
Namakkal kavinjar V. Ramalingam Pillai (1888-1972) Songs- part I
in Tamil Script, Unicode/utf-8 format
நாமக்கல் கவிஞர்
இராமலிங்கம் பிள்ளை (1888-1972) பாடல்கள் - முதல் பாகம்
Etext Preparation : Ms. Vijayalakshmi Alagarsamy, California, USA
Proof-reading: Prof. Swaminathan Sankaran, Regina, Canada
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape >4.6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
© Project Madurai 1999-2000
to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. are
Namakkal kavinjar V. Ramalingam Pillai (1888-1972) Songs- part I
(in Tamil Script, TSCII format)
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் - முதல் பாகம்
(in Tamil Script, TSCII format)
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் - முதல் பாகம்
1. பரமன்
உலகெலாம் படைத்துக் காத்தே
உண்மையாய் எண்ண மாளா
சலமிலா தெண்ணு வோர்க்குச்
தனித்தனி பிரிந்த போதும்
மலரின்மேல் தேவ னாகி
மாலொடு புத்த னாகி
பலபல தெய்வ மாகிப்
பக்குவப் படியே தோன்றும்
2. கடவுள்
இல்லாத கால மில்லை
எண்ணாத எண்ண மெல்லாம்
சொல்லாத வேத மெல்லாம்
சூட்டாத நாமம் இல்லை
அல்லா வாய்ப் புத்த னாகி
அருளுடைச் சமணர் தேவும்
கல்லாத மனத்திற் கூடக்
கடவுளென் றுலகம் போற்றும்
3. இறைவன்
அன்பினுக் கன்பாய் வந்தும்
அறிந்தவர்க் கெளிய னாகி
முன்பினும் நடுவொன் றின்றி
மூடர்கள் மனத்திற் கூட
செம்பினும் கல்லி னாலும்
சிலந்திபோற் கூடு கட்டிச்
என்பினுக் கென்பா யென்றும்
எழுசுடர் சோதி யான
4. சொல்வதற்கு முடியாத சக்தி
இல்லையென்று சொல்வதற்கும்
இருப்பதென்பார் ருசுப்படுத்த
அல்லவென்று மறுப்பதிலும்
ஆம்என்ற மாத்திரத்தில்
வல்லமென்று அகங்கரித்தால்
வணங்கிஅதைத் தொழுவார்க்கு
சொல்லையத்துச் செயல்மனமும்
சொல்வதற்கு முடியாத
5. சூரியன் வருவது யாராலே ?
சூரியன் வருவது யாராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்
பேரிடி மின்னல் எதனாலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?
தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்
மண்ணில் போட்டது விதையன்று
கண்ணில் தெரியாச் சிசுவைஎல்லாம்
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
எத்தனை மிருகம்! எத்தனைமீன்!
எத்தனை பூச்சிகள் புழுவகைகள் !
எத்தனை நிறங்கள் உருவங்கள் !
அத்தனை யும்தர ஒருகர்த்தன்
அல்லா வென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
சொல்லால் விளங்கா ' நிர்வாணம்'
எல்லா மிப்படிப் பலபேசும்
அந்தப் பொருளை நாம்நினைத்தே
எந்தப் படியாய் எவர்அதனை
நிந்தை பிறரைப் பேசாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;
6. பராசக்தி
நூறென்று மனிதர்க்கு நீதந்த வயசினில்
கூறென்று பலநோய்கள் பங்கிட்டுக் கொள்ளுதையோ!
ஆரெம்மைக் காப்பவர் அன்னையே உன்னையன்றி.?
பாரெம்மைக் கடைக்கண்ணால் தேவி பராசக்தீ!
நீதந்த உடல்கொண்டு நின்புகழ் துதிக்குமுன்
நோய்வந்து புகுந்தெம்மை நொடிக்குள் மடிப்பதென்றால்
தாய்தந்தை நீயன்றித் தஞ்சம் பிறிதுமுண்டோ
வாய்தந்து வாவென்று வரமருள்வாய் தேவீ!
தாயை மறந்திருக்கும் குழந்தைகள் ஸகஜந்தான்;
சேயை மறந்தவளைச் செகமின்னுங் கண்டதில்லை.
நீயே எம்மைமறந்தால் நிலையெமக் கேதுவேறே?
நோயே மிகநலிய நொந்தனம், வந்தருள்!
நித்தம் உனைநினைந்து நியம முடன்வசிக்கச்
சுத்த மனநிலையும் சொல்லும் செயலும் தந்து
சுற்றும் பலபிணிகள் தொடரா தருள்புரியாய்
சத்திய மாய்விளங்கும் தேவீ பராசக்தி!
7. கண்ணன் பக்தி
கண்ணன் பக்தி சேர்ந்திடில்
மண்ணை வாரித் தின்றவன் ;
வீட்டில் திருடும் வெண்ணெயை
நாட்டில் சிறுவர் யாவரும்
பெண்ணைக் காணில் ஓடுவான் ;
எண்ணம் என்ன தீயதோ !
எண்ணி றந்த கோபிகள்
பெண்ணில் காமம் அல்லவே
தூய அன்புக் காதலைத்
நேய மாகும் கண்ணணை
என்றும் என்றும் பாலனாய்
கன்று காலி மேய்ப்பதில்
புலனை வெல்லும் கீதையைப்
நலனி லாத காமியாய்
ஆண்மை என்ற வன்மையும்
மாண்பிற் சேர்ந்த வேலையே
8. கண்ணன் லீலை
கண்ணன் என்றஒரு சிறுவன்-என்
எண்ண எண்ண அவன்பபெருமை-தனை
சிறுவன் என்று நினை யாமல்-அவன்
திறமை யோடுசெயல் புரியும்-நல்ல
அன்பு என்றஒரு எண்ணம்-தரும்
துன்பம் நேருகிற போது-எண்ணித்
சூது போலப்பல புரிவான்--உலகச்
தீது போலஒன்று செய்வான்--அதில்
ஆணின் அழகுமிக வருவான்--பெண்கள்
நாணிப் பெண்அருகிற் செல்வாள்--அவன்
பெண்ணின் வடிவழகில் வந்தே--ஆண்கள்
கண்ணைச் சிமிட்டுவதற் குள்ளே--ஓரு
தாயைப் போல்எடுத்தே அணைப்பான்-உடனே
மாயக் காரமணி வண்ணன்-வெகு
கலகப் பேச்சும்அவன்வேலை--மாற்றும்
உலகம் முழுதும்அவன் ஜாலம்--அதை
9. கண்ணன் உறவு
கண்ணன் உறவைப் பிரியாதே
எண்ணம் தூயது என்றானால்
ஊக்கமும் உறுதியும் உண்டாகும்
ஆக்கமும் ஆற்றலும் பெறலாகும்
துன்பம் எதையும் தாங்கிடலாம்
அன்பும் அறிவும் பெரிதாகும்
சிரிப்பும் களிப்பும் நிறைந்துவிடும்
விருப்பம் எதும் சித்திபெறும்
மாடுகள் மேய்க்கும் வேலையிலும்
பாடுபட் டுழைத்திட அஞ்சோமே
தூதுவன் ஆகித் துணைவருவான்
ஏதொரு தொழிலும் இழிவல்ல
எல்லா உயிரும் இன்பமுறும்
புல்லாங் குழலை ஊதிடுவான்
பக்தருக் கெல்லாம் அடைக்கலமாய்ப்
சக்திகள் பலவும் தந்திடுவான்
ஆடலும் பாடலும் மிகுந்துவிடும்
ஓடலும் ஒளித்தலும் விளையாட்டாம்
10. கண்ணன் பாட்டு
கண்ணன் வருகிற இந்நாளே
திண்ணம் அவனருள் உண்டானால்
அசுரத் தனங்களை இகழ்ந்திடவும்
விசனம் என்பதை ஒழித்திடவும்
அரசரின் குலத்தில் பிறந்தாலும்
ஒருசிறு பேதமும் எண்ணாமல்
எங்கும் எதிலும் வேடிக்கை
இங்கும் நாம்அதைக் கடைப்பிடித்தால்
அடுக்குப் பானையை உருட்டிடுவான்:
துடுக்குக் கண்ணனைக் கண்டவுடன்
ஒன்றும் தெரியாப் பாலன்போல்
என்றும் இளமை குறையாமல்
நம்பின மெய்யரைத் தாங்கிடுவான் ;
வம்புகள் செய்தால் செல்லாவாம் ;
கல்வியில் தேறிச் சிறந்திடலாம் ;
பல்வித நன்மைகள் பெறலாகும் ;
பண்ணும் காரியம் முற்றிலுமே
கண்ணன் திருவருள் சூழ்ந்திடுவோம் ;
11. வருவாய் முருகா
வாவா முருகா! வடிவேல் முருகா!
தேவா உனையே தினமும் தொழுவேன்
அழியா அழகா! அறிவாம் முருகா!
மொழியா இன்பம் அடையும் முறையை
குறையா அழகே! குமரா முருகா!
சிறைவா யுலகில் சிறுகும் எளியேன்
தளரா உடலும் சலியா உயிரும்
வளரா வாடா வடிவம் உடையாய்!
நரையும் திரையும் நணுகா முருகா!
விரியும் உலகின் விரையே முருகா!
12. முருகனென்ற சிறுவன்
முருகனென்ற சிறுவன்வந்து
முன்னிருந்த எண்ணம்யாவும்
அருகுவந்து மனமுவந்தே
அடிமையென் மனத்திருந்த
இளமையந்த முருகன்வந்து
என்னுளத்தி ருந்தபந்தம்
வளமையுற்ற இளமைபெற்று
வந்ததே சுதந்திரத்தில்
அழகனந்த முருகன்வந்தென்
ஐம்புலன்க ளுக்கொடுங்கி
பழமையென் உடற்கண்வைத்த
பாரிலென்னை யாருங்கண்டு
அன்பனந்த முருகன்வந்
அஞ்சல்அஞ்சல் அஞ்சலென்
துன்பமிக்க அடிமைவாழ்வில்
சோகம்விட்டு விடுதலைக்கு
13. முருகன்மேற் காதல்
முருக னென்றபெயர் சொன்னால்--தோழி!
பெருகி நீர்விழிகள் சோர--மனம்
கந்த னென்றுசொல்லும் முன்னே--என்
உந்தும் பேச்சுரைகள் உளறி--வாய்
வேல னென்றபெயர் கேட்டே--ஏனோ
கால னென்றபயம் ஓடிப்--புதுக்
குமர னென்றஒரு சத்தம்--கேட்டுக்
அமர வாழ்வுபெறல் ஆனேன்--இனி
குகனெனச் சொல்வதற் குள்ளெ--நான்
தகதக வென்றொரு காட்சி--உடனே
ஆடும் மயிலில்வரக் கண்டேன்--சொல்ல
வீடு வாசல்பொருள் எல்லாம்--துச்சம்
பச்சைக் குழந்தையவன் மேலே--என்றன்
இச்சை யாரமிகத் தழுவி--நானும்
கள்ளங் கபடமற்ற பாலன்--மேலே
எள்ளி ஏளனம்செய் தாலும்--நான்
முருகன் கந்தன்வடி வேலன்--ஞானத்
சிறுகு ழந்தையா னாலும்--அவனைத்
வேறு பெயரைச்சொன் னாலும்--சற்றும்
தூறு பேசுவதை விட்டே--எனக்குத்
14. பிரார்த்தனை
உலகெலாம் காக்கும் ஒருதனிப் பொருளே!
உன்னருள் நோக்கி இன்னுமிங் குள்ளோம்.
இந்திய நாட்டை இந்தியர்க் கென்று
தந்தனை யிலையோ? தவறதில் உண்டோ?
காடும் மலைகளும் கனிதரும் சோலைகள்
ஓடும் நதிகளும் உள்ளன எவையும்
இங்கே பிறந்தவர் எங்களுக் கிலையோ?
எங்கோ யாரோ வந்தவர் துய்க்கச்
சொந்த நாட்டினில் தோன்றிடும் செல்வம்
எந்த நாட்டிலோ எங்கோ போய்விடக்
கஞ்சியு மின்றிக் கந்தையும் இன்றி
அஞ்சிய வாழ்வின் அடிமையிற் கிடந்து
நொந்தனம் கொள்ளை நோய்களாற் செத்து
காட்டிடை வாழும் விலங்கினுங் கேடாய்க்
நாட்டிடை யிருந்தும் நலிந்தனம் ஐயோ!
யாருடை நாடு? யாருடை வீடு?
யாருடைப் பாடு? யார்அனு பவிப்போர்!
பிறந்த நாட்டினிற் பிறவா தவரிடம்
இரந்து நின்(று)அவர் ஏவலே செய்தும்
உடலே பெரிதென உயிரைச் சுமந்திடும்
ஊனமிவ் வாழ்வினை ஒழித்திடத் துணிந்தோம்!
ஞான நாயகா! நல்லருள் சுரந்தே
ஆண்மையும் அறிவும் அன்பும் ஆற்றலும்
கேண்மையும் பிறர்பால் கேடிலா எண்ணமும்
அடிமை ஒருவருக் கொருவர்என் றில்லாக்
குடிமை நீதியின் கோன்முறை கொடுத்துச்
சோறும் துணியும் தேடுவ தொன்றே
கூறும் பிறவியின் கொள்கையென் றின்றி
அளவிலா உன்றன் அருள்விளை யாட்டின்
களவியல் போன்ற கருணையின் பெருக்கின்
உளவினைத் தேடி உணர்ந்திட வென்றே
வளமும் எங்கள் வாழ்நாட் போக்கி
மங்களம் பாடி மகிழ்ந்திடத் தருவாய்
எங்கும் இருக்கும் எழிலுடைச் சோதி!
15. அனைத்தும் நீயே
ஆற்றல்கள் அனைத்தும் நீயே
போற்றிடும் வீரி யம்நீ
மாற்றரும் பலங்கள் நீயே
சாற்றரும் ஜீவ சத்தே
தீமையை வெறுத்து நீக்கும்
வாய்மையில் எனக்கும் அந்த
தாய்மையின் சகிப்பு நீயே
தூய்மைசேர் ஒழுக்க வாழ்வில்
உடலினும் உயிருக் கப்பால்
கடலினும் பெரிதாம் உன்றன்
அடைவரும் அமைதி தந்தே
மடமைகள் யாவும் மாற்றி
16. நெஞ்சோடு பிணங்கல்
எண்ணரிய நெடுங்காலம் இடைய றாமல்
எண்ணியெண்ணித் தவவலிமை உடைய ராகித்
திண்ணியமெய் யறிவறிந்து தெளிந்த முன்னோர்
பண்ணியநற் பழக்கமெல்லாம் பழித்தாய் நெஞ்சே!
எத்திசையும் பிறநாட்டார் ஏற்றி பேசும்
பக்திமிகும் இலக்கியத்தின் மணமே வீசும்
முத்தமிழின் வழிவந்தும் முன்னோர் தம்மைப்
பித்தரென்றே எண்ணுகின்றாய் பேதை நெஞ்சே!
நாத்திகந்தான் நாகரிகச் சின்னம் போல்
மூத்தறிந்த முன்னோரைப் பின்னம் பேசிச்
சூத்திரத்தில் ஆடுகின்ற பொம்மை யேபோல்
சொந்தபுத்தி இழந்துவிடல் நன்றோ? சொல்வாய்.
ஆத்திசூடி நல்லறிவை அழித்து விட்டாய்
ஆசாரக் கோவைதன்னை இழித்து விட்டாய்
பார்த்திதனை அன்னியவரும் பரிகசித்தார்
பாவமிதைப் புண்ணியம்போல் மிகர சித்தாய்.
தள்ளரிய தெய்வத்தின் நினைவு கூட்டும்
பிள்ளையார் சுழிபோட்டுக் கடிதம் தீட்டும்
தெள்ளறிஞர் நமதுமுன்னோர் செயலைக் கூட
எள்ளிநகை யாடுகின்றாய் ஏழை நெஞ்சே!
2. தமிழ்த்தேன் மலர்
17. அமிழ்தத் தமிழ்மொழி
அமிழ்தம் எங்கள் தமிழ்மொழி
வைய கத்தில் இணையி லாத
வான கத்தை நானி லத்தில்
பொய்அ கந்தை புன்மை யாவும்
புண்ணி யத்தை இடைவி டாமல்
மெய்வ குத்த வழியி லன்றி
வேண்டி டாத தூய வாழ்வைத்
தெய்வ சக்தி என்ற ஒன்றைத்
தெளிவு கண்ட ஞான வான்கள்
உலகி லுள்ள மனிதர் யாரும்
ஒன்று பட்டு வாழும் மார்க்கம்
கலக மற்ற உதவி மிக்க
கடமை கற்று உடைமை பெற்ற
சலுகை யோடு பிறமொ ழிக்கும்
சகல தேச மக்க ளோடும்
இலகும் எந்த வேற்று மைக்கும்
இடைவி டாமல் காட்டும் எங்கள்
கொலைம றுக்கும் வீர தீரக்
கொடியவர்க்கும் நன்மை செய்யக்
அலைமி குந்த வறுமை வந்தே
ஐய மிட்டே உண்ணு கின்ற
கலைமி குந்த இன்ப வாழ்வின்
கருணை செய்தல் விட்டி டாத
நிலைத ளர்ந்து மதிம யங்க
நீதி சொல்லி நல்லொ ழுக்கம்
அன்பு செய்தும், அருள் அறிந்தும்,
அறிவ றிந்து திறமை யுற்றே
இன்ப மென்ற உலக றிந்த
இறைவ னோடு தொடர்ப றாமல்
துன்ப முற்ற யாவ ருக்கும்
துடிது டித்தே எவ்வு யிர்க்கும்
தென்பு தந்து தெளிவு சொல்லும்
திசைக ளெட்டும் வாழ்த்து கின்ற
பழிவ ளர்க்கும் கோப தாப
பகைவ ளர்க்கும் ஏக போக
அழிவு செய்யக் கருவி செய்யும்
அனைவ ருக்கும் நன்மை காணும்
மொழிவ ளர்ச்சி யாக்கு மென்ற
முறைதெ ரிந்து சேர்த்த திந்த
வழிய றிந்து நாமும் அந்த
வஞ்ச மிக்க உலக வாழ்வைக்
18. தமிழ் வாழ்க!
தமிழென்று தருகின்ற தனியந்தப் பெயரில்
அமிழ்தென்று வருகின்ற அதுவந்து சேரும்.
நமதிந்தப் பெயர்கொண்ட மொழியென்ற எண்ணம்
தமிழர்க்கும் புகழ்மிக்கத் தருமென்றல் திண்ணம்.
பயிருக்கு நீர்என்ற பயன்மிக்க வழியே
உயிருக்கு வெகுநல்ல உணர்வுள்ள மொழியே.
துயருற்ற மனதிற்குத் துணைநின்றே உதவும்;
அயர்வற்ற ஞானத்தை அடைவிக்கும் அதுவே.
அன்பென்ற அதைமிக்க அறிவிக்க நின்று
துன்பங்கள் தருகின்ற துயரத்தை வென்றே
இன்பத்தின் நிலைசொல்ல இணையற்ற வழியாம்;
தென்புள்ள தமிழென்று திகழ்கின்ற மொழியாம்.
அருளென்ன உலகத்தின் அறிவாள ரெல்லாம்
பொருள்கொள்ளும் பொருள்தன்னைப் புரிவிக்கும் சொல்லாம்.
இருள்கொண்ட உள்ளத்தில் இயல்பான பழியைத்
தெருள்கொள்ள ஒளிதந்து திகழ்கின்ற மொழியெ.
அறிவென்று பெயர்கொண்ட அதைமட்டும் நாடும்;
குறிகொண்டே உலகெங்கும் குறைவின்றித் தேடும்;
வெறிகொண்ட இனம்என்று வெகுபேர்கள் போற்றும்
நெறிகொண்ட தமிழ்மக்கள் நிறைகண்ட மாற்றம்.
கலையென்ற கடலுக்குக் கரைகண்ட புணையாம்;
நிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற துணையாம்;
அலைபட்ட மனதிற்கு அமைதிக்கு வழியாம்;
மலையுச்சி ஒளியன்ன மறைவற்ற மொழியாம்.
அறமன்றிச் செயலொன்றும் அறியாத மொழியாம்;
மறமென்ற செயல்என்றும் மதியாத மொழியாம்;
நிறமென்று மதமென்று நிந்தித்தல் அறியாத்
திறமுள்ள தமிழென்று திசைமெச்சும் நெறியாம்.
குணமென்ற அதைமட்டும் கும்பிட்டு நாளும்
பணமென்ற பலமென்ற பயமின்றி வாழும்
இணையற்ற உறுதிக்கு இசைமிக்க வழியாம்
மணமிக்க தமிழென்ற மதிமிக்க மொழியாம்.
பலகாலம் பலநாடும் பரிவோடு சுற்றி
உலகோரின் பலசொல்லை உறவோடு கற்று
விலகாத நட்பிற்கு வெகுகெட்டி வேராம்;
தலையாய அறிவிற்குத் தமிழென்று பேராம்.
எந்தெந்த நாட்டின்கண் எதுநல்ல தென்றே
அந்தந்த மொழிதந்த அறிவின்கண் நின்று
முந்துள்ள இவையென்ற முறையுள்ள எல்லாம்
தந்துள்ள தொகைபோலும் தமிழென்ற சொல்லாம்.
விரிகின்ற அறிவோடு விரிகின்ற நிலையால்
திரிகின்ற உலகத்தைத் தெரிகின்ற கலையால்
சரியென்ப தொன்றன்றிப் பிறிதொன்றில் சலியாப்
பெருமைத்து தமிழென்ற பெயர்தந்த ஒலியாம்.
சீலத்தை இதுவென்று தெரிவிக்கும் நூலாம்;
காலத்தைத் தூரத்தைக் கருதாது மேலாம்
ஞாலத்தை அண்டத்தை நாமாக எண்ணும்
மூலத்தை உண்ர்வெங்கள் மொழிஉண்டு பண்ணும்.
பிறநாடு பிறர்சொத்து பிறர்சொந்தம் எதையும்
உறநாடிச் சதிசெய்தல் உன்னாத மதியும்
இரவாமல் எவருக்கும் ஈகின்ற நயனும்
அறமேதும் தமிழ்கற்று அடைகின்ற பயனாம்.
விஞ்ஞானம் அதனோடும் விளையாடி நிற்கும் ;
மெஞ்ஞானம் அதைமட்டும் மிகநாடிக் கற்கும்;
பொய்ஞ்ஞானம் வாதித்துப் புனிதத்தை இகழும்
அஞ்ஞானம் இல்லாமை அதுபெற்ற புகழாம்.
கொல்லாமை பொய்யாமை எனுமிவ்வி ரண்டில்
எல்லாநல் அறமுற்றும் இடைநிற்றல் கண்டு
சொல்லும் செயலாலும் மனதாலும் தொழுதோர்
நல்லோர்கள் பணிதந்த தமிழ்வாழ்க நாளும்.
19. தமிழன் இதயம்
தமிழன் என்றோர் இனமுண்டு;
அமிழ்தம் அவனுடைய வழியாகும் ;
அறிவின் கடலைக் கடைந்தவனாம்;
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான் ;
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
'பத்தினி சாபம் பலித்துவிடும்'
சித்திரச் சிலப்பதி காரமதைச்
சிந்தா மணி,மணி மேகலையும்,
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
தேவா ரம்திரு வாசகமும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
தாயும் ஆனவர் சொன்னவெலாம்
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
நேரெதும் நில்லா ஊக்கமுடன்
பாரதி என்னும் பெரும்புலவன்
கலைகள் யாவினும் வல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
சிற்பம் சித்திரம் சங்கீதம்
வெற்பின் கருங்கல் களிமண்போல்
உழவும் தொழிலும் இசைபாடும்;
இழவில் அழுதிடும் பெண்கூட
யாழும் குழலும் நாதசுரம்
வாழும் கருவிகள் வகைபலவும்
'கொல்லா விரதம் பொய்யாமை
எல்லாப் புகழும் இவைநல்கும் ;'
மானம் பெரிதென உயிர்விடுவான் ;
தானம் வாங்கிடக் கூசிடுவான் ;