்டு உழலின் ' என்றான் . - 3.7.201



3365 - மீட்டும் மாரீசன் கூறல் (3365-3366)
அரக்கன் அஃது உரைத்தலோடும்
        அறிந்தனன் , அடங்கி ,' நெஞ்சம்
தருக்கினர் கெடுவர் ' என்றல் ,
        தத்துவம் நிலையிற்று , அன்றோ
' செருக்குநர்த் தீர்த்தும் என்பார்
        தம்மின் ஆர் செருக்கர் ' என்னா
உருக்கிய செம்பின் உற்ற
        நீர் என உரைக்கல் உற்றான் . - 3.7.202



3366 - ' உன் வயின் உறுதி நோக்கி ,
        உண்மையின் உணர்த்தினேன் ; மற்று
என் வயின் இறுதி நோக்கி
        அச்சத்தால் இசைத்தேன் அல்லேன் ;
நன்மையும் தீமை அன்றே
        நாசம் வந்து உற்றபோது ;
புன்மையின் நின்ற நீராய் !
        செய்வது புகல்தி என்றான் . - 3.7.203



3367 - இராவணன் மாரீசனிடம் யான் சீதையை அடைய நீ உதவுக எனல்
என்றலும் எழுந்து புல்லி ,
        ஏறிய வெகுளி நீங்கிக்
' குன்று எனக் குவிந்த தோளாய் !
        மாரன் வேள் கொதிக்கும் அம்பால்
பொன்றலின் , இராமன் அம்பால்
        பொன்றலே புகழ் உண்டு அன்றோ ;
தென்றலைப் பகைக்கச் செய்த
        சீதையைத் தருதி ' என்றான் . - 3.7.204



3368 - மாரீசன் , வினவுதல்
ஆண்டையான் அனைய கூற ,'
        அரக்கர் ஓர் இருவரோடும்
பூண்ட என் மானம் தீரத்
        தண்டகம் புக்க காலைத்
தூண்டிய சரங்கள் பாயத்
        துணைவர் பட்டு உருள அஞ்சி ,
மீண்ட யான் , சென்று செய்யும்
        வினை என் கொல் ? விளம்புக ' என்றான் . - 3.7.205



3369 - இராவணன் சீதையை மாயையால் கவர்வோம் எனல்
ஆயவன் அனைய கூற ,
        அரக்கர்கோன் ,' ஐய ! நொய்து உன்
தாயை ஆர் உயிர் உண்டானை
        யான் கொலச் சமைந்து நின்றேன் ;
'' போய் ஐயா ! புணர்ப்பது என்னை ? ''
        என்பது பொருந்திற்று ஒன்றோ ?
மாயையால் வஞ்சித்து அன்றோ
வௌவுதல் அவளை ' என்றான் . - 3.7.206



3370 - மாரீசன் சீதையை மறநெறியால் கவர்க எனல்
' புறம் அத்து இனி உரைப்பது என்னே ?
        புரவலன் தேவி தன்னைத்
திறம் அத்து உழி அன்றி வஞ்சித்து
        எய்துதல் சிறுமைத்து ஆகும் ;
அறம் அத்து உளது ஒக்கும் அன்றே !
        அமர்த்தலை வென்று கொண்டு , உன்
மறம் துறை வளர்த்தி மன்ன !’
        என்ன மாரீசன் சொன்னான் . - 3.7.207



3371 - இராவணன் சீதையை மாயையால் கவர்தலே தகும் எனல்
ஆனவன் உரைக்க , நக்க
        அரக்கர் கோன் ,' அவரை வெல்லத்
தானையும் வேண்டுமோ ?
        என் தடக்கை வாள் தக்கது அன்றோ !
ஏனையர் இறக்கில் , தானும்
        தமியளாய் , இறக்கும் அன்றே
மான் அவள் ; ஆதலாலே
        மாயையின் வலித்தும் ' என்றான் . - 3.7.208



3372 - மாரீசன் நினைதல்
'' 'தேவியைத் தீண்டா முன்னம் , இவன் தலை சரத்தின் சிந்திப்
போம் வகை புணர்ப்பன் ' என்று புந்தியால் புகல்கின்றேற்கும் ,
ஆம் வகை ஆயிற்று இல்லை ; ஆர் விதி விளைவை ஓர்வார் ?
ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று '' என்று எண்ணா . - 3.7.209



3373 - இராவணன் கூறியபடி செய்ய இசைந்து மாரீசன் போதல்
' என்ன மா மாயம் யான் மற்று
        இயற்றுவது ? இயம்புக ' என்றான் ;
' பொன்னின் மான் ஆகிப் புக்கு , அ
        பொன்னை மால் புணர்த்துக ' என்ன ,
' அன்னது செய்வென் ' என்னா மாரீசன் அமைந்து போனான் ;
மின்னும் வேல் அரக்கர் கோனும் , வேறு ஒரு நெறியில் போனான் . - 3.7.210



3374 - கவிக்கூற்று
மேல் நாள் அவர் வில் வலி கண்டமையால் ,
தானாக அமைந்து சமைந்திலன் ஆல் ;
' மான் ஆகுதி ' என்றவன் வாள் வலியால்
போனான் மனமும் செயலும் புகல்வாம் . - 3.7.211



3375 - மாரீசன் மனநிலை
வெம் சுற்றம் நினைந்து உகும் ; வீரரை வேறு
அஞ்சு உற்று மறுக்கு உறும் ; ஆழ் குழி நீர்
நஞ்சு உற்ற உழி மீனின் நடுக்கு உறுவான் ,
நெஞ்சு உற்றது ஒர் பெற்றி நினைப்பு அரிது ஆல் . - 3.7.212



3376 - மாரீசன் இராமனிருக்கும் வனத்தை அடைதல்
அ காலமும் வேள்வியின் அன்று தொடர்ந்து
எ காலும் நலிந்தும் ஒர் ஈறு பெறான் ,
முக்காலின் முடிந்திடுவான் முயல்வான்
புக்கான் அவ் இராகவன் வைகு புனம் . - 3.7.213



3377 - மாரீசன் மானுருவங்கொண்டு செல்லுதல்
தன் மானம் இலாத தயங்கு ஒளி சால்
மின் மானமும் மண்ணும் விளங்குவது ஓர்
பொன் மான் உருவம் கொடு போயினன் ஆல்
நன் மான் அனையாள் தனை நாடுறுவான் . - 3.7.214



3378 - மாயமானைக் கலைமான் முதலியவை நெருங்குதல்
கலை மான் முதலாயின கண்ட எலாம் ,
அலை மானுறும் ஆசையின் வந்தனவால் ;
நிலை மா மன வஞ்சனை நேயம் இலா
விலை மாதர் கண் யாரும் விழுந்து என ஏ . - 3.7.215



3379 - மலர் கொய்து நின்ற சீதை மாயமானைக் கண்டு விரும்புதல் (3379-3381)
பொய் ஆம் என ஓது புறம் சொல் இன் ஆல்
நையா இடை நோவ நடந்திடுவாள்
வைதேவி தன் வால் வளை முன்கை எனும்
கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள் . - 3.7.216



3380 - உண்டாகிய கேடு உடையார் , துயில்வாய்
எண் தானும் இயைந்து இயையா உருவம்
கண்டார் எனல் ஆம் வகை கண்டனள் ஆல் ;
பண்டு ஆரும் உறா இடர் பாடுறுவாள் . - 3.7.217



3381 - காணா இது கைதவம் என்று உணராள் ,
பேணாத நலம் கொடு பேணினள் ஆல் ;
வாணாள் அவ் இராவணன் மாளுதல் ஆல்
வீழ் நாளில் அறம் புவி மேவுதல் ஆல் . - 3.7.218



3382 - சீதை இராமனை அடைதல்
நெற்றிப் பிறையாள் , முனம் நின்றிடலும் ,
முற்றிப் பொழி காதலின் முந்துறுவாள் ,
பற்றித் தருக என்பென் எனப் பதையா
வெற்றிச் சிலை வீரனை மேவினள் ஆல் . - 3.7.219



3383 - சீதை பொன் மானின் இயல்பை இராமனிடம் கூறல்
' ஆணிப் பொனின் ஆகியது , ஆய் கதிரால்
சேணில் சுடர்கின்றது , திண் செவி கால்
மாணிக்கம் மயம் அத்து ஒரு மான் உளது ஆல் ;
காண தகும் ' என்றனள் கைதொழுவாள் . - 3.7.220



3384 - இராமன் பொன்மானைக் காண விரும்புதல்
இம்மான் இ நிலம் அத்து இன் இல் இல்லை எனா ,
எ மான் இது ? எனச் சிறிது எண்ணல் செயான் ,
செம் மான் அவள் சொல் கொடு தேம் மலரோன்
அம்மானும் அருத்தியன் ஆயினன் ஆல் . - 3.7.221



3385 - இலக்குவன் இராமனிடம் அது மாயமானென்றல் (3385-3386)
ஆண்டு அங்கு இளையோன் உரையாடினன் ஆல் ;
வேண்டும் எனல் ஆம் விளைவு அன்று இது எனாப்
' பூண் துஞ்சு பொலம் கொடி ! போய் , அது நாம்
காண்டும் ' என , வள்ளல் கருத்து உணர்வான் . - 3.7.222



3386 - காயம் கனகம் ; மணி கால் செவி வால் ;
பாயும் உருவோடு இது பண்பு எனலால்
மாயம் எனல் அன்றி மனக் கொள ஏ
ஏயும் இறை ஐயுறவு என்ற அளவே . - 3.7.223



3387 - இலக்குவன் கூறியதுகேட்டு , இராமன் இயம்பல் (3387-3389)
நில்லா உலகின் நிலை நேர்மையின் ஆல்
வல்லாரும் உணர்ந்திலர் ; மன் உயிர்தாம்
பல் ஆயிர கோடி பரந்து உள ஆல் ;
இல்லாதன இல்லை இளங்குமரா ! - 3.7.224



3388 - என் என்று நினைந்தது ? இழைத்து உளம் , நம்
கன்னங்களின் வேறு உள காணுதும் ஆல் ;
பொன்னின் ஒளி மேனி பொருந்திய ஏழ்
அன்னங்கள் பிறந்தது அறிந்திலையோ ! - 3.7.225



3389 - இராமலக்குவர் உரையாடலால் சீதை வருந்தல்
' முறையும் முடிவும் இல மொய் உயிர் ' என்று
இறைவன் இளையானொடு இயம்பினன் ஆல் ;
' பறையும் துணை , அன்னது பல் நெறி போய்
மறையும் ' என , ஏழை வருந்தினள் ஆல் . - 3.7.226



3390 - இராமன் சீதையொடு சென்று மானைக் காணுதல்
அனையவள் கருத்தை உன்னா ,
        அஞ்சனக் குன்றம் அன்னான் ,
' புனை இழை காட்டு அது ' என்று
        போயினான் ; பொறாத சிந்தைக்
கனை கழல் தம்பி பின்பு
        சென்றனன் ; கடக்க ஒண்ணா
வினை என வந்து நின்ற மான் ,
        எதிர் விழித்தது அன்று ஏ . - 3.7.227



3391 - இராமன் மானைக் கொண்டாடுதலும் அதற்குக் காரணமும்
நோக்கிய மானை நோக்கி ,
        நுதி உடை மதியின் ஒன்றும்
தூக்கிலன் ,' நன்று இது ' என்றான் ;
        அதன் பொருள் சொல்லல் ஆகும் ;
சேக்கையின் அரவு நீங்கிப்
        பிறந்தது , தேவர் செய்த
பாக்கியம் உடைமை அன்றோ !
        அன்னது பழுதுபோமோ ? - 3.7.228



3392 - இராமன் இலக்குவனிடம் மானின் இயல்பு பேசுதல் (3392-3393)
என் ஒக்கும் என்னல் ஆகும் இளையவ ! இதனை நோக்காய் !
தன் ஒக்கும் என்பது அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ ?
பல் நக்க தரளம் ஒக்கும் ; பசும் புல் மேல் படரும் மெல் நா
மின் ஒக்கும் ; செம்பொன் மேனி வெள்ளியின் விளங்கும் புள்ளி . - 3.7.229



3393 - வரி சிலை மறை வலோனே ! மான் இதன் வடிவை உற்ற
அரிவையர் மைந்தர் யாரே ஆதரம் கூர்கிலாதார் ?
உருகிய மனத்த ஆகி , ஊர்வன பறப்ப யாவும்
விரி சுடர் விளக்கம் கண்ட விட்டிலின் வீழ்வ காணாய் . - 3.7.230



3394 - இலக்குவன் , இராமன்பால் , மானை விரும்பாது மீள்வதே நலம் எனல் ;
ஆரியன் அனைய கூற , அன்னது தன்னை நோக்கிச்
' சீரியது அன்று இது ' என்று , சிந்தையில் தெளிந்த தம்பி ,
' காரியம் என்னை ? ஈண்டுக் கண்டது கனகம் மான் ஏல் ,
வேரி அம் தெரியல் வீர ! மீள்வது ஏ மேன்மை ' என்றான் . - 3.7.231



3395 - சீதை மானைப் பிடித்துத் தரும்படி இராமனை வேண்டுதல்
அற்று அவன் பகராமுன்னம் ,
        அழகனை அழகியாளும் ,
' கொற்றவன் மைந்த ; மற்றிக்
        குழைவு உடை உழையை , வல்லை
பற்றினை தருதி ஆயின் ,
        பதியிடை அவதி எய்தப்
பெற்ற உழி இனிது உண்டாடப்
        பெறற்கு அருந்தகைமைத்து ' என்றாள் . - 3.7.232



3396 - இலக்குவன் இது மாயமான் எனல்
ஐய , நுண் மருங்குல் நங்கை
        அஃது உரைசெய்ய , ஐயன்
' செய்வென் ' என்று அமைய , நோக்கித்
        தெளிவு உடைச் செம்மல் செப்பும் ;
வெய்ய வல் அரக்கர் வஞ்சம்
        விரும்பினார் வினையின் செய்த
கைதவ மான் என்று அண்ணல் !
        காணுதி கடையின் ' என்றான் . - 3.7.233



3397 - இராமன் மானைப் பிடித்தல் தவறாகாது என்னுதல்
' மாயம் ஏல் மடியும் அன்றே வாளியின் ; மடிந்த போது ,
காய் சினத்தவரைக் கொன்று கடன் கழித்தோமும் ஆதும் ;
தூயது ஏல் பற்றிக் கோடும் ; சொல்லிய இரண்டின் ஒன்று
தீயதே ? உரைத்தி ' என்றான் தேவரை இடுக்கண் தீர்ப்பான் . - 3.7.234



3398 - ஆராயாது வேட்டையாடுதல் தகாது என்று இலக்குவன் கூறுதல்
' பின் நின்றார் எனையர் என்றும்
        உணர்கிலம் ; பிடித்த மாயம்
என் என்றும் தெளிதல் தேற்றாம் ;
        யாவது ஈது என்றும் ஓராம் ;
முன் நின்ற முறையின் நின்றார்
        முனிந்துள வேட்டம் முற்றல் ,
பொன் நின்ற வயிரத் தோளாய் !
        புகழுடைத் தரம் அன்று ' என்றான் . - 3.7.235



3399 - இலக்குவன் கூறியதனை இராமன் மறுத்துரைத்தல்
பகை உடை அரக்கர் என்றும் , பலர் என்றும் , பயிலும் மாயம்
மிகை உடைத்து என்றும் , பூண்ட விரதத்தை விடுதும் என்றால் ,
நகை உடைத்து ஆகும் அன்றே ; ஆதலின் , நன்று இது என்னாத்
தகை உடைத் தம்பிக்கு அ நாள் சதுமுகன் தாதை சொன்னான் . - 3.7.236



3400 - இலக்குவன் யானே பிடித்து வருவேன் எனல்
' அடுத்தவும் எண்ணிச் செய்தல் ,
        அண்ணலே ! அமைதி அன்று ஓ ;
விடுத்து இதன் பின் நின்றார்கள்
        பலர் உளர் எனினும் , வில்லால்
தொடுத்த வெம் பகழி தூவித்
        தொடர்ந்தனென் , விரைந்து சென்று
படுக்குவென் ; அது அன்று ஆயின் ,
        பற்றினென் கொணர்வென் ' என்றான் . - 3.7.237



3401 - சீதை , இராமன்பால் நீயே பற்றி நல்கலை போலும் என்று சினந்து செல்லுதல்
ஆயிடை , அன்னம் அன்னாள் , அமுது உகுத்து அனைய செய்ய
வாயிடை மழலை இன்சொல் கிளியினில் குழறி மாழ்கி ,
' நாயக ! நீயே பற்றி நல்கலை போலும் ' என்னாச்
சேய் அரிக் குவளை முத்தம் சிந்துபு , சீறிப் போனாள் . - 3.7.238



3402 - இராமன் மானைப் பிடிக்கச் செல்லுதல்
போனவள் புலவி நோக்கிப்
        புரவலன் ,' பொலன் கொள் தாராய் !
மான் இது நானே பற்றி
        வல்லையின் வருவென் அன்று ஏ ;
கான் இயல் மயில் அன்னாளைக்
        காத்தனை இருத்தி ' என்னா ,
வேல் நகு சரமும் வில்லும்
        வாங்கினன் விரையல் உற்றான் . - 3.7.239



3403 - இலக்குவன் இராமனிடம் இது' மாரீசன் மாயம் ' என்று கூறி , சீதை புக்க சாலையைக் காத்துநிற்றல்
' முன்னமும் மகவாய் வந்த மூவரில் ஒருவன் போனான் ;
அன்ன மாரீசன் என்றே அயிர்த்தனென் இதனை ; ஐயா !
இன்னமும் காண்டி ; வாழி ; ஏகு ' என இருகை கூப்பிப்
பொன் அனாள் புக்க சாலை காத்தனன் புறத்து நின்றான் . - 3.7.240



3404 - இராமன் பொன்மானைத் தொடரல்
மந்திரம் அத்து இளையோன் சொன்ன
        வாய்மொழி மனத்துக் கொள்ளான் ,
சந்திரற்கு உவமை சான்ற
        வதனத்தாள் சலத்தை நோக்கிச்
சிந்துரப் பவளச் செவ்வாய்
        முறுவலன் , சிகரச் செவ்விச்
சுந்தரத் தோளினான் அம்
        மானினைத் தொடரல் உற்றான் . - 3.7.241



3405 - மானின் விரைவு
மிதித்தது மெல்ல மெல்ல ,
        வெறித்தது , வெருவி மீதில்
குதித்தது , செவியை நீட்டிக்
        குரபதம் உரத்தைக் கூட்டி ,
உதித்து எழும் ஊதை உள்ளம்
        என்று இவை உருவச் செல்லும்
கதிக்கு ஒரு கல்வி வேறே
        காட்டுவது ஒத்தது அன்றே . - 3.7.242



3406 - இராமன் விரைவு
நீட்டினான் உலகம் மூன்றும்
        நின்று எடுத்து அளந்த பாதம் ;
மீட்டும் தாள் நீட்டற்கு அம்மா !
        வேறும் ஓர் அண்டம் உண்டோ ?
ஓட்டினான் , தொடர்ந்த தன்னை
        ஒழிவு அற நிறைந்த தன்மை
காட்டினான் அன்றி , அன்று அக்
        கடுப்பை யார் கணிக்கற் பாலார் . - 3.7.243



3407 - மான் அணுகியும் விலகியும் செல்லுதல்
குன்றிடை இவரும் ; மேகக்
        குழுவிடைக் குதிக்கும் ; கூடச்
சென்றிடின் அகலும் ; தாழின்
        தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும் ;
நின்றதே போல நீங்கும் ;
        நிதிவழி நேயம் நீட்டும்
மன்றல் அம் கோதை மாதர்
        மனம் எனப் போயிற்று அம்மா ! - 3.7.244



3408 - இராமன் மாயமான் என்று தெளிதல்
' காயம் வேறு ஆகிச் செய்யும்
        கருமம் வேறு ஆயிற்று அன்றே ;
ஏயுமே என்னின் முன்னம்
        எண்ணமே இளவல் கு உண்டே ;
ஆயுமேல் உறுதல் செல்லாது ;
        அரக்கரானவர்கள் செய்த
மாயமே ஆயதே , நான்
        வருந்தியது ' என்றான் ; வள்ளல் . - 3.7.245



3409 -
இராமன் நினைவறிந்து மாரீசன் தப்பியோட முயலுதல்
' பற்றுவான் இனி அல்லன் ; பகழியால்
செற்று வானில் செலுத்தல் உற்றான் ' என
மற்று அ மாய அரக்கன் மனம் கொளா
உற்ற வேகத்தின் உம்பரின் ஓங்கினான் . - 3.7.246



3410 - இராமன் அம்பு தொடுத்தல்
அக் கணத்தினில் ஐயனும் , வெய்ய தன்
சக்கரத்தில் தகைவு அரிது ஆயது , ஓர்
செக்கர் மேனிப் பகழி செலுத்தினான் ,
' புக்க தேயம் புக்கு , இன் உயிர் போக்கு ' எனா . - 3.7.247



3411 - மாரீசன் கதறி விழுந்து மடிதல்
நெட்டு இலை சரம் , வஞ்சனை நெஞ்சு உறப்
பட்டது ; அப்பொழுதே பகு வாயினால்
அட்ட திக்கினும் அ புறமும் புக ,
விட்டு அழைத்து , ஒரு குன்று என வீழ்ந்தனன் . - 3.7.248



3412 - இராமன் இலக்குவனைப் பாராட்டுதல்
வெய்யவன் தன் உருவொடு வீழ்தலும் ,
' செய்யது அன்று ' எனச் செப்பிய தம்பியை
' ஐயன் வல்லன் , என் ஆர் உயிர் வல்லன் , நான்
உய்ய வந்தவன் வல்லன் ' என்று உன்னினான் . - 3.7.249



3413 - உயிர்நீங்கி விழுந்த உடலை நோக்கிய இராமன் மாரீசனென்று தெளிதல்
ஆசை நீளத்து அரற்றினன் , வீழ்ந்த அந்
நீசன் மேனியை நின்று உற நோக்கினான் ,
மாசு இல் மாதவன் வேள்வியில் வந்த மா
ரீசனே இவன் என்பதும் தேறினான் . - 3.7.250



3414 - மாரீசன் குரலால் சீதை வருந்துவாள் என்று இராமன் இரங்குதல்
' புழைத்த வாளி உரம் புகப் புல்லியோன் ,
இழைத்த மாயையின் என் குரலால் எடுத்து
அழைத்தது உண்டு ; அது கேட்டு அயர் வெய்தும் ஆல்
மழைக் கண் ஏழை ' என்று உள்ளம் வருந்தினான் . - 3.7.251



3415 - இலக்குவன் சீதையைத் தேற்றுவானென்று இராமன் ஆறுதலடைதல்
' மாற்றம் இன்னது மாயம் , மாரீசன் என்று
ஏற்றம் முன் உணர்ந்தான் , இருந்தான் ; எனது
ஆற்றல் தேரும் அறிவினன் , ஆதலால்
தேற்றும் ஆல் , இளையோன் ' எனத் தேறினான் . - 3.7.252



3416 - இராமன் திரும்புதல்
' மாள்வதே பொருள் ஆக வந்தான் அலன் ;
சூழ்வது ஓர் பொருள் உண்டு ; இவன் சொல்லினால்
மூள்வது ஏதம் ; அது முடியா முனம்
மீள்வதே நலன் ' என்று அவன் மீண்டனன் . - 3.8.253


3.8 . சடாயு உயிர் நீத்த படலம் (3417 - 3641)




3417 - சங்கு அடுத்த தனிக் கடல் மேனியாற்கு
அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம் ;
கொங்கு அடுத்த மலர்க் குழல் கொம்பு அனாட்கு
இங்கு அடுத்த தகைமை இயம்புவாம் . - 3.8.1

சீதையின் துயர்நிலை (3418-3419)



3418 - எயிறு அலைத்து முழை திறந்து ஏங்கிய
செயிர் தலை கொண்ட சொல் செவி சேர்தலும் ,
குயில் தலம் அத்து இடை உற்றது ஒர் கொள்கையாள் ,
வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள் . - 3.8.2



3419 - '' 'பிடித்து நல்கு , இவ் உழை ' எனப் பேதையேன்
முடித்தனென் முதல் வாழ்வு '' என , மொய் அழல்
கொடிப் படிந்தது என , நெடுங் கோள் அரா
இடிக்கு உடைந்தது எனப் புரண்டு ஏங்கினாள் . - 3.8.3



3420 - சீதை இலக்குவனைச் சினந்து கூறியது
'' குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன் ,
மற்றை வாள் அரக்கன் புரி மாயையால் ,
இற்று வீழ்ந்தனன் என்னவும் , என் அயல்
நிற்றியோ ? இளையோய் ! ஒரு நீ ? '' என்றாள் . - 3.8.4



3421 - இலக்குவன் கூறும் அமைதி (3421-3427)
'' எண்மையார் ,' உலகினில் இராமற்கு ஏற்றம் ஓர்
திண்மையார் உளர் ' எனச் செப்பற் பாலரோ ?
பெண்மையால் உரைசெயப் பெறுதிரால் '' என
உண்மையான் அனையவட்கு உணரக் கூறினான் . - 3.8.5



3422 - '' ஏழுமே கடல் , உலகு ஏழும் ஏழுமே ,
சூழும் ஏழ் மலை , அவை தொடர்ந்த சூழல்வாய்
வாழும் ஏழையர் சிறுவலிக்கு , வாள் அமர் ,
தாழுமே இராகவன் தனிமை ? தையலீர் ! '' - 3.8.6



3423 - '' பார் எனப் புனல் எனப் பவனம் வான் , கனல்
பேர் என அவை அவன் முனியில் பேருமால் ;
கார் எனக் கரிய அக் கமலக் கண்ணனை
யார் எனக் கருதி , இவ் இடரின் ஆழ்கின்றீர் ? '' - 3.8.7



3424 - '' இடைந்துபோய் நிசிசரற்கு , இராமன் , எவ்வம் வந்து
அடைந்த போது அழைக்குமே ? அழைக்குமாம் எனின் ,
மிடைந்த பேர் அண்டங்கள் , மேல , கீழன ,
உடைந்து போம் ; அயன் முதல் உயிரும் வீயுமால் '' - 3.8.8



3425 - '' மாற்றம் என் பகர்வது ? மண்ணும் வானமும்
போற்ற , வன் திரிபுரம் எரித்த புங்கவன்
ஏற்றி நின்று எய்த வில் இற்றது , எம்பிரான்
ஆற்றலின் அமைவது ஓர் ஆற்றல் உண்மை ஓ ? '' - 3.8.9



3426 - '' காவலன் , ஈண்டு நீர் கருதிற்று எய்துமேல் ,
மூவகை உலகமும் முடியும் ; முந்து உள
தேவரும் முனிவரும் முதல செவ்வியோர்
ஏவரும் , வீவர் ; நல் அறமும் எஞ்சுமால் . '' - 3.8.10



3427 - '' பரக்க என் பகர்வது ? பகழி , பண்ணவன்
துரக்க , அங்கு அது படத் தொலைந்து சோர்கின்ற
அரக்கன் அவ் உரை எடுத்து அரற்றினான் ; அதற்கு
இரக்கம் உற்று இரங்கலிர் ; இருத்திர் ஈண்டு '' என்றான் . - 3.8.11



3428 - சீதையின் கடுஞ்சொல் 3428 , 3429
என்று அவன் இயம்பலும் , எடுத்த சீற்றத்தள் ,
கொன்றன இன்னலள் , கொதிக்கும் உள்ளத்தள் ,
'' நின்ற நின் நிலை இது , நெறியிற்று அன்று '' எனா ,
வன் தறுகண்ணினள் , வயிர்த்துக் கூறுவாள் . - 3.8.12



3429 - '' ஒருபகல் பழகினார் உயிரை ஈவரால் ;
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் , நீ
வெருவலை நின்றனை ; வேறு என் ? யான் இனி ,
எரி இடை கடிது வீழ்ந்து இறப்பென் , ஈண்டு '' எனா . - 3.8.13



3430 - இலக்குவன் சீதையை விலக்கி வணங்குதல்
தாமரை வனம் அத்து இடை தாவும் அன்னம் போல் ,
தூம வெம் காட்டு எரி தொடர்கின்றாள் தனை
சேம வில் குமரனும் விலக்கிச் சீறடிப்
பூ முக நெடு நிலம் புல்லிச் சொல்லும் ஆல் . - 3.8.14



3431 - இலக்குவன் செல்ல உடன்படல்
'' துஞ்சுவது என்னை ? நீர் சொற்ற சொல்லை யான்
அஞ்சுவென் ; மறுக்கிலென் ; அவலம் தீர்ந்து இனி ,
இஞ்சு இரும் ; அடியனேன் ஏகுகின்றனென் ;
வெம் சினம் விதியினை வெல்ல வல்லம் ஓ ? '' - 3.8.15



3432 - இலக்குவன் போதல்
'' போகின்றேன் அடியனேன் ; பொருந்தி வந்து , கேடு
ஆகின்றது ; அரசன் தன் ஆணை நீர் மறுத்து ,
' ஏகு ' என்றீர் ; இருக்கின்றீர் தமியிர் '' என்று , பின்
வேகின்ற சிந்தையான் விடைகொண்டு ஏகினான் . - 3.8.16



3433 - இலக்குவன் தனக்குள் விம்முதல் (3433-3435)
'' இருப்பனேல் , எரி இடை இறப்பரால் இவர் ;
பொருப்பு அனையான் இடை போவென் ஏ எனின் ,
அருப்பம் இல் கேடு வந்து அடையும் ; ஆருயிர்
விருப்பனேற்கு என் செயல் ? '' என்று விம்மினான் . - 3.8.17



3434 - '' அறம்தனால் அழிவு இலது ஆகின் ஆக்கலாம் ;
இறந்து பாடு இவர்க்கு உறும் இதனின் , இவ் வழி
துறந்து போம் இதனையே துணிவென் ; தொல் வினை
பிறந்து போந்து இதுபடும் பேதையேன் '' எனா . - 3.8.18



3435 - '' போவது புரிவல் யான் ; புகுந்தது உண்டு எனின் ,
காவல் செய் எருவையின் தலைவன் கண்ணுறும் ;
ஆவது காக்கும் '' என்று அறிவித்து , அவ் வழித்
தேவர் செய் தவம் அத்து இன் ஆல் செம்மல் ஏகினான் . - 3.8.19



3436 - இராவணன் தவவேடம் தாங்கிச் செல்லுதல் (3436-3439)
இளையவன் ஏகலும் , இறவு பார்க்கின்ற
வளை எயிற்று இராவணன் , வஞ்சம் முற்றுவான் ,
முளை வரித் தண்டு ஒரு மூன்றும் , முப்பகைத்
தளை அரி தவத்தவர் வடிவும் தாங்கினான் . - 3.8.20



3437 - ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன் ,
சேண் நெறி வந்தது ஓர் வருத்தச் செய்கையன் ,
பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என ,
வீணையின் இசைபட வேதம் பாடுவான் . - 3.8.21



3438 - பூப் பொதி அவிழ்ந்தன நடையன் ; பூதலம்
தீப் பொதிந்தாம் என மிதிக்கும் செய்கையன் ;
காப்பு அரும் நடுக்கு உறும் காலன் ; கையினன் ;
மூப்பு எனும் பருவமும் முனிய முற்றினான் . - 3.8.22



3439 - தாமரை மணிதொடர் தவத்தின் மாலையன் ,
ஆமையின் இருக்கையன் , வளைந்த ஆக்கையன் ,
நாம நூல் மார்பினன் , நணுகினான் அரோ
தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்வாய் . - 3.8.23



3440 - இராவணன் இப்பன்னசாலையில் இருப்பது யார் எனல்
தோம் அறு சாலையின் வாயில் துன்னினான் ,
நா முதல் குழறிட நடுங்கு சொல்லினான் ,
'' யாவிர் இவ் இருக்கையுள் இருந்துளீர் ? '' என்றான்
தேவரும் மருள் கொளத் தெரிந்த மேனியான் . - 3.8.24



3441 - சீதை வரவேற்றல்
தோகையும்'' இவ்வழித் தோம் இல் சிந்தனைச்
சேகு அறு நோன்பினர் '' என்னும் சிந்தையாள் ,
பாகு இயல் கிளவி ஓர் , பவளக் கொம்பர் போன்று ,
'' ஏகுமின் ஈண்டு '' என , எதிர் வந்து எய்தினாள் . - 3.8.25



3442 - சீதையைக் கண்ட இராவணன் மனநிலை (3442-3448)
வெற்பு இடை மதம் என வியர்க்கும் மேனியன் ,
அற்பு இன் திரை புரள் ஆசை வேலையன் ,
பொற்பினுக்கு அணியினைப் புகழின் சேக்கையைக்
கற்பினுக்கு அரசியைக் கண்ணில் நோக்கினான் . - 3.8.26



3443 - 3.8.26.
தூங்கல் இல் குயில் கெழு சொல்லின் , உம்பரின்
ஓங்கிய அழகினாள் உருவம் காண்டலும் ,
ஏங்கினன் மனநிலை யாது என்று உன்னுவாம் ?
வீங்கின ; மெலிந்தன ; வீரத் தோள்களே . - 3.8.27



3444 - புன மயில் சாயலின் எழிலில் , பூநறைச்
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின்
இனம் எனக் களித்துளது என்பது என் ? அவன்
மனம் எனக் களித்தது , கண்ணின் மாலையே . - 3.8.28



3445 - '' சேம் இதழ்த் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண்
மேயவள் மணி நிற மேனி காணுதற்கு ,
ஏயும் ஏ இருபது ? இங்கு இமைப்பு இல் நாட்டங்கள்
ஆயிரம் இல்லை ! '' என்று அல்லல் எய்தினான் . - 3.8.29



3446 - '' அரை கடை இட்ட முக்கோடி ஆயுவும்
புரை தபு தவத்தின் யான் படைத்த போதுமே ?
நிரை வளை முன்கை இந் நின்ற நங்கையின்
கரை அறு நல் நலக் கடற்கு '' என்று உன்னினான் . - 3.8.30



3447 - '' தேவரும் , அவுணரும் , தேவி மாரொடும்
கூவல் செய் தொழிலினர் , குடிமை செய்திட ,
மூவுலகமும் இவர் முறையின் ஆள , யான்
ஏவல் செய்து உய்குவன் , இனி '' என்று உன்னினான் . - 3.8.31



3448 - '' உளைவு உறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின் ,
முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும் ?
தளை அவிழ் குழல் இவட் கண்டு தந்த என்
இளையவட்கு அளிப்பன் என் அரசு '' என்று எண்ணினான் . - 3.8.32



3449 - சீதை இராவணனை வரவேற்று முகமன் செய்தல் (3449-3450)
ஆண்டையான் அனையன உன்னி , ஆசை மேல்
மூண்டு எழு சிந்தனை , முறை இலோன் தனை
காண்டலும் , கண்ணின் நீர் துடைத்த கற்பினாள் ,
'' ஈண்டு எழுந்து அருளும் '' என்று , இனிய கூறினாள் . - 3.8.33



3450 - ஏத்தினள் ; எய்தலும் ,'' இருத்திர் ஈண்டு '' என ,
வேத்திரம் அத்து ஆசனம் விதியின் நல்கினாள் ;
மாத் திரி தண்டு அயல் வைத்த வஞ்சனும் ,
பூத் தொடர் சாலையின் இருந்த போழ்தினே . - 3.8.34



3451 - இராவணனை யறிந்து அஃறிணைப் பொருள்கள் அஞ்சுதல்
நடுங்கின மலைகளும் மரனும் ; நா அவிந்து
அடங்கின பறவையும் ; விலங்கும் அஞ்சின ;
படம் குறைந்து ஒதுங்கின பாம்பும் ; பாதகக்
கடுந் தொழில் அரக்கனைக் காணும் கண்ணினே . - 3.8.35



3452 - இராவணன் வினாவும் சீதை விடையும் (3452-3453)
இருந்தவன் ,'' யாவது இவ் இருக்கை ? இங்கு உறை
இருந்தவன் யாவன் ? நீர் யாரை ? '' என்றலும் ,
'' விருந்தினர் ; இவ் வழி விரகு இலார் '' எனப்
பெருந்தடங் கண்ணவள் பேசல் மேயினாள் . - 3.8.36



3453 - '' தயரதன் தொல் குலத் தலைவன் , தம்பியோடு
உயர் குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான் ,
அயர்வு இலன் , இவ் வழி உறையும் ; அன்னவன்
பெயரினைத் தெரிகுதிர் , பெருமையீர் ! '' என்றாள் . - 3.8.37



3454 - இராவணன் விடையும் வினாவும்
'' கேட்டனென் , கண்டிலென் ; கெழுவு கங்கை நீர்
நாடு இடை ஒருமுறை நண்ணினேன் ; மலர்
வாள் தடங் கண்ணின் நீர் யாவர் மா மகள் ?
காட்டிடை அரும் பகல் கழிக்கின்றீர் ! '' என்றான் . - 3.8.38



3455 - சீதையின் விடை
'' அனக மா நெறி படர் அடிகள் ! நும் அலால்
நினைவது ஓர் தெய்வம் வேறு இலாத நெஞ்சினான்
சனகன் மா மகள் ; பெயர் சனகி ; காகுத்தன்
மனைவி யான் '' என்றனள் , மறு இல் கற்பினாள் . - 3.8.39



3456 - சீதையின் வினா
அ வழி அனையன உரைத்த ஆய் இழை ,
'' வெம் வழி வருந்தினிர் , விளைந்த மூப்பினிர் ,
இ வழி இரு வினை கடக்க எண்ணினிர் ,
எவ் வழி நின்றும் இங்கு எய்தினீர் ? '' என்றாள் . - 3.8.40



3457 - இராவணத் துறவியின் சொல் (3457-3466)
'' இந்திரற்கு இந்திரன் ; எழுதல் ஆகலாச்
சுந்தரன் ; நான்முகன் மரபில் தோன்றினான் ;
அந்தரம் அத்து ஓடு உம் எவ் உலகும் ஆள்கின்றான் ;
மந்திரம் அத்து அருமறை வைகும் நாவினான் . '' - 3.8.41



3458 - '' ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால்வரை
ஊசி வேர் ஒடு உம் பறித்து எடுக்கும் ஊற்றத்தான் ;
ஆசைகள் சுமந்த பேர் ஆற்றல் ஆனைகள்
பூசல் செய் மருப்பினைப் பொடிசெய் தோளினான் . '' - 3.8.42



3459 - '' நிற்பவர் , கடை தலை நிறைந்து தேவரே ;
சொல் படும் மற்றவன் பெருமை சொல்லுங்கால் ;
கற்பகம் முதலிய நிதியம் கையன ;
பொற்பு அகம் , மான நீர் இலங்கைப் பொன் நகர் . '' - 3.8.43



3460 - '' மேனகை திலோத்தமை முதல ஏழையர் ,
வானகம் துறந்து வந்து , அவன்தன் மாட்சியால் ,
ஊனம் இல் அடைப்பை , கால் வருடல் , ஒண் செருப்பு
ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே . '' - 3.8.44



3461 - '' சந்திரன் , இரவி என்பவர்கள்தாம் , அவன்
சிந்தனை வழி நிலை திரிவர் ; தேசு உடை
இந்திரன் முதலிய அமரர் , ஈண்டு அவன்
கம் தடு கோயிலின் காவலாளரே . '' - 3.8.45



3462 - '' பொன் நகரத்தினும் ; பொலம் கொள் நாகர் தம்
தொல் நகரத்தினும் , தொடர்ந்த மா நிலம் அத்து
எந் நகரத்தினும் இனிய , ஈண்டு அவன்
நல் நகரத்தன நவை இலாதன . '' - 3.8.46



3463 - '' தாள் உடை மலர் உளான் தந்த , அந்தம் இல்
நாள் உடை வாழ்க்கையன் ; நாரி பாகத்தன்
வாள் உடைத் தட கையன் ; வாரி வைத்த வெங்
கோள் உடைச் சிறையினன் ; குணங்கள் மேன்மையான் . '' - 3.8.47



3464 - '' வெம்மை தீர் ஒழுக்கினன் ; விரிந்த கேள்வியன் ;
செம்மையோன் ; மன்மதன் திகைக்கும் செவ்வியன் ;
எம்மையோர் அனைவரும்' இறைவர் ' என்று எணும்
மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான் . '' - 3.8.48



3465 - '' அனைத்து உலகினும் அழகு அமைந்த நங்கையர்
எனைப் பலர் , அவன் தனது அருளின் இச்சையோர் ;
நினைத்து அவர் உருகவும் , உதவ நேர்கிலன் ;
மனக்கு இனியாள் ஒரு மாதர் நாடுவான் . '' - 3.8.49



3466 - '' ஆண்டையான் அரசு வீற்றிருந்த அந்நகர் ,
வேண்டி , யான் சில் பகல் உறைதல் மேயினேன் ;
நீண்டனென் இருந்து , அவற் பிரியும் நெஞ்சு இலேன் ,
மீண்டனென் '' என்றனன் , வினையம் உன்னுவான் . - 3.8.50



3467 - சீதையின் வினா (3467-3468)
'' வேதமும் , வேதியர் அருளும் வெஃகலாச்
சேதனை மன் உயிர் தின்னும் தீ வினை
பாதக அரக்கர் தம் பதியின் வைகுதற்கு
ஏது என் ? உடலமும் மிகை என்று எண்ணுவீர் ! '' - 3.8.51



3468 - '' வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர் ;
புனல் திரு நாடு இடை புனிதர் ஊர்புக
நினைத்திலிர் ; அறநெறி நினைக்கிலாதவர்
இனத்திடை வைகினிர் ; என் செய்தீர் ! '' என்றாள் . - 3.8.52



3469 - இராவணத் துறவி நிருதரே நல்லவர் எனல்
மங்கை அஃது உரைத்தல் கேட்ட
        வரம்பு இலான் ,'' மறுவில் தீர்ந்தார் ,
வெம் கண் வாள் அரக்கர் என்ன
        வெருவலம் ; மெய்ம்மை நோக்கின் ,
திங்கள் வாள் முகத்தினாய் ! அத்
        தேவரில் தீயர் அல்லர் ;
எங்கள் போலியர்க்கு நல்லார்
        நிருதரே போலும் '' என்றான் . - 3.8.53



3470 - சீதை தீயரைச் சேரின் நல்லவரும் தீயராவர் எனல்
சேயிழை , அன்ன சொல்லத்
        '' தீயவர்ச் சேர்தல் செய்தால்
தூயவர் அல்லர் , சொல்லின் ,
        தொல் நெறி தொடர்ந்தோர் '' என்றாள் ;
மாய வல் அரக்கர் வல்லர் ,
        வேண்டு உரு வரிக்க என்பது ,
ஆயவள் அறிதல் தேற்றாள் ,
        ஆகலின் அயல் ஒன்று எண்ணாள் . - 3.8.54



3471 - இராவணன் வல்லோன் வழியது உலகம் எனல்
அயிர்த்தனள் ஆகும் என்று ,
        ஓர் ஐயுறவு அகத்துக் கொண்டான் ;
பெயர்த்து , அது துடைக்க எண்ணிப்
        பிறிது உற பேசலுற்றான் ;
'' மயக்கு அறும் உலகம் மூன்றின்
        வாழ்பவர்க்கு , அனைய வல்லோர்
இயற்கையின் நிற்பது அல்லால் ,
        இயற்றலாம் நெறி என் ? '' என்றான் . - 3.8.55



3472 - சீதை இராமனால் அரக்கர் அழிவர் எனல்
திறம் தெரி வஞ்சன் , அ சொல்
        செப்பலும் , செப்பம் மிக்காள் ,
'' அறம் தரு வள்ளல் , ஈண்டு இங்கு
        அருந்தவம் முயலும் நாளுள் ,
அறம் தலைதிரிந்த வாழ்க்கை
        அரக்கர் தம் வருக்கத் தோடும்
இறந்தனர் முடிவர் ; பின்னர்
        இடர் இலை உலகம் '' என்றாள் . - 3.8.56



3473 - இராவணன் மனிதர் அரக்கரை வெல்லார் எனல்
மானவள் உரைத்தலோடும் ,
        '' மானிடர் அரக்கர் தம்மை ,
மீன் என மிளிரும் கண்ணாய் !
        வேர் அற வெல்வர் என்னின் ,
யானையின் இனம் அத்து ஐ எல்லாம்
        இள முயல் கொல்லும் ; பின்னும் ,
கூன் உகிர் மடங்கல் ஏற்றைக்
        குருளை மான் கொல்லும் '' என்றான் . - 3.8.57



3474 - அழிந்த அரக்கர்களைக் கூறி இராமன் ஆற்றலைப் புகழ்தல் (3474-3475)
'' மின் திரண்டு அனைய பங்கி
        விராதனும் , வெகுளி பொங்கக்
கன்றிய மனத்து வென்றிக்
        கரன் முதல் கணக்கிலோரும்
பொன்றிய பூசல் ஒன்றும்
        கேட்டிலிர் போலும் '' என்றாள் ,
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி ,
        மழை கண் நீர் அருவி சோர்வாள் . - 3.8.58



3475 - '' வாள் அரி வள்ளல் , சொன்ன
        மான் கணம் நிருதர் ; அன்னோர் ,
கேள் ஒடு மடியு மாறும் ,
        வானவர் கிளரு மாறும் ,
நாளையே காண்டிர் அன்றே ;
        நவை இலிர் , உணர்கிலீரோ ?
மீள் அரும் தருமம் தன்னை
        வெல்லுமோ பாவம் ? '' என்றாள் . - 3.8.59



3476 - இராவணன் சீற்றமும் மாயவேடங் கலைதலும் (3476-3480)
தேன் இடை அமுது அளாய
        அன்ன மென் சில சொல் மாலை ,
தானுடைச் செவிகள் ஊடு
        தவழ் உற தளிர்த்து வீங்கும்
ஊனுடை உடம்பினானும் ,
        உருகெழு மானம் ஊன்ற ,
' மானிடர் , வலியர் ' என்ற
        மாற்றத்தால் சீற்றம் வைத்தான் . - 3.8.60



3477 - சீறினன் , உரை செய்வான் , அச்
        '' சிறு வலிப் புல்லியோர்கட்கு
ஈறு , ஒரு மனிதன் செய்தான் ,
        என்று எடுத்து இயம்பினாயேல் ,
தேறுதி நாளையே ; அவ்
        இருபது திண்தோள் வாடை
வீறிய பொழுது , பூளை
        வீ என வீவன் அன்றே ? '' - 3.8.61



3478 - '' மேருவைப் பறிக்க வேண்டின் ,
        விண்ணினை இடிக்க வேண்டின் ,
நீரினைக் கலக்க வேண்டின் ,
        நெருப்பினை அவிக்க வேண்டின் ,
பாரினை எடுக்க வேண்டின்
        பல வினைச் சில சொல் ஏழாய் !
யார் எனக் கருதிச் சொன்னாய் !
        இராவணற்கு அரிது என் ? '' என்றான் . - 3.8.62



3479 - '' அரண் தரு திரள் தோள் சால
        உள எனின் , ஆற்றல் உண்டோ ?
கரண்ட நீர் இலங்கை வேந்தைச்
        சிறை வைத்த கழல் கால் வீரன்
திரண்ட தோள் வனத்தை எல்லாம் ,
        சிறியது ஓர் பருவம் தன்னில் ,
இரண்டு தோள் ஒருவன் அன்றோ
        மழுவினால் எறிந்தான் ? '' என்றாள் . - 3.8.63



3480 - என்று அவள் உரைத்தலோடும் ,
        எரிந்தன நயனம் ; திக்கில்
சென்றன திரள் தோள் ; வானம்
        தீண்டின மகுடம் ; திண் கை
ஒன்று ஒடு ஒன்று அடித்த ; மேகத்து
        உரும் என எயிற்றின் ஓளி
மென்றன ; வெகுளி பொங்க ,
        விட்டது மாயம் வேடம் . - 3.8.64



3481 - சீதையின் ஐயமும் இராவணன் வடிவமும்
'' இருவினை துறந்த மேலோர்
        அல்லன் கொல் இவன் ? '' என்று எண்ணி ,
அரிவையும் ஐயம் எய்தா ,
        '' ஆர் இவன்தான் ? '' என்று ஒன்றும் ,
தெரிவு அரு நிலையளாகத்
        தீ விடத்து அரவம் தானே
உரு கெழு சீற்றம் பொங்கிப்
        பணம் விரித்து உயர்ந்தது ஒத்தான் . - 3.8.65



3482 - சீதையின் அச்சம்
ஆற்ற வெம் துயரத்து அன்னாள்
        ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின்
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் ?
        எதிர் எடுத்து இயம்பலாகும்
மாற்றம் ஒன்று இல்லை ; செய்யும்
        வினை இல்லை ; வரிக்கல் ஆகாக்
கூற்றம் வந்து உற்ற காலத்து
        உயிர் எனக் குலைவு கொண்டாள் . - 3.8.66



3483 - இராவணன் சீதையை அச்சுறுத்தல்
'' விண்ணவர் ஏவல் செய்ய ,
        வென்ற என் வீரம் பாராய் ;
மண் இடை புழுவின் வாழும்
        மானிடர் வலியர் என்றாய் ;
பெண் எனப் பிழைத்தாய் அல்லை ;
        உன்னை யான் பிசைந்து தின்ன
எண்ணுவென் ; எண்ணில் , பின்னை
        என் உயிர் இழப்பென் '' என்றான் . - 3.8.67



3484 - இராவணன் சீதையை நயந்து வேண்டுதல்
'' குலைவு உறல் , அன்னம் !
        முன்னம் யாரையும் கும்பிடா என்
தலை மிசை மகுடம் என்னத்
        தனி தனி இனிது தாங்கி ,
அலகு இல் பூண் அரம்பை மாதர்
        அடி முறை ஏவல் செய்ய
உலகம் ஈரேழும் ஆளும்
        செல்வத்துள் உறைதி '' என்றான் . - 3.8.68



3485 - சீதையின் சினச்சொல் (3485-86)
செவிகளைத் தளிர்க் கையாலே
        சிக்குறச் சேமம் செய்தாள் ;
'' கவினும் வெஞ்சிலைக் கை வென்றிக்
        காகுத்தன் கற்பினேனை ,
புவி இடை ஒழுக்கம் நோக்காய்
        பொங்கு எரிப் புனிதர் ஈயும்
அவியை நாய் வேட்டது என்ன ,
        என் சொனாய் அரக்க ? '' என்னா . - 3.8.69



3486 - '' புல் நுனை நீரின் நொய்தாப்
        போதலே புரிந்து நின்ற
இன் உயிர் இழத்தல் அஞ்சி ,
        இல் பிறப்பு அழிதல் உண்டே ?
மின் உயிர்த்து உருமின் சீறும்
        வெம் கணை விரவாமுன்னம் ,
உன் உயிர்க்கு உறுதி நோக்கின் ,
        ஒளித்தியால் ஓடி '' என்றாள் . - 3.8.70



3487 - இராவணன் மறுமொழி (3487-3488)
என்று அவள் உரைக்க , நின்ற
        இரக்கம் இல் அரக்கன் ,'' எய்த
உன் துணைக் கணவன் அம்பு ,
        அவ் உயர் திசை சுமந்த ஓங்கல்
வன் திறல் மருப்பின் ஆற்றல்
        மடித்த என் மார்பில் வந்தால் ,
குன்று இடை தொடுத்து விட்ட
        பூங்கணை கொல் அது '' என்றான் . - 3.8.71



3488 - '' அணங்கினுக்கு அணங்கு அனாய் ! நின்
        ஆசை நோய் அகத்துப் பொங்க ,
உணங்கிய உடம்பினேனுக்கு
        உயிரினை உதவி , உம்பர்க்
கணம் குழை மகளிர்க்கு எல்லாம்
        பெரும் பதம் கைக்கொள் '' என்னா ,
வணங்கினன் -- உலகம் தாங்கும்
        மலையினும் வலிய தோளான் . - 3.8.72



3489 - சீதையின் ஏக்கம்
தறை வாய் அவன் வந்து அடி தாழுதலும் ,
கறை வாள் பட ஆவி கலங்கினள் போல் ,
'' இறைவா ! இளையோய் ! '' என ஏங்கினளால் ,
பொறைதான் உருவானது ஒர் பொற்பு உடையாள் . - 3.8.73
இராவணன் சீதையைப் பன்னசாலையோடு எடுத்தல் (3490-3491)



3490 - ஆண்டு ஆ இடை , தீயவன் ஆய் இழையை
தீண்டான் , அயன் மேல் உரை சிந்தைசெயாத்
தூண் தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் ,
கீண்டான் நிலம் ; யோசனை கீழொடு மேல் . - 3.8.74



3491 - கொண்டான் உயர் தேர் மிசை ; கோல் வளையாள்
கண்டாள் , தனது ஆர் உயிர் கண்டிலள் ஆல் ,
மண் தான் உறும் மின்னின் மயங்கினளால் ;
விண் தான் வழியா எழுவான் விரைவான் . - 3.8.75



3492 - சீதையின் அரற்றல் (3492-3497)
'' விடு தேர் '' என , வெம் கனல் வெந்து அழியும்
கொடிபோல் புரள்வாள் , குலைவாள் , அயர்வாள் ,
துடியா எழுவாள் , துயரால் அழுவாள் ,
'' கடிதா அறனே ! இது கா '' எனுமால் . - 3.8.76



3493 - '' மலையே ! மரனே ! மயிலே ! குயிலே !
கலையே ! பிணையே ! களிறே ! பிடியே !
நிலையா உயிரேன் நிலை தேறினிர் போய் ,
உலையா வலியார் உழை நீர் உரையீர் ! '' - 3.8.77



3494 - '' செஞ் சேவகனார் நிலை நீர் தெரிவீர் ;
மஞ்சே ! பொழிலே ! வன தேவதைகாள் !
' அஞ்சேல் ' என நல்குதிரேல் , அடியேன்
உஞ்சால் , அதுதான் இழிவோ ? உரையீர் ! '' - 3.8.78



3495 - '' நிருத ஆதியர் வேர் அற , நீல் முகில் போல்
சர தாரைகள் வீசினிர் , சார்கிலிர் ஓ ?
வரதா ! இளையோய் ! மறு ஏதும் இலாப்
பரதா ! இளையோய் ! பழி பூணுதிர் ஓ ? '' - 3.8.79



3496 - '' கோதாவரியே ! குளிர்வாய் , குழைவாய் ;
மாதா அனையாய் மனனே தெளிவாய் ;
ஓதாது உணர்வார் உழை ஓடினை போய் ,
நீதான் வினையேன் நிலை சொல்லலை ஓ ? '' - 3.8.80



3497 - '' முந்தும் சுனைகாள் ! முழை வாழ் அரிகாள் !
இந்தந் நிலன் ஓடு உம் எடுத்த கை நால்
ஐந்தும் , தலை பத்தும் , அலைந்து உலையச்
சிந்தும்படி கண்டு சிரித்திடுவீர் . '' - 3.8.81



3498 - இராவணன் சிரித்தல்
என்று இன்ன பலவும் பன்னி
        இரியல் உற்று அரற்றுவாளைப்
'' பொன் துன்னு புணர் மென் கொங்கைப்
        பொலம் குழாய் ! போரில் என்னைக்
கொன்று , உன்னை மீட்பர் கொல் ,
        அம் மானிடர் ? கொள்க '' என்னா ,
வன் திண்கை எறிந்து நக்கான் ,
        வாழ்க்கை நாள் வறிது வீழ்ப்பான் . - 3.8.82



3499 - சீதையின் சினச் சொற்கள் (3499-3500)
வாக்கினால் அன்னான் சொல்ல ,
        '' மாயையால் வஞ்ச மான் ஒன்று
ஆக்கினாய் ; ஆக்கி , உன்னை
        ஆருயிர் உண்ணும் கூற்றைப்
போக்கினாய் ; புகுந்து , கொண்டு
        போகின்றாய் ; பொருது நின்னைக்
காக்குமா காண்டி ஆயின் ,
        கடவல் உன் தேரை '' என்றாள் . - 3.8.83



3500 - மீட்டும் ஒன்று உரை செய்வாள் ;'' நீ
        வீரனே ! விரைவில் மற்று உன்
கூட்டராம் அரக்கர் தம்மை கொன்று ,
        உங்கை கொங்கை மூக்கும்
வாட்டினார் வனத்தில் உள்ளார் ,
        மானிடர் '' என்ற வார்த்தை
கேட்டும் , இம் மாயம் செய்தது
        அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ ? '' - 3.8.84



3501 - இராவணன் மறுமொழி
மொழிதரும் அளவில் ,'' நங்கை !
        கேள் இது ; முரண் இல் யாக்கை
இழி தரு மனிதரோடே
        யான் செரு ஏற்பல் என்றால் ,
விழி தரும் நெற்றியான் தன்
        வெள்ளி வெற்பு எடுத்த தோட்குப்
பழி தரும் ; அதனின் சாலப்
        பயன் தரும் , வஞ்சம் '' என்றான் . - 3.8.85



3502 - சீதையின் பழிப்புரை
பாவையும் அதனைக் கேளாத்
        '' தம் குலப் பகைஞர் தம்பால்
போவது குற்றம் ! வாளின்
        பொருவது நாணம் போலாம் !
ஆவது , கற்பினாரை
        வஞ்சிக்கும் ஆற்றலே ஆம் !
ஏவம் என் ? பழிதான் என்னே ?
        இரக்கம் இல் அரக்கர்க்கு '' என்றாள் . - 3.8.86



3503 - சடாயு எதிர்த்தல் (3503-3509)
என்னும் அவ் வேலை இன் கண் ,
        '' எங்கு அடா போவது ? எங்கே ?
நில் ! நில் ! '' என்று இடித்த சொல்லன் ,
        நெருப்பு இடை பரப்பும் கண்ணன் ,
மின் என விளங்கும் வீரத்
        துண்டத்தன் , மேரு என்னும்
பொன் நெடும் குன்றம் வானின்
        வருவதே போலும் மெய்யான் . - 3.8.87



3504 - பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து ,
        எழுந்து , ஒன்றோடு ஒன்று
பூழியின் உதிர , விண்ணில்
        புடைப்பு உற கிளர்ந்து பொங்கி ,
ஆழியும் உலகும் ஒன்றாய்
        அழிதர , முழுதும் வீசும்
ஊழி வெம் காற்று இது என்ன ,
        இரு சிறை ஊதை மோத . - 3.8.88



3505 - சாக வன் தலையொடு மரமும் தாழ , மேல்
மேகமும் விண்ணின் மீச் செல்ல , மீமிசை
'' மாக வெம் கலுழன் ஆம் ; வருகின்றான் '' என ,
நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே . - 3.8.89



3506 - யானையும் , யாளியும் , முதல யாவையும் ,
கான் நெடு மரம் அத்து ஒடு தூறு கல் இவை
மேல் நிமிர்ந்து , இரு சிறை வீச்சின் ஏறலால் ,
வானமும் கானமும் மாறு கொள்ளவே . - 3.8.90



3507 - '' உத்தமன் தேவியை , உலகொடு ஓங்கு தேர்
வைத்தனை ஏகுவது எங்கு ? வானினோடு
இத்தனை திசையையும் மறைப்பென் ஈண்டு '' எனாப்
பத்திரச் சிறைகளை விரிக்கும் பண்பினான் . - 3.8.91



3508 - வந்தனன் எருவையின் மன்னன் ; மாண்பு இலான்
எந்திரத் தேர் செலவு ஒழிக்கும் ஈட்டினால் ,
சிந்துரக் கால் சிரம் செக்கர் மூடிய
கந்தரக் கயிலையை நிகர்க்கும் காட்சியான் . - 3.8.92



3509 - ஆண்டு உற்று அவ் அணங்கினை'' அஞ்சல் '' எனாத்
தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான் ,
மூண்டு உற்று , எழு வெம் கதம் முற்றிலனாய் ,
மீண்டுற்று , உரையாடலை மேயினன் ஆல் . - 3.8.93



3510 - சடாயுவின் அறிவுரை (3510-3518)
'' கெட்டாய் ! கிளையோடும் நின் வாழ்வை எலாம்
சுட்டாய் ; இது என்னை தொடங்கினை ? நீ
பட்டாய் எனவே கொடு , பத்தினியை
விட்டு ஏகுதியால் ! விளிகின்றிலை ஆல் . '' - 3.8.94



3511 - '' பேதாய் ! பிழை செய்தனை ; பேர் உலகின்
மாதா அனையாளை மனம் கொடு , நீ
யாது ஆக நினைத்தனை ? எண்ணம் இலாய் !
ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ ? '' - 3.8.95



3512 - '' உய்யாமல் மலைந்து , உமர் ஆருயிரை
மெய்யாக இராமன் விருந்து இட ஏ ,
கை ஆர முகந்து கொடு, அந்தகனார் ,
ஐயா ! புதிது உண்டது அறிந்திலையோ ? '' - 3.8.96



3513 - '' கொடு வெம் கரி கொல்லிய வந்ததன் மேல்
விடும் உண்டை கடாவ விரும்பினையே !
அடும் என்பது உணர்ந்திலை , ஆயினும் , வன்
கடு உண்டு , உயிரின் நிலை காணுதியோ ? '' - 3.8.97



3514 - '' எல்லா உலகங்களும் , இந்திரனும் ,
அல்லாதவர் மூவரும் , அந்தகனும் ,
புல்வாய் புலி கண்டது போல்வர் அலால் ,
வில்லாளரை வெல்லும் மிடுக்கு உளரோ ? '' - 3.8.98



3515 - '' இம்மைக்கு உறவோடும் இறந்து அழியும்
வெம்மைத் தொழில் , இங்கு , இதன்மேல் இலை ஆல் ;
அம்மைக்கு , அரு மா நரகம் தரும் ஆல் ;
எம்மைக்கு இதமாக இது எண்ணினை , நீ ? '' - 3.8.98



3516 - '' முத் தேவரில் மூல முதல் பொருள் ஆம்
அ தேவர் இம் மானிடர் ; ஆதலினால் ,
எ தேவர் ஒடு எண்ணுவது ? எண்ணம் இலாய் !
பித்து ஏறினை ஆதல் பிழைத்தனை ஆல் . '' - 3.8.100



3517 - '' புரம் பற்றிய போர் விடையோன் அருளால்
வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் ,
உரம் பெற்றன ஆவன , உண்மையினோன்
சரம் பற்றிய சாபம் விடும் தனையே . '' - 3.8.101



3518 - '' வான் ஆள்பவன் மைந்தன் , வளைத்த விலான் ,
தானே வரின் , நின்று தடுப்பு அரிதால் ;
நானே அவண் உய்ப்பென் இந் நல் நுதல் ஐ ;
போ , நீ கடிது '' என்று புகன்றிடலும் . - 3.8.102



3519 - இராவணன் மறுப்புரை (3519-3520)
கேட்டான் நிருதர்க்கு இறை ; கேழ் கிளர் தன்
வாள் தாரை நெருப்பு உக , வாய் மடியா ,
'' ஓட்டாய் இனி நீ உரை செய்குநரை
காட்டாய் கடிது '' என்று , கனன்று உரையா . - 3.8.103



3520 - '' வரும் புண்டரம் ! வாளி உன் மார்பு உருவிப்
பெரும் புண் திறவா வகை பேருதி நீ ;
இரும்பு உண்ட நிர் மீள்கினும் என் உழையின்
கரும்பு உண்ட சொல் மீள்கிலள் ; காணுதியால் . '' - 3.8.104



3521 - அஞ்சிய சீதையைச் சடாயு அஞ்சல் என்றது (3521-3522)
என்னும் அளவில் , பயம் முன்னின் இரட்டி எய்த ,
அன்னம் அயர்கின்றது நோக்கி ,'' அரக்கன் யாக்கை
சின்னம் உறும் இ பொழுது ஏ ;' சிலை ஏந்தி , நங்கள்
மன்னன் மகன் வந்திலன் ' என்று வருந்தல் ; அன்னை ! '' - 3.8.105



3522 - '' முத்து உக்கன போல் முகத்து ஆலி முலை கண் வீழத்
தத்துற்று அயரேல் ; தலை , தால பலத்தின் ஏலும்
கொத்து ஒப்பன கொண்டு , இவன் கொண்டன என்ற ஆசை
பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி '' என்றான் . - 3.8.106



3523 - சடாயுவின் போர் (3523-43)
இடிப்பு ஒத்த முழக்கின் , இரும் சிறை வீசி எற்றி ,
முடிப் பத்திகளைப் படி இட்டு , முழங்கு துண்டம்
கடிப்பக் கடிது உற்று அவன் காண்தகும் நீண்ட வீணைக்
கொடிப் பற்றி ஒடித்து , உயர் வானவர் ஆசி கொண்டான் . - 3.8.107



3524 - அ காலை , அரக்கன் , அரக்கு உருக்கு அன்ன கண்ணன் ,
எ காலம் உம் , இன்னது ஒர் ஈடு அழிவு உற்றிலாதான்
நக்கான் , உலகு ஏழும் நடுங்கிட ; நாகம் அன்ன
கைக் கார்முகத்தோடு கடைப் புருவம் குனித்தான் . - 3.8.108



3525 - சண்டப் பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி
மண்டச் சிறகால் அடித்தான் சில ; வள் உகிரால்
கண்டப் படுத்தான் சில ; காலனும் காண உட்கும்
துண்டப் படையால் , சிலை துண்ட துண்டங்கள் கண்டான் . - 3.8.109



3526 - மீட்டும் அணுகா , நெடு வெங்கண் அநந்த நாகம்
வாட்டும் கலுழன் என , வன் தலை பத்தின் மீதும்
நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் , சேம வில் கால்
கோட்டும் அளவில் , மணிக் குண்டலம் கொண்டு எழுந்தான் . - 3.8.110



3527 - எழுந்தான் தட மார்பினில் , ஏழினொடு ஏழு வாளி
அழுந்தாது கழன்றிடப் பெய்து , எடுத்து ஆர்த்து , அரக்கன்
பொழிந்தான் , புகர் வாளிகள் மீளவும் ;' போர்ச் சடாயு
விழுந்தான் ' என , அஞ்சினர் , விண்ணவர் வெய்து உயிர்த்தார் . - 3.8.111



3528 - புண்ணில் புது நீர் பொழியப் பொலி புள்ளின் வேந்தன் ,
மண்ணில் , கரனே முதலோர் உதிரத்தின் வாரி
கண்ணிக் கடல் என்று நுகர்ந்தது கான்று , மீள
விண்ணில் பொலிகின்றது ஒர் வெள் நிறம் மேகம் ஒத்தான் . - 3.8.112



3529 - ஒத்தான் உடனே உயிர்த்தான் ; உருத்தான் ; அவன் தோள்
பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் தத்தி , மூக்கால்
கொத்தா , நகத்தால் குடையா , சிறையால் புடையா ,
முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான் . - 3.8.113



3530 - அறுத்தானை , அரக்கனும் ஐம்பதொடு ஐம்பது அம்பு
செறித்தான் தட மார்பில் ; செறித்தலும் , தேவர் அஞ்சி
வெறித்தார் ; வெறியாமுன் , இராவணன் வில்லைப் பல்லால்
பறித்தான் பறவைக்கு இறை , விண்ணவர் பண்ணை ஆர்ப்ப . - 3.8.114



3531 - எல் இட்ட வெள்ளிக் கயிலைப் பொருப்பு , ஈசனோடும் ,
மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி ,
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் எனப் பொலிந்தான்
சொல் இட்டு அவன் தோள் வலி , யார் உளர் , சொல்ல வல்லார் ? - 3.8.115



3532 - மீளா நிறத்து ஆயிரம் கண்ணவன் விண்ணின் ஓட ,
வாளால் ஒறுத்தான் சிலை வாய் இடை நின்றும் வாங்கித்
தாளால் இறுத்தான் ; தழல் வண்ணன் தடக்கை வில்லைத்
தோளால் இறுத்தான் துணைத் தாதை தன் அன்பின் தோழன் . - 3.8.116



3533 - ஞாலம் படுப்பான் தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில்
மூலம் ஒடிப்பு உண்டது கண்டு , முனிந்த நெஞ்சன் ,
ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஒர் அம்பு போலும்
சூலம் எடுத்தான் எறிந்தான் , மறம் தோற்றிலாதான் . - 3.8.117



3534 - '' ஆற்றான் இவன் என்று உணராது , எனது
        ஆற்றல் காண் '' என்று
ஏற்றான் , எருவைக்கு இறை முத்தலை
        எஃகம் மார்பின் ;
'' மேல்தான் இது செய்பவர் யார் ? '' என ,
        விண்ணுளோர்கள்
தோற்றாது நின்றார் , தம தோள் புடை
        கொட்டி ஆர்த்தார் . - 3.8.118



3535 - பொன் நோக்கியர் தம் புலன்
        நோக்கிய புன்கணோரும் ,
இன் நோக்கியர் இல் வழி
        எய்திய நல் விருந்தும் ,
தன் நோக்கிய நெஞ்சு உடை
        யோகியர் தம்மைச் சார்ந்த
மென் நோக்கியர் நோக்கமும் ,
        ஆம் என மீண்டது , அவ் வேல் . - 3.8.119



3536 - வேகம் முடன் , வேல் இழந்தான்
        படை வேறு எடாமுன் ,
மாகம் மறையும் படி நீண்ட
        வயங்கு மான் தேர்ப்
பாகன் தலையைப் பறித்துப்
        படர் கற்பினாள் பால்
மோகம் படைத்தான் உளைவு
        எய்த , முகத்து எறிந்தான் . - 3.8.120



3537 - எறிந்தான் தனை நோக்கி ,
        இராவணன் , நெஞ்சின் ஆற்றல்
அறிந்தான் ; முனிந்து , ஆண்டது ஒர்
        ஆடகத் தண்டு வாங்கி ,
பொறிந்தாங்கு எரியின் சிகை
        பொங்கி எழப் புடைத்தான் ;
மறிந்தான் எருவைக்கு இறை ,
        மால்வரை போல மண்மேல் . - 3.8.121



3538 - மண்மேல் விழுந்தான் ; விழலோடும் ,
        வயங்கு மான் தேர்க்
கண்மேல் ஒளியும் தொடரா வகை ,
        தான் கடாவி
விண்மேல் எழுந்தான் ; எழ ,
மெல்லியலாளும் , வெம் தீ
புண்மேல் நுழையத் துடிக்கின்றனள்
        போல் , புரண்டாள் . - 3.8.122



3539 - கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கிய
        கொள்கை கண்டான் ;
'' அழுந்தேல் அவலத்திடை ; அஞ்சலை
        அன்னை ! '' என்னா
எழுந்தான் , உயிர்த்தான் ;'' அட ! எங்கு இனிப்
        போவது ! '' என்னா ,
விழுந்தான் அவன் தேர் மிசை விண்ணவர்
        பண்ணை ஆர்ப்ப . - 3.8.123



3540 - பாய்ந்தான் , அவன் பல் மணித் தண்டு
        பறித்து எறிந்தான் ;
ஏய்ந்து ஆர் கதிர்த் தேர் பரி எட்டினொடு
எட்டும் எஞ்சித்
தீ        ய்ந்து ஆசு அற வீசி அத் திண் திறல்
        துண்ட வாளால்
காய்ந்தான் ; கவர்ந்தான் உயிர் காலனும் ,
        கை விதிர்த்தான் . - 3.8.124



3541 - திண் தேர் அழித்து , ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி ,
விண்தான் மறைப்பச் செறிகின்றன , வில் இலாமை ,
மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் , வச்சைமாக்கள்
பண்டாரம் ஒக்கின்றன , வள் உகிரால் பறித்தான் . - 3.8.125



3542 - மாச் சிச்சிரல் பாய்ந்தென மார்பினும்
        தோள்கள் மேலும்
ஓச்சிச் சிறகால் புடைத்தான் ;
        உலையா விழுந்து ,
மூர்ச்சித்த இராவணனும்
        முடி சாய்ந்து இருந்தான் ;
' போச்சு ; இத்தனை போலும் நின் ஆற்றல் ? '
        எனப் புகன்றான் . - 3.8.126



3543 - அ வேலையின் ஏ முனிந்தான் ; முனிந்து , ஆற்றலன் , அவ்
வெம் வேல் அரக்கன் , விடலாம் படை வேறு காணான் ;
'' இ வேலையின் ஏ இவன் இன் உயிர் உண்பென் '' என்னாச்
செவ்வே , பிழையா நெடு வாள் உறை தீர்த்து , எறிந்தான் . - 3.8.127



3544 - சடாயு வீழ்தல்
வலியின் தலை தோற்றிலன் ; மாற்ற அரும் தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும் , வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்று உளது ஆகலின் , விண்ணின் வேந்தன்
குலிசம் எறியச் சிறை அற்றது ஒர் குன்றின் , வீழ்ந்தான் . - 3.8.128



3545 - சீதை வருந்தி யுரைத்தல் (3545-3552)
விரிந்து ஆர் சிறை கீழ் உற வீழ்ந்தனன் ,
        மண்ணின் ; விண்ணோர்
இரிந்தார் ;'' இழந்தாள் துணை ! '' என்ன ,
        முனிக் கணங்கள்
பரிந்தார் ; படர் விண்டுவின் நாட்டவர்
        பைம்பொன் மாரி
சொரிந்தார் ; அது நோக்கிய சீதை
        துளக்கம் உற்றாள் . - 3.8.129



3546 - வெள்கும் அரக்கன் , நெடு விண் புக
        ஆர்த்து , மிக்கான் ;
தொள் கின் தலை எய்திய மான் எனச்
        சோர்ந்து நைவாள் ,
உள்கும் ; உயிர்க்கும் ; உயங்கும் ; ஒரு
        சார்பு காணாள் ,
கொள் கொம்பு ஒடியக் கொடி வீழ்ந்தது
        போல் குலைந்தாள் . - 3.8.130



3547 - '' வன் துணை உளன் என வந்த மன்னனும்
பொன்றினன் ; எனக்கு இனிப் புகல் என் ? '' என்கின்றாள் ;
இன் துணை பிரிந்து இருந்து இன்னல் எய்திய
அன்றில் அம் பெடை என அரற்றினாள் அரோ . - 3.8.131



3548 - '' பின்னவன் உரையினை மறுத்துப் பேதையேன் ,
அன்னவன் தனை கடிது அகற்றினேன் ; பொரு
மன்னவன் சிறை அற மயங்கினேன் ; விதி
இன்னமும் எவ் வினை இயற்றுமோ ? '' எனா . - 3.8.132



3549 - '' அல்லல் உற்றேனை , வந்து ,' அஞ்சல் ' என்ற , இந்
நல்லவன் தோற்பது ஏ ? நரகன் வெல்வதே ?
வெல்வதும் பாவம் ஓ ? வேதம் பொய்க்குமோ ?
இல்லையோ அறம் ? '' என இரங்கி ஏங்கினாள் . - 3.8.133



3550 - '' நாண் இலேன் உரை கொடு நடந்த நம்பிமீர் !
நீள் நிலை அறம் நெறி நின்றுளோர்க்கு எலாம்
ஆணியை , உந்தையர்க்கு அமைந்த அன்பனைக்
காணிய வம் '' எனக் கலங்கி விம்மினாள் . - 3.8.134



3551 - '' எல் இயல் விசும்பு இடை இருந்த நேமியாய் !
சொல்லிய அற நெறி தொடர்ந்த தோழமை
நல் இயல் அரும் கடன் கழித்த நம்பியைப்
புல்லுதியோ ? '' எனப் பொருமிப் பொங்கினாள் . - 3.8.135



3552 - '' கற்பு அழியாமை என் கடமை ; ஆயினும் ,
பொற்பு அழியா வலம் பொருந்தும் போர் வலான்
வில் பழியுண்டது ; வினையினேன் வந்த
இல் பழியுண்டது '' என்று இரங்கி ஏங்கினாள் . - 3.8.136



3553 - சீதையை நிலத்தோடு தோளில் தாங்கி இராவணன் செல்லுதல்
ஏங்குவாள் தன்மையும் , இறகு இழந்தவன்
ஆங்கு உறு தன்மையும் , அரக்கன் நோக்கினான் ;
வாங்கினன் தேரிடை வைத்த மண்ணொடும்
வீங்கு தோள் மீ கொடு விண்ணின் ஏகினான் . - 3.8.137



3554 - சீதையின் நிலை
விண் இடை வெய்யவன் ஏகும் வேகத்தால் ,
கண்ணொடு மனம் இவை சுழன்ற ; கற்பினாள் ,
உள் நிறை உணர்வு அழிந்து ஒன்றும் ஓர்ந்திலள் ;
மண் இடை தன்னையும் மறந்து சாம்பினாள் . - 3.8.138
சடாயு விண்ணோக்கி இரங்குதல் (3555-3561)



3555 - ஏகினன் அரக்கனும் ; எருவை வேந்தனும் ,
மோக வெம் துயர் சிறிது ஆறி , முன்னியே ,
மாகமே நோக்கினன் ; வஞ்சன் வல்லையில்
போகுதல் கண்டு அகம் புலர்ந்து சொல்லுவான் . - 3.8.139



3556 - '' வந்திலர் மைந்தரும் ; மருகிக்கு எய்திய
வெந்துயர் துடைத்தனன் என்னும் மெய்ப் புகழ்
தந்திலர் , விதியினார் , தரும வேலியைச்
சிந்தினர் ; மேல் இனிச் செயல் என் ஆம் கொலோ ? '' - 3.8.140



3557 - '' வெற்றியர் உளர் எனின் , மின்னின் நுண் இடைப்
பொன் தொடிக்கு , இ நிலை புகுதற் பாலதோ ?
உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன் ;
சிற்றவை வஞ்சனை முடியச் செய்ததோ ? '' - 3.8.141



3558 - '' பஞ்சு அணை பாம்பு அணை ஆகப் பள்ளி சேர்
அஞ்சன வண்ணனே இராமன் ; ஆதலால் ,
வெஞ்சின அரக்கனால் வெல்லற்பாலன் ஓ ?
வஞ்சனை இழைத்தனன் , கள்ள மாயையால் . '' - 3.8.142



3559 - '' வேர் அற அரக்கரை வென்று , வெம் பழி
தீரும் , என் சிறுவனும் ; தீண்ட அஞ்சுமால்
ஆரியன் தேவியை அரக்கன் , நல் மலர்ப்
பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால் . '' - 3.8.143



3560 - பரும் சிறை இன்னன பன்னி உன்னுவான் ;
'' அருஞ்சிறை உற்றனளாம் '' எனா , மனம்
' பொரும் சிறை அற்றதேல் , பூவை கற்பு எனும்
இரும் சிறை இறாது ' என , இடரும் நீங்கினான் . - 3.8.144



3561 - அம் சிறைக் குருதி யாறு அழிந்து சோர்வு உற ,
'' வஞ்சியை மீட்கிலேன் '' என்னும் மானமும் ,
செஞ்செவே மக்கள்பால் சென்ற காதலும் ,
நெஞ்சு உறத் துயின்றனன் , உணர்வு நீங்கலான் . - 3.8.145



3562 - சீதையை அசோகவனத்தில் சிறை வைத்தல்
வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய்ச்
செஞ்செவே திரு உரு தீண்ட அஞ்சுவான்
நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் ஆயிடைச்
சிஞ்சுப வனத்திடைச் சிறை வைத்தான் அரோ . - 3.8.146



3563 - கவிக் கூற்று
இ நிலை இனையவன் செயல் இயம்பினாம் ;
'' பொன் நிலை மானின் பின் தொடர்ந்து போகிய
மன் நிலை அறிக '' என மங்கை ஏவிய
பின் இளையவன் நிலை பேசுவாம் அரோ . - 3.8.147



3564 - இலக்குவன் துயர்நிலை
ஒருமகள் தனிமையை உன்னி , உள் உறும்
பருவரல் மீதிடப் பதைக்கும் நெஞ்சினான் ,
பெருமகன் தனை தனிப் பிரிந்து பேது உறும்
திருநகர்த் தீரும் அப் பரதன் செய்கையான் . - 3.8.148



3565 - இலக்குவன் இராமனைக் காணுதல்
தெண் திரைக் கலம் என விரைவில் செல்கின்றான் ,
புண்டரீகத் தடம் காடு பூத்து , ஒரு
கொண்டல் வந்து இழிந்தன , கோலத்தான் தனை
கண்டனன் , மனம் எனக் களிக்கும் கண்ணினான் . - 3.8.149



3566 - இராமன் இலக்குவனைக் காணுதல்
'' துண் எனும் அவ் உரை தொடரத் தோகையும்
பெண் எனும் பேதைமை மயக்கப் பேதினால்
உள்நிறை சோரும் '' என்று , ஊசலாடும் அக்
கண்ணனும் இளவலைக் கண்ணுற்றான் அரோ . - 3.8.150



3567 - இலக்குவன் வருதல் கண்டு இராமன் சிந்தித்தல்
'' புன் சொற்கள் தந்த பகு வாய் அரக்கன்
        உரை பொய் எனாது , புலர்வாள்
வன் சொற்கள் தந்து மடமங்கை ஏவ ,
        நிலை தேர வந்த மருளே
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம்
        உடையேன் மருங்கு , தனியே
என் சொல் கடந்து , மனமும் தளர்ந்த
        இளவீரன் வந்த இயல்பே . '' - 3.8.151



3568 - இராமன் இலக்குவனை வினவுதல்
என்று உன்னி ,'' என்னை விதியார் முடிப்பது ? ''
        என எண்ணி நின்ற இறையைப்
பொன் துன்னு வில் கை வய வீரன் வந்து
        புனைதாள் இறைஞ்சு பொழுதில்
மின் துன்னு நூலின் மணி மார்பு அழுந்த ,
        விரைவோடு புல்லி , உருகா ,
நின்று ,'' உன்னி , வந்த நிலை என்கொல் ? '' என்று ,
        நெடியோன் விளம்ப , நொடிவான் . - 3.8.152



3569 - இலக்குவன் மறுமொழி (3569-3570)
'' இல்லா நிலத்தின் இயையாத வெம்சொல்
        எழ , வஞ்சி எவ்வம் உற , யான் ,
' வல் வாய் அரக்கன் உரையாகும் ' என்ன ,
        மதியாள் , மறுக்கம் உறுவாள் ,
' நில்லாது மற்று இது அறி , போதி ' என்ன ,
        நெடியோய் புயம் அத்து இன் வலி என்
சொல்லால் மனத்தின் அடையாள் , சினத்தின்
        முடிவோடு நின்று துவள்வாள் . - 3.8.153



3570 - '' 'ஏகாது நிற்றி எனின் , யான் நெருப்பின்
        இடை வீழ்வென் ' என்று , முடுகா
மா கானகம் அத்தின் இடை ஓடலோடும் ,
        மனம் அஞ்சி வஞ்ச வினையேன் ,
போகாது இருக்கின் இறவாது இருக்கை
        புணராள் என கொடு உணரா ,
ஆகாது இறக்கை ; அறன் அன்று ; எனக்கொடு
        இவண் வந்தது '' என்ன அமலன் . - 3.8.154



3571 - இராமன் சிந்தனை
'' சாவாது இருத்தல் இவள் ஆனது , உற்றது ;
        அஃதோ தடுக்க முடியாது ;
ஆ ! ஆ ! அலக்கண் உறுவாள் உரைத்த
        பொருளோ அகத்தின் அடையா ;
காவா நிலத்தின் வரும் ஏதம் ; மற்று அது ,
        ஒழியாது கை கொடு அகலப்
போவார் , பிரிக்க முயல்வார் புணர்த்த
        பொருள் ஆகும் ; என்று தெருளா . - 3.8.155



3572 - இராமன் இலக்குவனுக்குக் கூறுவது
'' வந்தாய் திறத்தின் உளது அன்று குற்றம் ;
        மடவாள் மறுக்கம் உறுவாள் ,
சிந்தாகுலத்தொடு உரைசெய்த செய்கை
        அது தீதும் அன்று , தெளிவாய் ,
முந்தே தடுக்க ஒழியாது , எடுத்த
        வினையேன் முடித்த முடிவால்
அந்தோ ! கெடுத்தது '' என உன்னி உன்னி
        அழியாத உள்ளம் அழிவான் . - 3.8.156



3573 - இராமன் சீதையிருந்த சோலைக்கு விரைதல்
'' பாணிக்க நின்று பயன் ஆவது என்னை ?
        பயில் பூவை அன்ன குயிலைக்
காணில் கலந்த துயர் தீரும் அன்றி ,
        அயல் இல்லை '' என்று கடுகிச்
சேண் உற்று அகன்ற நெறி ஊடு சென்று ,
        சிலை வாளி அன்ன விசை போய் ,
ஆணிப் பசும்பொன் அனையாள் இருந்த
        அவிர் சோலை வல்லை அணுகா . - 3.8.157



3574 - சீதையைக் காணாமல் இராமன் திகைத்து நிற்றல் (3574-3575)
ஓடி வந்தனன் , சாலையின் சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூ சுரி குழலாள் தனை காணான் ,
கூடு தன்னுடையது பிரிந்தாருயிர் , குறியா ,
நேடி வந்து , அது கண்டிலது என நின்றான் . - 3.8.158



3575 - கைத்த சிந்தையன் , கணம் குழை
        அணங்கினைக் காணாது ,
உய்த்து வாழ்தர வேறு ஒரு
        பொருள் இலான் , உதவ
வைத்த மா நிதி , மண்ணொடு
        மறைந்தன , வாங்கிப்
பொய்த்து உளோர் கொளத் திகைத்து
        நின்றானையும் போன்றான் . - - 3.8.159



3576 - அப்போது உலகப் பொருள்கட்கு நேர்ந்த நிலை (3576-3578)
மண் சுழன்றது ; மால் வரை சுழன்றது ; மதியோர்
எண் சுழன்றது ; சுழன்றது அவ் எறி கடல் ஏழும் ;
விண் சுழன்றது ; வேதமும் சுழன்றது ; விரிஞ்சன்
கண் சுழன்றது ; சுழன்றது கதிரொடு மதியும் . - 3.8.160



3577 - '' அறம் அத்து ஐ சீறுங்கொல் ? அருளையே
        சீறுங்கொல் ? அமரர்
திறம் அத்து ஐ சீறுங்கொல் ? முனிவரைச்
        சீறுங்கொல் ? தீயோர்
மறத்தைச் சீறுங்கொல் ?' என் கொல் ஓ
        முடிவு ? ' என்று மறையின்
நிறத்தைச் சீறுங்கொல் ? நெடும் தகையோன் ''
        என நடுங்கா . - 3.8.161



3578 - நீல மேனி அ நெடியவன் மனநிலை திரிய ,
மூல காரணத்தவன் ஒடு உம் உலகு எலாம் முற்றும்
காலம் ஆம் எனக் கடையிடும் கணக்கு அரும் பொருள்கள் ,
மேல கீழ் உறக் கீழன மேல் உறும் வேலை . - 3.8.162



3579 - இலக்குவன் , தேடிச் செல்லுவோம் எனல்
'' தேரின் ஆழியும் தெரிந்தனம் ;
        தீண்டுதல் அஞ்சிப்
பாரினோடு கொண்டு அகன்றதும்
        பார்த்தனம் ; பயன் இன்று
ஓரும் தன்மை ஈது என் என்பது ?
        உரன் இலாதவர் போல் ;
தூரம் போதல் முன் தொடர்தும் '' என்று ,
        இளையவன் தொழலும் . - 3.8.163



3580 - இராமனும் உடன்பட்டுப் போதல்
'' ஆம் ; அதே இனி அமைவது '' என்று , அமலனும் , மெய்யில்
தாம வார் கணைப் புட்டிலும் முதலிய தாங்கி
வாம மால் வரை மரன் இவை மடிதர , வயவர் ,
பூமி மேல் அவன் தேர் சென்ற நெடு நெறி போனார் . - 3.8.164



3581 - தேர் சென்ற சுவடு மறைய வருந்துதல்
மண்ணின் மேல் அவன் தேர் சென்ற
        சுவடு எலாம் மாய்ந்து ,
விண்ணின் ஓங்கியது ஒரு நிலை ;
        மெய் உற வெந்த
புண்ணின் ஊடு உறு வேல் என ,
        மனம் மிகப் புழுங்கி ,
'' எண்ணின் நாம் இனிச் செய்வது என் ?
        இளவலே ! '' என்றான் . - 3.8.165



3582 - இலக்குவன் அமைதி கூறல்
'' தெற்கு நோக்கியது எனும் பொருள்
        தெரிந்தது , அ திண் தேர் ;
மற்கு நோக்கிய திரள் புயத்து
        அண்ணலே ! வானம் ,
விற்கு நோக்கிய பகழியின்
        நெடிது அன்று ; விம்மி ,
நிற்கும் நோக்கு இது , என் பயத்தது ? என்று
        இளையவன் நேர்ந்தான் . - 3.8.166



3583 - வீணைக் கொடியைக் காணுதல்
'' ஆகும் ; அன்னதே கருமம் '' என்று ,
        அ திசை நோக்கி ,
ஏகி , யோசனை இரண்டு சென்றார் ,
        இடை எதிர்ந்தார் ,
மாக மால் வரை கால் பொர
        மறிந்தது மானப்
பாக வீணையின் கொடி ஒன்று
        கிடந்தது பார் மேல் . - 3.8.167



3584 - கொடி துணிந்துள்ள நிலையை ஆராய்தல் 3584 , 3585
கண்டு ,'' கண்டகர் ஓடு உம் அக்
        காரிகை பொருட்டால் ,
அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர்
        விளைந்தது ? '' என்று அயிர்த்தார் ;
துண்ட வாளினில் சுடர்க் கொடி
        துணிந்தது என்று உணராப்
புண்டரீகக் கண் புனல் வரப்
        புரவலன் புகல்வான் . - 3.8.168



3585 - '' நோக்கினால் , ஐய ! நொய்து
        இவண் எய்திய நுந்தை
மூக்கினால் இது முறிந்தமை
        முடிந்ததால் ; மொய்ம்பின்
தாக்கினான் ; நடு அடுத்தது
        தெரிகிலம் ; தமியன் ;
யாக்கை தேம்பிடும் ; எண்ணரும்
        பருவங்கள் இறந்தான் . '' - 3.8.169



3586 - இலக்குவன் சொல்
'' நன்று சாலவும் ; நடுக்கு அரு
        மிடுக்கினன் ; நாமும்
சென்று கூடலாம் ; பொழுது எலாம்
        தடுப்பது திடனால் ;
வென்று , மீட்கினும் மீட்குமால் ;
        வேறு உற எண்ணி ,
நின்று தாழ்த்து ஒரு பயன் இலை ''
        என்றலும் , நெடியோன் . - 3.8.170



3587 - இராம இலக்குவர் இராவணனது வில் முறிந்திருத்தலைக் காணுதல்
'' தொடர்வதே நலம் ஆம் ''
        எனப் படிமிசைச் சுற்றிப்
படரும் கால் எனக் கறங்கு
        எனச் செல்லுவார் பார்த்தார் ,
மிடல்கொள் வெம் சிலை , விண்
        இடு வில் முறிந்து என்ன
கடலின் மாடு உயர் திரை எனக்
        கிடந்தது கண்டார் . - 3.8.171



3588 - வில்லை ஒடித்த சடாயுவை இராமன் வியத்தல்
'' சிலை கிடந்ததால் , இலக்குவ !
        தேவர் நீர் கடைந்த
மலை கிடந்தன வலியது ;
        வடிவினால் மதியின்
கலை கிடந்தன காட்சியது ;
        இது கடித்து ஒடித்தான்
நிலை கிடந்தவா நோக்கு ! ''
        என நோக்கினன் நின்றான் . - 3.8.172



3589 - இராவணனது அம்பறாத்தூணியைக் காணுதல்
நின்று , பின்னரும் நெடு நெறி
        கடந்து உற நிமிரச்
சென்று நோக்கினர் , திரிசிகைத்
        திணி நெடுஞ் சூலம்
ஒன்று , பல் கணை மழை உறு
        புட்டில் ஓர் இரண்டு
குன்று போல் அவண் கிடந்த கண்டு
        அதிசயம் கொண்டார் . - 3.8.173



3590 - இராவணனது கவசத்தைக் காணுதல்
மறித்தும் சென்றனர் ; வான் இடை
        வயங்கு உற வழங்கி
எறிக்கும் சோதிகள் யாவையும்
        தொக்கன எனலாய்
நெறிக் கொள் கானகம் மறைதர ,
        நிருதர் கோன் நெஞ்சில்
பறித்து வீசிய கவசமும்
        கிடந்தது பார்த்தார் . - 3.8.174



3591 - இராவணனது குதிரை முதலிய கிடந்த இடத்தை அடைதல்
கான் கிடந்தது மறைதரக் கால் வயம் கலி மா
தான் கிடந்த உழி , சாரதி கிடந்துழி , சார்ந்தார் ;
ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துழி , உலகில்
வான் கிடந்தது போன்ற தேர் கிடந்துழி வந்தார் . - 3.8.175



3592 - இராவணனது குண்டலங்களைக் காணுதல்
கண்டு , அலங்கு தம் கை தலம் விதிர்த்தனர் , கவின் ஆர்
விண் தலம் துறந்து , இறுதியின் விரி கதிர் வெய்யோன்
மண்டலம் பல , மண்ணிடைக் கிடந்தன மணியின்
குண்டலம் பல , குலம் மணி பூண்களின் குவியல் . - 3.8.176



3593 - குண்டலம் முதலியன பலவாக இருத்தலைக் கொண்டு போர்
செய்தோர் பலர் என இராமன் கூறுதல்
'' தோள் அணி குலம் பல உள ; குண்டலத் தொகுதி
வாள் இமைப்பன பல உள ; மணி முடி பலவால் ;
நாள் அனைத்தையும் கடந்தனன் , தமியன் , நம் தாதை ;
யாளி போல்பவர் பலர் உளர் , பொருதனர் ; இளையோய் ! '' - 3.8.177



3594 - பொருதவன் இராவணன் ஒருவனே என இலக்குவன் கூறல்
திருவின் நாயகன் உரை செயச் சுமித்திரை சிங்கம் ,
'' தருவின் நீளிய தோள் பல , தலை பல என்றால் ,
பொருது தாதையை இத்தனை நெறி கொடு போனான்
ஒருவனே ; அவன் இராவணன் ஆம் '' என உரைத்தான் . - 3.8.178



3595 - சடாயுவைக் காணுதல்
மடல் உள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா ,
மிடலுள் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான் ,
உடலுள் நாட்டிய குருதி அம் பரவையின் உம்பர்க்
கடலுள் நாட்டிய மலை அன்ன தாதையைக் கண்டான் . - 3.8.179



3596 - இராமன் சடாயுவின் உடல்மேல் வீழ்ந்து அரற்றுதல் (3596-3602)
துள்ளி , ஓங்கு செம் தாமரை நயனங்கள் சொரியத்
தள்ளி , ஓங்கிய அமலன் தன் தனி உயிர்த் தந்தை
வள்ளியோன் திரு மேனியில் தழல் நிற வண்ணன்
வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என வீழ்ந்தான் . - 3.8.180



3597 - உயிர்த்திலன் ஒரு நாழிகை ;'' உணர்வு இலன் கொல் ? '' என்று
அயிர்த்த தம்பி புக்கு , அம் கையின் எடுத்தனன் , அருவிப்
புயல் கலந்த நீர் தெளித்தலும் , புண்டரீகக் கண்
பெயர்த்துப் பைப் பய அயர்வு தீர்ந்து , இனையன பேசும் . - 3.8.181



3598 - '' தம் தாதையரைத் தனையர் கொலை நேர்ந்தார்
முந்து ஆரே உள்ளார் ? முடிந்தான் முனை ஒருவன் ;
எந்தாய் ! ஓ ! எற்கு ஆக நீயும் இறந்தனையோ ?
அந்தோ ! வினையேன் அருங் கூற்றம் ஆனேன் ஏ ! '' - 3.8.182



3599 - '' பின் உறுவது ஓராது ஏ பேதுறு ஏன் , பெண்பாலாள்
தன் உறுவல் தீர்ப்பான் , தனி உறுவது ஓராதே ,
உன் உறவு நீ தீர்த்தாய் ; ஓர் உறவும் இல்லாதேன்
என் உறுவான் வேண்டி இடர் உறுவேன் ? எந்தாயே ! '' - 3.8.183



3600 - '' மாண்டேனே அன்றோ ? மறையோர் குறை முடிப்பான்
பூண்டேன் விரதம் ; அதனால் உயிர் பொறுப்பேன் ;
நீண்டேன் மரம்போல நின்று ஒழிந்த புன்தொழிலேன்
வேண்டேன் , இம் மா மாயம் புன் பிறவி வேண்டேனே ! '' - 3.8.184



3601 - '' என் தாரம் பற்று உண்ண ஏன்றாயைச் சான்றோயைக்
கொன்றானும் நின்றான் ; கொலை உண்டு நீ கிடந்தாய் ;
வன் தாள் சிலை ஏந்தி , வாளிக் கடல் சுமந்து ,
நின்றேனும் நின்றேன் , நெடு மரம்போல் நின்றேனே . '' - 3.8.185



3602 - '' சொல் உடையார் என்போல்
        இனி உளரோ ? தொல் வினையேன்
இல் உடையாள் காண ,
        இறகு உடையாய் ! எண் இலாப்
பல் உடையாய் ! உன்னைப் படை
        உடையான் கொன்று அகல
வில் உடையேன் நின்றேன் ;
        விறல் உடையேன் அல்லேன் ஓ ? '' - 3.8.186



3603 - சடாயு உயிர்த்தெழுதல்
அன்னா பலபலவும் பன்னி அழும் ; மயங்கும் ;
தன் நேர் இலாதான் தன் தம்பியும் அ தன்மையன் ஆ ;
உன்னா , உணர்வு சிறிது உள் முளைப்பப் புள் அரசும் ,
இன்னா உயிர்ப்பான் , இருவரையும் நோக்கினான் . - 3.8.187



3604 - இராம இலக்குவரைக் கண்டு மகிழ்தல்
உற்றது உணராது , உயிர் உலைய வெய்து உயிர்ப்பான்
கொற்றவரைக் கண்டான் ; தன் உள்ளம் குளிர்ப்பு உற்றான் ;
இற்ற இரு சிறகும் , இன்னுயிரும் , ஏழ் உலகும் ,
பெற்றனனே ஒத்தான் ,'' பெயர்த்தேன் பழி '' என்றான் . - 3.8.188



3605 - அவர்களை அருகே அழைத்து உச்சி மோத்தல்
'' பாக்கியம் அத்து ஆல் , இன்று , என்
        பயன் இல் பழி யாக்கை
போக்குகின்றேன் , கண்ணுற்றேன் ;
        புண்ணியரே ! வம்மின் '' என்று ,
தாக்கி அரக்கன்
        மகுடத் தலை தகர்த்த
மூக்கினால் உச்சி
        முறை முறையே மோக்கின்றான் . - 3.8.189



3606 - இரங்கி வினவுதல்
'' வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய
நெஞ்சகமே முன்னம் நினைவித்தது ; ஆனாலும் ,
அம் சொல் மயிலை , அருந்ததியை , நீங்கினிர் ஓ ,
எஞ்சல் இலா ஆற்றல் இருவீர் உம் ? '' என்று உரைத்தான் . - 3.8.190



3607 - இலக்குவன் நிகழ்ந்தது கூறல்
என்று அவன் இயம்பலும் , இளைய கோமகன் ,
ஒன்றும் ஆண்டு உறு பொருள் ஒழிவு உறா வகை ,
வன் திறல் மாயம் மான் வந்தது ஆதியா
நின்றது நிகழ்ந்தது நிரப்பினான் அரோ . - 3.8.191



3608 - சடாயு அவர்கட்குத் தேறுதல் கூறுதல்
ஆற்றலோன் அவ் உரை அறைய , ஆணையால் ,
ஏற்று , உணர்ந்து , எண்ணி , அவ் எருவை வேந்தனும் ,
'' மாற்ற அரும் துயர் அவர் மனக் கொளா வகை
தேற்றுதல் நன்று '' என , இனைய செப்புவான் . - 3.8.192



3609 - சடாயுவின் ஆறுதல் மொழி (3609-3616)
'' அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகும் ஓ ?
' துதி அறு பிறவியின் இன்ப துன்பம்தான்
விதி வயம் ' என்பதை மேற்கொள்ளா விடின் ,
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ ? '' - 3.8.193



3610 - '' தெரிவுறு துன்பம் வந்து ஊன்றச் , சிந்தையை
இரிவு செய்து ஒழியுமது , இழுதை நீரது ஆல் ;
பிரிவு செய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை
அரிவு செய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ ? '' - 3.8.194



3611 - '' அலக்கணும் இன்பமும் அணுகும் நாள் அவை ,
விலக்குவம் என்பது , மெய்யிற்று ஆகுமோ ?
இலக்கு முப்புரங்களை எய்த வில்லியார்
தலை கல அத்து இரந்தது தவத்தின் பாலதோ ? '' - 3.8.195



3612 - '' பொங்கு வெம் கோள் அரா , விசும்பு பூத்தன
வெம் கதிர் செல்வனை விழுங்கி நீங்குமால் ;
அம் கண்மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர்
திங்களும் ஒரு முறை வளரும் , தேயுமால் . '' - 3.8.196



3613 - '' அந்தரம் வருதலும் , அனைய தீர்தலும் ,
சுந்தரத் தோளினிர் ! தொன்மை நீரவால் ;
மந்திர இமையவர் குருவின் வாய் மொழி
இந்திரன் உற்றன எண்ண ஒண்ணுமோ ? '' - 3.8.197



3614 - '' தடைக்க அரும் பெருவலிச் சம்பரப் பெயர்க்
கடைத் தொழில் அவுணனால் , குலிசக் கையினான் ,
படைத்தனன் பழி ; அது , பகழி வில் வலாய் !
துடைத்தனன் நுந்தை , தன் குவவுத் தோளினால் . '' - 3.8.198



3615 - '' பிள்ளைச் சொல் கிளி அனாளைப்
        பிரிவுறல் உற்ற பெற்றி ,
தள்ளுற்ற அறமும் , தேவர்
        துயரமும் , தந்தது ஏ ஆல் ;
கள்ளப் போர் அரக்கர் என்னும்
        களையினைக் களைந்து வாழ்தி ;
புள்ளிற்கும் , புலன் இல் பேய்க்கும் ,
        தாய் அன்ன புலவு வேலோய் ! - 3.8.199



3616 - '' வடு கண் , வார் கூந்தலாளை ,
        இராவணன் மண்ணினோடும்
எடுத்தனன் ஏகுவானை , எதிர்ந்து ,
        எனது ஆற்றல் கொண்டு
தடுத்தனென் , ஆவது எல்லாம் ; தவத்து ,
        அரன் தந்த வாளால்
படுத்தனன் ; இங்கு வீழ்ந்தேன் ;
        இது இன்று பட்டது '' என்றான் . - 3.8.200




3617 - இராமன் சீற்றம்
கூறின மாற்றம் சென்று
        செவி துளை குறுகா முன்னம் ,
ஊறின உதிரம் , செம் கண் ;
        உயிர்த்தன , உயிர்ப்புச் செம் தீ ;
ஏறின புருவம் மேல் மேல் ;
        இரிந்தன சுடர்கள் எங்கும் ;
கீறினது அண்ட கோளம் ;
        கிழிந்தன கிரிகள் எல்லாம் . - 3.8.201



3618 - கவிக்கூற்று
மண்ணகம் திரிய , நின்ற
        மால் வரை திரிய , மற்றைக்
கண் அகன் புனலும் காலும்
        கதிரொடும் திரியக் காவல்
விண் அகம் திரிய , மேலை
        விரிஞ்சனும் திரிய ,'' வீரன்
எண் அரும் பொருள்கள் எல்லாம் ''
        என்பது தெரிந்தது அன்றே . - 3.8.202



3619 - '' குறித்த வெம் கோபம் யார் மேல்
        கோள் உறும் கொல் ? '' என்று அஞ்சி ,
வெறித்து நின்று , உலகம் எல்லாம்
        விம்முறுகின்ற வேலை ,
பொறிப் பிதிர் படலைச் செந்தீப்
        புகையொடு பொடிப்பப் பொம் என்று ,
எறிப்பது ஓர் முறுவல் தோன்ற ,
        இராமனும் இயம்பல் உற்றான் . - 3.8.203
இராமன் வெகுளிச் சொற்கள் (3620-3622)



3620 - '' பெண் தனி ஒருத்தி தன்னைப்
        பேதை வாள் அரக்கன் பற்றிக்
கொண்டனன் ஏக , நீ இக்
        கோளுறக் குலுங்கல் செல்லா
எண் திசை இறுதியான
        உலகங்கள் இவற்றை , இன்னே ,
கண்ட வானவர்களோடும்
        களையுமாறு , இன்று காண்டி . '' - 3.8.209



3621 - '' தாரகை உதிரு மாறும் ,
        தனி கதிர் பிதிருமாறும் ,
பேர் அகல் வானம் எங்கும்
        பிறங்கு எரி பிறக்குமாறும் ,
நீரொடு நிலனும் , காலும் ,
        நின்றவும் , திரிந்த யாவும் ,
வேரொடும் அழியு மாறும் ,
        விண்ணவர் விளியு மாறும் . '' - 3.8.205



3622 - '' இ கணம் ஒன்றில் , நின்ற
        ஏழினோடு ஏழு சான்ற
மிக்கன போன்று தோன்றும் ,
        உலகங்கள் வீயு மாறும் ,
திக்கு உடை அண்ட கோளப்
        புறத்தவும் தீந்து , நீரின்
மொக்குளின் உடையு மாறும் ,
        காண் '' என முனியும் வேலை . - 3.8.206



3623 - சூரியன் மறைய உலகம் அஞ்சுதல்
வெம் சுடர் கடவுள் மீண்டு ,
        மேருவில் மறையலுற்றான் ;
எஞ்சல் இல் திசையில் நின்ற
        யானையும் இரியல் போய ;
துஞ்சின உலகம் எல்லாம்
        என்பது என் ? துணிந்த நெஞ்சின் ,
அஞ்சினன் , இளைய கோவும் ;
        அயல் உளோர்க்கு அவதி உண்டோ ? - 3.8.207



3624 - சடாயு இராமன் வெகுளியைத் தணித்தல் (3624-3628)
இவ் வழி நிகழும் வேலை ,
        எருவைகட்கு இறைவன் ,'' யாதும் ,
செவ்வியோய் ! முனியல் ; வாழி !
        தேவரும் முனிவர் தாமும் ,
வெம் வலி வீர ! நின்னால்
        ' வேறும் ' என்று ஏமுற்று உய்வார் ,
எ வலி கொண்டு வெல்வார் ,
        இராவணன் செயலை ? '' என்றான் . - 3.8.208



3625 - '' நாள் செய்த கமலத்து அண்ணல்
        நல்கின நவை இல் ஆற்றல்
தோள் செய்த வீரம் என்னில்
        கண்டனை ; சொல்லும் உண்டோ ?
தாள் செய்ய கமலத்தானே
        முதலினர் , தலை பத்து உள்ளாற்கு
ஆட் செய் கின்றார்களன்றி ,
        அறம் செய்கின்றார்கள் யாரே ? '' - 3.8.209



3626 - '' தெள் திரை உலகம் தன்னில் ,
        செறுநர்மாட்டு ஏவல் செய்து
பெண்டிரின் வாழ்வர் அன்றே !
        இது அன்றோ தேவர் பெற்றி ?
பண்டு உலகு அளந்தோன் நல்கப்
        பாற்கடல் அமுதம் அந் நாள்
உண்டிலர் ஆகில் , இந் நாள்
        அன்னவர்க்கு உய்தல் உண்டோ ? - 3.8.210



3627 - '' வம்பு இழை கொங்கை வஞ்சி
        வனத்திடைத் தமியள் வைகக் ,
கொம்பு இழை மானின் பின் போய்
        குலம் பழி கூட்டிக் கொண்டீர் ;
அம்பு இழை வரிவில் செங்கை
        ஐயன்மீர் ! ஆயும் காலை ,
உம் பிழை என்பது அல்லால் ,
        உலகம் செய் பிழையும் உண்டோ ? '' - 3.8.211



3628 - '' ஆதலால் , முனிவாய் அல்லை ;
        அருந்ததி அனைய கற்பின்
காதலாள் துயரம் நீக்கித்
        தேவர்தம் கருத்தும் முற்றி ,
வேத நூல் முறையின் யாவும்
        விதியுளி நிறுவி , வேறும்
தீது உள துடைத்தி '' என்றான் ,
        செம் அடி கமலம் சேர்வான் . - 3.8.212



3629 - இராமன் தணிதல்
புயல் நிற வண்ணன் , ஆண்டு ,
        அப் புண்ணியன் புகன்ற சொல்லைத்
'' தயரதன் பணி ஈது '' என்னச்
        சிந்தையில் தழுவி நின்றான் ;
'' அயல் இனி முனிவது என்னை ?
        அரக்கரை வருக்கம் தீர்க்கும்
செயல் இனிச் செயல் '' என்று எண்ணிக் ,
        கண்ணிய சீற்றம் தீர்ந்தான் . - 3.8.213



3630 - சடாயு உயிர் நீத்தல்
ஆயபின் , அமலன் தானும் ,
        '' ஐய !' நீ அமைதி ' என்ன
வாய் இடை மொழிந்தது அன்றி ,
        மற்று ஒரு செயலும் உண்டோ ?
போயது அவ் அரக்கன் எங்கே ?
        புகல் '' எனப் புள்ளின் வேந்தன்
ஓய்வினன் , உணர்வும் தேய ,
        உரைத்திலன் , உயிரும் தீர்ந்தான் . - 3.8.214



3631 - கவிக்கூற்று (3631-3632)
சீதம் கொள் மலர் உளோனும் ,
        தேவரும் என்பது என்னே ?
வேதங்கள் காண் கிலாமை ,
        வெளிநின்றே மறையும் வீரன்
பாதங்கள் கண்ணில் பார்த்தான் ;
        படிவம் கொள் நெடிய பஞ்ச
பூதங்கள் விளியும் நாளும்
        போக்கு இலா உலகம் புக்கான் . - 3.8.215



3632 - வீடு அவன் எய்தும் வேலை ,
        விரிஞ்சனே முதல மேலோர் ,
ஆடவர்க்கு அரசனோடு தம்பியும் ,
        அழுது சோர ,
காடு அமர் மரமும் மாவும்
        கற்களும் கரைந்து சாய்ந்த ;
சேடரும் பாரினோர்க்கும்
        கரம் சிரம் சேர்ந்த அன்றே . - 3.8.216



3633 - இராமன் இரங்கி வினவுதல்
'' அறம் தலை நின்றிலாத
        அரக்கனின் , ஆண்மை தீர்ந்தேன் ;
துறந்தனென் , தவம் செய்கேனோ ?
        துறப்பெனோ உயிரைச் சொல்லாய் ?
பிறந்தனென் பெற்று நின்ற
        பெற்றியால் , பெற்ற தாதை
இறந்தனன் ; இருந்துளேன் யான் ;
        என் செய்கேன் ? இளவல் ! '' என்றான் . - 3.8.217
இலக்குவன் தேற்றுதல் 3634 , 3635



3634 - என்றலும் , இளைய கோ அவ்
        இறையினை இறைஞ்சி ,'' யாண்டும்
வென்றியாய் ! விதியின் தன்மை
        பழி அல ; விளைந்தது ஒன்றோ ?
நின்று இனி நினைவது என்னே ?
        நெருக்கிய அரக்கர் தம்மைக்
கொன்றபின் அன்றோ , வெய்ய
        கொடும் துயர் குளிப்பது ? '' என்றான் . - 3.8.218



3635 - '' எந்தை ஈது இயம்பிற்று என்னை ?
        எண்மையன் ஆகி ஏழைச்
சந்த வார் குழலினாளைத்
        துறந்தனை தணிதி ஏனும் ,
உந்தையை உயிர் கொண்டானை
        உயிர் கொள்ளும் ஊற்றம் இல்லாச்
சிந்தையை ஆகின் நன்று ,
        செய் தவம் செய்கை '' என்றான் . - 3.8.219



3636 - சடாயுவுக்கு ஈமச் சடங்கு இயற்றுவோம் ' என இராமன் கூறுதல்
அ வழி இளவல் கூற ,
        அறிவனும் அயர்வு நீங்கி ,
'' இ வழி இனைய எண்ணின்
ஏழைமைப் பாலது '' என்னா ,
        வெம் வழி பொழியும் கண்ணீர்
        விலக்கினன் ,'' விளிந்த தாதை
செம் வழி உரிமை யாவும்
        திருத்துவம் ; சிறுவ ! '' என்றான் . - 3.8.220



3637 - ஈமவிறகு அமைத்தல்
இந்தனம் எனைய என்னக்
        கார் அகில் ஈட்டம் அத்து ஓடும்
சந்தனம் குவித்து , வேண்டும்
        தருப்பையும் திருத்திப் பூவும்
சிந்தினன் ; மணலின் வேதி
        தீது அற இயற்றித் தெள் நீர்
தந்தனன் ; தாதை தன்னைத்
        தடக்கையான் எடுத்துச் சார்வான் . - 3.8.221



3638 - ஈமப்பள்ளியில் தீவைத்தல்
ஏந்தினன் இருகை தன்னால்
        ஏற்றினன் ஈமம் தன் மேல் ;
சாந்தொடு மலரும் நீரும்
        சொரிந்தனன் ; தலையின் சாரல்
காந்து எரி கஞல மூட்டிக்
        கடன் முறை கடவா வண்ணம்
நேர்ந்தனன் நிரம்பும் நன்னூல்
        மந்திர நெறியின் வல்லான் . - 3.8.222



3639 - இராமன் நீர்க்கடன் செய்தல்
தளிர்த்தன களித்த பச்சைத்
        தாமரைக் கெழுவு செம் பூ
துளித்தன அனைய என்னத்
        துள்ளி சோர் வெள்ளக் கண்ணன் ,
குளித்தனன் கொண்டல் ;
        ஆற்றுக் குளித்தபின் , கொண்ட நன்னீர்
அளித்தனன் ; அரக்கர்ச் செற்ற
        சீற்றத்தான் அவலம் தீர்ந்தான் . - 3.8.223



3640 - கவிக்கூற்று
மீட்டு இனி உரைப்பது என்னே ?
        விரிஞ்சனே முதல மேல் , கீழ் ,
காட்டிய உயிர்கள் எல்லாம்
அருந்தின களித்த போலாம் ;
பூட்டிய கைகளால் , அப்
        புள்ளினுக்கு அரசைக் கொள்க என்று ,
ஊட்டிய நல் நீர் ஐயன்
        உண்ட நீர் ஒத்தது அன்றே ! - 3.8.224



3641 - சூரியன் மறைவு
பல் வகை துறையும் , வேதப்
        பலி கடன் பலவும் முற்றி ,
வெல் வகை குமரன் நின்ற
        வேலையின் , வேலை சார்ந்தான் ,
தொல் வகை குலத்தின் வந்தான்
        துன்பத்தால் , புனலும் தோய்ந்து ,
செல் வகை கு உரிய எல்லாம்
        செய்குவான் என்ன , வெய்யோன் . - 3.8.225


3.9 . அயோமுகிப் படலம் (3642- 3742)




3642 - இராம இலக்குவர் அந்திப்பொழுதில் ஒரு மலையிற்
சென்று தங்குதலும் இருள் பரவுதலும்
அந்தி வந்து அணுகும் வேலை ,
        அவ் வழி , அவரும் , நீங்கிச்
சிந்துரச் சென்னித்து ஆண்டு ஓர்
        மை வரை சேக்கை கொண்டார் ;
இந்திரற்கு அடங்கல் செல்லா
        இராக்கதர் எழுந்தது என்ன ,
வெம் துயர்க்கு ஊற்றம் ஆய
        விரி இருள் வீங்கிற்று அன்றே . 3.9.1.


இரவுப் பொழுது வர இராம இலக்குவர் மனங்கவலுதல் 3643 , 3644



3643 - தேன் உக அருவி சிந்தித் தெருமரல் உறுவ போலக்
கானமும் மலையும் எல்லாம் , கண்ணின் நீர் உகுக்கும் கங்குல் ,
மானமும் சினமும் தாதை மரணமும் , மைந்தர் சிந்தை ,
ஞானமும் துயரும் , தம்முள் மலைந்து என , நலிந்தது அன்றே . - 3.9.2



3644 - மெய் உற உணர்வு செல்லா அறிவினை வினையின் நூக்கும்
பொய் உறு பிறவிபோலப் போக்க அரும் பொங்கு கங்குல் ,
நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர , உயிர்ப்பு நீளக்
கையறவு உறுகின்றார் ஆல் காணல் ஆம் கரையிற்று அன்றே . - 3.9.3



3645 - இராமன் கண்துயிலப்பெறாமை 3645 , 3646
யாம் அது தெரிதல் தேற்றாம் ; இன் நகை சனகி என்னும்
காமரு திருவை நீத்தோ ? முகம் மதி காண்கிலாதோ ?
தேம்மரு தெரியல் வீரன் கண் எனத் தெரிந்த செய்ய
தாமரை , கங்குற் போதும் , குவிந்து இலா தன்மை என்னோ ? - 3.9.4



3646 - பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டி மாட்டு
நண்ணிய பிரிவு செய்த நவையினால் , நவை இல் உள்ளம் அத்து
எண்ணியது அறிதல் தேற்றாம் ; இமைத்தில , இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பிகண் போன்ற அன்றே . - 3.9.5



3647 - வெண்மதி தோன்றுதல்
' வண்டு உளர் கோதைச் சீதை வாள் முகம் பொலிய வானில்
கண்டனென் ' என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்டத்
தண் தமிழ்த் தென்றல் என்னும் கோள் அராத் தவழும் சாரல் ,
விண் தலம் விளக்கும் செவ்வி வெண் மதி விரிந்தது அன்றே . - 3.9.6



3648 - நிலவு இராமனை வருத்துதல்
களியுடை அனங்கக் கள்வன் கரந்து உறை கங்குல் காலம்
வெளிபடுத்து , உலகம் எங்கும் விளக்கிய நிலவின் வெள்ளம் ,
நளி இருள் பிழம்பு என்று , ஈண்டு , நஞ்சொடு கலந்த நாகத்
துளை ஏயிற்று ஊறல் உற்றதாம் எனச் சுட்டது அன்று ஏ . - 3.9.7

இராமன் சீதையை நினைந்து வருந்துதல் (3649-3665)



3649 - இடம்படு மானம் துன்பம் இருள்தர எண்ணின் தீர்ந்தான் ;
விடம் பரந்து அனையது ஆய வெண்நிலா வெதுப்ப , வீரன் ,
படம் பரந்து அனைய அல்குல் , பால்பரந்தனைய இன் சொல் ,
தடம்பெரும் கண்ணினாள்தன் தனிமையை நினையல் உற்றான் . - 3.9.8



3650 - மடித்த வாயன் , வயங்கும் உயிர்ப்பினன் ;
துடித்து வீங்கி , ஒடுங்குறு தோளினன் ,
பொடித்த தண் தளிர் பூவொடு , மால்கரி
ஒடித்த கொம்பு அனையாள் திறம் அத்து உன்னுவான் . - 3.9.9



3651 - '' 'வாங்கு வில்லன் வரும் வரும் ' என்று இரு
பாங்கும் நீள்நெறி பார்த்தனளோ ? '' எனும் ;
வீங்கு வேலை விரி திரை ஆம் என ,
ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான் . - 3.9.10



3652 - '' என் நினைந்திலள் என்பது சாலுமோ
மின் இனைந்த எயிற்றின் விலங்கு அனான் ,
' நில் நில் ' என்று நெருங்கியபோது , அவள்
என் நினைந்தனளோ ? '' என ஏங்குமால் . - 3.9.11



3653 - '' நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின்
வஞ்ச வாயின் மதி என மட்குவாள் ,
' வெஞ்சினம் செய் அரக்கர்தம் வெம்மையை
அஞ்சினான் கொல் ? ' என்று ஐயுறுமால் '' என்பான் . - 3.9.12



3654 - பூண்ட மானமும் , போக்க அருங் காதலும்
தூண்ட , நின்று , இடை தோம் உறும் ஆர் உயிர் ,
மீண்டு மீண்டு வெதுப்ப , வெதும்பினான் ;
'' வேண்டுமோ எனக்கு இன்னமும் வில் ? '' என்பான் . - 3.9.13



3655 - வில்லை நோக்கி நகும் ; மிக வீங்கு தோட்
கல்லை நோக்கி நகும் ; கடை கால் வரு
சொல்லை நோக்கித் துணுக்கு எனும் ; தொல் மறை
எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான் . - 3.9.14



3656 - கூதிர் வாடை வெம் கூற்றினை நோக்கினன் ,
'' வேத வேள்வி விதி முறை மேவிய
சீதை , என்வயின் தீர்ந்தனளோ ? '' எனும் ;
போதகம் எனப் பொம் என் உயிர்ப்பினான் . - 3.9.15



3657 - '' நின்று பல உயிர் காத்தற்கு நேர்ந்த யான் ,
என் துணைக் குலம் மங்கை ஒர் ஏந்து இழை
தன் துயர்க்கும் தகவு இலென் ஆயினேன் ;
நன்று நன்று என் வலி ! '' என நாணுமால் . - 3.9.16



3658 - சாயும் ; தம்பி திருத்திய தண் தளிர்
தீயும் ; அங்கு அவை தீய்தலும் , செம் இருந்து
ஆயும் ; ஆவி புழுங்க அழுங்குமால் ;
வாயும் நெஞ்சும் புலர மயங்குவான் . - 3.9.17



3659 - பிரிந்த ஏதுகொல் ? பேர் அபிமானம் கொல் ?
தெரிந்தது இல்லை ; திரு மலர் கண் இமை
பொருந்த , ஆயிரம் கற்பங்கள் போக்குவான் ,
இருந்து கண்டிலன் கங்குலின் ஈறு அரோ . - 3.9.18



3660 - '' வென்றி வேற்கை இளவலை ! மேல் எலாம்
ஒன்றுபோல உலப்பு இல நாள்கள்தாம்
நின்று காண்டி அன்றே ? நெடுங் கங்குல் தான் ,
இன்று நீள்வதற்கு ஏது என் ? '' என்னும் ஆல் . - 3.9.19



3661 - நீண்ட மாலை மதியினை ,'' நித்தமும்
மீண்டு மீண்டு மெலிந்தனை வெள்கு ஆய் ;
பூண்ட பூணவள் வாள்முகம் போதலால் ,
ஈண்டு சால விளங்கினை '' என்னும் ஆல் . - 3.9.20



3662 - '' நீள் நிலாவின் இசைநிறை தன் குலம் அத்து
ஆணி ஆய பழி வர , அன்னது
நாணி , நாடு கடந்தனனாம் கொலோ ,
சேண் உலாம் தனித் தேரவன் ? '' என்னுமால் . - 3.9.21



3663 - '' சுட்ட கங்குல் நெடிது '' எனச் சோர்கின்றான் ,
'' முட்டு அமைந்த நெடு முடம் கோன் ஒடு
கட்டி , வாள் அரக்கன் , கதிரோனையும்
இட்டனன்கொல் இரும் சிறை ? '' என்னுமால் . - 3.9.22



3664 - '' துடியின் நேர் இடை தோன்றலள் ஆம் எனின் ,
கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய்
முடியும் ; ஆகின் , முடியும் இம் மூரி நீர்
நெடிய மாநிலம் '' என்ன நினைக்கும் ஆல் . - 3.9.23



3665 - '' திறத்து இ(ன்)னாதன , செய்தவத்தோர் உற
ஒறுத்து , ஞாலத்து உயிர்தமை உண்டு உழல்
மறத்தினார்கள் , வலிந்தனர் வாழ்வரேல் ,
அறத்தினால் இனி ஆவது என் ? '' என்னுமால் . 3.9.24.


காமனது கலக்கம் (3666-3667)



3666 - தேனின் தெய்வத் திரு நெடு நாண் சிலைப்
பூ நின்று எய்யும் பொருகணை வீரனும் ,
மேல் நின்று எய்ய விமலனை நோக்கினான் ;
தான் நின்று எய்யகிலான் , தடுமாறினான் . - 3.9.25



3667 - உழந்த யோகத்து ஒருமுதல் கோபத்தால்
இழைந்த மேனியும் எண்ணி இரங்கினான் ;
கெழுந்தகைக்கு ஒரு வன்மை கிடைக்குமோ ,
பழந் துயர்க்குப் பரிவு உறும் பான்மையால் ? - 3.9.26



3668 - கங்குற்பொழுது கழிதல்
நீலமான நிறத்தன் நினைந்தவை
சூலம் ஆகத் தொலைவுறும் எல்லையில் ,
மூலம் ஆம் மலர் முன்னவன் முற்றுறும்
காலம் ஆம் எனக் கங்குல் கழிந்ததே . - 3.9.27

இராமனது ஆற்றாமை 3669 , 3670



3669 - வெள்ளம் சிலம்பு பால் கடல் இன் விரும்பும்
        துயிலை வெறுத்து , அளியும்
கள்ளும் சிலம்பு பூ கோதை
        கற்பின் கடலில் படிவாற்குப்
புள்ளும் சிலம்பும் ; பொழில் சிலம்பும் ;
        புனலும் சிலம்பும் ; புனை கோலம்
உள்ளும் சில் அம்பும் சிலம்பா ஏல் ,
        உயிர் உண்டாகும் வகை உண்டோ ? - 3.9.28



3670 - மயிலும் பெடையும் உடன் திரிய ,
        மானும் கலையும் மருவி வரப்
பயிலும் பிடியும் கடம் கரி உம்
        வருவ , திரிவ , பார்க்கின்றான் ;
குயிலும் , கரும்பும் செழும் தேன் உம் ,
        குழலும் , யாழும் , கொழும் பாகும் ,
அயிலும் அமுதும் சுவை தீர்த்த
        மொழியைப் பிரிந்தான் , அழியானோ ? - 3.9.29



3671 - கதிரவன் தோன்றுதல்
முடி நாட்டிய கோட்டு உதயம் அத்து
        முற்றம் உற்றான் ; முதுகங்குல்
விடிநாள் கண்டும் கிளி மிழற்றும்
        மென்சொல் கேளா வீரற்கு , ஆண்டு ,
'' அடிநாள் செந்தாமரை ஒதுங்கும்
        அன்னம் இலளால் , யான் அடைத்த
கடி நாள் கமலம் அத்து '' என , அவிழ்த்துக்
        காட்டுவான்போல் , கதிர்வெய்யோன் . - 3.9.30



3672 - சீதையின் பிரிவுத் துயரால் இராமன் வருந்துதல்
பொழிலை நோக்கும் ; பொழில் உறையும்
        புள்ளை நோக்கும் ; பூங்கொம்பின்
எழிலை நோக்கும் ; இளமயிலின்
        இயலைநோக்கும் ; இயல்பு ஆனாள்
குழலை நோக்கிக் கொங்கை இணைக்
        குவட்டை நோக்கி , அ குவடு இன்
தொழிலை நோக்கித் தன்னுடைய
        தோளை நோக்கி , நாள் கழிப்பான் . - 3.9.31



3673 - இராம இலக்குவர் இருவரும் இராவணன் இருக்கும் இடத்தைத் தேடிச் செல்லுதல்
அன்ன காலை , இளவீரன் ,
        அடியின் வணங்கி ,'' நெடியோய் ! அப்
பொன்னை நாடாது ஈண்டு இருத்தல்
        புகழோ ? '' என்னப் புகழோனும்
'' சொன்ன அரக்கன் இருக்கும் இடம்
        துருவி அறிதும் தொடர்ந்து '' என்ன ,
மின்னு சிலையார் மலைதொடர்ந்த
        வெயில் வெம் கானம் போயினர் ஆல் . - 3.9.32



3674 - ஆசை சுமந்த நெடும் கரி அன்னார் ,
பசும் இலை துன்று வனம்பல பின்னாக்
காசு அறு குன்றினொடு ஆறு கடந்தார் ;
யோசனை ஒன்பது ஒடு ஒன்பது சென்றார் . - 3.9.33



3675 - அவ்விருவரும் சோலையை அடைதல்
மண் படி செய்த தவத்தினின் வந்த
கள் படி கோதையை நாடினர் காணார் ;
உள் படி கோபம் , உயிர்ப்பொடு பொங்கப்
புள் படியும் குளிர் வார் பொழில் புக்கார் . - 3.9.34



3676 - கதிரவன் மறைதல்
ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான் ,
நாரியை எங்கணும் நாடினன் , நாடிப்
பேர் உலகு எங்கும் உழன்று , இருள் பின்னா
மேருவின் வெங்கதிர் மீள மறைந்தான் . - 3.9.35



3677 - எங்கும் இருள் செறிதல்
அரண்டு அருகும் செறி அஞ்சன புஞ்சம்
முரண்டன போல் இருள் எங்கணும் முந்த ,
தெருண்ட அறிவு இல்லவர் சிந்தையின் , முந்தி
இருண்டன மாதிரம் எட்டும் இரண்டும் . - 3.9.36



3678 - அவ்விருவரும் ஓர் பளிக்கறையில் தங்குதல்
இளிக்கு அறை இன்சொல் இயைந்தன , பூவை ,
கிளிக்கு அறையும் பொழில் , கிஞ்சுக வேலி ,
ஒளி கறை மண்டிலம் ஒத்து உளது , ஆங்கு ஓர்
பளிங்கு அறை , கண்டு , அதில் வைகல் பயின்றார் . - 3.9.37



3679 - இராமன் பணித்தவாறு இலக்குவன் தண்ணீர் கொணரச் செல்லுதல்
அவ் இடை எய்திய அண்ணல் இராமன் ,
வெவ் விடைபோல் இள வீரனை ,' வீர !
இவ் இடை நாடினை நீர் கொணர்க ' என்றான் ;
தெவ் இடை வில்லவனும் , தனி சென்றான் . - 3.9.38



3680 - அயோமுகி என்னும் அரக்கி இலக்குவனைக் கண்டு காமுறுதல் (3680-3683)
எ கண் உம் நாடினன் , நீர் இடை காணான் ,
சிங்கம் எனத் தமியன் திரிவானை ,
அங்கு அ வனம் அத்து உள் , அயோமுகி ஆன
வெம் கண் அரக்கி விரும்பினள் கண்டாள் . - 3.9.39



3681 - நல் மதியோர் புகல் மந்திர நாமச்
சொல் மதியா அரவின் , தொடர்கிற்பாள் ,
தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள் ,
' மன்மதன் ஆம் இவன் ' என்னும் மனத்தாள் . - 3.9.40



3682 - அழுந்திய சிந்தை அரக்கி , அலக்கண்
எழுந்து உயர் காதலின் வந்து , எதிர் நின்றாள் ;
'' புழுங்கும் என் நோவொடு புல்லுவென் அன்றி ,
விழுங்கு வெனோ ? '' என விம்மல் உழன்றாள் . - 3.9.41



3683 - '' இரந்தனென் எய்தியபோது , இசையாது
கரந்தனனேல் , நனி கொண்டு கடந்து , என்
முரஞ்சினில் மேவி முயங்குவென் '' என்று ,
விரைந்து எதிர் வந்தனள் , தீயினும் வெய்யாள் . - 3.9.42

அயோமுகியின் தோற்றம் (3684-3689)



3684 - உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள் ; ஒன்ற
எயிற்றின் மலை குலம் மென்று இனிது உண்ணும்
வயிற்றள் ; வலம் கொடு மாசுணம் வீசு
கயிற்றின் அசைத்த முலை , குழி கண்ணாள் . - 3.9.43



3685 - பற்றிய கோள் அரி , யாளி , பணிக்கண்
தெற்றிய பாதம் சிலம்பு தெரிந்தாள் ;
இற்று உலகு யாவையும் ஈறு உறும் அ நாள் ,
முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள் . - 3.9.44



3686 - ஆழி வறக்க முகக்க அமைந்த
மூழையெனப் பொலி மொய் பில வாயாள் ;
கூழை புறத்து விரிந்தது ஒர் கொட்பு ஆல் ,
ஊழி நெருப்பின் உருத்தனை ஒப்பாள் . - 3.9.45



3687 - தடி தடவப் பல தலை தழுவத் தாள்
நெடிது அடையக் குடர்கெழுமு நிணம் அத்து ஆள் ,
அடி தடவப் பட அரவம் இசைக்கும்
கடி தடம் உற்றவள் , உருமு கறிப்பாள் . - 3.9.46



3688 - இவை இறை ஒப்பன என்ன விழிப்பாள் ,
அவை குளிரக் கடிது அழலும் எயிற்றாள் ,
குவை குலையக் கடல் குவிய அலைப்பாள் ,
நவை இல் புவி திரு நாண நடப்பாள் . - 3.9.47



3689 - நீள் அரவம் சரி தாழ்கை நிரைத்தாள் ;
ஆள் அரவம் புலி ஆரம் அணைத்தாள் ;
யாளியினைப் பல தாலி இசைத்தாள் ;
கோள் அரியை கொடு தாழ்குழை இட்டாள் ; - 3.9.48
அயோமுகியைக் கண்ட இலக்குவன் அவளது
கொடுமை யுணர்ந்து நீ யார் ? என வினவுதல் (3690-3692)



3690 - நின்றனள் , ஆசையின் நீர் கலுழும் கண்
குன்றி நிகர்ப்ப , குளிர்ப்ப விழிப்பாள் ;
மின் திரிகின்ற எயிற்றின் விளக்கால் ,
கன்று இருளில் திரி கோளரி கண்டான் . - 3.9.49



3691 - '' பண்டையின் நாசி இழந்து பதைக்கும்
திண் திறலாள் ஒடு தாடகை சீராள் ;
கண்டகர் ஆய அரக்கர் கணத்து ஓர்
ஒள் தொடி ஆம் இவள் '' என்பது உணர்ந்தான் . - 3.9.50



3692 - '' பாவியர் ஆம் இவர் பண்பு இலர் ; நம்பால்
மேவிய காரணம் வேறு இலை '' என்பான் ,
'' மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய் !
யாவள் அடீ ? உரை செய் , கடிது '' என்றான் . - 3.9.51



3693 - அயோமுகி தான் வந்த காரணத்தைக் கூறித் தன்னை
ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுதல் (3693-3694)
பேசினன் , அங்கு அவள் பேசுற நாணாள் ,
ஊசல் உழன்று அழி சிந்தையளும் தான் ,
'' ஏசல் இல் அன்பினளாய் இனிது உன்பால்
ஆசையின் வந்த அயோமுகி '' என்றாள் . - 3.9.52



3694 - பின்னும் உரைப்பவள் ,'' பேர் எழில் வீரா !
முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு உன்
பொன்னின் மணித் தட மார்பு புணர்ந்து , என்
இன் உயிரைக் கடிது ஈகுதி '' என்றாள் . - 3.9.53



3695 - இலக்குவன் வெகுண்டுரைத்தல்
ஆறிய சிந்தையள் அ•து உரை செய்யச்
சீறிய கோளரி , கண்கள் சிவந்தான் ,
'' மாறு இல் இ வார்கணை , இவ் உரை வாயில்
கூறிடின் , நின் உடல் கூறு இடும் '' என்றான் . - 3.9.54

அயோமுகி மீண்டும் இலக்குவனை இரந்து வேண்டுதல் (3696-3697)



3696 - மற்று அவன் அவ் உரை செப்ப , மனத்தால்
செற்றிலள் , கை துணை சென்னியின் வைத்தாள் ,
'' கொற்றவ ! நீ எனை வந்து உயிர் கொள்ளப்
பெற்றிடின் , இன்று பிறந்தனென் '' என்றாள் . - 3.9.55



3697 - வெம் கதம் இல்லவள் பின்னரும் ,'' மேலோய் !
இங்கு நறும் புனல் நாடுதி என்னின் ,
அங் கையினால் எனை' அஞ்சலை ' என்றால் ,
கங்கையின் நீர் கொணர்வென் கடிது '' என்றாள் . - 3.9.56



3698 - தன் வேண்டுகோளை ஏலாது வெகுண்டுரைத்த இலக்குவனைக்
குறித்து அயோமுகி சிந்தித்தல்
சுமித்திரை சேய் , அவள் சொன்ன சொல் அன்ன
கமித்திலன் ,'' நின் இரு காதொடு நாசி
துமிப்பதன் முன்பு அகல் '' என்பது சொல்ல ,
இமைத்திலள் நின்றனள் , இன்ன நினைந்தாள் . - 3.9.57



3699 - இலக்குவனைத் தூக்கிச் செல்லக் கருதிய அயோமுகி அயலே
சிறிது விலகிச் செல்லுதல்
'' எடுத்தனென் ஏகினென் , என் முழை தன்னுள்
அடைத்து , இவன் வெம்மை அகற்றிய பின்னை ,
உடல் படும் ஆல் ; உடனே உறும் நன்மை ;
திடம் அத்து இதுவே நலன் '' என்று அயல் சென்றாள் . - 3.9.58



3700 - அயோமுகி மோகனச் செய்கையால் இலக்குவனை எடுத்துச் செல்லுதல்
மோகனை என்பது முந்தி முயன்றாள் ,
மாக நெடுங் கிரி போலியை வவ்வா ,
ஏகினள் உம்பரின் , இந்துவொடு ஏகும்
மேகம் எனும்படி , நொய்தினின் வெய்யாள் . - 3.9.59



3701 - இலக்குவனை யெடுத்துக்கொண்டு ஆகாயத்திற் செல்லும்
அயோமுகியின் தோற்றம்
மந்தரம் வேலையில் வந்ததும் , வானத்து
இந்திரன் ஊர்முகில் என்னலும் ஆனாள் ;
வெந் திறல் வேல் கொடு சூர் அடும் வீரச்
சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள் . - 3.9.60



3702 - அயோமுகியின் பிணிப்பில் பொருந்திய இலக்குவனது தோற்றம்
ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கிப்
பூங்கழல் வார்சிலை மீளி பொலிந்தான் ;
வீங்கிய வெஞ்சின வீழ் மதம் வெம் போர்
ஓங்கல் உரிக்குள் உருத்திரன் ஒத்தான் . - 3.9.62

இலக்குவன் மீண்டு வாராமையை எண்ணி இராமன்
பலவாறு சிந்தித்து வருந்துதல் (3703-3717)



3703 - இப்படி ஏகினள் அன்னவள் ; இ பால் ,
'' அப்பு இடை தேடி நடந்த என் ஆவித்
துப்பு உடை மால்வரை தோன்றலன் '' என்னா ,
வெப்பு உடை மெய் உடை வீரன் விரைந்தான் . - 3.9.62



3704 - '' வெய்து ஆகிய கான் இடை மேவரும் நீர்
ஐது ஆதலினோ ? அயல் ஒன்று உளதோ ?
நொய்தாய் வர வேகமும் நொய்திலன் ஆல் ;
எய்தாது ஒழியான் ; இது என்னை கொலாம் ? '' - 3.9.63



3705 - '' 'நீர் கண்டனை இவ் வழி நேடினை போய்ச்
சார் , கொண்டு ' என , இ துணை சார்கிலனால் ;
வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர் பால்
போர் கொண்டனனோ ? பொருள் உண்டு இது '' எனா . - 3.9.64



3706 - '' அம் சொல் கிளி அன்ன அணங்கினை முன்
வஞ்சித்த இராவணன் வவ்வினனோ ?
நஞ்சிற் கொடியான் நடலைத் தொழிலால்
துஞ்சுற்றனனோ , விதியின் துணிவால் ? '' - 3.9.65



3707 - '' வரி வில் கை என் ஆர் உயிர் வந்திலனால் ;
தருசொல் கருதேன் , ஒரு தையலை யான்
பிரிவுற்றனென் என்பது ஒர் பீழை பெருத்து
எரிவு உற்றிட , ஆவி இழந்தனனோ ? '' - 3.9.66



3708 - ' உண்டாகிய கார் இருளோடு ஒருவென்
கண்தான் ; அயல் வேறொரு கண் இலென் ஆல் ;
புண்தான் உறு நெஞ்சு புழுங்குறுவேன் ;
எண்தான் இலென் ; எங்ஙனம் நாடுகென் ஓ ? ' - 3.9.67



3709 - '' தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய்
உள்ளாய் ! ஒரு நீயும் ஒளித்தனை ஓ ?
பிள்ளாய் ! பெரியாய் ! பிழை செய்தனை ஆல் ;
கொள்ளாது உலகு உன்னை ; இது ஓ கொடிதே ! '' - 3.9.68



3710 - '' பேரா இடர் வந்தன பேர்க்க வலாய் !
தீரா இடர் தந்தனை ; தெவ்வர் தொழும்
வீரா ! எனை இங்ஙன் வெறுத்தனை ஓ ?
வாராய் , புறம் இத்துணை வைகுதியோ ? '' - 3.9.69



3711 - '' என்னைத் தரும் எந்தையை என்னையரைப்
பொன்னைப் பொருகின்ற பொலங் குழையாள்
தன்னைப் பிரிவேன் , உளென் ஆவதுதான் ,
உன்னைப் பிரியாத உயிர்ப்பு அலவோ ? '' - 3.9.70



3712 - '' பொன் தோடு இவர்கின்ற பொலங் குழையாள்
தன் தேடி வருந்து தவம் புரிவேன் ,
நின் தேடி வருந்த நிரப்பினையோ ?
என் தேடினை வந்த இளம் களிறு ஏ ! '' - 3.9.71



3713 - '' இன்றே இறவாது ஒழியேன் ; எமரோ ,
பொன்றாது ஒழியார் , புகல்வார் உளரேல் ;
ஒன்றாகிய உன் கிளையோரை எலாம்
கொன்றாய் ; கொடியாய் ! இதுவும் குணமோ ? '' - 3.9.72



3714 - '' மாந்தா முதல் மன்னவர் தம் வழியின்
வேந்து ஆகை துறந்தபின் , மெய் உறவோர்
தாம்தாம் ஒழியத் தமியேன் உடனே
போந்தாய் ; எனை விட்டனை போயினை ஓ ? '' - 3.9.73



3715 - என்னா உரையா , எழும் ; வீழும் ; இருந்து
உன்னா , உணர்வு ஓய்வு உறும் ; ஒன்று அல ஆல் ;
'' மின்னாது இடியாது , இருள் வாய் விளைவு ஈது
என் ஆம் '' எனும் ; என் தனி நாயகனே . - 3.9.74



3716 - நாடும் , பல சூழல்கள் தோறும் நடந்து ;
ஓடும் , பெயர் சொல்லி உளைந்து ; உயிர்போய்
வாடும் வகைசோரும் ; மயங்குறு மால் ,
ஆடும் களி மா மத யானை அ(ன்)னான் . - 3.9.75



3717 - '' கமையாளொடும் என் உயிர் காவலில் நின்று
இமையாதவன் , இ துணை தாழ்வுறும் ஓ ?
சுமையா உலகு ஊடு உழல் தொல் வினையேன் கு
அமையாது கொல் வாழ்வு ? அறியேன் '' எனுமால் . - 3.9.76



3718 - '' அறம் பால் உளதேல் , அவன் , முன்னவனாய்ப்
பிறப்பான் உறின் , வந்து பிறக்க '' எனா ,
மறப்பால் வடிவாள் கொடு மன் உயிரைத்
துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின் வாய் . - 3.9.77



3719 - பேர்ந்தான் நெடு மாயையினில் ; பிரியா ,
ஈர்ந்தான் , அவள் நாசி பிடித்து , இளையோன் ;
சோர்ந்தாள் இடு பூசல் , செவித் துளையில்
சேர்ந்து ஆர்தலுமே , திருமால் தெருளா , - 3.9.78



3720 - '' பரல்தரு கானகம் அத்து அரக்கர் , பல்கழல்
முரற்று அரு வெம் சமம் முயல்கின்றார் , எதிர்
உரற்றிய ஓசை அன்று ; ஒருத்தி ஊறுபட்டு
அரற்றிய குரல் ; அவள் அரக்கி ஆம் '' எனா . - 3.9.79



3721 - அங்கியின் நெடும்படை வாங்கி , ஆங்கு அது
செங்கையில் கரியவன் திரிக்கும் எல்லையில் ,
பொங்கு இருள் அ புறம் அத்து உலகம் புக்கது ;
கங்குலும் , பகல் எனப் பொலிந்து காட்டிற்று ஏ . - 3.9.80



3722 - நெடும் வரை பொடிபட , நிவந்த மா மரம்
ஒடிவு உற , நிலம் மகள் உலைய , ஊங்கு எலாம்
' சடசட ' எனும் ஒலி தழைப்பத் தாக்குமா
முடுகினன் இராமன் , வெம் கால் இன் மும்மையான் . - 3.9.81



3723 - ஒருங்கு உயர்ந்து , உலகு இன் மேல் , ஊழிப் பேர்ச்சியுள்
கரும் கடல் வருவதே அனைய காட்சித் தன்
பெருந் துணைத் தம்முனை நோக்கிப் பின்னவன் ,
'' வருந்தலை , வருந்தலை , வள்ளியோய் ! '' எனா . - 3.9.82



3724 - '' வந்தனென் அடியனேன் ; வருந்தல் , வாழி ! நின்
அந்தம் இல் உள்ளம் '' என்று அறியக் கூறுவான் ,
சந்த மென் தளிர் புரை சரணம் ! சார்ந்தனன் ;
சிந்தின நயனம் வந்து அனைய செய்கையான் . - 3.9.83



3725 - ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன் ,
ஏற்று இளம் கன்றினை பிரிவுற்று , ஏங்கிநின்று
ஆற்றலது , அரற்றுவது , அரிதின் எய்திட ,
பால் துறும் பனிமுலை ஆவின் பான்மையான் . - 3.9.84



3726 - தழுவினன் பல முறை ; தாரைக் கண்ணின் நீர்
கழுவினன் , ஆண்டு அவன் கனக மேனியை ;
'' வழுவினையாம் என மனம் கொடு ஏங்கினேன் ;
எழு என மலை என இயைந்த தோளினாய் ! '' - 3.9.85



3727 - '' என்னை அங்கு எய்தியது ? இயம்புவாய் '' என ,
அன்னவன் அஃது எலாம் அறியக் கூறலும் ,
இன்னலும் , உவகையும் , இரண்டும் எய்தினான் ;
தன் அலாது ஒருபொருள் தனக்குமேல் இலான் . - 3.9.86



3728 - '' ஆய்வு உறு பெரும் கடல் அகத்துள் ஆயவன் ,
பாய் திரை வருதொறும் பரியற் பாலனோ ?
தீவினைப் பிறவி வெம் சிறை இல் பட்டயாம் ,
நோய் , உறுதுயர் என நுடங்கல் நோன்மையோ ? '' - 3.9.87



3729 - '' மூவகை , உலகமும் , அமரர் மூவரும்
மேவ அரும் பகை எனக்கு ஆக மேல்வரின் ,
ஏவரே கடப்பவர் ? எம்பி ! நீ உளை
ஆவதே வலி ; இனி , அரணும் வேண்டுமோ ? '' - 3.9.88



3730 - '' பிரிபவர் யாவரும் பிரிக ; பேர் இடர்
வருவன யாவையும் வருக ; வார்கழல்
செருவலி வீர ! நின் தீரும் அல்லது
பருவரல் என் வயின் பயிலற் பாலதோ ? '' - 3.9.89



3731 - '' வன் தொழில் வீர !' போர் வலி அரக்கியை
வென்று போர் மீண்டனென் ' என விளம்பினாய் ;
புன் தொழில் அனையவள் புகன்ற சீற்றத்தால்
கொன்று இலை போலுமால் ? கூறுவாய் '' என்றான் . - 3.9.90



3732 - '' துளைபடு மூக்கொடு செவி துமித்து உகத்
தளை வயின் நகிலொடு தடிந்து நீக்கிய
அளவையில் , பூசலிட்டு அரற்றினாள் '' என
இளையவன் , விளம்பி நின்று இருகை கூப்பினான் . - 3.9.91



3733 - ' தொல் இருள் , தனைக் கொ(ல்)லத் தொடர்கின்றாளையும் ,
கொல்லலை , நாசியைக் கொய்து நீக்கினாய் ;
வல்லை நீ ; மனுமுதல் மரபினோய் ! ' எனப்
புல்லினன் ; உவகையின் பொருமி விம்முவான் . - 3.9.92



3734 - பேர் அருந்துயர் இறை பேர்ந்து உளோர் என ,
வீரனும் தம்பியும் விடிவு நோக்குவார் ,
வாருணம் நினைந்தனர் , வானம் நீர் உண்டு ,
தாரணி தாங்கிய கிரியில் தங்கினார் . - 3.9.93



3735 - கல் அதர் வெள் இடை கானின் நுண்மணல் ,
பல்லவம் மலர் கொடு படுத்த பாயலின் ,
எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன் ;
மெல் அடி , இளையவன் வருட , வீரனே . - 3.9.94



3736 - மயில் இயல் பிரிந்தபின் மான நோயினால் ,
அயில்வு இலன் ஒருபொருள் ; அவலம் எய்தலால் ,
துயில்வு இலன் என்பது , சொல்லற் பாலதோ ?
உயிர் , நெடிது உயிர்ப்பு இடை , ஊசல் ஆடுவான் . - 3.9.95



3737 - சீதையின் பிரிவாற்றாது இராமன் வருந்துதல்
' மானவள் மெய் இறை மறக்கலாமையின்
ஆனதோ ? அன்று எனின் , அரக்கர் மாயமோ ?
கானகம் முழுவதும் , கண்ணின் நோக்குங்கால்
சானகி உரு எனத் தோன்றும் தன்மையே ! - 3.9.96



3738 - கரும் குழல் செம் அரி கண்ணி , கற்பினோர்
அரும் கலம் , மருங்கு வந்து இருப்ப , ஆசையால்
ஒருங்கு உறத் தழுவுவென் ; ஊறு காண்கிலேன் ;
மருங்குல்போல் ஆனதோ வடிவும் ? மெல்லவே . - 3.9.97



3739 - ' புண்டரிகப் புது மலரில் தேன் பொதி
தொண்டை அம் செம் ஒளி துவர்த்த வாய் அமுது
உண்டனென் ; ஈண்டு அவள் உழையள் அல்லள் ஆல் ;
கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ ? ' - 3.9.98



3740 - மண்ணினும் , வானினும் , மற்றை மூன்றினும் ,
எண்ணினும் , நெடியதாய் , ஈரும் ஈட்டத்தால் ,
தண் நறுங் கரும் குழல் சனகன் மா மகள்
கண்ணினும் நெடியதோ ? கொடிய கங்குலே ! ' - 3.9.99



3741 - ' அப்பு உடை அலங்கு மீன் அமரும் ஆர்கலி
உப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ
வெப்பு உடை விரி கதிர் வெதுப்ப , மெய் எலாம்
கொப்புளம் பொடித்ததோ , கொதிக்கும் வானமே ? - 3.9.100



3742 - இன்னன இன்னன பன்னி , ஈடு அழி
மன்னவர் மன்னவன் , மதி மயங்கினான் ;
அன்னது கண்டனன் , அல்கினான் எனத்
துன்னிய செம் கதிர் செல்வன் தோன்றினான் . - 3.9.101


3.10 . கவந்தன் வதைப் படலம் (3743 -3800)




3743 - இராம இலக்குவர் விடியலில் புறப்பட்டுப் போதல்
நிலம்' பொறை ஈது ! ' என நிமிர்ந்த கற்பினாள் ,
நலம் பொறை கூர்தரு மயிலை நாடிய
அலம்புறு பறவையும் அழுவவாம் எனப்
புலம்புறு விடியலில் கடிது போயினார் . - 3.10.1



3744 - கவந்தன் வனத்தைச் சேர்தல்
ஐ ஐந்து அடுத்த யோசனையின்
        இரட்டி , அடவி புடைபடுத்த
வையம் திரிந்தார் ; கதிரவனும்
        வானின் நாப்பண் வந்து உற்றான் ;
எய்யும் சிலை கை இருவரும் சென்று ,
        இருந்தே நீட்டி எவ் உயிரும்
கையின் வளைத்து வயிற்று அடக்கும்
        கவந்தன் வனத்தின்கண் உற்றார் . - 3.10.2

கவந்தன் கைக்குள் புக்க பொருள்களின் இயல்பு (3745-3747)



3745 - எறும்பு இனம் கடை உற , யானையே முதல்
உறுப்பு உடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன ;
வெறிப்பு உறு நோக்கின , வெருவுகின்றன ;
பறிப்பு அரு வலை இடை பட்ட பான்மைய . - 3.10.3



3746 - மரபுளி நிறுத்திலன் , புரக்கும் மாண்பு இலன்
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன ,
வெருவுவ , சிந்துவ , குவிவ , விம்மலோடு
இரிவன , மயங்குவ இயல்பு நோக்கினார் . - 3.10.4



3747 - மால்வரை உருண்டன வருவ , மா மரம்
கால் பறிந்து இறுவன , கான யாறுகள்
மேல் உள திசை ஒடு வெளிகள் ஆவன ,
சூல் முதிர் மேகங்கள் சுருண்டு வீழ்வன . - 3.10.5

இராம இலக்குவர் கவந்தன் கைக்குள் புகுதல் (3748-3749)



3748 - நால் திசைப் பரவையும் , இறுதி நாள் உறக்
காற்று இசைத்து எழ எழுந்து , உலகைக் கால் பரந்து
ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன
போல் , திசைச் சுற்றிய கரத்துப் புக்குளார் . - 3.10.6



3749 - தே மொழி திறம் அத்து இன் ஆல் , அரக்கர் சேனை வந்து
ஏம் உற வளைந்தது என்று உவகை எய்தினார் ;
நேமி மால் வரை என நெருக்குகின்றதே
ஆம் எனல் ஆய கைம் மதிள் கு உள் ஆயினார் . - 3.10.7



3750 - மகிழ்ச்சியால் இராமன் இலக்குவனுக்குக் கூறுவது
இளவலை நோக்கினன் இராமன் ,'' ஏழையை
உளைவு செய் இராவணன் உறையும் ஊரும் இவ்
அளவையது ஆகுதல் அறிதி , ஐய ! நம்
கிளர் பெருந் துயரமும் கீண்டது ஆம் '' என்றான் . - 3.10.8

இலக்குவன் சொல் (3751-3752)



3751 - '' முற்றிய அரக்கர்தம் முழங்கு தானையேல் ,
எற்றிய முரசு ஒலி , ஏங்கும் சங்கு இசை
பெற்றிலது , ஆகலின் , பிறிது ஒன்று ஆம் '' எனச்
சொற்றனன் இளையவன் , தொழுது முன் நின்றான் . - 3.10.9



3752 - '' தெள்ளிய அமுது எழத் தேவர் வாங்கிய
வெள் எயிற்று அரவம்தான் ? வேறு ஓர் நாகம்தான் ?
தள்ளுரு வாலொடும் தலையினால் வளைத்து
உள் உறக் கவர்வதே ஒக்கும் , ஊழியாய் ! '' - 3.10.10



3753 - கவந்தன் தோற்றம்
என்று இவை விளம்பிய இளவல் வாசகம்
நன்று என நினைந்தனன் , நடந்த நாயகன் ;
ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு , ஓங்கல்தான்
நின்று என இருந்த அக் கவந்தன் நேர் சென்றார் . - 3.10.11



3754 - கண்ணும் வாயும்
வெயில் சுடர் இரண்டினை மேருமால் வரை
குயிற்றியது ஆம் எனக் கொதிக்கும் கண்ணினன் ,
எயிற்று இடைக்கு இடை இரு காதம் ஈண்டிய
வயிறு இடை வாய் எனும் மகர வேலையான் . - 3.10.12



3755 - கைகளின் நீட்சி
ஈண்டிய புலவரோடு அவுணர் , இந்துவைத்
தீண்டிய நெடுவரைத் தெய்வ மத்தினைப்
பூண்டு உயர் வடம் இரு புடை உம் வாங்கலின் ,
நீண்டன கிடந்து என நிமிர்ந்த கையினான் . - 3.10.13



3756 - மூக்கும் நாக்கும்
தொகைக் கனல் கருமகன் துருத்தித் தூம்பு எனப்
புகை கொடி கனலொடு பொடிக்கும் மூக்கினான்
பகைத் தகை நெடுங்கடல் பருகும் பாவகன்
சிகைக் கொழுந்து இது எனத் திருகு நாவினான் . - 3.10.14



3757 - கோரப் பற்கள்
புரண்டு பாம்பு இடைவர வெருவி புக்கு உறை
அரண் தனை நாடி ஓர் அருவி மால்வரை
முரண் தொகு முழைநுழை முழுவெண் திங்களை
இரண்டு கூறு இட்டு என இலங்கு எயிற்றினான் . - 3.10.15



3758 - உடம்பின் இயல்பு
ஓதம் நீர் மண் இவை முதல ஓதிய
பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அன்றியே ,
வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும்
பாதகம் திரண்டு உயிர் படைத்த பண்பினான் . - 3.10.16



3759 - செவியும் வயிறும்
வெய்ய வெங் கதிர்களை விழுங்கும் வெவ் அராச்
செய் தொழில் இல துயில் செவியின் தொள்ளையான் ,
பொய் கிளர் வன்மையில் பிரியும் புன்மையோர்
வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான் . - 3.10.17



3760 - வாய்
முற்றிய உயிர் எலாம் முருங்க வாரித்தான்
பற்றிய கரத்தினன் , பணைத்த பண்ணையில்
துற்றிய புகுதரும் தோற்றத்தால் , யமன்
கொற்ற வாய்தல் செயல் குறித்த வாயினான் . - 3.10.18



3761 - உடம்பு
ஓலம் ஆர் கடல் என முழங்கும் ஓதையான் ,
ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான் ,
நீலமால் , நேமியின் தலையை நீக்கிய
கால நேமியைப் பொரும் கவந்தக் காட்சியான் . - 3.10.19



3762 - இருவரும் நோக்குதல்
தாக்கிய தணப்பு இல் கால் எறியத் தன் உடை
மேக்கு உயர் கொடுமுடி இழந்த மேரு நேர்
ஆக்கையின் இருந்தவன் தன்னை அவ் வழி
நோக்கினார் இருவரும் , நுணங்கு கேள்வியார் . - 3.10.20



3763 - வாயைப் பார்த்து ஐயுறல்
நீர் புகும் நெடும் கடல் அடங்கும் நேமி சூழ்
பார் புகும் நெடும் பகு வாயை பார்த்தனர் ;
'' சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில்
ஊர் புகு வாயிலோ இது ? '' என்று உன்னினார் . - 3.10.21

இராம இலக்குவர் உரையாடல் (3764-3778)



3764 - அவ்வழி இளையவன் அமர்ந்து நோக்கியே
'' வெவ்வியது , ஒரு பெரும் பூதம் , வில் வலாய் !
வவ்விய தன் கையின் வளைத்து வாய் பெயும் ;
செய்வது என் இவண் ? '' எனச் செம்மல் சொல்லுவான் . - 3.10.22



3765 - '' பாரிடம் ஏ இது , பரவை சுற்றுறும்
பார் இடம் அரிது எனப் பரந்த மெய்யது ,
பார் ! இடம் வலம் வரப் பரந்த கையது ,
பார் இடந்து எடுத்த மா அனைய பாழியாய் ! '' - 3.10.23



3766 - '' தோகையும் பிரிந்தனள் , எந்தை துஞ்சினன் ,
வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலேன் ;
ஆகலின் , யான் , இனி , இதனுக்கு ஆமிடம் ;
ஏகுதி ஈண்டு நின்று , இளவலே ! '' என்றான் . - 3.10.24



3767 - '' ஈன்றவர் இடர் பட , எம்பி துன்பு உற
சான்றவர் துயர் உற பழிக்குச் சார்வுமாய்த்
தோன்ற வல்லேன் உயிர் துறந்தபோது அலால் ,
ஊன்றிய பெரும்பழி துடைக்க ஒண்ணுமோ ? '' - 3.10.25



3768 - '' 'இல் இயல்பு உடைய நீர் அளித்த இன்சொல் ஆம்
வல்லி அவ் அரக்கர் தம் மனை உளாள் ' எனச்
சொல்லினென் , மலை எனச் சுமந்த தூணியென் ,
வில்லினென் , செல்வெனோ மிதிலை வேந்தன்பால் ? '' - 3.10.26



3769 - '' 'தளை அவிழ் கோதையைத் தாங்கல் ஆற்றலன் ,
இளை புரந்து அளித்தல் மேல் இவர்ந்த காதலன்
உளன் ' என உரைத்தலின் ,' உம்பரான் ' என
விளைதல் நன்று ஆதலின் , விளிதல் நன்று '' என்றான் . - 3.10.27



3770 - ஆண்டான் இன்னன பன்னிட , ஐயற்கு இள வீரன் ,
'' ஈண்டு யான் உன்பின் ஏகிய பின் , இவ் இடர் வந்து
மூண்டால் , முன்னே ஆர் உயிரோடும் முடியாதே
மீண்டே போதற்கு ஆம் எனின் நன்று என் வினை '' என்றான் . - 3.10.28



3771 - என்றான் என்னாப் பின்னும் இசைப்பான் ,'' இடர் தன்னை
வென்றார் அன்றே வீரர்கள் ஆவார் ? விரவார் இன் ,
தன் தாய் தந்தை தம்முன் எனும் தன்மையர் முன்னே
பொன்றான் என்றால் , நீங்குவது அன்றோ புகழ் அம்மா ? '' - 3.10.29



3772 - '' 'மானே அன்னாள் தன்னொடு தம் முன் வரை ஆரும்
கானே வைகக் கண் துயில் கொள்ளாது அயல் காத்தற்கு
ஆனான் , என்னே ! ' என்றவர் முன்னே ,' அவர் இன்றித்
தானே வந்தான் ' என்றலின் வேறு ஓர் தவறு உண்டோ ? '' - 3.10.30



3773 - '' என்தாய் ,' உன்முன் ஏவிய யாவும் இசை ; இன்னல்
பின்றாது எய்திப் பேர் இசையாளற்கு அழிவு உண்டேல் ,
பொன்றா முன்னம் பொன்றுதி ' என்றாள் ; உரை பொய்யா
நின்றால் அன்றோ நிற்பது வாய்மை நிலை அம்மா ? '' - 3.10.31



3774 - '' என் பெற்றாளும் யானும் எனைத்து ஓர் வகையாலும்
நின் பெற்றாட்கும் நிற்கும் நினைப்புப் பிழையாமல் ,
நல் பொன் தோளாய் ! நல்லவர் பேண நனி நிற்கும்
சொல் பெற்றோம் ; மற்று ஆருயிர் பேணித் துறவேம் ஆல் . '' - 3.10.32



3775 - '' ஓதும் கால் , அப்பல் பொருள் முற்று உற்று , ஒருவாத
வேதம் சொல்லும் தேவரும் வீயும் கடை வீயாய் ;
மாதங்கம் தின்று உய்ந்து இவ் வனத்தின் தலை வாழும்
பூதம் கொல்லப் பொன்றுதி போலும் ? பொருள் உண்டோ ? '' - 3.10.33



3776 - '' கேட்டார் கொள்ளார் , கண்டவர் பேணார் ,' கிளர் போரில்
தோட்டார் கோதைச் சோர் குழல் தன்னைத் துவளாமல்
மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான் செரு வெல்ல
மாட்டான் மாண்டான் ' என்றலின் மேலும் வசை உண்டோ ? '' - 3.10.34



3777 - '' தணிக்கும் தன்மைத்து அன்று
        எனின் அன்று , இ தகை வாளால் ;
கணிக்கும் தன்மைத்து அன்று ,
        விடத்தின் கனல் பூதம்
பிணிக்கும் கையும் , பெய்
        பில வாயும் பிழையாமல்
துணிக்கும் வண்ணம் காணுதி ;
        துன்பம் துற '' என்றான் . - 3.10.35



3778 - என்னா , முன்னே செல்லும் இளங்கோ ; இளையோற்கு
முன்னே செல்லும் முன்னவன் ; அன்னானினும் முந்தும்
தன்நேர் இல்லாத் தம்பி ; தடுப்பார் பிறர் இல்லை ;
அன்னோ ! கண்டார் உம்பரும் , வெய்துற்று அழுதாரால் . - 3.10.36



3779 - யார் என்று வினவிய கவந்தனை வெகுண்டு நிற்றல்
இனையர் ஆகிய இருவரும் , முகத்து இரு கண் போல் ,
கனையும் வார்கழல் வீரர் சென்று அணுகலும் , கவந்தன் ,
'' வினையின் எய்தினிர் யாவர் கொலாம் ? '' என்று வினவ ,
நினையும் நெஞ்சினர் , இமைத்திலர் , உருத்தனர் , நின்றார் . - 3.10.37



3780 - கவந்தன் இருதோள்களை இருவரும் அரிதல்
'' அழிந்து உளார் அலர் ; இகழ்ந்தனர் என்னை '' என்று அழன்றான் ;
பொழிந்த கோபத்தன் ; புது பொறி மயிர் புறம் பொடிப்ப ,
'' விழுங்குவேன் '' என விரையலும் , விண் உற , வீரர் ,
எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர் , இட்டார் - 3.10.38



3781 - கவந்தன் கைகளற்ற தோற்றம்
கைகள் அற்று , வெம் குருதி ஆறு ஒழுக்கிய கவந்தன் ,
மெய்யின் , மேற்கொடு கிழக்கு உற பெருநதி விரவும் ,
சைய மா நெடுந் தாழ் வரை தனி வரை தன்னோடு
ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் . - 3.10.39



3782 - கவந்தன் பழைய தெய்வ உருவம் பெறல்
ஆளும் நாயகன் அம் கையில் தீண்டிய அதனால் ,
மூளும் சாபத்தின் முந்திய தீ வினை முடித்தான் ;
தோளும் வாங்கிய தோம் உடை யாக்கையைத் துறவா ,
நீளம் நீங்கிய பறவையின் விண் உற நிமிர்ந்தான் . - 3.10.40



3783 - விண்ணில் நின்றவன் ,'' விரிஞ்சனே முதலினர் யார்க்கும்
கண்ணில் நின்றவன் இவன் '' எனக் கருத்து உற உணர்ந்தான் ,
எணில் அன்னவன் குணங்களை வாய் திறந்து , இசைத்தான் ,
புண்ணியம் பயக்கின்றுழி அரியது எ பொருள் ஏ ? - 3.10.41

இராமனைத் துதித்தல் (3784-3792)



3784 - '' ஈன்றவனோ எப்பொருள் உம் ? எல்லைதீர் நல் அறம் அத்து இன்
சான்றவனோ ? தேவர் தவத்தின் தனிப்பயனோ ?
மூன்று கவடாய் முளைத்து எழுந்த மூலமோ ?
தோன்றி , அருவினையேன் சாபத் துயர் துடைத்தாய் ! '' - 3.10.42



3785 - '' மூலமே இல்லா முதல்வனே ! நீ முயலும்
கோலமோ , யார்க்கும் தெரிவு அரிய கொள்கைத்தால் ;
ஆலமோ ? ஆலின் அடையோ ? அடை கிடந்த
பாலனோ ? வேலைப் பரப்போ ? பகராயே ! '' - 3.10.43



3786 - '' காண் பார்க்கும் காணப் படு பொருட்கும் கண் ஆகிப்
பூண்பாய் போல் நிற்றியால் , யாது ஒன்றும் பூணாதாய் !
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதி ஆல் ;
ஆண்பாலோ ? பெண்பாலோ ? அ பால் ஓ ? எ பால் ஓ ? '' - 3.10.44



3787 - '' 'ஆதிப் பிரமனும் நீ ! ஆதிப் பரமனும் நீ !
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ !
சோதிச் சுடர்ப் பிழம்பும் நீ ' என்று சொல்லுகின்ற
வேதம் உரைசெய்தால் வெள்காரோ வேறு உள்ளார் ? '' - 3.10.45



3788 - '' எண்திசையும் திண் சுவர் ஆ , ஏழ் ஏழ் நிலை வகுத்த
அண்டப் பெருங் கோயிற்கு எல்லாம் அழகு உடைய
மண்டலங்கள் மூன்றின்மேல் நின்று , மலராத
புண்டரிக மொட்டின் பொகுட்டே புரை ; அம்மா ! '' - 3.10.46



3789 - '' மண் பால் அமரர் வரம்பு ஆரும் காணாத ,
எண்பால் உயர்ந்த , எரி ஓங்கு நல் வேள்வி
உண்பாய் நீ , ஊட்டுவாய் நீ ; இரண்டும் ஒக்கின்ற
பண்பு ஆர் அறிவார் ? பகராய் , பரமேட்டி ! '' - 3.10.47



3790 - '' நிற்கும் நெடும் நீத்தம் நீரில் முளைத்து எழுந்த
மொக்குளே போல , முரண் இற்ற அண்டங்கள் ,
ஒக்க உயர்ந்து , உனுளே தோன்றி ஒளிக்கின்ற
பக்கம் அறிதற்கு எளிதோ ? பரம்பரனே ! '' - 3.10.48



3791 - நின் செய்கை கண்டு நினைந்தனவோ நீள் மறைகள் ?
உன் செய்கை அன்னவைதாம் சொன்ன ஒழுக்கினவோ ?
என் செய்தேன் முன்னம் ? மறம் செய்கை எய்தினார்
பின் செல்வது இல்லாப் பெருஞ் செல்வம் நீ தந்தாய் . - 3.10.49



3792 - '' மாயப் பிறவி மயல் நீக்கி , மாசு இலாக்
காயம் அத்து ஐ நல்கித் துயரின் கரை ஏற்றிப்
பேய் ஒத்தேன் பேதைப் பிணக்கு அறுத்த எம்பெருமான் !
நாய் ஒத்தேன் , என்னநலன் இழைத்தேன் நான் ? '' என்றான் . - 3.10.50



3793 - பணிந்துநின்ற கவந்தனை இராமன் காணுதல்
என்று ஆங்கு இனிது இயம்பி'' இன்று அறியக் கூறுவெனேல்
ஒன்றாது தேவர் உறுதிக்கு '' என உன்னாத்
தன்தாயைக் கண்ணுற்ற கன்று அனைய தன்மையனாய்
நின்றானைக் கண்டான் , நெறிநின்றார் நேர்நின்றான் . - 3.10.51



3794 - இலக்குவனுக்கு அவனைக்காட்டி ஆராய்க எனல்
'' பாராய் இளையவனே ! பட்ட இவன் , வேறே ஓர்
பேராளன் தானாய் , ஒளி ஓங்கும் பெற்றியனாய் ;
நேர் ஆகாயத்தில் நிற்கின்றான் ; நீ , இவனை
ஆராய் ! '' என , அவனும்'' ஆர்கொலோ நீ ? '' என்றான் . - 3.10.52



3795 - கவந்தன் தன் வரலாறு கூறுதல்
'' சந்தம் பூண் அலங்கல் வீர !
        தனு எனும் நாமத்தேன் ஓர்
கந்தர்ப்பன் ; சாபத்தால் , இக்
        கடை படு பிறவி கண்டேன் ;
வந்து உற்றீர் மலர் கை தீண்ட ,
        முன் உடை வடிவம் பெற்றேன் ;
எந்தைக்கும் எந்தை நீரே !
        இசைப்பது கேண்மின் ! '' என்றான் . - 3.10.53

துணை இன்றியமையாதது எனல் (3796-3797)



3796 - '' கணை உலாம் சிலையினீரைக்
        காக்குநர் இல்லை ஏனும் ,
இணை இலாள் தன்னை நாடற்கு ,
        ஏயன செய்தற்கு ஏற்கும் ;
புணை இலாதவற்கு வேலை
        போக்கு அரிது ; அன்னது ஏ போல் ,
துணை இலாதவற்கும் , இன்றால் ,
        பகை புலம் தொலைத்து நீக்கல் . '' - 3.10.54



3797 - '' பழிப்பு அறும் நிலைமை , ஆண்மை ;
        பகர்வது என் ? பதும பீடம் அத்து
உழிப் பெரும் தகைமை சான்ற
        அந்தணன் உயிர்த்த எல்லாம்
அழிப்பதற்கு ஒருவனான
        அண்ணலும் , அறிதிர் அன்றே
ஒழிப்பு அரும் திறல் பல்பூத
        கணத்தொடும் உறையும் உண்மை . '' - 3.10.55



3798 - '' ஆயது செய்கை என்பது ,
        அறம் துறை நெறியின் எண்ணித்
தீயவர்ச் சேர்க்கிலாது ,
        செவ்வியோர்ச் சேர்த்துச் செய்தல் !
தாயினும் உயிர்க்கு நல்கும்
        சவரியைத் தலை பட்டு , அன்னாள்
ஏயதோர் நெறியின் எய்தி ,
        இரலையின் குன்றம் ஏறி . '' - 3.10.56



3799 - சுக்கிரீவனைத் துணையாகக் கொள்க எனல்
'' கதிரவன் சிறுவன் ஆய
        கனக வாள் நிறத்தினானை
எதிர் உற தழுவி நட்பின்
        இனிது அமர்ந்து அவனின் நீண்ட
வெதிர் பொரு தோளினாளை
        நாடுதல் விழுமிது '' என்றான் ;
அதிர் கழல் வீரர் தாமும்
        அன்னதே அமையும் என்றார் . - 3.10.57



3800 - இராம இலக்குவர் மதங்கன் இருக்கை சேர்தல்
ஆனபின் தொழுது , வாழ்த்தி , அந்தரம் அத்து அவனும் போனான்;
மானவக் குமரர் தாம் உம் அத்திசை வழிக் கொண்டு ஏகிக் ,
கானமும் மலையும் நீங்கிக் , கங்குல் வந்து இறுத்த காலை ,
யானையின் இருக்கை அன்ன மதங்கனது இருக்கை சேர்ந்தார் . - 3.10.58


3.11 . சவரி பிறப்பு நீங்கு படலம் (3801- 3809)




3801 - கண்ணிய தருதற்கு ஒத்த
      கற்பக தருவும் என்ன ,
உண்ணிய நல்கும் செல்வம்
      உறுநறும் சோலை , ஞாலம்
எண்ணிய இன்பம் அன்றித்
      துன்பங்கள் இல்லையான
புண்ணியம் புரிந்தோர் வைகும்
      துறக்கமே போன்றது அன்று , ஏ ! - 3.11.1



3802 - அன்னது ஆம் இருக்கை நண்ணி ,
      ஆண்டு நின்று , அளவு இல் காலம்
தன்னையே நினைந்து நோற்கும்
      சவரியைத் தலைப்பட்டு , அன்னாட்கு
இன் உரை அருளித்'' தீது இன்று
      இருந்தனை போலும் ? '' என்றான் ,
முன் இவற்கு இது என்று எண்ணல்
      ஆவது ஓர் மூலம் இல்லான் . - 3.11.2



3803 - ஆண்டு , அவள் அன்பின் ஏத்தி ,
      அழுது இழி அருவிக் கண்ணள் ,
'' மாண்டது என் மாயம் பாசம் !
      வந்தது வரம்பு இல் காலம்
பூண்டமா தவத்தின் செல்வம் !
      போயது பிறவி ! '' என்பாள் ,
வேண்டிய கொணர்ந்து நல்க ,
      விருந்து செய்து இருந்த வேலை . - 3.11.3



3804 - '' ஈசனும் , கமலத் தோனும் , இமையவர் யாரும் , எந்தை !
வாசவன் தானும் ஈண்டு வந்தனர் , மகிழ்ந்து நோக்கி ,
' ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது ; இராமற்கு ஆய
பூசனை விரும்பி , எம்பால் போதுதி ' என்று போனார் . '' - 3.11.4



3805 - '' இருந்தனென் , எந்தை ! நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை
பொருந்திட ; இன்றுதான் என் புண்ணியம் பூத்தது '' என்ற
அருந் தவத்து அரசி தன்னை அன்பு உற நோக்கி ,'' எங்கள்
வருந்து உறு துயரம் தீர்த்தாய் , அம்மனை ! வாழி ! '' என்றான் . - 3.11.5



3806 - அனகனும் இளைய கோவும்
      அன்று அவண் உறைந்த பின்றை ,
வினை அறு நோன்பினாளும்
      மெய்ம்மையின் நோக்கி , வெய்ய
துனை பரி தேரோன் மைந்தன்
      இருந்த அத் துளக்கு இல் குன்றம்
நினைவு அரிது ஆயற்கு ஒத்த
      நெறி எலாம் நினைந்து சொன்னாள் . - 3.11.6



3807 - வீட்டினுக்கு அமைவது ஆன
      மெய் நெறி வெளியிற்று ஆகக்
காட்டுறும் அறிஞர் என்ன ,
      அன்னவள் கழறிற்று எல்லாம்
கேட்டனன் என்ப மன்னோ ,
      கேள்வியால் செவிகள் முற்றும்
தோட்டவர் உணர்வின் உண்ணும்
      அமுதத்தின் சுவையாய் நின்றான் . - 3.11.7



3808 - பின் , அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியால் ஏ
தன் உடல் துறந்து , வானம் தனிமையின் இனிது சார்ந்தாள் ;
அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவு இன்று எய்திப்
பொன் அடிக் கழல்கள் ஆர்ப்பப் புகன்ற மா நெறியில் போனார் . - 3.11.8



3809 - தண் எனும் கானும் குன்றும் நதிகளும் தவிரப் போனார் ,
மண் இடை வைகல் தோறும் வரம்பு இலா மாக்கள் ஆடக்
கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே
புண்ணியம் உருகிற்று அன்ன பம்பை ஆம் பொய்கை புக்கார் . - 3.11.9



This file was last updated on 23 November 2013.
.