
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - பகுதி 9a
4. யுத்த காண்டம் / படலம் 8-11 (1304 - 1922)
kantapurANam of kAcciyappa civAccAriyAr
part 9a /canto 4 (verses 1304 - 1922) )
In tamil script, Unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections.
Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2008.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
பாகம் 9a /4. யுத்த காண்டம் / படலம் 8- 11 (1304 - 1922)
உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்
4 யுத்த காண்டம்
8. அக்கினிமுகாசுரன் வதைப் படலம்* (1304 -1545)
( * நாலாநாட் பகல் அக்கினிமுகாசுரன் வதை நிகழ்ந்ததாகும்.)1304 - எட்டாசையு ளோர்களை எண்கரியைக்
கட்டாவுறு சில்கதி ரைப்பரியை
முட்டாவரு தேரினை முன்கொணரா
வட்டாடிய தோர்வலி பெற்றுடையான். - 1
1305 - கருவாயுறு கின்றதொர் காலைமுதல்
திருமாதுடன் முற்றழல் சிந்திடலும்
பெருமாயவள் வந்துபி றந்திடுவோன்
எரிமாமுகன் என்ற இயற்பெயரான். - 2
1306 - பன்னாக மிசைத்துயில் பண்ணவனூர்
பொன்னார்சிறை கொண்டதொர் புள்ளினுடன்
அந்நான்முக னூர்தியும் ஆடுறுவான்
முன்னாட்கொடு வந்ததொர் மொய்ம்புடையான். - 3
1307 - முன்னுற்றவன் வானெழு மொய்கதிரோன்
தன்னைச்சிறை யிட்டது தான்வினவா
மன்னுற்றிடு சோமதனை வைகல்பல
இன்னற்பட வசே¤றை இட்டுடையான். - 4
1308 - தெய்வப்படை தாங்கிய செங்கையினான்
ஐவர்க்குள தாகிய ஆற்றலுளான்
மைவைத்திடும் வஞ்சனை மாயம்வலான்
எவ்வெப்படை தன்னையும் ஈறுசெய்வான். - 5
1309 - அந்தார்முடி கொண்டிடும் ஐயன்முனம்
வந்தானடி தன்னை வணங்கியிவண்
எந்தாய்மெலி வுற்றனை என்னெனலுஞ்
சிந்தாகுல மோடிது செப்பிடுவான். - 6
1310 - உண்ணாடிய மாயைகொ டொற்றுமையால்
விண்ணாடர் பொருட்டிவண் மேவியுளான்
கண்ணாரெயில் வேலி கடந்துநமை
எண்ணாது புரத்திடை ஏகினால். - 7
1311 - ஏகுந்தொழில் வெய்யவன் இந்நகரம்
வேகும்படி செந்தழல் வீசிடலும்
மாகொண்டல்கள் ஏவினன் மற்றவைமா
றாகும்புனல் சிந்தி அவித்தனவே. - 8
1312 - மடல்கொண்டிடு தாரினன் மற்றதுகண்
டுடல்கொண்ட சினத்தொ டொருங்குலகங
கடைகொண்டிடு கின்ற கனற்படைதொட்
டடல்கொண்ட முகிற்றிறல் அட்டனனே. - 9
1313 - அட்டானது கேட்டனம் ஆடகனை
விட்டாம்அனி கத்தொடு வெஞ்சமர்செய்
தொட்டார்வலி நோக்கி உடைந்தவனும்
நெட்டாழி புகுந்து நிமிர்ந்தனனால். - 10
1314 - நங்கொற்ற மிகுத்திடு நாற்படையும்
தஅங்குற்றிடு கின்றன மாநகரை
உங்குற்றிடு தூதன் ஒறுத்தனால்
இங்குற்ற நிகழ்சியி தென்றனனே. - 11
1315 - செங்கோன்முறை கோடிய தீயவுணன்
அங்கோதிய கேட்டலும் ஆரழல்கால்
வெங்கோரமு கத்து வியன்புதல்வன்
தங்கோமுக மாவிது சாற்றிடுவான். - 12
1316 - மன்னர்க்கிறை யாகிய மன்னவநீ
உன்னுற்றள மீதில் உருத்திடவே
முன்னுற்றிடு தூதுவன் மொய்ம்பினனோ
என்னுக்கவன் ஆற்றலை எண்ணுதிநீ. - 13
1317 - மிடல்கொண்டிடு தூதனை மிக்கவரைப்
புடைகொண்டமர் செய்திடு பூதர்தமை
அடல்கொண்டிவண் நின்னை அடைந்திடுவன்
விடைதந்தரு ளென்று விளம்பினனே. - 14
1318 - நன்றேயிது செப்பினை நண்ணலனை
வென்றேவரு கென்று விடுத்திடலும்
நின்றேதொழு தவ்விடை நீங்கினனால்
குன்றேநிகர் தோள்வலி கொண்டுடையோன். - 15
1319 - கார்க்கோலமும் வெய்ய கருங்கடலின்
நீர்க்கோலமும் அன்னவன் நீடியதன்
சீர்க்கோநக ரத்திடை சென்றனனால்
போர்க்கோலம் அமைந்து புறம்படர்வான். - 16
1320 - மைக்கொண்டல் படர்ந்திடு மால்வரைபோல்
மொய்க்கொண்டணி புட்டில் விரற்பரியாக்
கைக்கொண்டனன் விண்ணவர் கைப்படையே. - 17
1321 - தன்றறதையி ¨திதரு தாயுதவும்
பொன்றாழ்சிலை கைக்கொடு பொள்ளெனவே
ஒன்றாகிய தேரிடை யொல்லைபுகாச்
சென்றான்விழி யிற்கனல் சிந்திடுவான். - 18
1322 - அறமற்றிடு தீயன் அகன்றுநகர்ப்
புறமுற்றனன் அங்கது போழ்துதனில்
திறமற்றது தூதுவர் செப்புதல்முன்
மறமுற்றிடு தானைகள் வந்தனவே. - 19
1323 - ஓராயிர வௌ¢ளம் ஒருத்தலினம்
தேரானவும் அத்தொகை திண்டிறல்மா
ஈராயிர வௌ¢ள மியாவர்களும்
ஆராய்வரி தலாவு ணக்கடலே. - 20
1324 - வேறு
ஆன காலையில் அங்கி முகாசுரன்
மான மேற்கொண்டு மாற்றலா¢ யாரையும்
யானொர் கன்னல்முன் ஈறுசெய் வேனெனாச்
சேனை தன்னொடுஞ் சென்றிடல் மேயினான். - 21
1325 - நல்கு மாறின்றி நாள்பல நீங்கியே
மல்கு காதலர் வந்து கலந்துழப்
பில்கு காமத்துப் பெய்வளைப் பேதையர்
அல்கு லென்ன அசைந்தகல் வுற்றதேர். - 22
1326 - அருத்தி மெல்லியர் ஆரதங் கொண்டுழல்
விருத்தர் கூட்டம் வெறுத்திடு மாறுபோல்
எருத்த மீதில் இடிப்பவர் தம்முரைக்
கருத்தின் நிற்கில காய்சின வேழமே. - 23
1327 - மண்ணிற் பாய்வன மாதிரஞ் சூழ்வன
விண்ணிற் றாவுவ வீதியிற் செல்வன
எண்ணிற் பல்பொருள் இச்சைகொள் வேசியர்
கண்ணிற் கொப்பன கந்துக ராயியே. - 24
1328 - வஞ்சம் நீடி அருளற்று மாயமே
எஞ்ச லின்றி இருள்கெழு வண்ணமாய்
விஞ்சு தம்மல்குல் விற்றுணும் மங்கையர்
நெஞ்ச மொத்தனர் நீள்படை வீரரே. - 25
1329 - தார்த்த டம்புயத் தானவர் பல்லியம்
ஆர்த்த ஓதை அகிலமும் புக்கதால்
தூர்த்த மங்கையர் சோர்வினிற் செய்பழி
வார்த்தை எங்கணும் வல்லையிற் சேறல்போல். - 26
1330 - சோதி மெய்யெழில் தூயன மாற்றியே
மீது செல்லரும் வெவ்வியருள் உய்த்தலால்
ஏதின் மாதரை எய்திடும் புன்மையோர்
காதல் போன்ற கடிதெழும் பூழியே. - 27
1331 - பீட்டின் மிக்க பெரும்பணை தாங்கிய
மோட்டின் ஒட்டக முந்திய கந்தரம்
நீட்டி வாங்குவ நேர்ந்தவர் முன்தலை
காட்டி வாங்குங் கணிகையர் போலவே. - 28
1332 - சீறு மால்கரி தேர்மிசைப் பூண்டுவிண்
ஆற ளாவிநின் றாடுவ கேதனம்
ஊறு காதல் ஒருவன்கண் வைகினாள்
வேறு ளாரையும் வெ·கிவி ளித்தல்போல். - 29
1333 - வீழு மும்மத வேழங்கள் மத்தகம்
சூழி காலின் அசைதொறும் தோன்றுவ
மாழை நோக்கியர் மைந்தர்க்கு மாலுறக்
காழ கத்தனம் காட்டி மறைத்தல்போல். - 30
1334 - தோம ரஞ்சிலை சூலம் மழுப்படை நாம வெங்கதை நாஞ்சில் முசலம்வேல் நேமி தானவர் நீழ்கரம் வெலவன காமர் மங்கையர் கட்டொழில் தாங்கியே. - 31
1335 - வேறு
எற்றின பறையின் வீழ்ந்த எழிலிகள் எழுந்த பூழி
சுற்றின வான மீப்போய்த் தூர்த்தன கங்கை நீத்தம்
வற்றின படையும் பூணும் வயங்கின மயங்கி எங்கும்
செற்றின பதாகை ஈட்டம் இருண்டன திசைக ளெல்லாம். - 321
1336 - சோமகண் டகனே சோமன் சூரியன் பகைஞன் மேகன்
காமர்பிங் கலனே ஆதிக் கடிதெழு தானை வீரர்
மாமருங் கதனிற் செல்ல மன்னவர் மன்னன் மைந்தன்
ஏமரு பூத சேனைக் கெதிருற எய்யித னானால். - 33
1337 - எதிர்ந்தனர் பூதர் தாமும் அவுணரும் இடிப்பிற் பேரி
அதி£¢ந்தன துடியுஞ் சங்கும் ஆர்த்தன அண்ட மீன்கள்
உதிர்ந்தன அனையர் கூடி உடன்றுபோர் புரிய வையம்
பிதிர்ந்தன பொதிந்த அண்டப் பித்திகை பிளந்த தன்றே. - 33
1338 - தொட்டனர் வேலும் வாளுந் தூண்டினர் பகழி மாரி
விட்டனர் பிண்டி பாலம் வியன்மழுத் தண்ட மோச்சிக்
கிட்டினர் சூலம் வீசிக் கிளர்ந்தனர் அவுணர் பூதர்
பட்டனர் அளப்பி லோர்கள் பரந்தன குருதி நீத்தம். - 35
1339 - முத்தலைக் கழுவைத் தண்டை முசலத்தை நேமி தன்னைக்
கைத்தலத் திருந்த கூர்வாய்க் கணிச்சியைப் பிறங்கல் தன்னை
எத்திறத் தவரும் பூதர் எறிந்தனர் எறிந்த காலை
அத்தலை அவுணர் வீரர் அளப்பிலர் பட்டா ரம்மா. - 36
1340 - தறிந்தன புரவித் தாளுந் தலைகளுந் தடந்தேர் அச்சும்
முறிந்தன துவசம் அற்ற மும்மதக் கோட்டு மாக்கண்
மறிந்தன உடலம் வேறா மடிந்தனர் வயவர் எங்கும்
செறிந்தன கழுகு காகம் திரண்டன கூளி திண்பேய். - 37
1341 - இருபெபம் படையும் இவ்வா றேற்றிகல் புரியும் வேலை
வெருவரு வேற்கண் மாதர் வியர்ப்பின்வந் துதித்த வீரர்
பொருவருஞ் சிலைகள் வாங்கிப் புங்கவம் பொழிந்து சூழ
ஒருவரும் அவுணர் நில்லா தோடினர் உடைந்து போனார். - 38
1342 - உடைதலும் அவுணன் மைந்தன் ஒய்யென விடுப்ப மேகன்
கடுமுரட் சோமன் சோம கண்டகன் முதலா வுள்ள
படையுறு தலைவர் பல்லோர் பகழியின் மாரி தூவி
அடுசிலை வீரர் மேற்சென் றமரினை யிழைத்தா ரன்றே. - 39
1343 - இழைத்திட அதனை நோக்கி இலங்கெழில் தாளில் வீரக்
கழற்புனை கின்ற வீர புரந்தரன் கடிய சீற்றத்
தழற்பெருங் கடவுள் போல்வான் அசனியே ரஞ்ச ஆர்க்கும்
முழக்கினன் ஒருதன் சேனை முன்னுறக் கடிது வந்தான். - 40
1344 - வந்தனன் அங்கைச் சாபம் வாங்கினன் வாளி மாரி
சிந்தினன் தலைவர் தேரைச் சிதைத்தனன் சென்னி தள்ளி
இந்துகண் டகனை வானில் ஏற்றினன் ஏனை வீரர் உந்திய சேமத் தேர்மேல் உற்றிகல் புரிந்து சூழ்ந்தார். - 41
1345 - சுற்றினர் வீரன் மேனி சோரிநீ ரொழுகும் ஆற்றல்
முற்றுறு பகழ தூவ முழங்கழ லென்னச் சீறி
மற்றவர் சிலையுந் தேரும் மண்மிசை வீட்டி வல்லே
நெற்றியின் உரத்தின் தோளின் நெடுங்கணை பலவும் உய்த்தான். - 42
1346 - உய்த்தலும் அவுணர் வேந்தற் குற்றுழி யுதவ நின்ற
மெய்த்திற லாற்ற லாளன் மேகனென் பவனோர் தண்டங்
கைத்தல மிசையி லேந்திக் கணப்படை வீரன் தேர்மேல்
மத்திகை முட்கோல் கொண்ட வலவனை மோதி ஆர்த்தான். - 43
1347 - மோதலுந் தனது பாகன் முடிந்திடு தன்மை காணூஉ
மேதகு தலைவன் வீர புரந்தரன் வேலொன் றேந்தி
ஈதினின் முடிதி என்றே ஏவினன் ஏவ லோடும்
பூதல மிசையே வீழப் பொன்றினன் புயலின் பேரோன். - 44
1348 - புயலுறு நாமத் தண்ணல் பொன்றலும் அதனை நாடி
அயலுறு தானை வீரர் அஞ்சினர் அகன்று போக
இயலது தன்னை நோக்கி எரிமுகன் எரியிற் சீறிப்
பயிலுறு சிலையொன் றேந்திப் படையொடுங் கடிது வந்தான். - 45
1349 - வேறு
வளைத்தான்தனிப் பெருவில்லினை மருவார்மனம் வளைய
விளைத்தான்அவட் சிறுநாணொலி மிகவார்த்தனன் விண்மேல்
முளைத்தார்தரு பிறைபோல்வதொர் முனைவாளிகள் தெரியாக்
கிளைத்தார்தரு பூதப்படை கேடுற்றிடப் பொழிந்தான். - 46
1350 - தலையற்றனர் கரமற்றனர் தாளற்றனர் தோளா
மலையற்றனர் மார்பற்றனர் வாயற்றனர் செய்யுங்
கொலையற்றனர் செவியற்றனர் கூறுற்றிடு நாவின்
நிலையற்றனர் படையற்றனர் நெடும்பூதர்கள் எவரும். - 47
1351 - ஆரிற்றன சகடிற்றன அச்சிற்றன சிடுகின்
ஏரிற்றன கொடியிற்றன முடியிற்றன ஈர்க்கும்
மூரிப்பரி மாவிற்றன முருகன்படை வீரர்
தேரிற்றன படையிற்றன செருவிற்றன அன்றே. - 48
1352 - ஓடுற்றன குருதிப்புனல் உலகச்சுற வொலியா
ஆடுற்றன கவந்தக்குறை அலகைக்குல மிகவே
பாடுற்றன ஞமலித்தொகை பரவுற்றன கொடிமேற்
கூடுற்றன பாறுற்றனகுறுகுற்றன கழுகே. - 49
1353 - அக்காலையின் அதுகண்டனன் அழல்கான்றிட நகையா
மைக்காலனும் வெருவுற்றிடு வலிசேர்திறல் மகவான்
கைக்கார்முகந் தனைவாங்குபு கணைமாரிகள் சொரியாப்
புக்கான்அவு ணனுமாங்கெதிர் பொழிந்தாச்ர மழையே. - 45
1354 - கரவன்விடு நெடுவாளிகள் கந்தன்படை ஞன்மேல்
வருகின்ற உறுகின்றன மன்னன்மகன் முன்னம்
பொருகின்றநம் வீரன்விடு புகர்வெங்கணை பலவும்
இரிகின்றன படுகின்றன விருவோர்பக ழியுமே. - 51
1355 - போரிவ்வகை புரிகின்றுழிப் புரைதீர்விறல் மகவான்
தேரும்பொரு சிலையுங்கணை செறியாவமுஞ் சிதையா
ஈரைம்பது சரமார்புற எய்தேயிகல் அவுணர்
ஆரும்படி புகழும்படி ஆர்த்தான்அறம் பேர்த்தான். - 52
1356 - மாறாகிய அவுணர்க்கிறை வலியுந்திறல் மகவான்
வீறானவை இழந்திட்டதும் விழிதீயுற நோக்கிச்
சீறாச்சிலை வளையாக்கணை சிதறாவசை பலவுங்
கூறாவெதிர் புகுந்தாரவன் துணையாமெழு குமரர். - 53
1357 - இடிகாலுறு முகிலாமென எழுவீரரும் ஏகிக்
கடிதேமுனி வொடுசிந்திய கணையாவையும் விலக்கா
விடமாகிய எரிமாமுகன் விறலோர்புய வரைமேல்
வடிவார்கணை பலசிந்துபு மழையாமென மறைத்தான். - 54
1358 - சகத்தானவர் புகழப்படு தலைவன்மகன் சரங்கள்
மிகத்தான்விட மெலிவுற்றிடும் எழுவீரரும் வெய்யோன்
முகத்தாயிரங் கரத்தாயிரம் உரத்தாயிரம் மொய்ம்பின்
அகத்தாயிரங் கணைபாய்ச்சினர் அவன்றேரையும் அறுத்தா£¢. - 55
1359 - வேறு
அறுத்திடும் எல்லையின் அழலின் மாமுகன்
மறித்துமொர் தேரிடை வாவி வல்லைபோய்
எறித்தரு கதிருடை யெழுவர் தம்மையுஞ்
செறுத்தெரி விழித்திவை செப்பல் மேயினான். - 56
1360 - ஒன்றொரு படையினால் உங்கள் ஆவியைத்
தென்றிசை மறலியார் தெவிட்ட நல்கியே
வென்றிகொள் மொய்ம்புடை விடலை தன்னையுங்
கொன்றிடு கின்றனன் என்று கூறினான். - 57
1361 - கூறுபோ தத்தினிற் குமரன் தானையோர்
வேறுவே றடுகணை வீசி வெய்யவன்
ஏறுதேர் தன்னையும் இவுளி தன்னையும்
நூறினார் அவனுடல் நூழை யாக்கினார். - 58
1362 - ஆயது காலையில் அவுணன் வேறொரு
பாயிருந் தேரிடைப் பாய்ந்து கண்ணுதல்
தூயவன் படையினை எடுத்துத் துண்ணென
நேயமொ டருச்சனை நிரப்பித் தூண்டினான். - 59
1363 - அடலெரி முகத்தினான் ஆதி நாயகன்
படைதொட அன்னது படியும் வானமும்
வடவையின் உருவமாய் வரலும் அச்செயல்
விடலைகள் எழுவரும் வெகுண்டு நோக்கினார். - 60
1364 - அனற்படை அன்னதால் அதற்கு மாறதாப்
புனற்படை விடுக்குவ மென்று புந்திகொண்
டினப்படு துணைவர்கள் யாரும் வாருண
முனைப்டை தூண்டினர் முடியுஞ் செய்கையார். - 61
1365 - தூண்டிய வாருணத் தொல்லை மாப்படை
சேண்டொடர்ந் திடுதலும் தேவன் தீப்படை
ஆண்டெதி ராகியே அவற்றை நுங்கிற்றால்
ஈண்டொரு முனிகடல் ஏழும் உண்டென. - 62
1366 - சலபதி படைகளைத் தடிந்து வாய்மடுத்
துலகுளோர் வெருவர ஊழி யான்படை
வலியுட னேகிஏழ் வயவர் தம்மையும்
மெலிவுசெய் துயிர்கொடு மீண்டு போயதே. - 63
1367 - மீண்டது போதலும் வீரர் அவ்விடை
மாண்டனர் கயிலையின் மருங்கு போயினார்
மூண்டிடு பொருங்கனல் முகத்தன் அங்கது
காண்டலும் ஆர்த்தனன் களிப்பில் உம்பரான். - 64
1368 - ஒருங்குற வீரர்கள் உலந்து வீடலும்
மருங்குற நோக்கிய வயவெம் பூதர்கள்
கரங்களை மறித்தனர் கலங்கி வாய்புடைத்
திரங்கினர் வெருவினர் இந்து போயினார். - 65
1369 - நெற்றியில் வீரர்தம் விளிவு நீங்கலா
துற்றிடு பூதர்கள் உலைந்து சாய்வந்
தெற்றென நோக்கினன் செயிர்த்து விம்மினான்
வெற்றியின் கிழவனாம் வீர வாகுவே. - 66
1370 - வீரமொய்ம் புடையவன் வெருவ ரெனப்
பாரிடக் கணங்களைப் பாணி யாலமைத்
தோரிறை முன்னரே ஒருதன் தேரொடும்
ஆரழல் முகத்தன்முன் அணுகப் போயினான் . - 67
1371 - போய்க்குறு குற்றுழிப் பொருநர்த் தேய்த்தலின்
வீக்கிய கனைகழல் வீர வாகுவைத்
தாக்கெரி முகமுடைத் தறுகண் வெய்யவன்
நோக்கினன் வெகுண்டிவை நுவறல் செய்குவான். - 68
1372 - வேறு
எதிரா கியபூ தரைஏ னையரை
மதியேன் நினையே அடவந் தனன்நீ
அதுகா லையின்இங் ஙன்அடைந் த¨னீயல்
விதியே உனைஎன் முன்விடுத் ததுவே. - 69
1373 - கொன்றாய் பல¨ரி கொடுவெஞ் சமரின்
வென்றாய் பலரை மிகைசெய் தனையாய்
நின்றாய் வருவாய் நினதா யிருருக்
கின்ற குவதோ இறுதிப் பகலே. - 70
1374 - முன்னர்ப் பொருதே முரிவுற் றவர்போல்
என்னைக் கருதேல் இனிஓ ரிறையில்
உன்னைக் தலைகொய் தொருவன் னியையும்
மன்னர்க் கிறைசே வடிவ¨தி திடுவேன். - 71
1375 - பூண்பால் முலைமா தா¢புணர்ச் சியெனும்
ஆண்போர் தனிலே வலியற் றழியும்
ஆண்பால் ஒருவன் அவனே அலனோ
ஏண்பால் உனையா¢இவண்வென் றிலனேல். - 72
1376 - என்னா எதிரா இவையொப் பனசொற்
சொன்னான் அதுகேட் டிடுதொல் விறலோன்
பொன்னார் தருசெங் கைபுடைத் துநகைத்
தொன்னான் முகநோக் கியுரைத் திடுவான். - 73
1377 - முளையார் தரும்பொன் னவன்முந் துசமர்
விளையா வடிவந் தனைவிட் டகலா
வளையார் புனல்புக் கனன்அன் னவனுக்
கிளையாய் ஒருநீ எவணுய் குதியோ. - 74
1378 - மூண்டார் அமர்செய் திடுமொய்ம் பரெலாம்
மாண்டார் கதிரோன் பகைமற் ரொருவன்
மீண்டான் அவனும் விளிவுற் றிடுநீ
ஈண்டா ருயிர்தோற் றிடவே கினையோ. - 75
1379 - வீடிச் செருவில் விளிவா குதியோ
பேடித் தொழில்கற் றிடுபிள் ளையென
ஓடிக் கடல்புக் குயிருய் குதியோ
நாடிக் கடிதொன் றைநவிற் றுதியே. - 76
1380 - பார்காத் திடினும் பலதா னவரும்
நேர்காத் திடினும் நிலைபெற் றழியாச்
சூர்காத் திடினுந் தொலைவில் விறலோர்
ஆர்காத் திடினும் அடுவேன் உனையே. - 77
1381 - என்றிங் கிவைவீ ரன்இசைத் திடலுங்
குன்றன் னசினத் தழல்கொம் மெனவே
சென்றுள் ளமலைத் துழிதீ முகவன்
வன்றிண் சிலையொன் றைவளைத் தனனே. - 78
1382 - வேறு
நடுத்தான்அகன் றிடுசூர்மகன் நாணோதையைச் சிலைநின்
றெடுத்தான்எடுத் தலும்வெய்யவன் இரவோனுடன் இரிந்தான்
உடுத்தான்உதிர்ந் தனசேடனும் உலைந்தான்உல கனைத்துங்
கெடுத்தான்இவ னெனவானவார் கிளையோடின அன்றே. - 79
1383 - அக்காலையின் முகமாறுடை அமலன்றனக் கன்பன்
கைக்கார்முகம் இருகால்வளைத் தொருகாலொலி காட்டத்
திக்கானன முடையான்முதல் தேவாசுரர் துளங்கி
இக்காலம தோபார்முழு திறுங்காலம தென்றார் - 80
1384 - என்னாவிசைத் திடுமெல்லையில் எரிமாமுகன் ஈஅருழ்
கொன்னார்கணை விடுத்தார்த்தனன் குறுகுற்றது வருமுன்
மின்னாமெனப் பதினாற்கணை விடுத்தேயவை விலக்கிப்
பொன்னார்தரு திறல்மொய்ம்பினன் புயலேறெனத் தெழித்தான். - 81
1385 - செஞ்ஞாயிறு கதிர்கான்றெனத் தீமாமுகத் தவுணன்
ஐஞ்ஞான்கெனுந் தொகைபெற்றிடும் அயில்வெங்கணை தொடுப்ப
எஞ்ஞான்றுமுற் றிடுசீர்த்தியன் இருபான்கணை துரந்து
மைஞ்ஞான்றிடு முகில்மேற்செலு மருத்தாமெனத் தடுத்தான். - 82
1386 - கண்டங்கது கனல்மாமுகன் கணையாயிரந் துரந்து
புண்டங்கிய தனிவேலுடைப் புனிதன்றன் திளவல்
முண்டம்புக உய்த்தேதிறல் முதுவால்வளை அதனை
அண்டங்கிழ படஊதினன் அவுணப்படை புகழ. - 83
1387 - ஆராரும் வியக்குந்திறல் அடல்மொய்ம்பினன் அங்கண்
ஓராயிரம் வடிவாளிகள் ஒருங்கேதொடுத் துய்த்துச்
சூராகிய அவுணன்தரு தொல்லைத்தனி மைந்தன்
தேரானதும் பரியானதும் சிலையானதுஞ் சிதைத்தான். - 84
1388 - சிதையும்பொழு தயல்வேறொரு தேரின்மிசைப் பாயாக்
கதையொன்றினை விடுத்தான்எரி கனல்மாமுகன் அதன்மேல்
குதையொன்றினைத் துரந்தேயருட் குமரேசனுக் கிளையோன்
சுதையொன்றியக் களத்தேவிழத் துண்டம்பல கண்டான். - 85
1389 - மாற்றோர்சிலை யினைவாங்கி வளைத்தேகனல் முகத்தோன்
காற்றோன்படை துரக்கின்றுழ இவனும்மது கடவக்
கூற்றோன்படை தொடுத்தானவன் குமரன்றனக் கிளையோன்
வேற்றோர்படை துரந்திட்டிலன் அதுவேசெல விட்டான். - 86
1390 - மாகத்தறு கதிர்வெம்படை மன்னன்தரு மதலை
வேகத்தினில் விடவாங்கது விடுத்தேயது விலக்கி
நாகத்தமர் கறைநீவிய நவிகூரிய கணைநூ
றாகத்திடை படவேதுரந் தடல்மொய்ம்பினன் ஆர்த்தான். - 87
1391 - தருமத்தியல் நிறுவுற்றிடு தக்கோன்விடு சரங்கள்
மருமத்தினிற் படுகின்றுழி வானோரமு தருந்தும்
கருமத்தினில் விரவிக்கடல் கடையக்கவிழ்ந் திட்ட
பெருமத்தென நிலைசோர்ந்துதன் பெருந்தேர்மிசை வீழ்ந்தான். - 88
1392 - விழுகின்றதொ ரெரிமாமுகன் வியன்மார்பெனும் வரைநின்
றிழிகின்றன நதியாமென எருவைப்புனல் உயிரும்
ஒழிகின்றது வருகின்றது லாவுற்றது தேற்றம்
அழிகின்றது வருமந்தகன் அச்சுற்றனன் அணுக. - 89
1393 - விளிந்தானென மயங்குற்றவன் வெஞ்சூ£¢உரும் ஏற்றால்
நௌ¤ந்தாடர வசைந்தாலென நெடுந்தேர்மிசைப் பெயராத்
தௌ¤ந்தாயிடை யிரங்கிப்பொரு திறல்வன்மைய திலனாய்
எளிந்தான்எளிந் திடுகின்றவன் இத்தன்மைசிந் தித்தான். - 90
1394 - மொழிபட்டிடு திறல்மாற்றலர் முனைவெஞ்செருத் தனில்யான்
அழிபட்டிடின் வருவாயென அந்நாட்சிறு காலைப்
பழிபட்டிடும் வெறியாட்டினைப் பயின்றேபலி யூட்டி
வழிபட்டதன் நகர்க்காளியை மனத்தின்மிசை நினைத்தான். - 91
1395 - வேறு
விஞ்சுந் தொல்விறல் மேவு சூர்தரு
மைஞ்சன் தன்னை மனத்தில் உன்னலும்
நஞ்சுந துண்ணென நண்ணு காளிதன்
நெஞ்சந் தன்னில் நினைத்தல் மேயினாள். - 92
1396 - சூலங் கொண்ட லமர்ந்து தோன்றுவாள்
சூலங் கொண்ட லமர்ந்த தோளினாள்
கோலம் பெற்ற குலிங்க வேணியாள்
கோலம் பெற்ற குறுங்கொ லைக்கணாள். - 93
1397 - போதங் கொன்று பொறாமை மிக்குளாள்
போதங் கொன்று பொலஞ்செய் தாளினாள்
ஏதந் தீர்ந்திடும் எண்ண லார்சிரம்
ஏதந் தீர்ந்திடும் ஏம வாளினாள். - 94
1398 - சங்கா ரத்தணி தாங்கு கொங்கையாள்
சங்கா ரத்தணி தந்த செங்கையாள்
உங்கா ரத்தின் உரத்த ஆடையாள்
உங்கா ரத்தின் உரப்பும் ஓதையாள். - 95
1399 - ஞாலத் தேவரும் நாகர் வேந்தரும்
ஞாலத் தேவரும் ஏத்த நண்ணுவாள்
காலத் தீயர்க ளிற்றின் மேலையோர்
காலத் தீயர் கலங்கு காட்சியாள். - 96
1400 - அஞ்சத் தானடி யான வானவர்
அஞ்சத் தானடி பேர்த்து லாவுவாள்
நஞ்சத் தானவர் நைய வெம்மைசெய்
நஞ்சத் தானவர் சுற்றம் நல்குவாள். - 97
1401 - அங்கத் தன்மை யளாய மர்ந்திடும்
அங்கத் தன்மை யளாய் காளிமால்
சிங்கத் தேறிய செல்வன் மைந்தன்முன்
சிங்கத் தேறினள் செல்லல் மேயினாள். - 98
1402 - வில்லுச் சூலம் வியன்ம ழுக்கதை
எல்லைப் பல்படை யாவை யுங்கொளா
மல்லற் காளிகள் மாப்பெ ரும்படை
செல்லக் கூறி செறிந்து சூழ்தர. - 99
1403 - மூதக் கார்ப்பொடு விண்ணை முட்டுற
வேதக் கூளிகள் ஏறு கேதனம்
ஊதச் சங்கம் ஒழிந்த பல்லியம்
மேதக் கோசை மிகுத்து மேவவே. - 100
1404 - வேறு
விரைவொடு பறந்தலை மேவி வீழ்ந்தயர்
எரிமுக மதலையை எய்தி நோக்கியான்
உரமிகும் ஒன்னலர் உயிரை உண்பன்நீ
பரிவுறல் என்றனள் அமைத்த பாணியாள். - 101
1405 - இவ்வகை அருளியே இளவல் பாற்படும்
தெய்வதப் பூதர்தஞ் சேனை மேற்செலாக்
கவ்வைகொள் செருத்தொழில் கருதி ஆர்த்தனள்
ஐவகைப் பூதமும் அச்சங் கொள்ளவே. - 102
1406 - ஆர்த்திடும் எல்லையில் அளக்கர் சூழ்ந்தென
ஆர்த்திடும் எல்லையில் அடல்வெம் பூதரும்
வேர்த்தனர் அழுங்கினர் மேற்சென் றேற்றனர்
வேர்த்தனர் அழுங்கினர் விண்ணு ளோரெலாம். - 103
1407 - காளிகள் சூலம்வேல் கணிச்சி கார்முகம்
வாளிகள் சிந்தினர் வரைநெ டுந்தரு
நீளிகள் எழுக்கதை நேமி இன்னன
கூளிகள் வீசினர் குறுகிப் போர்செய்தார். - 104
1408 - அத்திறன் நோக்கியே ஆடற் பூதர்கள்
எத்திறத் தவரையும் ஈறு செய்கெனாக்
கைத்தலத் திருந்ததோர் கழுமுள் வீசினாள்
பத்திரை தன்னருள் படைத்த காளியே. - 105
1409 - வீசிய முத்தலை வெய்ய வேற்படை
காய்சின எரிபுகை கான்று காளிகள்
மாசகல் உருப்பல வகுத்துப் பாரிடர்
பாசன மருளுறப் படர்தல் உற்றதே. - 106
1410 - சண்டிகை விடுபடை தனது வன்மையைக்
கண்டனன் இளையவன் கணங்கள் ஆருயிர்
உண்டிடும் இ·தென உன்னி யேழிரு
புண்டரு சிலீமுகம் பொள்ளென் றேவினான். - 107
1411 - தீக்கலுழ் வேலினான் செலுத்தும் ஆசுகம்
மேக்குறு முத்தலை வேலை நுண்டுகள்
ஆக்கிய தாக்கலும் அனைய தன்மையை
நோக்கினள் காளியென் றைக்கும் நோன்மையாள். - 108
1412 - துண்ணென யான்விடு சூலந் தன்னையும்
அண்ணலம் பகழியால் அறுத்தென் னாற்றலை
எண்ணலன் நிற்பனால் இன்னும் அங்கவன்
உண்ணிகழ் உயிரினை உண்குவேன் என்றாள். - 109
1413 - என்றிடு காளியோ ரிமைப்பின் முந்துற
நின்றிடு சேனையங் கடலை நீக்கியே
வென்றிடு வயப்புலி மிசைககொண் டார்த்திடாச்
சென்றனள் வீரன்முன் செப்பல் மேயினாள். - 110
1414 - முன்னுற யான்விடு மூவி லைப்படை
தன்னைவெங் கணைகளால் தடுத்து நின்றனை
இன்னுமொர் சூலமுண் டெறிவன் வீகுதி
அன்னது காத்திடல் அரிது காணென்றாள். - 111
1415 - என்றலும் முறுவல்செய் திலங்கு சூலமாங்
கொன்றல ஆயிரம் ஒருங்கு வீசினும்
நின்றவை முழுவதும் நீறு செய்வனென்
வன்றிறல் தெரிந்திலை மாதுநீ யென்றான். - 112
1416 - கொற்றமொய்ம் பினன்இவை கூறக் கேட்டுளஞ்
செற்றம தாகியே தெழித்துச் சண்டிகை
மற்றுமொர் சூலவேல் வல்லை வீசினாள்
சுற்றிய பாரிடத் தொகுதி யுட்கவே. - 113
1417 - அருந்திறல் அமரர்கள் அதுகொல் ஆலமென்
றரிந்தனர் பணியெனா இன்னும் இந்துவும்
வருந்தினர் சூலமுன் வந்த தன்மையைத்
தெரிந்தனன் வீரமொய்ம் புடைய செம்மலே. - 114
1418 - எட்டுடன் இரண்டுநூ றெனுந்தொ கைப்படு
நெட்டிரும் பகழிகள் நிகரத் தூண்டியே
அட்டனன் துணிபட அரியின் மேலவள்
தொட்டிட வருவதோர் சூலந் தன்னையே. - 115
1419 - எறித்தரு சூலம திற்று வீழ்தலுஞ்
செறுத்தனள் இங்கிவன் சிரத்தை வாளினால்
அறுத்துதி ரப்புனல் சுவைத்திட் டாவியைப்
பறித்திடு வேனெனப் பகர்ந்திட் டாளரோ. - 116
1420 - நாலிரு தோளுடை நங்கை தோன்றல்முன்
வாலுளை மடங்கனன் இருத்தல் மாண்பொரீஇப்
பாலுறு திரைக்கடற் பரப்பை விட்டகல்
ஆலம தாமென ஆர்த்திட் டேகினாள். - 117
1421 - ஆர்த்திடு சண்டிகை அங்கை தன்னிலோர்
கூர்த்திடும் வாட்படை கொண்டு கொம்மெனத்
தீர்த்தனுக் கினியதோர் செம்மல் நிற்புறுந்
தார்த்தடந் தேர்மிசைத் தனிவந் தெய்தினாள். - 118
1422 - நோக்கினன் மொய்ம்பினான் நோன்மை பூண்டுளான்
தாக்கணங் காம்இவள் தன்ன தாவியை
நீக்குதல் செய்வது நீர்மைத் தன்றெனாத்
தூக்கினன் அவள்வலி தொலைக்க உன்னுவான். - 119
1423 - இடித்தென உரப்பினன் எண்கை தன்னையும்
ஒடித்தன னாமென ஒருகை யாலுறப்
பிடித்தனன் மற்றொரு பெருங்கை யாலுரத்
தடித்தனன் காளிவீழ்ந் தவச மாயினாள். - 120
1424 - கரங்கொடு சேவகன் கல்லென் றெற்றலும்
உரங்கிழி வுற்றனள் உமிழ்ந்த சோரிநீர்
தரங்கம தெறிகடல் தன்னைப் போன்றுலாய்
இரங்கிய தவள்துயா¢ யாவர் கூறுவார். - 121
1425 - எண்கையும் ஒருகையால் ஏந்தல் பற்றியோர்
ஒண்கையின் நீலிதன் உரத்தில் எற்றலும்
மண்கிழி வுற்றன வரைகள் கீண்டன
விண்கிளர் அண்டபித் திகையும் விண்டதே. - 122
1426 - திரைபெறு கடலெனக் கான்ற செம்புனல்
வரைபெறு தனதுமெய் மறைத்த லால்துயர்க்
கரைபெறல் இல்லவள் காளி என்றுமுன்
உரைபெறு பெயரையும் ஒழிவுற் றாளரோ. - 123
1427 - இவ்வகை அவசமாய் இம்பர் வீழ்ந்தபின
ஐவகை உணர்ச்சியும் அனாதி யானவுஞ்
செவ்விது தொன்மைபோற் சேரச் சூர்மகள்
வெவ்வலி இழந்துகண் விழித்து விம்மினாள். - 124
1428 - ஆண்மையின் மேலவன் அகலத் தெற்றிட
ஏண்மையும் வீரமும் இழந்து வீழ்ந்தது
நீண்மய லானது நினைந்து நெஞ்சிடை
நாண்மலி வுற்றனள் நடுங்கும் ஆவியாள். - 125
1429 - அந்தமில் அறுமுகத் தமலன் ஏவலால்
வந்தவ னொடுபொரின் வாகை எய்துமோ
புந்தியி லாதிவட் புக்க னன்எனாச்
சிந்தைசெய் தெழுந்தனள் வன்மை தீர்ந்துளாள். - 126
1430 - இகழ்ந்தவர் உரத்தினை இகழ்ந்து கூர்நகத்
தகழ்ந்துயி ருண்டிடும் அணங்கு தேர்மிசைத்
திகழ்ந்தனன் நின்றிடு திறலி னான்றனைப்
புகழ்ந்தனள் இனையன புகல்வ தாயினாள். - 127
1431 - கன்றிய கற்புடைக் கனலி மாமுகன்
இன்றெனை அருச்சனை இயற்றி ஏத்தியே
ஒன்றல வுயிர்ப்பலி யுதவி வேண்டினான்
நன்றிய தயர்த்திலன் நானிங் கெய்தினேன். - 128
1432 - உன்னுடை வன்மையும் உனது வீரமுஞ்
சின்னமும் உணர்ந்திலன் செருவின் முந்துறீஇ
நின்னுடன் இகலியிந் நிலைமை யாயின
இன்னினி ஏகுவன் இருந்த தொல்லிடை. - 129
1433 - கறுத்தினி வல்லையில் கனன்மு கத்தனை
ஒறுத்துயிர் உண்குதி ஒழிந்து ளாரையும்
அறுத்தனை நிற்குதி அலரி தன்னைமுன்
செறுத்தவன் தன்னையும் அடுதி செம்மல்நீ. - 130
1434 - அடையலர் தம்மைவென் றாறு மாமுகம்
உடையவன் கருணைபெற் றுவகை மேவுதி
நெடிதுபல் லூழியும் நீடி வாழ்தியால்
கடைமுறை இவையெலாங் காண்டி நீயென்றாள். - 131
1435 - இத்திறம் யோகினி இசைத்து வெஞ்சமர்
வித்தகன் விடைகொடு மீண்டு கோளரிச்
சித்திர வெருத்தமேற் சேர்ந்து தொல்படை
மொய்த்திடப் போயினள் முந்து வந்துழி. - 132
1436 - வேறு
சண்டிகை போந்த காலைத் தழல்முகன் அனைய வெல்லாங்
கண்டனன் வெகுண்டு நன்றிக் கள்வன தாற்றல் என்னாத்
திண்டிறல் ஆற்றல் சான்று சேண்கிடந் துருமுக் கான்று
கொண்டல தெழுந்தா லென்னக் கொம்மென எழுந்து சொல்வான். - 133
1437 - கொன்றுயிர் பலவும் நுங்கிக் குருதியும் வடியும் மாந்தி
ஒன்றுதன் னகடுதூரா துலப்புறாப் பசிநோய் மிக்குச்
சென்றிடு காளி யாலோ தெவ்வர்தஞ் செருவை யான்முன்
வென்றனன் சூரன் சேய்க்குத் துணைகளும் வேண்டு மோதான். - 134
1438 - சூலமுந் தண்டும் வாளுஞ் சுடர்மழுப் படையுஞ் சீற்றக்
கோலமுங் கொண்டு பாங்கிற் கூறிகள் சூழ வைகும்
நீலிதன் வன்மை காண்பான் நினைந்திவண் விளித்த தன்றி
வேலவன் படையை அன்னாள் வெல்லுமென் றுளங்கொண்டேனோ. - 135
1439 - வாவியுங் குளனும் பொய்தீர் நதிகளும் மற்று மெல்லாந்
தூவுநுண் பனியா லன்றே துளும்புவ அ·தே போலத்
தேவரை ஏவல் கொண்ட சிறப்புடைத் தமியேன் இங்ஙன்
மேவிய காளி யாலோ எய்துவன் வீரத் தன்மை. - 136
1440 - இன்னினிக் கணம தொன்றின் இளவலா ருயிரை வௌவி
முன்னுற அகன்ற ஒற்றன் முரண்வலி அதனைச் சிந்தி
அன்னவன் ஆவி கூற்றுக் கடிசிலா அளிப்பன் அல்லான்
மன்னன்முன் போவ தில்லை வஞ்சினம் இ·தே என்றான். - 137
1441 - கனல்முகன் இனைய மாற்றங் கழறியே அவுணத் தொல்பேர்
அனிகம்வந் தயலின் ஈண்ட ஆழியந் தேரிற் சென்று
வனைதரு சிலையொன் றேந்தி வன்மையால் வாங்கி நூறு
முனையிரும் பகழி வீர மொய்ம்பன்மேல் தூண்டி ஆர்த்தான். - 138
1442 - கொடுந்தொழி லாளன் செய்கை குரைகழல் வீரன் காணா
முடிந்திட வந்தாய் போலும் முயற்சியீ தழகி தென்னா
நெடுந்தனிச் சிலைகா லூன்றி ஞெரேலென வளைத்துத் தானும்
அடுந்திறற் கணைநூ றோச்சி அறுத்தனன் அவுணன் வாளி. - 139
1443 - வேறு
அறுத்தபொழு தத்தில்அவு ணர்க்கரசன் அமைந்தன்
மறத்தினொடு நூறுசரம் வாலியன் பூட்டிச்
சிறப்புடைய செம்மலுறு தேரினை யழித்துக்
குறித்தவிறல் கொண்டுசமர் வால்வளை குறித்தான். - 140
1444 - தேரழித லும்வெகுளி செய்திளவல் ஈரேழ்
கூரிய நெடும்பகழி கொம்மென விடுத்தே
ஆரழல் முகத்தவுணன் அங்கையிடை கொண்ட
மூரிவரி வெஞ்சிலை முரித்தமா¢ விளைத்தான். - 141
1445 - வில்லது முரிந்திடலும் வேறோ£சிலை வாங்கிக
கல்லென வெயிற்றணி கறித்திவனை இன்னே
கொல்வனெனும் வெய்யமொழி கூறிமண நாறும்
அல்லிமல ரோன்படையை அண்ணல்மிசை உய்த்தான். - 142
1446 - அத்தகைமை நோக்கினன் அயன்படையை யானும்
உய்த்திடின் எனக்குவரும் ஊதியம்என் என்னாச்
சித்தமுறு பூசனை செலுத்திவிறல் வீர
பத்திர நெடும்படையொர் பாணிகொடு விட்டான். - 143
1447 - வாரிதி வளாகம்அரை மாத்திரையின் உண்ணும்
வீரனெடு வெம்படை விரைந்துபடர் காலை
நாரணன் மகன்படை நடுங்கிநனி தாழா
யாருநகை செய்திட இரிந்துளதை யன்றே. - 1442
1448 - அன்னமிசை யோன்படை அழிந்திடலும் வீரன்
தன்னது நெடும்படை தடுப்பில்வகை யேகி
வன்னிமுகன் ஆவிகொடு மாமுடிகள் தள்ளி
மின்னுவென வீரனிடை மீண்டுபடா¢ந் தன்றே. - 145
1449 - வேறு
வெய்யஅக் கனல்முகன் விளிந்து வீழ்ந்தனன்
ஒய்யென அச்செயல் உம்பர் நோக்குறா
ஐயனை வாழ்த்திநின் றலரின் மாரிதூய்
மெய்யணி துகிலெலாம் வீசி யாடினார். - 146
1450 - புறந்தரு கலிங்கமும் பூணும் நாணமும்
துறந்தனா¢ உவகையால் சொல்லும் ஆடலர்
சிறந்துடன் ஆர்த்தனர் தேவர் அற்றைநாட்
பிறந்திடு மைந்தர்தம் பெற்றி எய்தினார். - 147
1451 - எரிமுகன் அவ்விடை இறப்ப ஆங்கவன்
பெரும்படை வீரர்கள் புலம்பி யாமெலாம்
ஒருசிறு தூதனுக் குடைது மோவெனாச்
செருவினைக் குறித்தனர் உலப்பில் தீமையோர். - 148
1452 - முற்படுந் தலைவர்கள் மூவெண் ணாயிரர்
பொற்புடை இளையவன் புடையிற் சுற்றிடாக்
கப்பணந் திகிரிகோல் கணிச்சி வேல்கதை
சொற்படு படையெலாஞ் சொரிந்து போர்செய்தார். - 149
1453 - செய்தது நோக்கியே செயிர்த்துச் சேவகன்
கைதனில் இருந்ததோ£¢ கார்மு கம்வளைஇ
நொய்தினில் ஆயிர நூறு கோடிகோல்
எய்தனன் தெழித்தனன் அவுணர் ஏங்கவே. - 150
1454 - இத்திறங் கணமதொன் றிடைய றாமலே
கைத்தனு உமிழ்ந்திடுங் கணையின் மாமழை
உய்த்தனன் திரிந்தனன் உலகம் பேர்த்திடும்
மெய்த்திறல் மருத்தினும் விரைவின் மேவியே. - 151
1455 - எறிந்திடு படைகளும் எய்த கோல்களும்
முறிந்தன துணிந்தன மொய்ம்பு மார்பமுஞ்
செறிந்திடு கரங்களும் சிரமும் தாள்களும்
தறிந்தன அவுணர்தந் தலைவர் வீடினார். - 152
1456 - வேழமும் புரவியும் துணிந்து வீழ்ந்தன
வாழியம் தேர்நிரை அனைத்தும் இற்றன
சூழுறும் அவுணரும் தோலைந்து போயினார்
பாழியம் தோளினான் பகழித் தன்மையால். - 153
1457 - பாறொழுக் குற்றன ககனம் பார்மிசை
வீறொழுக் குற்றதொல் படைகள் வீந்திடச்
சேறொழுக் குற்றன தசைகள் செம்புனல்
ஆறொழுக் குற்றதால் அமர்செய் ஆறெலால். - 154
1458 - பலவுடை நெடுந்தலைப் பதகர் துஞ்சலும்
நிலவுடை எயிற்றிடை நிவந்த தீக்கனல்
புலவுடை விழுநிணம் புழுக்கல் செய்ததால்
கலிகெழு கொடியொடு கணமுந் துய்க்கவே. - 155
1459 - மாமையில் செறிந்தன வடிவின் மால்கரி
தாமயிர்ப் புறவடி தடக்கை வன்றலை
ஏமயிர்த் தோகையோ டிற்று நீங்குற
ஆமையிற் போவன குருதி ஆற்றினே. - 156
1460 - கார்கெழும் அவுணருட் கலந்த சோரியின்
தாரைகள் நீத்தமாய் எழுந்து தக்கவர்
பேருட லுட்கொடு பெயர்ந்த பின்னுற
வாரிதி வடவையுண் டுலவு மாண்பென. - 157
1461 - கரியினும் பரியினுங் கால்கொண் டோங்கிய
குருதியம் புனல்மழை குலாவும் வைகலின்
வரைதொறும் வரைதொறும் மாறு மாறெழா
அருவிகள் சென்றென அழுங்கிச் செல்லுமால். - 158
1462 - மீளிகள் குருதிநீர் வௌ¢ள மாயதில்
வாளுறு வேல்களும் வாளும் மற்றவுங்
கோளுறு மயிலையிற் கலவக் கண்டுதங்
கேளிரென றெதிர்வன கெழும வேலைமீன். - 159
1463 - அழல்பொரு செக்கர்வா னகத்தின் மாமதிக்
குழுவினர் சேர்ந்துறக் குலவுங் கொள்கைபோல்
நிழல்பொதி கவிதைதந் நெடிய தாளற
ஒழுகிய குருதியின் ஒருங்கு செல்வவே. - 160
1464 - அலைகெழு குருதியா றழுங்குற் றேகலால்
தலைகளும் உடல்களும் தசையும் வாரிடக்
கொலைபுரி மறவர்தங் குடா¤ற் பின்னியே
வலையெறிந் தீர்த்தனர் வயவெம் பூதரே. - 161
1465 - ஞாளிகள் திரிவதோர் மருங்கு நாமவெங்
கூளிகள் திரிவதோர் மருங்கு கூளியாம்
மீளிகள் திரிவதோர் மருங்கு வென்றிடும்
காளிகள் திரிவதோர் மருங்கு கண்ணெலாம். - 162
1466 - தேரிடை உலந்தவன் சிரத்துந் துஞ்சிய
சாரதி தலையினும் புரவி தம்மினுஞ்
சோரிகள் இழிவன தொலைந்த வையமும்
ஆருயிர் எய்தியாங் கதுபெற் றென்னவே. - 163
1467 - சினவலி அவுணர்தந் திகிரி பூண்டிடு
துனைவரு கேசரி துஞ்சச் சோரிநீர்
கனைகட லிடைசெலக் கண்டு தேரைதம்
இனமென எதி£¢தழீஇ யிரங்கு கின்றவே. - 164
1468 - விரிந்தஇத் திறமியல் வெங்க ளத்திடை
இரிந்திடு தானவர் இறந்து நீங்கினார்
கருந்தலை அடுக்கலிற் கழல்கள் தாக்குறத்
திரிந்தனர் அயர்ந்தனர் சிலவர் துஞ்சினார். - 165
1469 - மழுக்களும் அயில்களும் வாளும் முத்தலைக்
கழுக்களுங் கால்படக் கவலுற் றார்சிலர்
விழுக்கொடு வள்ளுரம் விராய பூழியில்
இழுக்கினர் அழுந்தினர் இறந்துற் றார்சிலர். - 166
1470 - பாய்ந்திடு குருதியம் பரவை ஆற்றிடை
நீந்தினர் ஒருசிலர் நீத்திக் காலெழா
தோய்ந்தனர் ஒருசிலர் ஓடி னார்
மாய்ந்தனர் ஒருசிலர் மாய வீரரே. - 167
1471 - காண்டொறுங் காண்டொறும் அவுணர் கண்ணிடை
ஈண்டிய வௌ¢ளிடை இளவல் மேனியாய்
நீண்டதொர் பையுளாய் நிகழ ஏங்கியே
மாண்டனர் சிலர்சிலர் வாய்வெ ரீஇயினார். - 168
1472 - துப்புறு பூதர்பின் தொடரத் தாடொழா
மெய்ப்படை முழுவதும் வீசி ஆயிடைத்
தப்பினர் இறுதியில் சாய்ந்து மாய்ந்தவர்
கைப்படை வாங்கியே கடிதுற் றார்சிலர். - 169
1473 - எண்ணமில் படைக்கலம் யாவும் வீசியே
தண்ணுமை வரிதுடி தக்கை பேரியாம்
பண்ணமை இயம்பல பற்றி ஆர்த்திடா
நண்ணினர் நடுவனை நடுக்குந் தானவர். - 170
1474 - பரிக்குவை அரிக்குவை படைத்த மாமுகத்
திரக்கமில் அவுணர்கள் இரத்தத் தில்தம
நெருக்குறு சிரத்தொகை நீட்டி மெய்யெலாங்
கரக்குநர் ஒருசிலர் உயிரின் காதலார். - 171
1475 - சூளுறு போரிடைத் தொலைந்து போகியே
நீளிகல் உறுகிலா நிருதர் சம்புவாய்
ஆளுடை வயவர்ஊன் அருந்த ஆயிடை
ஞாளிகள் கவர்தலும் நடுக்குற் றார்சிலர். - 172
1476 - தீயினை முருக்குறுந் திறல்வெம் பூதர்கள்
தாயினர் தொடர்தலுஞ் சாய்ந்து ளோர்சிலர்
நாயின துருக்கொடு நடக்க ஞாளிகள்
ஆயின அடர்த்தலும் அஞ்சி னார்சிலர். - 173
1477 - விசையொடு சாரதர் விரவ வேற்றுரு
இசைகிலர் இறந்தவர் இனத்துள் மேயினார்
தசைகவர் ஞமலிகள் தலைச்சென் றீர்க்கவும்
அசைவில ராகியே அழுங்கி னார்சிலர். - 174
1478 - புண்டரு குருதிநீர் புறத்துச் சிந்திட
மண்டமர் தன்னிடை மாண்ட கேள்வரைக்
கண்டிலர் சிரந்தெரீஇக் கவன்ற ரற்றிய
ஒண்டொடி மாதரின் உலவி னார்சிலர். - 175
1479 - சூர்த்திடு நோக்கொடுந் துண்ணென் றெய்தியே
ஆர்த்திடு பூதர்வந் தணுக வாய்வெரீஇ
வேர்த்துடல் பனிப்பவீழ்ந் துதைத்தும் வெய்யதாள்
பேர்த்திடல் இன்றியும் பேதுற் றார்சிலர். - 176
1480 - அழிதரு வோர்தமை அவரின் முன்னரே
கழிதரும் உயிரினர் கணங்க ளாகிவிண்
வழிதரு செலவினில் வந்து பற்றியெம்
பழிதரு வீரெனப் பணிக்கின் றார்சிலர். - 177
1481 - வல்விரை புறவையை நோக்கி மற்றவட்
செல்லுதிர் பூதா¢கள் தெரியக் கண்டிரேல்
இல்லையிந் நெறிதனில் இறந்து ளோரெனச்
சொல்லுதிர் நீரெனத் தொழுகின் றார்சிலர். - 178
1482 - காசினி அதனிடைக் கவிழ்ந்த கேள்வரை
ஆசையி னொடுதழீஇ அலமந் தேங்கிய
பாசிழை மாதரிற் பரவப் பூதர்கள்
நாசியீர்ந் திடுதலும் நாணுற் றார்சிலர். - 179
1483 - அடல்கெழு தூதனால் அவுணர் யாவருங்
கெடுவது திண்ணம்யாங் கெடுகி லோமெனாக்
குடர்கெழு சோரியங் குடிஞைக் கண்ணுறீஇக்
கடலுறு வரையினுட் கலந்து ளார்சிலர். - 180
1484 - சாரதர் குழுவினைத் தப்பித் தத்தம
தாருயிர் உய்ந்தபின் அங்கண் மாண்டவர்
சோரிய துரமிசை துதையப் பூசியே
வீரர்கள் இவரென மேவு வார்சிலர். - 181
1485 - இவ்வகை துஞ்சினர் அன்றி எண்ணிலா
வெவ்வலி அவுணர்கள் வெருவி ஓடலும்
மைவரு நெறிமுயல் மகேந்தி ரப்புரங்
கௌவையின் அரற்றின கடலு டைந்தபோல். - 182
1486 - அங்கது பொழுதினில் ஆடல் முற்றியே
செங்களம் நடுவுறு செம்மல் தன்புடை
எங்கணும் நீங்கிய இலக்க வேந்தருஞ்
சங்கையில் பூதருந் தலைச்சென் றீண்டினார். - 183
1487 - எரிந்திடு கனல்முகன் எய்த வெஞ்சரம்
உரந்தனை யகழ்ந்திட ஒருதன் வன்மைபோய்
அரந்தையின் மூழ்கியே அழிந்த வீரமா
புரந்தரன் எழுந்தொரு புடையில் எய்தினான். - 184
1488 - புண்டர நீறணி புனிதன் பாங்கரின்
மிண்டினர் இவரலாம் மேவி நிற்றலும்
எண்டகும் இளையவா¢ எழுவர் தம்மையுங்
கண்டிலன் கவன்றனன் கழறல் மேயினான். - 185
1489 - ஆண்டகை வீரர்கள் அடைய லார்க்கெதிர்
மூண்டமர் இயற்றிய மூவர் நால்வரும்
மாண்டன ரேகொலோ மயங்கி னார்கொலோ
ஆண்டவர் கிடந்தனர் இயம்பு வீரென்றான். - 186
1490 - என்றலும் உக்கிரன் என்னுஞ் சாரதன்
உன்றுணை யார்களை ஒன்ன லன்மகன்
கொன்றனன் அவருயிர் கூற்றும் வௌவினான்
பொன்றிய வைப்பினைப் புகலக் கேட்டியால். - 187
1491 - இம்பரின் முன்னுற இயம்பும் யோசனை
ஐம்பதிற் றிரண்டின்மேல் ஆலம் ஒன்றுள
தும்பருஞ் சிறிதென ஓங்கும் ஆயிடைத்
தம்பியர் மாய்ந்தனர் சரத மேயென்றான். - 188
1492 - உக்கிரன் இனையன உரைப்ப யாரினும்
மிக்கவன் வினவியே விழும நோயுறீஇப்
பக்கம தாயினர் படர ஏகினான்
தொக்குறும் இளைஞர்கள் துஞ்சும் எல்லைகளாய். - 189
1493 - வேறு
ஓசனை நூறு நீங்கி ஒலிகழல் வீரன் எய்தப்
பாசிலை வடத்தின் பாங்கே பரிவுடைத் தம்பி மார்கள்
காய்சின அங்கி செங்கண் கான்றிடக் ளேவ ரத்து
வாசமென் பள்ளி மீது மாய்ந்தனர் கிடப்பக் கண்டான். - 190
1494 - கண்டனன் விழிகள் செந்நீர் கான்றிட வீழ்ந்து புல்லிக்
கொண்டனன் இளைஞர் தம்மைக் கூவினன் அரற்றிச் செவ்வான்
விண்டனன் உயிர்த்து மேனி வியர்த்தனன் வீரன் ஆவி
உண்டில தென்னச் சோர்ந்தான் உணர்ந்துபின் இரங்க லுற்றான். - 191
1495 - தம்பிமீர் தம்பி மீர்என் றுரைத்திடும் தழுவிக் கொள்வீர்
எம்பிமீ ரென்னும் ஐயோ எங்ஙனஞ் சென்றி ரென்னும்
வெம்பினேன் என்னும் என்னை விட்டகன் றீரோ என்னும்
நம்பினேன் உம்மை என்னும் நானுமக் கயலோ என்னும். - 192
1496 - அங்கிமா முகனே நும்மை அடல்செய வல்லான் என்னும்
இங்குநீர் வடிந்தீர் என்றால் என்செய்வன் தமியேன் என்னும்
துங்கவெம் படைகள் ஏந்திச் சூழந்துடன் துணையாய் வந்த
உங்களைத் தோற்றி யானே உய்ந்தனன் போலும் என்னும். - 193
1497 - அம்மவேவ விதியே என்னும் ஆதகா துனக்கீ தென்னும்
இம்மெனச் செல்லா தின்னும் இருத்தியோ உயிரே என்னும்
செம்மைகொள் குணத்தா ரோடு பிறப்பரே சிலரிங் கென்னும்
எம்மையா ளுடைய வள்ளற் கென்னினி உரைக்கேன் என்னும். - 194
1498 - சீரிள மைந்தர் துஞ்சச் சிலையொடு திரிவேன் என்னின்
ஆரெனக் கொப்புண் டம்மா அழகிதென் னாற்றல் என்னும்
சூரர்தங் கிளையை எல்லாந் துண்ணெனச் சென்று சுற்றி
வேரொடு முடித்தால் அன்றி அகலுமோ வெகுளி யென்னும். - 195
1499 - துப்புடை வில்லின் கல்வித் துணைவர்கள் ஈண்டு துஞ்ச
வெப்படை தூண்டி னானோ எரிமுகத் தவுணன் என்னும்
அப்படை நல்கு தேவர் ஆர்கொலோ அறியேன் என்னும்
மெய்ப்படை வேலி னாருக் கடியரோ வினையேம் என்னும். - 196
1500 - அடுவனோ அவுணர் சூழ்வை என்றிடும் அனலி உண்ண
விடுவனோ இவ்வூர் என்னும் எந்தைதன் படையைச் சூர்மேல்
விடுவனோ என்னும் அந்தோ அஞ்சினன் வேலுக் கென்னும்
படுவனோ துயரத் தென்னுஞ் செய்வதென் பாவி என்னும். - 197
1501 - ஒன்றிய துணைவர் தம்மை ஒருங்குடன் படுத்த நீரால்
இன்றமர் செய்து பட்ட எரிமுகன் தன்பால் அன்றோ
வென்றிய தென்னும் என்றன் வீரமா சுணட தென்னும்
பொன்றிலன் அளியன் போலப் புலம்பினன் வறிதே என்னும். - 198
1502 - வில்லினைப் பார்க்கும் செங்கேழ் வேலினைப் பார்க்கும் ஏனை
மல்லலம் படையைப் பார்க்கும் வாளியைப் பார்க்கும் வீரச்
சொல்லினைப் பார்க்கும் வந்து சூழ்தரு பழியைப் பார்க்கும்
எல்லென எயிற்றின் பந்தி கறித்திடும் கவலு மன்றே. - 199
1503 - அருந்துயர் எய்தி இவ்வா றழுங்கினோன் எளிய னாகி
இருந்தனன் அல்லன் ஏங்கி யாதுமோர் செயலும் இன்றி
வருந்தினன் அல்லன் கானின் மருந்தினுக் குழன்றான் அல்லன்
விரைந்துதன் இளையர் தம்மை எழுப்பவோர் வினையங் கொண்டான். - 200
1504 - நாற்றலை யுடைய அண்ணல் நாரணன் முதலோ£¢ நல்க
ஏற்றிடு படையில் ஒன்றை இளையர்கள் எழுவர் மீது
மாற்றலன் விடுத்தான் என்னின் மற்றவர் ஆவி உண்டோன்
கூற்றுவன் அன்றோ என்னாக் குறித்திவை கூற லுற்றான். - 201
1505 - வேறு
ஊனோ டாவிக் கின்பம் விரும்பி உழல்கின்ற
வானோ ரேபோல் தானவ ரேபோல் வழசெல்லா
ஏனோ ரேபோல் எண்ணின னேகொல் எமர்ஆவி
தானே உண்பான் கூற்றுவன் என்னும் மியோனே. - 202
1506 - விரியுமு ணர்ச்சியை மாற்றுவ தல்லால் விண்ணோர்கள்
ஒருபடை தானும் நங்கள் இனத்தை உயிருண்ணா
தெரிமுக னென்பான் அட்டனன் அன்றே இளையோரைத்
தரியல னாகிக் கொன்றவ னம்மா தானன்றோ. - 203
1507 - போதத் துக்கோர் வைப்பிட மாயோர் பொறியாகி
மூதக் கோர்எண் டாரக மூல மொழிக்கேட்டு
வேதத் தோனை வெஞ்சிறை பூட்டி விதியாற்றும்
ஆதித் தேவன் தம்பியர் என்ப தறியானோ. - 204
1508 - ஆறுபட் பட்ட ஐயிரு காலத் தரன்நாமங்
கூறிட் டேவாச் சேய்உயிர் வவ்வக் குறுகுங்கால்
சீறித் தாளால் தாக்கிய சின்னஞ் சிறிதுந்தான்
மாறிற் றில்லைக் கூற்றது தானும் மறந்தானோ. - 205
1509 - சீலந் தன்னால் ஓர்விழு போதைச் சிவனுக்கென்
றோலங் கொண்டே விண்ணிடை புக்கோன் உயிர்வௌவிச்
சூலந் தன்னிற் கண்ணுதல் ஏற்றச் சுழலுற்றுக்
காலன் பன்னாள் தூங்கிய வண்ணங் காணானோ. - 206
1510 - நஞ்சிற் றீயன் வேட்டுவன் அன்றோர் நாள்முற்றும்
துஞ்சற் றுணற் றரன்மிசை வில்வந் தூர்த்தோனை
வெஞ்சொற் கூறிப் பற்றலும் யாங்கண் மிகஎற்ற
அஞ்சித் தன்தூ தாயினர் போன தறியானோ. - 207
1511 - அக்கா லத்தின் எல்லையின் மைந்தற் கரவென்றே
முக்கா லோதித் தீமை குறித்தே முடிவோனை **
மெய்க்கா லன்தூ தாயினர் பற்ற விடுவித்தேம்
இக்கால் கொண்டே அவரை உரைத்ததேன் யானன்றோ.
( ** ஒரு வேடன் தன் மகனுக்கு இறுதிக்காலத்தில், ஆகர [பிடுங்கு], பிரகர [அடி],
சங்கர [கொல்] என்னும் சொற்களைக்கூறி, அதன்படி நட என்று கட்டளையிட்டு மாண்டான்
அச்சொற்கள் தீமை குறித்தனவாயினும் சிவநாமம் அடங்கப் பெற்றமையால் அவன்
சிவகதி அடைந்தான் என்பது இங்குக் குறித்த வரலாறாகும்.) - 208
1512 - மெச்சியல் கொள்ளாத் துன்மதி யாலும் மிகவெய்ய
துச்சக னாலும் ஏனைய ராலுந் தொன்னாளின்
இச்சக மாற்றுந் தன்னிறை நீங்கி இடரெய்தி
அச்ச முழந்தே பட்டது சண்டன் அயர்த்தானே. - 209
1513 - நீறு முகத்தார் கண்டிகை பூண்டார் நிமலன்பேர்
கூறு முகத்தார் தம்புடை செல்லக் குலைகூற்றன்
ஆறு முகத்தான் அடியவர் ஆவி யலைத்தானே
சேறு முகத்தாழ் கரியை யடாதோ சிறுபுள்ளும். - 210
1514 - வேறு
என்னு மாற்றங்கள் இயம்பியே இளையவன் எழுந்து
பின்னர் யாத்திடு தூணியில் ஒருசரம் பிடுங்கித்
தன்ன கங்கொடே யன்னதன் தலைதனில் தரும
மன்னர் மன்னவன் கண்டிட இத்திறம் வரைவான். - 211
1515 - வேலு டைத்தனி நாயகற் கிளையவன் விடுத்தேன்
கால நாடுறு கூற்றுவ னென்பவன் காண்க
கோல வெஞ்சிலைத் துணைவர்தம் ஆருயிர் கொண்டாய்
வாலி தோவிது விடுக்குதி கடிதென வரைந்தான். - 212
1516 - செந்ந லங்கிளர் தன்னகத் தின்னவா தீட்டிப்
பொன்னெ டுஞ்சிலை வாங்கியப் பகழியைப் பூட்டிப்
பன்னி ரண்டுதோள் விமலனை மனங்கொடு பரவி
மின்னெ னச்சென்றி யமபுரம் புகும்வகை விடுத்தான். - 213
1517 - கரந்தை சூடுவான் திருமகற் கிளையவன் கணைமுன்
விரைந்து தெண்கடல் ஏழையுங் கடந்துவிண் ணோங்கி
இருந்த மானேசோத் தரகிரித் தென்புறத் தியம
புரந்த னிற்சென்று மறலிதன் முன்புபோந் ததுவே. - 214
1518 - தொடுத்த அக்கணை அந்தகன் முன்புதுண் ணெனப்போய்
அடுத்து வீழ்தலும் விம்மிதம் எய்தியே அவன்சென்
றெடுத்து நோக்கினன் வீரவா குப்பெயர் இளவல்
விடுத்த தாகலு முற்றுற உணர்ந்தனன் விரைவில். - 215
1519 - அயில்நெ டுங்கணைப் பாசுரத் தகலம துணர்ந்து
துயரு ழந்தஞ்சி ஈண்டிலர் இளையவன் துணைவர்
பயில எங்ஙனஞ் சென்றன ரோவெனப் பார்த்தான்
கயிலை யேகியே இருப்பதா உணர்ச்சியிற் கண்டான். - 216
1520 - கண்டு தேறினன் கடாமிசை ஏறினன் கடுங்கால்
கொண்ட தானைகள் சூறையங் காலெனக் குழுமப்
பண்டு தானுறை பதியினை நீங்கினன் படரா
அண்டர் நாயகன் கயிலையஞ் சாரலை யடைந்தான். - 217
1521 - ஆன காலையில் ஆயிடைப் பொதும்பரொன் றதனின்
மான வேற்படை அவுணர்தம் படைகளின் மாண்ட
சேனை வீரர்கள் சூழ்தர எழுவருஞ் சிறந்து
கான விஞ்சையர் பாடல்கேட் டிரப்பது கண்டான். - 218
1522 - தொழு மற்றவர் முன்னுற மறலிபோய்த் துன்னி
முழுது ணர்ந்துளீர் நுங்களை நாடுவான் முன்னோன்
ஆழகி தென்றிவண் இருப்பதென் என்னையும் அயிர்ப்பான்
எழுவி ருங்கடி தெழுவிர்இப் பூதரோ டென்றான். - 219
1523 - என்ற காலையில் எழுவரும் எழுந்திரு மருங்கு
நின்ற பூதர்கள் யாவரும் போந்திட நீங்கி
ஒன்றொர் மாத்திரை ஒடுங்குமுன் அவுணர்கோன் உறையும்
மன்றல் மாநகர் அடுகளம் புக்கனர் மன்னோ. - 220
1524 - புக்க காலையின் எழுவரும் தம்முடன் புகுந்தார்
மிக்க பாரிடத் தலைவர்கள் யாவரும் விரைவில்
தொக்கு வீழ்தரு மியாக்கைகள் உற்றனர் சுரர்கள்
அக்க ணந்தனிற் பூமழை தூவிநின் றா£¢த்தார். - 221
1525 - இன்ன வேலையின் எழுவரும் பதைபதைத் தெழுந்து
முன்ன வன்றன தடிக்கம லங்களை முறையால்
சென்னி தாழ்வுற வணங்கினர் செங்கையால் எடுத்துப்
பொன்னின் மார்புறப் புல்லினன் எல்லைதீர் புகழோன். - 222
1526 - புல்லி னான்இள வீரரைப் புயங்கமுண் டுமிழ்ந்த
எல்லி னானென விளங்கினான் அவுணரை இனிநான்
வில்லி னால்அடல் செய்வதோ அரிதென விறலும்
சொல்லி னான்மகிழ் வாயினான் புன்கணும் தொலைந்தான். - 223
1527 - எண்ட குந்திறல் எழுவரும் பிறரும்உய்ந் தெழுதல்
கண்டு வீரமா புரந்தர னுங்கணத் தவரும்
திண்டி றற்புனை இலக்கரும் உவகையிற் சிறந்து
கொண்டல் கண்டிடு சாதகம் போல்உளங் குளிர்ந்தார். - 224
1528 - அன்ன தாகிய எல்லையில் கூற்றனும் அனகம்
துன்ன தாகிய வந்தனன் இளவலைத் தொழுது
மின்னு லாவிய வேலினாய் தமியனை வெகுண்டாய்
முன்னி கழ்ந்திடு வரன்முறை கேளென மொழிவான். - 225
1529 - எழுதி றத்தரும் இங்ஙனம் தம்முடல் விட்டுக்
குழுவி னோடுபோய்க் கயிலையஞ் சாரலில் குறுகி
வழிப டுஞ்சில பூதரும் சுற்றிட வதிந்தார்
அழிபெ ருந்துயர் உழத்தலில் தெரிந்திலை அதனை. - 226
1530 - அங்க மீதினில் நீறுகண் டிகையினை அணிந்தார்
தங்கள் பாலினுஞ் செல்லுதற் கஞ்சுறுந் தமியேன்
இங்கு நின்இளை யா£¢உயிர் கொள்வனோ எவரும்
வெங்க கனற்பொறி யுண்பரோ பசிப்பிணி மிகினும். - 227
1531 - வினைய முன்னிநீ விடுகணை நோக்கியான் வௌ¢ளித்
தனிவ ரைப்பெருஞ் சாரலில் போந்துசா ரதரோ
டுனது தம்பியர் தங்களை விளித்திவண் உய்த்தேன்
முனிவு கொள்ளலை ஐயஎன் னிடையென மொழிந்தான். - 228
1532 - அந்த கன்மொழி வினவலும் ஐயனுக் கிளவல்
நந்து யர்க்கடல் சுவற்றினை கயிலையின் நமர்கள்
வந்த தன்மையைத் தேற்றில மயங்கியீண் டுற்றாம்
புந்தி கொள்ளலை யாவது நீயெனப் புகன்றான். - 229
1533 - புகல லுற்றபின் விடைகொண்டு கூற்றெனும் புத்தேள்
உவகை தன்னொடு தன்புரத் தேகினன் ஒன்னார்
இகலை வெ·கியே பூதரும் துணைவரும் ஏத்த
நிகரி லாதவன் அன்னதோர் களத்திடை நின்றான். - 230
1534 - நின்று மற்றிவை நாடிய ஒற்றா¢நீள் நகரில்
சென்று சூரனைத் தொழுதுநின் மதலைபோர் செய்து
வென்றி மொய்ம்பினன் விடுத்திடு வீரன்மாப் படையால்
பொன்றி னான்பொடி யாகிவீழ்ந் தனனெனப் புகன்றார். - 231
1535 - வேறு
அக்கா லைதனில் அவுணர்க் குளெலாம்
மிக்கான் புவியின் மிசைவீழ்ந் தயரா
எக்கா லுமுறா தவிடர்க் கடலுட்
புக்கான் மெலிவோ டுபுலம் புறுவான். - 232
1536 - உண்ணே யமதாம் உயிரே உறவே
கண்ணே மணியே கனல்மா முகனே
விண்ணே கினையோ இவண்மீள் கிலையால்
எண்ணேன் உயிர்வாழ்க் கையையிங் கினியே. - 233
1537 - எந்தைக் கிளையான் தனையிந் நகரின்
வந்துற் றதொர்தூ தன்மலைந் திடலான்
நொந்துற் றனைமெய் யுநுடங் கினையால்
அந்தத் துயர்இங் ஙனமா றியதோ. - 234
1538 - தேறா இகல்செய் திடுதே வரெலாம்
மாறா மகிழ்வுற் றிடவைத் துமனத்
தாறா இடர்என் வயின்ஆக் கினையால்
கூறாய் இதுவுங் குமரற் கியல்போ. - 235
1539 - காரோ திமருங் குளகா ரணனோ
சீரோ திமனோ திருமா லவனோ
நேரோ தியவொற் றடநீ முடிகென்
றாரோ தினரோ அதறிந் திலனே. - 236
1540 - பொய்விட் டிடுதூ துவர்போ ரிடைநீ
மெய்விட் டனையென் றுவிளம் பினரால்
நெய்விட் டவயிற் படைநே ரலன்முன்
கைவிட் டெனையே குவதுன் கடனோ. - 237
1541 - தூதா னவன்வா ளிதுணித் திடவிண்
மீதே கினையென் றுவிளம் பினர்அப்
போதே அதுணர்ந் துபொறுத் தனனால்
ஏதே துபொறா தினமென் னுயிரே. - 238
1542 - ஆவா தமியேன் அயர்வுற் றிடவே
மூவா இளமைந் தமுடிந் தனையே
ஓவா துமகப் பெறவோங் குதவத்
தேய்வார் களுமுண் டுகொல்இன் னமுமே. - 239
1543 - எல்லே உனைநம் புவதென் அகல்வாய்
சொல்லே துமுரைத் திலைதுன் புறுவேன்
கல்லே புரைநின் கவின்மார் பதனை
வல்லே தழுவிக் கொளவந் தருளே. - 240
1544 - செய்யாய் கரியாய் திருவே சிறுவா
மெய்யா ருயிரே விடலாய் அடல்வேற்
கையாய் அரசே களிறே தமியேற்
கையா வெனைநீ யும்அயர்த் தனையோ. - 241
1545 - என்றின் னனபன் னியிரங் குதலும்
நன்றன் னையதோர்ந் துநடுக் கமுறாத்
துன்றுந் துயரக் கடல்துன் னினளால்
அன்றந் நகர்மிக் கதழுங் குரலே. - 242
ஆகத் திருவிருத்தம் - 1545
------
9. மூவாயிரர் வதைப் படலம்* (1546 - 1633)
( * நாலாநாட் பகலே மூவாயிரவர் வதை நிகழந்ததாகும்.)1546 - ஆயதோர் காலைமூ வாயிர ரத்தொகை
மேயின மைந்தர்கள் வினவி ஈதெலாம்
மாயிரு விசும்பினை அளாவு மன்னவன்
கோயிலை யடைந்தனர் குழுவொ டேகினார். - 1
1547 - துன்னுறு பழியெனும் சூறை எற்றிட
இன்னலந் தெண்டிரை எறிய வைகிய
மன்னியல் நோக்கியே வணக்கம் செய்தெழீஇ
முன்னர்நின் றினையன மொழிதல் மேயினார். - 2
1548 - உரமிகும் இலக்கரும் ஒழிந்த எண்மரும்
பெருவிறல் மொய்ம்பனும் பிறரும் உற்றுழி
எரிமுக னொருவனை ஏவி னாய்அவன்
செருவினை அவரொடு செய்ய வல்லனோ. - 3
1549 - வலியவர் தம்மையும் வரம்பின் மிக்குறின்
மெலியவ ராயினும் வென்று போவரால்
உலகினில் வழக்கமீ துணர்ந்தி லாய்கொலோ
கலைபயில் கற்புடைக் காவல் மன்னனே. - 4
1550 - ஒட்டலர் குழுவினுள் ஒரும கன்றனை
விட்டனை மேல்வரும் வினையம் ஓர்ந்திலை
அட்டுறு தா£¤னாய் அமரில் அங்கவன்
பட்டனன் என்றிடிற் பரிதற் பாலையோ. - 5
1551 - தீமுகன் ஒருவனுக் கிரங்கித் தேம்பலை
யாமுளம் இரணியன் இன்னும் உற்றுளன்
தாமரை மகிழ்நனைத் தளைப டுத்திய
கோமகன் உளன்ஒரு குறையுண் டாகுமோ. - 6
1552 - நண்ணல ராயினோர் நலிந்து செற்றிடக்
கண்ணகல் தேர்பரி களிறு தானவர்
எண்ணில மாய்ந்தவென் றிறையும் ஆகுலம்
பண்ணலை ஐயஅப் பரிசு கேட்டிநீ. - 7
1553 - ஏழெனுங் கடல்வறந் திடினும் நின்னடி
சூழ்தரு படைக்கொரு தொலைவும் இல்லையால்
ஊழியும் அழிகுறா ஒருவ நீயிவண்
பீழையின் உறுவதும் பெருமைப் பாலதோ. - 8
1554 - நின்றுவா னளவெலாம் நிவந்த மேருவாங்
குன்றினோர் தினைத்துணை குறைந்த தன்னதால்
துன்றுநந் தானையுள் துன்ன லார்பொர
இன்றுகா றாகவே இறந்த சேனையே. - 9
1555 - சிறந்திடு தலைமையுந் திறலும் ஆக்கமும்
மறந்தனை யாகியே வலிய னாகுநீ
இறந்தவர் தமைநினைந் திரங்கற் பாலையோ
புறந்தரு கின்றதோ ரமரர் போலவே. - 10
1556 - அண்டர்தம் முதல்வனை அயனை மாயனைச்
சண்டனைப் பவனனைத் தழலை யாரையும்
விண்டொடர் செலவினில் விரைந்து பற்றியே
கொண்டணை கின்றனம் குறிப்ப தாகுமேல். - 11
1557 - விண்ணினை அலைக்கவும் மேரு வெற்பொடு
மண்ணினை மறிக்கவும் வடவை மாற்றவும்
எண்ணினை என்னினும் யாங்கள் எந்தைநின்
உண்ணினை வின்படி முடித்தும் ஒல்லையில். - 12
1558 - பன்னுவ தென்பல பணித்தி யாங்கள்போய்
முன்னுறு பூதரை முரண்கொள் வீரரைப்
பின்னுறு கந்தனைப் பிறரை ஈண்டொரு
கன்னலின் வென்றுநின் கழல்கள் காண்டுமால். - 13
1559 - என்றிவை புகறலும் இடுக்கண் நீங்கியே
நன்றிது மைந்தர்காள் நடமின் போர்க்கென
வன்றிறல் முதல்வனை வணங்கிக் கைதொழா
நின்றவர் ஏவரும் நீங்கி னாரரோ. - 14
1560 - வேறு
வன்னச் சிலைகொண் டனர்வான் கவசந்
துன்னுற் றிடுவித் தனர்தூ ணியினை
வென்னிற் செறிவித் தனர்வெவ் விரலிற்
பொன்றுற் றிடுபுட் டில்புனைந் தனரால். - 15
1561 - சீர்புக் குறுகை படைசெங் கைகொளாத்
தார்புக் கமர்தும் பைதனைத் தரியா
மார்புக் கலமாக் கலன்வர்க் கமிடாத்
தேர்புக் கனர்வந் தனசே னைகளே. - 16
1562 - சங்கங் கள்முழங் கினதண் ணுமைகோ
டெங்கெங் குமியம் பினவேண் படகந்
துங்கங் கெழுபே ரிதுவைத் தனவால்
அங்கங் குருமுற் றனவா மெனவே. - 17
1563 - அவுணப் படையெண் ணிலஆற் றல்மிகுங்
கவளக் கரிஎண் ணிலகா மருசீர்
இவுளித் தொகைஎண் ணிலவீட் டமுறா
உவணுற் றிடுதே ரும்உலப் பிலவே. - 18
1564 - முழங்குற் றனபல் லியமும் மதமாத்
தழங்குற் றனதேர் ஒலிதந் தனவால்
அழுங்குற் றனவாம் பரியாங் கவைகள்
விழுங்குற் றனபா ரொடுவிண் ணினையே. - 19
1565 - நீடுற் றிடுதேர் களின்நீள் துவசம்
ஆடுற் றனதா ரில்அளித் தொகுதி
பாடுற் றனவெங் கொடிபா றுமிசை
கூடுற் றனகூ ளிகுனித் தனவே. - 20
1566 - தொகையா னைகடம் மொடுசூழ் கரியின்
தகையா யினதா னவர்தம் முருவஞ்
சிகையா ரழலா யினசென் னியெழும்
புகையா னதுவான் எழுபூ ழியதே. - 21
1567 - இப்பான் மையதா கியெழுந் துபடை
அப்பால் விரவுற் றுழிஅன் னதுகண்
டொப்பா ருமில்சூ ரன்உகந் தருள்கூர்
மெய்ப்பா லகர்சென் றனர்வெய் தெனவே. - 22
1568 - மூவா யிரர்தா னைகள்முந் துசெல
ஏவா மெனவெம் மைகொடே குதலுந்
தேவா னவர்கண் டனர்சிந் தைவெரீஇ
யாவா வெனஅஞ் சியழுங் கினரே. - 23
1569 - அக்கா லையின்மூ வகையா யிரரும்
மெய்க்கார் புவிசென் றுவிரைந் தனபோல்
தொக்கா டல்புரிந் திடுதொல் நிலமேற்
புக்கார் அதுகண் டனர்பூ தர்களே. - 24
1570 - எதிர்கின் றனர்பூ தர்களேற் றனரால்
முதிர்கின் றசினங் கெழுமொய் யவுணர்
அதிர்கின் றனபே £¤கள்அண் டமெலாம்
பிதிர்கின் றனநே மிபிளந் ததுவே. - 25
1571 - வாள்கொண் டெறிகின் றனர்வல் லெழுவுத்
தோள்கொண் டிடுவெங் கதைதூண் டினரால்
தாள்கொண் டசிலைக் கணைதாஞ் சொரிவார்
நீள்கொண் டலையன் னநிசா சரரே. - 26
1572 - சூலப் படைவிட் டனர்தொல் பரிதிக்
கோலப் படைவிட் டனர்குந் தமுடன்
ஆலப் படைவிட் டனர்ஆ டுகுறட்
சாலப் படைநின் றுதளர்ந் திடவே. - 27
1573 - அடுகுற் றிடுசூ லமடற் கதைகள்
தொடுகுற் றனர்நே மிகள்தூண் டிடுவார்
விடுகுற் றனர்வெற் பினைவெவ் வசுரர்
படுகுற் றனர்ஆர்த் தனர்பா ரிடரே. - 28
1574 - வீழ்கின் றனபட் டிடும்வீ ரருடல்
தாழ்கின் றனசெம் புனல்சாய்ந் தனவால்
ஆழ்கின் றனவே லையில்அங் கதன்வாய்
மூழகின் றனபேய் கொடிமொய்த் தனவே. - 29
1575 - மறக்குஞ் சரமா யினவாம் பரிதேர்
சிறக்கின் றனபட் டனதீ அவுணர்
துறக்கின் றனர்ஆ விதொலைந் திடுவார்
இறக்கின் றகணங்களுமெண் ணிலவே. - 30
1576 - வேறு
காணாவது மூவாயிரர் கனல்வெஞ்சினந் திருகிக்
கோணாகம தெனவேயடுங் கொடும்பூதரைக் குறுகி
நீணாகம தெனவிண்டொட நிமிர்வெஞ்சிலை குனியா
வேணார்குணத் தொலிகொண்டர் இதுகொல்லுரு மெனவே. - 31
1577 - வாங்குற்றிடு சிலைதன்னிடை வல்லேசர மாரி
தூங்குற்றிடு புயலாமெனச் சொரிந்தார்சொரிந் திடலும்
ஏங்குற்றன பூதப்படை இரிகின்றன அதுகண்
டாங்குற்றிடு கணவீரர்கள் அவுணர்க்கெதிர் புகுந்தார். - 32
1578 - தண்டத்தவர் தடந்தேரினைத் தகர்ப்பார்சிலர் தருவின்
துண்டத்தவர் பரிமான்தொகை தொலைப்பார்சிலர் பாகன்
கண்டத்தலை உருளும்படி யுதைப்பார்சிலர் கரத்தால்
அண்டத்தினில் அவர்தேரெடுத் தெறிவார்சிலர் அம்மா. - 33
1579 - எழுக்கொண்டவர் தடமார்பினில் எறிவார்சிலர் எரிவாய்
மழுக்கொண்டவர் சிலையிற்றிட எறிவார்சிலர் வரையின்
குழுக்கொண்டவர் அனிகந்தனைக் கொல்வார்சிலர் வார்வில்
பழுக்கொண்டிடு கவடாமெனப் பறிப்பார்சிலர் முறிப்பார். - 34
1580 - தாவாதுயர் கணவீரர்கள் சமர்இவ்வகை புரிய
மூவாயிர ரெனுமைந்தர்கள் முனியாச்சிலை குனியா
ஓவாதுக முடிவெல்லையில் உருமுச்செறி வனபோல்
தீவாயுமிழ் கனல்வாளிகள் சொரிகின்றனர் தெரிந்தே. - 35
1581 - நேர்புற்றமர் புரிகின்றவர் நெடுந்தீவடிக் கணைகள்
மார்புற்றிடத் தடந்தோளெனும் வரையுற்றிட முகத்தின்
சார்புற்றிடக் கரமுற்றிடத் தாளுற்றிடச் செந்நீர்
சோர்புற்றிடத் தளர்ந்தேமனந் துயருற்றிட நின்றார். - 36
1582 - கலக்கித்தட மலர்சிந்திடு களிறாமென அடல்செய்
விலக்கற்கரு மூவாயிரர் வில்லாண்மையும் வல்லார்
அலக்கட்படு கணவீரர்கள் அழிகின்றது நோக்கி
இலக்கத்தரி லோராயிரர் எரியாமெனச் செயிர்த்தார். - 37
1583 - குன்றேயென மிசைபோகிய கொறறப்புயத் தவன்முன்
சென்றேதொழு திப்போரினைச் சிறயேங்களுக் கருண்மோ
என்றேயுரைத் தனாவேண்டலும் இளையோன்அதற் கிசையா
நன்றேயமா¢ செயநீவிர்கள் நடமின்னென அகன்றா£¢. - 38
1584 - விசயன்சயன் இடபன்கர வீரன்அதி கோரன்
அசலன்அதி குணன்வாமனன் அனந்தன்அக ளங்கன்
வசையில்புகழ் அனகன்சத வலிமாருதன் வருணன்
சசிகண்டகன் முதலாயிரர் சமரின்றலை புகுந்தார். - 39
1585 - முந்துற்றிடும் அவர்யாவரும் மூவாயிரர் எதிர்போய்க்
கந்தக்கட வுளைஅன்பொடு கருத்திற்றொழு தேத்தி
மைந்துற்றிடு தங்கார்முகம் வளையாவடி வாளி
அந்தத்தினி முகிலாமென அவர்மேற்சொரிந் தார்த்தார். - 40
1586 -
ஆர்க்கின்றதொர் பொழுதத்தினில் அவர்வில்வலி தன்னை
மூர்க்கன்தரு மறமைந்தர்கள் மூவாயிரர் காணாக்
கூர்க்கின்றதொர் நெடுவாளிகள் குணிப்பில்லன பூட்டிச்
சூர்க்கொண்டல்கள் தம்மோடமர் புரிந்தாலெனச் சொரிந்தார். - 41
1587 - மூவாயிரர் விடும்வாளிகள் முடுகிக்கடி தேகித்
தாவாவிற லோர்ஆயிரர் தம்வாளியை அடுமால்
மேவார்புகழ விறல்மைந்தர்கள் வெவ்வாளிகள் அவுணர்
ஏவானவை துணியும்படி எதிர்சிந்திடும் விரைவில். - 42
1588 - இவ்வாறமர் புரிகின்றுழ இலக்கத்தவர் தேரைத்
தெவ்வாகிய மூவாயிரர் சிதைவித்தனர் சரத்தால்
அவ்வாறுதெ ரிந்தேயெமர் அவுணன்தரு மைந்தர்
கைவார்சிலை யொடுதேரினை அழித்தார்கணை தூண்டி. - 43
1589 - இலக்கத்தவர் எதிர்கின்றவர் ஏமப்படு தேரைச்
சிலைக்கட்படு நெடுவெங்கணை சிந்திச்சிதை வித்தே
நிலக்கட்பட மூவாயிரர் தொகைதன்னையும் நிறுவி
மலைக்கட்படும் அரிபோற்புடை வருதேரிடைப் புகுந்தார். - 44
1590 - சிலைபோய்க்கட விச்சென்றிடு தேர்போயடல் செய்யும்
கொலைபோயனி கம்போயுளங் கொள்ளும்பெரு மிதத்தின்
நிலைபோய்வெகு ளுற்றேபுவி நின்றோர்தமைப் பிணித்த
வலைபோகிய மானேயென வளைத்தார்வய மைந்தர். - 45
1591 - வேறு
பொலம்படு தேரொடு பொன்ற வன்மைபோய்த்
தலம்படும் அவுணர்கள் தளர்தல் மேயினார்
இலம்படை வந்துழ ஈதல் சான்றவர்
குலம்படு துயரொடு குறையும் தன்மைபோல். - 46
1592 - பறித்தனர் வரைகளைப் பழும ரம்பல
முறித்தனர் வியர்பபுறு மொய்ம்பர் தம்மிசைச்
செறித்தனர் அண்டமும் திசையும் ஞாலமும்
மறைத்தனர் அமரரும் மருட்கை எய்தினார். - 47
1593 - தெவ்வரை யாகிய சிறார்கள் தொன்மரங்
கைவரை வீசலுங் கணைகள் தூண்டியே
இவ்வரை யெனுங்கணத் திறுத்து வீட்டினார்
ஐவரை வென்றிகொள் அனிக வீரரே. - 48
1594 - அட்டடல் கொண்டிடும் அவுணர் இவ்வகை
விட்டன கிரியெலாங் கணையின் வீட்டியே
நெட்டழற் பகழிகள் நிறத்தின் மூழ்குறத்
தொட்டனர் உறுப்பெலாந் துளைத்தல் மேயினார். - 49
1595 - துளைத்திடு கின்றுழிச் சோரி சாய்ந்திட
விளைத்தனர் ஒருசிலர் இரிந்திட் டார்சிலர்
களைத்தனர் ஒருசிலர் கனன்று நின்றுபோர்
விளைத்தனர் ஒருசிலர் பிறங்கல் வீசுவார். - 50
1596 - தேவரை வென்றுளார் சிலவர் மால்வரைக்
காவலர் தேரினைக் கரங்க ளாலெடா
மேவரும் புணரியுள் வீசி யார்த்தனர்
ஓவென அமரர்கள் புலம்பி யோடவே. - 51
1597 - நீசர்கள் ஒருசிலர் நேமி சென்றிட
வீசிய தேரினும் விரைவின் நீங்குறாக்
காசினிப் பாலராய்க் கார்மு கம்வளைஇ
ஆசுக மழைசொரிந் தார்த்துப் பொங்கினார். - 52
1598 - மீண்டிடு பொருநர்கள் விசிக மாமழை
தூண்டிட அவுணர்கள் தொகையிற் பற்பலர்
காண்டலும் வடவையின் கணத்திற் சீறியே
ஆண்டெதிர் புகுந்தனர் அசனி ஆர்ப்பினா£¢. - 53
1599 - மறத்தொடு மருத்தின மரங்கொள் கொம்பரை
இறுத்திடு தன்மைபோல் எந்தை பின்வரு
திறத்தவர் சிலைகளைச் செங்கை வன்மையாற்
பறித்தனர் முறித்தனர் படியில் வீசினார். - 54
1600 - பற்றலர் கொடுமரம் பறித்துச் சிந்துழிச்
செற்றமொ டெம்பிரான் சேனை வீரர்கள்
மற்றவ ரும்பதை பதைப்ப மாண்கையால்
எற்றினர் அனையரும் இடியிற் றாக்கினார். - 55
1601 - பரவிய உவரியும் பாலின் வேலையுந்
திரைகளை எதிரெதிர் சிதறி யார்த்தெழீஇப்
பொருதிற மேயெனப் பொருவில் மற்றொழில்
இருதிற வயவரும் மிகலி ஆற்றினார். - 56
1602 - கொடுந்தொழி லாரொடு கொற்ற வீரர்கள்
அடைந்தனர் இவ்வகை யாண்மைப் போரினைத்
தொடர்ந்துநின் றியற்றியே தொல்லை வன்மைபோய்
உடைந்தனர் விசயன்அங் கொருவன் அன்றியே. - 57
1603 - இசையுறு தமரெலாம் இரிந்து போதலும்
விசயனே யெனப்படும் வீரன் சீறியே
வசையுறும் அவுணர்கோன் மகாரைக் கூற்றுவன்
திசையுறு நகரிடைச் செலுத்து வேனென்றான். - 58
1604 - வேணியின் மதியுடை விமலன் நல்கியே
வேணுறு வரிசிலை ஈறி லாதது
தூணியி னிடையுறத் துன்னிற் றன்னதைப்
பாணியில் எடுத்தனன் சமரியில் பாணியான். - 59
1605 - கரதலத் தெடுத்திடு கார்மு கந்தனை
விரைவொடு கோட்டியே விசயன் என்பவன்
ஒருதனி மாருதத் தோடிச் சூழ்வுறாச்
சரமழை பொழிந்தனன் அவுணர் தங்கள்மேல். - 60
1606 - கரங்களை அறுத்தனன் கழல்கள் ஈர்ந்தனன்
உரங்களை அறுத்தனன் உயர்திண் டோளொடு
சிரங்களை அறுத்தனன் சிலரைக் கானிடை
மரங்களை அறுத்திடும் வண்ண மென்னவே. - 61
1607 - அற்றன உறுப்பெலாம் அணுகித் தம்மில்வந்
துற்றன கூடிய வுணர்வும் ஆவியும்
மற்றவர் எழுந்தனர் வாகை வீரன்மேல்
பொற்றைக ளாயின பொழிந்து போர்செய்தார். - 62
1608 - தலையொடு கரங்களும் தாளுந் தோள்களும்
மெலிவொடு துணிந்தவர் மீட்டுங் கூடினர்
அலர்தரு பங்கயத் தண்ணல் தன்னிடை
வலிதவர் பெற்றிடு வரத்தின் தன்மையால். - 63
1609 - கண்டமும் மொய்ம்பருங் கழலும் வாளியால்
துண்டம தாயினர் தொக்கு மேயினார்
சண்டவெங் கால்பொரத் தணந்து சிந்திய
தெண்டிரை நெடும்புனல் மீட்டும் சேர்தல்போல். - 64
1610 - பன்னரும் திறலினான் பகழி பாய்தொறும்
மன்னவன் மைந்தர்கள் மாண்டு தோன்றுவார்
மின்னது வந்துழி விளிந்து வெவ்விருள்
தொன்னிலை எய்தியே தொடர்ந்து தோன்றல்போல். - 65
1611 - கையொடு சென்னியும் கழலும் மார்பமும்
கொய்யுமுன் தொன்மைபோல் கூட மைந்தர்கள்
ஒய்யென எழுந்தனர் உலகில் தேர்வுறில்
செய்யுறு தவத்தினும் சிறப்புண் டாங்கொலோ. - 66
1612 - கண்டனன் விசயனாங் காளை ஆவிபோய்த்
துண்டம தாகியே துஞ்சி னா£¢எழீஇ
மண்டமர் புரிவது மனத்தின் விம்மிதம்
கொண்டனன் பொருதிறல் குறைந்து நின்றனன். - 67
1613 - அகத்திடை விம்மிதம் அடைந்து நின்றுளான்
திகைத்தனன் வரங்கொல்இச் செய்கை என்றனன்
புகைத்தென உயிர்த்தனன் பொங்கு கின்றனன்
நகைத்தனன் இவர்செயல் நன்று நன்றெனா. - 68
1614 - தொட்டிடு பகழியால் துணிந்து போரிடைப்
பட்டவர் எழுந்தனர் பகழி பின்னரும்
விட்டிடின் ஆவதென் மேவ லார்தமை
அட்டிடல் இன்றெனக் கரிது போலுமால். - 69
1615 - அன்னவர் தமையடல் அரிய தாமெனில்
ஒன்னலர் படையொடும் ஒன்றிச் சுற்றியே
பன்னெடு நாளமர் பயின்று நிற்பினும்
என்னுயிர் கொள்வது மௌ¤தன் றாலரோ. - 70
1616 - வென்றிலன் இவர்தமை வென்றி லேன்எனில்
சென்றெதிர் மாற்றலர் செருவில் வன்மைபோய்ப்
பொன்றுதல் பெற்றிலன் பொதுவ னோர்மகன்
கொன்றிடும் உலவையின் கொள்கை யாயினேன். - 71
1617 - பற்றலர் தங்களைப் படுப்பன் யானெனா
வெற்றிகொள் வானென விளம்பி வந்தயான்
செற்றில னாகியே சிலையுங் கையுமாய்க்
கொற்றவ னோடுபோய்க் கூட லாகுமோ. - 72
1618 - மாற்றலர் வரத்தினர் மாயப் பான்மையர்
ஆற்றவும் வலியரென் றறைந்து மீள்வனேல்
தோற்றனன் என்றெமர் துறப்பர் அன்றியும்
போற்றலர் விடுவர்கொல் புறந்தந் தேகவும். - 73
1619 - பித்தரின் மயங்கிலன் உணர்வும் பெற்றுளேன்
எய்த்திலன் வலியொடும் இன்னும் நின்றனன்
வைத்திலன் புகழினை வசையொன் றெய்துவேன்
செத்திலன் இருந்தனன் செயலற் றேனென்றான். - 74
1620 - விண்டினை மாறுகொள் விசயன் இவ்வகை
அண்டரும் துன்புகொண் டகத்தி லுன்னுழி
உண்டொரு செய்கையான் உய்யு மாறெனக்
கண்டனன் துயர்க்கடல் கடக்கும் பெற்றியான். - 75
1621 - ஆறுமா முகப்பிரான் அன்றி இவ்விடை
வேறொரு துணையிலை மெய்மை ஈதெனத்
தேறினன் அவனடி சிந்தை செய்தனன்
மாறிழி அருவிநீர் வழியும் கண்ணினான். - 76
1622 - அண்ணலங் குமரனை அகத்துட் கொண்டுழி
எண்ணிய எண்ணியாங் கெவர்க்கும் நல்குவோன்
விண்ணிடை ஒல்லையின் விசய னென்பவன்
கண்ணிடைத் தோன்றியே கழறல் மேயினான். - 77
1623 - வேறு
கேளிது விசய ஒன்னார் கிளையினை முடிப்பான் உன்னித்
தாளொடு முடியுங் கையும் தடிந்தனை தடிந்த தெல்லாம்
மீளவும் தோன்றிற் றன்றே மேவலர் பெற்ற தோராய்
நீளமர் வயமின் றாகி நின்றனை தளரேல் நெஞ்சம். - 78
1624 - ஏற்றபல் படைகள் தம்மால் இவர்தமைப் பன்னாள் நின்று
வீற்றுவீற் றடுவை யேனும் விளிகிலர் ஒருங்கு வல்லே
ஆற்றல்சேர் படையொன் றுய்க்கின் அனைவரும் முடிவர் ஈது
நாற்றலை யுடையோன் தொன்னாள் நல்கிய வரம தென்றான். - 79
1625 - என்றிவை உரைத்து வள்ளல் இம்பரை அளித்தோன் சென்னி
ஒன்றினை வாங்கி ஏனோர் உளமயல் அகற்றும் எந்தை
வென்றிகொள் படையை நல்கி விசயனுக் களித்து மேவா£¢
பொன்றிட இதனை இன்னே விடுகெனப் புகன்று போனான். - 80
1626 - தேர்ந்தனன் முருகன் வாய்மை சிறந்தனன் மகிழ்ச்சி உள்ளங்
கூர்ந்தனன் ஞமலி யூர்தி கொற்றவெம் படையை வாங்கி
ஆர்ந்தநல் லன்பில் பூசை ஆற்றினன் அதனை யெல்லாம்
ஓர்ந்தனன் அவுணர் தம்முள் ஒருவன் உன்மத்தன் என்போன். - 81
1627 - ஈண்டிவன் நமர்கள் எல்லாம் இசைவரப் படைய தொன்றால்
மாண்டிட அடுவான் போலும் மற்றதன் முன்னர் மாயம்
பூண்டிடு படையால் இன்னோற் சிறுதியைப் புரிவ னென்னா
ஆண்டுதன் னுளத்தில் உன்னி அவுணனப் படையை விட்டான். - 82
1628 - மாயவள் படையை முன்னம் விடுதலும் வள்ளல் நோக்கித்
தீயுமிழ் கின்ற காரி திண்படை செலுத்தச் சென்று
பாயிருள் பரந்து நேரும் படையினைத் தடிந்து முப்பால்
ஆயிரர் தமையுஞ் சுற்றிஅடல் செய்து மீண்ட தன்றே. - 83
1629 - ஒருகணப் பொழுதின் முன்னர் ஒராயிர முப்பா லோருஞ்
செருநிலத் தவிந்தா ரன்ன செய்கையை விசயன் காணா
முருகனைப் பரவி நின்றான் முழுமதி தன்னைக் கண்ட
பொருதிரைப் புணரி யென்ன ஆர்த்தனர் பூத ரெல்லாம். - 84
1630 - ஏமுறும் அவுணர் தானை இறந்திடா தெஞ்சிற் றெல்லாம்
காமரு திசைகள் முற்றும் கதுமென விரிந்து போன
மாமலர் பொழிந்தார் விண்ணோர் மற்றிவை அனைத்தும் நாடிக்
கோமகன் முன்பு சென்றார் குரைகழல் அவுணர் தூதர். - 85
1631 - வெய்யவன் பகைவன் தாதை வியன்கழல் பணிந்து தூதர்
ஐயநின் மைந்தர் முப்பா லாயிரர் தம்மை யெல்லாம்
ஒய்யென இலக்கர் தம்முள் ஒருவனே முடித்தான் ஈது
பொய்யல சரத மென்னப் பொருக்கெனப் புலம்பி வீழ்ந்தான். - 86
1632 - வீழ்ந்தனன் பதைத்துச் சோர்ந்து வெய்துயிர்த் தசைந்து விம்மிப்
போழ்ந்திட நிலத்தைக் கையாற் புடைத்தனன் புரண்டு வெற்பில்
தாழ்ந்திடு மருவி யென்ன இழிபுனல் தாரை பொங்கச்
சூழ்ந்தார் அரற்ற மன்னன் துன்பமேல் துன்பம் வைத்தான். - 87
1633 - அன்னதோ ரெல்லை மைந்தர் அனைவரும் முடிந்த தோரா
மன்னவன் இசைமை நீங்கி மாயிருந் தவிசில் தப்பி
இன்னலின் மறிந்த தென்ன இரவியங் கடவுள் மேல்பால்
பொன்னெடுங் கிரியின் எய்தி ஔ¤யிலன் புணரி வீழ்ந்தான். - 88
ஆகத் திருவிருத்தம் - 1633
------
10. தருமகோபன் வதைப் படலம்* (1634 - 1713)
( * நாலாநாள் இரவு தருமகோபன் வதை நிகழந்ததாகும்.)1634 - முடிவுறு புதல்வரை முன்னி முன்னியே
இடரினை உழந்திடும் இறைவன் தன்முனம்
படியறு நல்லறப் பகைஞன் போந்திடா
அடிமுறை பணிந்துநின் றறைதல் மேயினான். - 1
1635 - மன்னவர் மன்னநீ மனத்தில் இவ்வகை
இன்னல்செய் தாற்றவும் இரங்கு வாயெனில்
துன்னலர் மகிழுவா¢ சுரர்கள் யாவரும்
நன்னகை செய்குவர் நமரும் வௌ¢குவா£¢. - 2
1636 - முந்துறு மாற்றலர் முனைவெம் போரிடைத்
தந்தையர் விளியினுந் தமர்கண் மாயினும்
மைந்தர்கள் விளியினும் மான வீரர்கள்
சிந்தைகொள் வன்மையிற் சிறிதுந் தீர்வரோ. - 3
1637 - ஏற்றிகல் புரிந்திடும் எமரை வௌவிய
கூற்றுளன் தொன்மைபோற் படைத்துக் கூட்டுவான்
நாற்றிசை முகனுளன் நாமு ளோம்நம
தாற்றலும் இருந்துள அயர்வும் வேண்டுமோ. - 4
1638 - அந்தமில் வெறுக்கையும் அழிவில் ஆயுளும்
நந்தலில் வன்மையும் நடாத்தும் ஆணையும்
இந்திர ஞாலமும் இருக்க எந்தைநீ
புந்தியில் அமரர்போற் புலம்ப லாகுமோ. - 5
1639 - விண்ணவர் சிறையினை விடாது வைத்திடக்
கண்ணிய விரதமுங் கழிந்த மானமும்
நண்ணலர் தங்களை நலியுந் தன்மையும்
எண்ணலை இடையறா திடுக்கண் போற்றுமோ. - 6
1640 - மாற்றல ராகிய அமரர் மானவர்
கோற்றொடி மடந்தையர் குழவிப் பாலகர்
ஆற்றிடு துயருனக் காவ தன்றெனாத்
தேற்றினன் அமைச்சருள் தீமை மிக்குளான். - 7
1641 - வேறு
ஆற்றிடு தருமம் நீத்த அமைச்சன்வந் தினைய வாற்றால்
தேற்றிடு கின்ற காலைச் சிறிதுதன் அவலம் நீத்துக்
கூற்றென யானே சென்று கூடலர் தொகையை விண்மேல்
ஏற்றுவ னென்று சீறி அவுணர்கோன் எழுந்து சென்றான். - 8
1642 - சென்றிடு மன்னர் மன்னன் சேவடி முறையிற் றாழ
இன்றிவண் இருத்தி யானும் அனிகமும் இன்னே யேகி
வன்றிறற் பகைஞர் தம்மை வளைத்துவல் விரைந்து சாடி
வென்றியுற் றிடுவ னென்ன வேண்டினன் அமைச்சர் மேலோன். - 9
1643 - அறந்தவிர் அமைச்சன் வேண்ட அவுணர்கள் முதல்வன் மீண்டு
சிறந்திடு மடங்க லாற்றுஞ் செம்பொன்செய் பீட மேவி
உறைந்தனன் அனைய காலை ஒல்லையில் விடைகொண் டேகிப்
புறந்தனில் வந்து வல்லே போர்ப்பெருங் கோலங் கொண்டான். - 10
1644 - போதகத் தரசு தம்முட் புண்டரீ கப்பேர் பெற்ற
மாதிரக் களிற்றை அன்னோன் வல்லையிற் கொணர்த்தி ரென்னாத்
தூதுவர்க் குரைத்த லோடுந் துண்ணென அனைய ரோடி
மேதகு நிகளம் நீக்கி விடுத்துமுன் னுய்த்து நின்றார். - 11
1645 - புந்தியிற் குறிப்பிற் செல்லும் புண்டரீ கப்பேர் பெற்ற
தந்தியந் தலைவன் மீது தருமத்தை வெகுளும் வெய்யோன்
அந்தமில் படைக ளேந்தி அமைச்சர்கள் பலருஞ் சூழ
இந்திரன் இவன்கொ லென்ன ஏறினன் எழிலி போல்வான். - 12
1646 - அறைந்தன படகம் பேரி ஆர்த்தன விரலை தீபஞ்
செறிந்தன கரிதேர் வாசி தெழித்தன அவுணர் தானை
நிறைந்தன பதாகை ஈட்டம் நெருங்கிய கவிகை வானம்
மறைந்தன எழுந்த பூழி மாதிரம் இருண்ட அன்றே. - 13
1647 - எண்ணிலா வௌ¢ள மாவும் இபங்களும் இவுளித் தேரும்
வெண்ணிலா எயிற்றுச் செங்கண் வீரரும் புடையிற் சுற்றப்
புண்ணுலா முகத்துப் பேழ்வாய்ப் புண்டரீ கத்தை யூர்ந்தே
அண்ணல்மா நகரம் நீங்கிப் போயினன் அறத்தை நீத்தோன். - 14
1648 - அண்டா¢மற் றிதனை நோக்கி அம்மவோ அறத்தை நீத்த
கண்டகன் சிலையொன் றேந்தி மாதிரக் களிறு தன்னுள்
புண்டரீ கத்தை ஊர்ந்து பொருமெனில் இவனை யாற்றல்
கொண்டிடல் அரிதாம் என்ன இரங்கினர் குலைந்த மெய்யார். - 15
1649 - ஆவணம் அனந்தம் நீங்கி அனிகமும் தானு மேகி
மூவிரு முகத்து வள்ளல் முழுதருள் பெற்ற சேனை
காவலன் வெகுண்டு நின்ற களத்திடை அணுக லோடும்
மேவலர் எதிர்ந்தார் என்னா வியன்கழற் பூதர் ஆர்த்தார். - 16
1650 - பொற்றைக ளேந்தி ஆர்க்கும் பூதரை இலக்கர் தம்மைச்
சுற்றுறு துணையி னோரைத் தொல்லைநாள் நகரஞ் செற்ற
கொற்றவன் தன்னை அன்னோர் வலியினைக் கொடியோன் நோக்கி
இற்றது கொல்லோ நந்தம் வாழ்க்கையென் றிரங்கிச் சொல்வான். - 17
1651 - வேறு
பஞைகர்க ளாயினோர் பரவித் தன்மிசை
இகல்செய வருவரேல் இரங்கி ஏங்குதல்
மிகுபழி இங்கிது வினவின் மானவா¢
நகைசெய்வர் பொருவதே நன்று போலுமால். - 18
1651 - எச்சமில் சேனையும் படையும் ஈண்டிய
கைச்சிலை இருந்தது கரியும் ஒன்றுள
தச்சுறு கின்றதென் ஆவ தாகுமால்
பொச்சையர் கடன்நனி பொருமல் கொள்வதே. - 19
1653 - வெல்லினும் செறுநர்முன் வெரிக தீயினும்
அல்லது விளியினு மாக யானினி
மல்லலம் படையொடு மாற்ற லார்மிசைச்
செல்லுவ தன்றியே இரங்கல் சீரிதோ. - 20
1654 - வேறு
கண்ணுறு படையை நோக்கிக் கருத்திடைக் கவலை எய்தி
எண்ணிநின் றயர்தல் வீரர் இயற்கைய தாமோ பின்னர்
நண்ணிய வாறு நண்ண நானினித் தளரேன் என்னாத்
துண்ணெனத் தேறிச் சென்றான் சூரனுக் கமைச்சன் ஆனோன். - 21
1655 - இங்கிது பொழுது தன்னில் எங்கணும் இருட்டு ழாஞ்சூழ்
கங்குலும் பகலும் மாலைக் காலமும் கலந்த தென்ன
அங்கவன் தானை வௌ¢ளத் தவுணரும் பூதர் தாமும்
பொங்கொலிக் கடல்போல் ஆர்த்துப் பொள்ளென அமரின் ஏற்றார். - 22
1656 - வேறு
தலைப்பட எழுக்களில் தண்டில் தாக்கினார்
இலக்குற நேமிகள் கணிச்சி ஏவினார்
மலைக்குவை எறிந்தனர் மரங்கள் வீசினார்
சிலைத்தனர் வயிர்துடி செறிவெம் பூதரே. - 23
1657 - வில்லுமிழ் சரத்தினில் வேலில் வாளினில்
கல்லினில் நாஞ்சிலில் கழுமுள் ஆயதில்
வல்லையந் தனில்உடை வாளில் வச்சிரச்
செல்லினின் நுதிகெழு திகிரி நேமியில். - 24
1658 - தண்டினில் தோமரம் தன்னில் சங்கினில்
பிண்டிபா லத்தினில் ஆற்றப் பீடுமேல்
கொண்டதோர் எழுவினில் பிறவில் கொட்புறா
அண்டரும் அவுணரும் அணிந்து போர்செய்தார். - 25
1659 - அயர்ப்புறு தானவர் அமைச்சர் யாவரும்
வியர்ப்பினில் வந்திடு வெங்கண் வீரரும்
வயப்பெரும் சிலையினை வணக்கி வாளிதூய்ப்
புயற்படு பெயலெனப் பொழிந்து போர்செய்தார். - 26
1660 - பெய்வதொத் தெங்கணும் பெரிதும் வீழ்தலால்
உய்வதெத் தன்மையென் றுலகம் அச்சுற
இவ்வகைத் திறத்தினர் இரண்டு சாரினும்
தெய்வதப் படைகளும் மரபில் சிந்தினார். - 27
1661 - மாய்ந்தனர் பூதரும் வரம்பில் தானவர்
சாய்ந்தனர் கரங்களும் தலையும் சிந்தினர்
வீந்தன கரிபா¤ விளிந்த தேர்நிரை
பாய்ந்தன செம்புனல் பரந்த கூளியே. - 28
1662 - நொந்தனர் இலக்கரும் நோன்மை நீங்கினார்
முந்துறும் அமைச்சர்போ£¢ முயன்று நின்றனர்
அந்திலவ் வேலையில் அதனை நோக்கியே
வெந்திறல் வெய்யவன் வெகுண்டு சென்றனன். - 29
1663 - இடித்தென உரப்பினன் இமைப்பில் எய்திமுன்
வடித்திடு சிலையினை வாங்கித் தானவர்
முடித்தலை பனித்திட முழுதும் யாக்கைகள்
பொடித்தென வழுத்தினன் புங்க வாளியே. - 30
1664 - நீண்டதோர் சிலீமுகம் நெடிது மேலவன்
தூண்டிய காலையில் துணிந்த கையினர்
வீண்டிடு தலையினர் விளிந்த மெய்யினர்
மாண்டனர் அமைச்சர்கள் வறந்த தானையே. - 31
1665 - துறக்கம தலைத்திடு தொலைவில் தானவர்
மறுக்கமுற் றசைந்தனர் வந்து போர்செய
விறற்படு சாரதர் வெகுண்டு மேற்செலா
இறப்புறு வரைபல எடுத்து வீசினார். - 32
1666 - வீசிய வேலையில் வெதும்பி விம்மியே
மாசுறு தானவர் வாகை சிந்தியே
ஆசறு போனகத் தட்டில் சூடுறு
பூசைய தாமென உடைந்து போயினார். - 33
1667 - இடைந்தனர் ஆகியே அவுணர் யாவரும்
உடைந்தனர் போதலும் உலப்பில் பூதர்கள்
படர்ந்தனர் தெழித்தனர் பையுள் மாலையில்
தொர்ந்தனர் பற்றினர் தொலைத்தல் மேயினார். - 34
1668 - கண்டனன் ஆங்கவை அறத்தைக் காய்பவன்
புண்டிகழ்ந் தனையகட் பூதர் மேற்செலா
விண்டொடர் பெருந்தனு வாங்கி வெவ்வுயிர்
உண்டிடு சரந்தெரீஇ உலப்பின் றேவினான். - 35
1669 - ஏவிய நோன்கணை யாவும் ஏற்றெழு
தீவிழிப் பூதர்பால் சேறல் இந்திரன்
வாவிய வூர்திகள் வாரி நேமியில்
தூவிய துள்ளியின் தோற்றம் போன்றதே. - 36
1670 - கைச்சிலை உகைத்திடு கணைகள் யாவையும்
நச்சென விடுத்தலும் நடுங்கிப் பூதர்க்ள்
அச்சுற மெலிந்தனர் அமரர் கோமகன்
வச்சிரம் எய்திய வரைகள் மானவே. - 37
1671 - வேறு
வானவர்கள் கோமகன் வயக்களிறி தென்னத்
தானவர்கள் போற்றுதரு மப்பகைஞன் ஊர்ந்த
ஆனையது பூதர்தமை அங்கைகொடு வாரி
ஊனொடுயிர் சிந்திட உடற்றியதை அன்றே. - 38
1672 - கோடதொரு நான்குகொடு குத்தியது தாளின்
ஊடுறமி தித்தவண் உழக்கியது வாலால்
பாடுற எறிந்தது பனைக்கைய துகொண்டே
வீடுறமுன் எற்றியது வீரர்படை தன்னை. - 39
1673 - மாறகலும் வெங்கரியிவ் வாறடல்செய் காலை
வீறுகெழு சாரதர்கள் வெற்புமிசை வீசி
ஊறுசெய அங்கதின் உலப்பில்கணை ஓச்சி
நாறுநடு வார்தொகையின் நண்ணினர்கள் வீரா¢. - 40
1674 - காயமுழு தொன்றிய கணக்கில்படை யாவும்
மூயதவ ளக்களிறு முற்றுமெழு சோரி
பாயவணை கிற்பது பணிக்குழுவு கவ்வச்
சேயபணி சுற்றமறை திங்கள்படர்ந் தென்ன. - 41
1675 - வெந்திறல்கொள் புண்டரிக வேழமிது தன்மை
நொந்ததெனி னுந்தனது நோன்மையழி யாதாய்
முந்தியிடு சேனையை முருக்கவது நோக்கித்
தந்திநிரை சாரதர் தமைத்தடித லுற்ற. - 42
1676 - கண்டைகெழு தாரினொலி கல்லென விரைப்ப
அண்டமுடைந் தென்னநனி ஆர்த்தவுணன் ஊரும்
புண்டரிக வெங்களிறு போர்த்தொழல் இயற்ற
உண்டைகெழு பூதநிரை ஒய்யென உடைந்த. - 43
1677 - தண்டமுடை கின்றசெயல் தன்னைவிறல் வெய்யோன்
கண்டனன் அழன்றுதன கார்முகம தொன்று
கொண்டனன் எடுத்தது குனித்தழலின் வாளி
அண்டர்பகை யூர்தியின் அடைச்சிநனி ஆர்த்தான். - 44
1678 - ஆர்த்தடரும் வேலையில் அடற்களிறும் அங்கோர்
மூர்த்தமயர் வுற்றது முனிந்தவுணர் கோமான்
பார்த்திறையின் நூறுகணை பாலமிசை ஓச்சத்
தேர்த்துலவு சோரியொடு தேர்மிசை இருந்தான். - 45
1679 - இருந்ததிற லோன்மிசையொ ரெ·கமது வாங்கி
விரைந்துதரு மப்பகை விடுத்திடலும் நோக்கி
மருந்தெனமுன் வந்துதிறல் வாசவன்அவ் வைவேல்
முரிந்துதுணி யாகவொர் முரட்கணை தொடுத்தான். - 46
1680 - மத்தகய மன்னதிறல் வாசவன் விரைந்தே
பொத்திரம தொன்றுகொடு போரயில் முருக்கிக்
குத்திரம தொன்றவுணர் கூவிவெருக் கொள்ள
அத்திரமென் மாரிகொட வன்றனை மறைத்தான். - 47
1681 - மறைத்தலும் மறப்பகைஞன் வாளிமழை தூவிக்
குறைத்தனன் அளப்பில்கணை ஏனவை குழீஇப்போய்ச்
செறுத்தவன தாகமிசை சென்றுசெருக் கின்றி
விறற்கவச நக்குபு விளிந்துபுடை வீழ்ந்த. - 48
1682 - வேறு
மீண்ட வேலையின் வெய்ய சூழச்சியோன்
மாண்டு ளானென வாகை வீரன்மேல்
பூண்ட யங்குறு பொன்னந் தண்டமொன்
றீண்ட வீசினான் யாரும் அஞ்சவே. - 49
1683 - எழுவின் நீள்கதை இமைப்பில் சென்றவன்
பழுவின் மார்பகம் பட்ட வேலையின்
விழும நோயுயு£ விம்மி னானரோ
வழுவை மேலையோன் வயத்தின் மேவவே. - 50
1684 - கருத்தில் நல்லறங் காய்ந்த வன்செயல்
தெரித்து நின்றிடும் திறல்கொள் வாகினான்
உருத்து நோக்கியே உரையும் தன்னுளக்
கருத்தும் பிற்படக் கடிது செல்லுவான். - 51
1685 - நின்னில் ஐயநின் நேர லன்புயந்
தன்னை யாத்துநிற் றருவம் யாமெனப்
பன்னு மானவர் பௌவம் நீத்தொராய்
முன்னு தானவர் முதல்வன் நேர்புக. - 52
1686 - எதி£¤ லாமையால் யாரும் அஞ்சவே
அதிரு நோன்கழல் ஆடல் மொய்ம்பனை
மதியில் தானவன் மழைகள் மின்குழுச்
சிதறி யென்னத்தீச் சிந்த நோக்கினான். - 53
1687 - நோக்கி நீகொலோ நோன்மை யோடெனைத்
தாக்கு மாறுவந் தனையை யானுனை
யாக்கை சிந்திய அமைந்து நின்றனன்
காக்க வல்லையேல் காத்திநீ யென்றான். - 54
1688 - மொழியும் ஆடல்சேர் மொய்ம்பன் கேட்டிது
விழுமி தாரினும் வெற்றி பெற்றனன்
அழிவ னேநினக் காடல் கொளவன்யான்
கழியை நீந்துதல் கடலில் பாடதோ. - 55
1689 - மற்றுன் வன்மையும் மதர்ப்பும் நின்பெருங்
கொற்ற மானதும் வரத்தின் கொள்கையும்
இற்றை வைகலே ஈறு செய்வன்நீ
கற்ற போரினைக் கடிது செய்கென. - 56
1690 - வேறு
கானக்களி வரிபம்பிய கமழ்தார்புனை அகலம்
வானக்கிறை தனதூர்திகள் மரபோடுசென் றிசைக்கும்
தீனக்குர லெனநாணொலி திசையெங்கணும் செல்லக்
கூனற்சிலை தனையொல்லையில் தருமப்பகை குளித்தான். - 57
1691 - மற்கொண்டிடும் மிடல்மொய்ம்புள மதியில்லவன் ஒருபால்
எற்கொண்டேழு களிற்றின்மிசைச் சிலைவாங்கினன் இருத்தல்
கற்கொண்டதொர் வௌ¢ளிக்கிரி மிசைகாணிய கணைதூய்
விற்கொண்டொரு பசுங்கார்முகில் மேவுற்றென லாமால். - 58
1692 - அதுவன்றியும் அவனுந்திய அடுவெங்களி றலர்தண்
கதிரின்குழு முழுதொன்றுபு ககனந்தனில் எழுசெம்
மதியந்தன தொருபங்கையொர் வயவெம்பணி நுகரப்
புதிதொண்பிறை யதுவொன்றிடை புகநின்றது பொருவும். - 59
1693 - முந்தேயவன் எடுக்கின்றதொர் முரண்வெஞ்சிலை குனியாக்
கந்தேயென நிமிர்தோளுடைக் கடுஞ்சூழ்ச்சியன் ஒழுகும்
செந்தேனுறழ் குணத்திற்சரம் செலுத்தாத்திறன் மொய்ம்பற்
கந்தேயுமெய் வௌ¤யின்றென அவனைக்கரந் தார்த்தான். - 60
1694 - கரக்கின்றவன் விடுவாளிகள் கந்தன்படை ஞன்மெய்
அரக்குன்றுபட் டயின்மாய்ந்தவை அயல்வீழந்தன கண்டான்
இரக்கின்றவர்க் குதவான்கரந் தேற்காத்திரு வினர்பால்
பரக்கும்பொரு ளுகுத்தன்னதிற் பயன்பெற்றிலன் எனவே. - 61
1695 - அயில்சிந்திட முரண்வெங்கணை அயல்வீழ்தலும் அடுபோர்
முயலுந்திறல் கெழுமொய்ம்பினன் முனிந்தெ·கமொன் றெடுத்துப்
புயலன்னதொர் வடிவத்தவன் பூணாருநெஞ் செறியச்
செயலன்னது கண்டாங்கெதிர் தீவாளிகள் உய்த்தான். - 62
1696 - உய்க்குஞ்சுடர் வடிவாளிகள் ஒருங்கேதவ முருக்கி
மைக்கொண்டலை நிகர்மேனியன் மனந்துண்ணென அணுகி
மெய்க்கொண்டதொர் நெடுஞ்சாலிகை விளியும்படி வீட்டிப்
புக்குள்ளுற மூழ்கித்தனி புறம்போந்தது விரைவில். - 63
1697 - புறம்போதலும் இகல்மந்திரி பொருமிப்புகை உயிர்த்து
நிறம்போகிய செந்நீரொடு நினைகின்றி லன்இருப்ப
மறம்போகிய தனிவெங்கரி மகிணன்செய லோரா
அறம்போகிய மனத்தான்றனை அடவுற்றதை யன்றே. - 64
1698 - முந்துற்றிடு கரிதிண்டிறல் மொய்ம்பன்னி ரதத்தைத்
தந்தத்தொகை கொடுதாக்குபு சமரத்திடை இட்ட
கந்தொத்ததொ ரெழுவொன்றது கைக்கொண்டவன் வலவன்
சிந்தப்புடைத் ததுகாண்டலுஞ் செந்தீயெனக் கனன்றான். - 65
1699 - வையந்தன தீறாதலும் வறிதேயயல் பாயா
மெய்யங்கைய தொன்றாலவன்மேல்வந்திடும் வேழக்
கையங்குறப் பற்றாக்கடங் கலுழுங்கவுண் மோதி
ஒய்யென்றெடுத் தப்பாலையின் உலகம்புக உய்த்தான். - 66
1700 - எறிந்தானெடுத் ததுகாலையில் இபம்விண்ணிடை யேகிப்
பிறிந்தாகவம் இயற்றெல்லையில் பெயர்காலையின அமைச்சன்
அறிந்தான்கயம் இழந்தேன்கொலென் றயராவத னோடு
மறிந்தான்புனை கலந்தன்னொடு மணிமாமுடி சிந்த. - 67
1701 - வீழ்கின்றதொர் களிறாற்றவும் வெருவிப்பதை பதைத்து
மாழ்கின்றது புடைபோகிய மதியில்லவன் எழுந்தே
காழ்கொண்டதொர் கதையொன்றுதன் கைக்கொண்டுரத் தெறியத்
தாழ்கொண்டதொர் கரத்திற்கடுத் தலைகொண்டது தறித்தான். - 68
1702 - வலிகொண்டதொர் தனித்தண்டது மடிவாதலும் மற்றோர்
குலிசந்தனை விடவாங்கெதிர் குறுகக்கரம் பற்றிப்
புலிகண்டதொர் கலைமானெதிர் புக்காலென அவுணர்
தலைவன்றனை அடல்மொய்ம்பினன் தடமார்பிடைப் புடைத்தான். - 69
1703 - மூளாவுருத் தறைகின்றுழி முதலற்றிடு தருப்போல்
வாளாபுவி மிசைவீழதலும் வயமிக்கவன் ஒருகால்
தாளாலுதைத் தனன்அத்துணை தருமப்பகை வீழ்ந்தான்
கேளாகிய அவுணப்படை கெட்டோடிய தன்றே. - 70
1704 - வேறு
விழுந்தயர் புண்டரீக வெங்கரி உயிர்த்து மெல்ல
எழுந்தது தரும கோபன் இறந்தபா டதனை நோக்கி
அழுந்திடும் இன்னல் வேலைக் ககன்கரை கிடைத்தா லென்னத்
தொழுந்திறல் வீரவாகுத் தலைவனை நேர்ந்து சொல்லும். - 71
1705 - செய்யலை வெகுளி எந்தாய் சிறியனை அருளிக் கேண்மோ
பொய்யென நினையல் வாழி புண்டரீ கப்பேர் உள்ளேன்
வையகம் போற்றுஞ் சீரேன் மாதிரங் காவல் கொண்டேன்
கையனித் தரும கோபன் கடுஞ்சிறைப் பட்டேன் பன்னாள். - 72
1706 - வன்றளை மூழ்கும் தீயென் மதியிலா அமைச்சற் போற்றி
இன்றுகா றூர்தியானேன் ஏவின பலவும் செய்தேன்
ஒன்றுநான் மறுத்த துண்டேல் உயிர்குடித் தூனும்வல்லே
தின்றிடு மென்றே அஞ்சித் திரிநதனன் செயல்வே றில்லேன். - 73
1707 - எட்டுள திசையில் வைகும் அரக்கர்தன் இகழ்ந்தா ரென்று
மட்டறு வெகுளி வீங்கி மற்றெனை உர்ந்து தொன்னாள்
கிட்டினன் அவரை யெல்லாங் கிளையொடு முடித்தோன் தன்னை
அட்டனை நீயே யல்லால் அவனையார் அடுதற் பாலா£¢. - 74
1708 - புந்தியில் அறத்தைக் காயும் புரைநெறி அமைச்சன் தன்னை
வந்துநீ அடுத லாலே வானவர் கவலை தீர்ந்தார்
உய்ந்தனன் சிறந்தேன் எற்கும் ஊதியம் இதன்மேல் உண்டோ
முந்துறு தளையின் நீங்கி முத்திபெற் றாரை ஒத்தேன். - 75
1709 - தீதுகொள் பவத்தின் நீரால் அவுணர்தஞ் சிறையிற் புக்கேன்
மாதவஞ் செய்தேன் கொல்லோ மற்றுனை எதிரப் பெற்றேன்
ஆதலின் உய்ந்தேன் என்றன் ஆசையை அளிக்கு மாற்றாற்
போதுவன் தமியன் என்று தொழுதது புண்ட ரீகம். - 76
1710 - புண்டரீ கத்தின் வாய்மை பொருக்கென வினவு வீரன்
அண்டரும் உவகை பொங்க அகலுதி இருக்கைக் கென்ன
விண்டொடர் நெறியிற் சென்றாங் கவுணர்க்கு வெருவ லின்றிப்
பண்டமர் திசையின் நண்ணிப் பரிவற வைகிற் றன்றே. - 77
1711 - மாதிரங் காவல் பூண்ட மதக்கறிற் றரசு செல்ல
ஆதியில் அறத்தைக் காயும் அழிதகன் இறுதி நோக்கிப்
பூதர்கள் ஆர்த்து வீரன் புயவலி புகழ்த லுற்றார்
தூதுவர் அதுகண் டோடிச் சூரனைத் தொழுது சொல்வார். - 78
1712 - தண்டக முதல்வ கேண்மோ தானையும் தானு மேகி
மண்டமா¢ புரிந்து வீர வாகுவால் அமைச்சன் மாய்ந்தான்
உண்டையும் அழித லுற்ற உங்குவன் ஊர்ந்து சென்ற
புண்டரீ கப்பேர் பெற்ற தந்தியும் போய தென்றார். - 79
1713 - வேறு
பழுது டைத்திறன் மந்திரி பட்டசொல் வினவி
முழுது சுற்றிய இன்னலம் புணரியின் மூழ்கி
அழுது யிர்த்துமெய் யுயிர்பதை பதைத்திட அங்கண்
எழுது சித்திரம் பாவைபோல்போல் உணா¢வுபோய் இருந்தான். - 80
ஆகத் திருவிருத்தம் - 1713
------
11. பானுகோபன் வதைப் படம்* (1714 - 1922)
(* ஐந்தாநாள் பானுகோபன் வதை நிகழ்ந்ததாகும்.)1714 - எள்ளல் செய்தெனைப் பற்றியே சிறையகத் திட்ட
கள்வன் இப்பகல் முடிந்திடும் அன்னது காண்பான்
பொள்ளெ னப்படர் வேன்எனப் புந்திகொண் டவன்போல்
ஔ¢ள ழற்கதிர் வீசியே இரவிவந் துதித்தான். - 1
1715 - சுருதி நீங்கிய அவுணர்கோன் இந்திறந் துயரம்
பெரிதும் எய்தியே இருந்துழக் கண்டனர் பெயர்ந்து
குருதி நோக்குடை ஒற்றரில் ஒருசிலர் குறுகிப்
பரிதி தன்பகை அடிபணிந் தினையன பகர்வார். - 2
1716 - முன்ன மாயமாப் படைக்கலந் தூண்டியே மொய்ம்பு
பன்னி ரண்டுளான் தூதனைப் படையொடும் படுத்துத்
தொன்னெ டுங்கடல் இட்டனை இட்டதைச் சுரர்கள்
அன்ன காலையே விளம்பினர் அறுமுகத் தவற்கே. - 3
1717 - வெங்கண் மால்கரிக் கிளையவன் ஆங்கது வினவிச்
செங்கை வேலினை ஆயிடை இருந்தனன் செலுத்த
அங்க தொல்லையின் மூவிரு புணரிகள் அகன்று
பொங்கு தூயநீர் அளக்கரின் நடுவுபுக் கதுவே. - 4
1718 - புக்க வேலையின் மாயமாப பெரும்படை புறந்தந்
தக்க ணந்தொலை வெய்திய தயர்வுயிர்த் தறிந்து
தொக்க பாரிடர் யாவரும் வீரர்தந் தொகையும்
மிக்க திண்டிறல் வாகுவும் எழுந்திவண் மீண்டார். - 6
1719 - ஆணடவ் வெல்லைவந் திறுத்திடும் வேற்படை அருளி
மீண்டு கந்தவேள் இருந்துழிப் போந்தது விரைவால்
ஈண்டிம் மாநகர் கூற்றியே செறுநர்கள் இகலின்
மூண்டு போர்செய்வான் பு£¤சையுட் புகுந்தனர் முரணால். - 6
1720 - அரண முற்றுளார் இந்நகர் அலைத்தலும் அவற்றைத்
தரணி காவலன் வினவியே தன்னயல் நின்ற
இரணி யன்றனைக் கனல்முகத் தண்ணலை ஏனை
முரணில் மக்களை அமைச்சனை விடுத்தனன் முறையால். - 7
1721 - ஆன காலையில் வந்துவந் தடுசமர் ஆற்றி
மான வேற்பற்படைப் பண்ணவன் தூதனால் மற்றை
ஏனை யோர்களால் முத்திற வீரர்கள் இறந்தார்
மீன மாய்க்கடல் புகுந்தனன் இரணியன் வெருவி. - 8
1722 - மன்னர் ன்னவன் இவையெலாம் வினவியே மனத்தில்
உன்ன ருந்துயர் வேலைபுக் காற்றலா துழந்தான்
இந்ந கர்ப்படை யாவையும் வறந்தன இன்னும்
துன்ன லார்இவண் நின்றனர் என்றிவை சொற்றார். - 9
1723 - சொற்ற வாசகம் வினவலுஞ் சூரியன் பகைஞன்
இற்ற வேகொலாம் நம்பெரும் வாழ்க்கையென் றிரங்கிச்
செற்ற மோடுதன் பெதிரெதிர் மலைந்திடச் செங்கேழ்ப்
பொற்றை யன்னதன் இருக்கையை ஒருவினன் போந்தான். - 10
1724 - போந்து கோநகர் அணுகியே துன்பொடு புணர்ந்த
வேந்தன் மாமலர் அடிகளை உச்சியின் மிலைச்சி
ஆந்த ரங்கமாம் அளியொடு முந்துநின் றவுணா¢
ஏந்தல் இம்மொழி கேண்மியா நன்கென இசைப்பான். - 11
1725 - மாயை தந்ததொல் படையினால் செறுநரை மயக்கித்
தூய நீர்க்கடல் இட்டனன் சுரரது புகல
ஆய காலையில் வேல்விடுத் தவர்தமை மீட்ட
சேயை வெல்வது கனவினும் இல்லையால் தெரியின். - 12
1726 - தெரிந்த மற்றுனக் குரைப்பதென் முற்பகற் செவ்வேல்
பொருந்து கைத்தலத் தாறுமா முகனொடு பொருது
வருந்தி வன்படை ஆற்றலும் இழந்தனை வறிதாய்
இரிந்து மற்றிவண் வருதலால் உய்ந்தனை எந்தாய். - 13
1727 - ஏற்ற தோர்சிலை இழந்தனை மானமும் இன்றித்
தோற்று வந்தனை தொல்வரத் தியற்கையும் தொலைந்தாய்
சீற்ற முற்றிலன் முருகவேள் அவன்சினஞ் செய்யின்
ஆற்று மோவெலா அண்டமும் புவனங்கள் அனைத்தும். - 14
1728 - ஆர ணன்தனை உலகொடும் உண்டுமுன் னளித்த
கார ணன்தனி ஆழியைக் களத்திடை அணிந்த
தார கன்தனை நெடியமால் வரையொடு தடிந்த
வீர வீரனை யாவரே வன்மையால் வெல்வார். - 15
1729 - புல்லி தாகிய விலங்கினைப் படுப்பவர் புதலுள்
வல்லி யந்தனக் குண்டியாய் மாய்ந்திடுங் கதைபோல்
எல்லை யில்பகல் அமரரை அலைத்திடும் யாமும்
தொல்லை நாள்வலி சிந்தியே குமரனால் தொந்தோம். - 16
1730 - கோட லுஞ்சுனைக் குவளையுங் குளவியுங் குரவும்
ஏட லர்ந்திடு நீபமும் புனைந்திடும் இளையோன்
பாட லந்திறல் உரைப்பதென் ஆங்கவன் பணித்த
ஆட லம்புயத் தண்ணலை வெல்வதும் அரிதால். - 17
1731 - நெடிது பற்பகல் செல்லினும் நிரம்புவ தொன்றை
இடைவி டாமலே முயன்றுபெற் றிடுகின்ற தியற்கை
உடல்வ ருத்தியும் தங்களால் முடிவுறா தொன்றை
முடிவு மீதெனக் கொள்வது கயவர்தம் முறையே. - 18
1732 - ஆற்றல் ந்தரை இழந்தனை நால்வகை அனிகத்
தேற்றம் அற்றனை என்னுடன் ஒருவன்நீ இருந்தாய்
மேற்றி கழந்தநின் குலத்தினை வேரொடு வீட்டக்
கூற்றம் வந்ததும் உணர்கிலை இகலைமேற் கொண்டாய். - 19
1733 - வெஞ்ச மஞ்செய வல்லவர் கிடைத்திடின் மிகவும்
நெஞ்ச கந்தளிர்ப் பெய்துவன் நோலர் சமருக்
கஞ்சி னேன்என்று கருதலை அரசநீ இன்னும்
உஞ்சு வைகுதி யோவெனும் ஆசையால் உரைத்தேன். - 20
1734 - உறுதி ஒன்றினி மொழிகுவன் தொன்னகர் உள்ளார்
சிறைவி டுக்குதி நம்மிடைச் செற்றம தகற்றி
அறுமு கத்தவன் வந்துழி மீண்டிடும் அதற்பின்
இறுதி யில்பகல் நிலைக்குநின் பெருவளம் என்றான். - 21
1735 - வெம்பு தொல்கதிர் வெகுண்டவன் உரைத்தசொல் வினவித்
தும்பை யந்தொடை மிலைச்சிய மணிமுடி துளக்கி
மொய்ம்பும் ஆகமுங் குலுங்கிட முறுவலித் துயிர்த்து
நம்பி மந்திரச் சூழ்ச்சிநன் றாலென நவில்வான். - 22
1736 - வேறு
என்னிவை உரைத்தாய் மைந்த இன்றியான் எளிய னாகிப்
பொன்னுல குள்ள தேவர் புலம்புகொள் சிறையை நீக்கின்
மன்னவர் மன்னன் என்றே யாரெனை மதிக்கற் பாலார்
அன்னதும் அன்றி நீங்கா வசையுமொன் றடையு மாதோ. - 23
1737 - கூனொடு வெதிரே பங்கு குருடுபே ரூமை யானோர்
ஊமை தடைந்த புன்மை யாக்கையோ டொழியும் அம்மா
மானம தழிந்து தொல்லை வலியிழந் துலகில் வைகுல்
ஏனையர் வசையில் மாற்றம் எழுமையும் அகல்வ துண்டோ. - 24
1738 - தேவரும் மலர்மே லோனுஞ் செங்கண்மால் முதலா வுள்ள
ஏவரும் ஆணை போற்ற இருந்தர சியற்றல் உற்றேன்
மூவரின் முதலா முக்கண் மூர்த்திதன் வரங்கொண் டுள்ளேன்
மேவலர் சிறையை இன்று விடுவனோ விறலி லார்போல். - 25
1739 - பேரெழில் இளமை ஆற்றல் பெறலரும் வெறுக்கை வீரம்
நேரறு சுற்றம் யாக்கை யாவையும் நிலைய வன்றே
சீரெனப் பட்ட தன்றோ நிற்பது செறுநர் போரில்
ஆருயிர் விடினும் வானோர் அருஞ்சிறை விடுவ துண்டோ. - 26
1740 - இறந்திட வரினும் அல்லால் இடுக்கணொன் றுறினுந் தம்பால்
பிறந்திடு மானந் தன்னை விடுவரோ பெரிய ரானோர்
சிறந்திடும் இரண்டு நாளைச் செல்வத்தை விரும்பி யானும்
துறந்திடேன் பிடித்த கொள்கை சூரனென் றொருபேர் பெற்றேன். - 27
1741 - இன்னுமோர் ஊழி காலம் இருக்கினும் இறப்ப தல்லால்
பின்னுமிங் கமர்வ துண்டோ பிறந்தவர் இறக்கை திண்ணம்
மின்னெனும் வாழ்க்கை வேண்டி விண்ணவர்க் கஞ்சி இந்த
மன்னுயிர் சுமக்கி லேன்யான் மாயவன் றனையும் வென்றேன். - 28
1742 - அஞ்சினை போலும் மைந்த அளியநின் இருக்கை போகித்
துஞ்சுதி துஞ்ச லில்லா வரத்தினேன் தொலைவ தில்லை
நெஞ்சிடை இரங்கி யாதும் நினையலை நேர லார்மேல்
வெஞ்சமர் புரியப் போவேன் என்றனன் வெகுளி மேலான். - 29
1743 - இவ்வகை தாதை கூற இரவிதன் பகைஞன் கேளா
உய்வகை இல்லை போலும் உணர்ந்திலன் உரைத்த தொன்று
மெய்வகை விதியை யாரே வென்றவர் வினையிற் கேற்ற
செய்வகை செய்வேன் என்னாச் சிந்தைசெய் தினைய சொல்வான். - 30
1744 - அறிவொரு சிறிதும் இல்லேன் அடியனேன் மொழிந்த தீமை
இறையதும் உள்ளங் கொள்ளா தெந்தைநீ பொறுத்தி கண்டாய்
சிறியதோர் பகுவப் பாலர் தீமொழி புகன்றா ரேனும்
முறுவல்செய் திடுவ தன்றி முனிவரோ மூலப்பின் மேலோர். - 31
1745 - அத்தநீ வெகுளல் நம்மூர் அலைத்திடுங் கணங்கள் தம்மை
வித்தக வன்மை சான்ற விறற்புய னோடும் அட்டுன்
சித்தமும் மகிழு மாறு செய்குவன் விடுத்தி யென்னாக்
கைத்தலம் முகிழ்த்துத் தீயோன் கழலிணி பணிதல் செய்தான். - 32
1746 - பணிந்திடு கின்ற காலைப் பதுமைதன் கேள்வன் செற்றந்
தணிந்தனன் உவகை பெற்றான் தனயநின் உள்ளம் போர்மேல்
துணிந்தது போலும் நன்றால் துன்னலார் தம்மை வெல்வான்
அணிந்திடு தானை யோடும் அகலுதி ஐய என்றான். - 33
1747 - தொடையசை காமர் பொற்றோட் சூரிது புகல மைந்தன்
விடையது பெற்று மீண்டு மேதகு துயரி னோடு
கடிதுதன் கோயில் புக்குக் கடவுளர் பலருந் தந்த
அடல்நெடும் படைக ளெல்£ம் ஆய்ந்தனன் எடுத்தான் அன்றே. - 34
1748 - மையுறு தடங்கண் மாதர் வனமுனை திளைக்கு மார்பின்
மெய்யுறை யொன்று வீக்கி விரல்மிசைப் புட்டில் சேர்த்திக்
கையுற ஒருவில் லேந்திக் கைப்புடை கட்டி வாளி
செய்யுறும் ஆவ நாழி பின்னுற வீக்கி யாத்தான். - 35
1749 - சேமமா யுள்ள எண்ணில் படைகளுந் தேருஞ் சுற்றத்
தாமநீள் கவிகை வேந்தன் தனிமகன் கடையிற் சென்று
காமர்சூழ் கனக வையம் ஒன்றின்மேற் கடிது புக்கான்
ஏமமால் வரையின் உம்பர் எழிலியே றணைந்த தேபோல். - 36
1750 - மற்றது காலை தன்னில் வாம்பரி நிரையுந் தேருங்
கொற்றவெங் களிறும் வீரர் குழாங்களுங் குணிப்பில் வௌ¢ளஞ்
சுற்றின இயங்கள் முற்றுந் துவைத்தன துவச கோடி
செற்றின இரவி செல்லுந் தேயம தடைத்த அன்றே. - 37
1751 - தேரிடைப் புகுந்து நின்றோன் இப்பெருஞ் சேனை வௌ¢ளம்
பாரிடைக் கொண்டு நின்ற புணரியிற் பாங்கர் சூழச்
சூரிடைக் கொண்ட அன்புந் துயரமும் உளத்தை யுண்ணப்
போருடைத் திசையை நோக்கிப் பொள்ளெனப் போதல் உற்றான். - 38
1752 - வேறு
மாவாழ் தெருவு பலகோடிகள் வல்லை நீங்கி
மேவார் பொருத களத்தெல்லை விரைந்து நண்ணி
மூவா யிரரும் பிறரும்முடி வான நோக்கி
யாவா வெனவே இரங்கிக்கலுழ்ந் தல்லல் செய்வான். - 39
1753 - தாளாண்மை மிக்க அசுரன்மகன் தாங்கல் செல்லா
நீளா குலத்தின் அழிகின்றதன் நெஞ்சு தேற்றிக்
கேளா£ தொகைமேற் பெருஞ்சீற்றங் கிளர்ந்து செல்லச்
சூளால் இனைய தொருவாசகஞ் சொல்லல் உற்றான். - 40
1754 - மாசாத்தர் அன்ன வயப்பூதரை மாய வாட்டித்
தேசார்க்கும் வேலோற் கிளையோனைச் செகுத்தி டேனேல்
காசாற் பொலியும் அகல்அல்குலின் காமம் வெ·கி
வேசாக்கள் பின்செல் வறியானில் விளங்க யானே. - 41
1755 - என்னா ஒருசூள் இசையா அவனேக லோடும்
அன்னான வரவு தனைநோக்கி அவுணர் தங்கள்
மன்னாகும் நின்ற மகனாகும் மலைவ தற்குப்
பின்னார் வருவார் எனப்பூதர்கள் பேச லுற்றார். - 42
1756 - பேசுற்ற காலை அவுணப்படை பேர்ந்து சென்றாங்
காசற்ற பூதப் படைதம்மெதிர் ஆர்த்து நேரப்
பூசற் பறைகள் இயம்புற்றன பூமி பொங்கி
மாசற்ற வானைத் திசையோடு மறைந்த தன்றே. - 43
1757 - ஆர்த்ததர் கிடைத்தார் அடற்பூதர் அடுக்கல் மாரி
தூர்த்தார் படைகள் சொரிந்தார் மரந்தூவ லுற்றார்
பார்த்தார் அவுணர் எழுநாஞ்சில் பரசு தண்டஞ்
சீர்த்தா கியவில் லுமிழ்வாளி செலுத்தி விட்டார். - 44
1758 - வேறு
பொங்கு வன்மைகொள் பூதரும், வெங்கொ டுந்தொழல் வினையரும்
இங்கிவ் வாறெதிர் ஏற்றிடா, அங்கண் வெஞ்சமர் ஆற்றினார். - 45
1759 - அரிய ஒண்பகல் அல்லொடே, பொருது பா£¢மிசை புக்கபோல்
இருதி றத்தரும் இகலியே, விரவு பூசல் விளைத்தனர். - 46
1760 - உரங்கொள் பாரிடர் உய்த்திடு, மரங்கள் குன்றுகள் மாண்டிட
நெருங்கி நேர்ந்த நிசாசரர், சரங்கள் கொண்டு தடிந்தனர். - 47
1761 - விற்கொள் அம்பினை வேலினை, எற்கொள் நாஞ்சில் எழுக்கதை
வர்க்க மானதை வன்கணர், கற்க ளாற்றுகள் கண்டனர். - 48
1762 - சிவந்த பங்கிகொள் சென்னிகள், நிவந்த மொய்ம்பு நிலத்துகக்
கவிழ்ந்து ருண்டு களத்திடை, அவிந்த பூதம் அனந்தமே. - 49
1763 - நெஞ்சம் மொய்ம்பும் நெடும்பதஞ், செஞ்செ வித்தலை சிந்தியே
எஞ்சு தானவர் எண்ணிலா£¢, துஞ்சி னார்பழி துஞ்சவே. - 50
1764 - பாய்ந்த வாசிகள் பாரிடங், காய்ந்த யானைகள் காசினி
ஏய்ந்த தேர்களி யாவையும், மாய்ந்து பாரின் மறிந்தவே. - 51
1765 - சோரி தூங்கிய தொல்பிணம், மேரு விண்ணை விழுங்கின
காரி யூர்தி கருங்கொடி, ஓரி கங்கம் உலாயவே. - 52
1766 - இந்த வாறிரு பாலரும், வந்து நேர்ந்து மலைந்திடப்
புந்தி நோவறு பூதர்தம், முந்து தூசி முரிந்ததே. - 53
1767 - தாழும் ஒன்னலர் தாக்கலால், நீள்கொ டிப்படை நெக்கிடக்
கூழை நின்றிடு கூளிகள், ஆழி யென்ன அடுத்தவே. - 54
1768 - புடைநி ரம்பிய பூதர்வந், திரைவி டாதெதிர் ஏற்றிடா
அடலின் மேதகும் அவுணமாக், கடலை நின்று கலக்கினார். - 55
1769 - ஒடிந்த தேர்கள் உலந்துபார், கிடந்த யானை கிளர்ந்தமா
மடிந்த தானவர் மாப்படை, தடிந்து லாயினா¢ சாரதர். - 56
1770 - வேறு
அதிரும் கழல்சேர் அவுணப் படைகள்
முதிரும் குறளெற் றமுடிந் திடலும்
எதிருஞ சமரத் திடையெய் தியதோர்
கதிரின் பகையங் கதுகண் டனனே. - 57
1771 - சிந்தாய் வருமிச் சிலசா ரதரே
நந்தா னையெலாம் நலிகின் றனரோ
அந்தா இனிதென் றடுதேர் கடவா
வந்தான் விரைவால் இமையோர் மறுக. - 58
1772 - கடிதாய் வருகா லொடுகா ரெழிலி
படிமே லுறவே படர்கின் றதுபோல்
கொடிதா கியவிற் குனியா முனியா
வடிவா ளிகள்தூய் அவுணன் வரலும். - 59
1773 - வண்டார் தெரியல் வலியோன் வரவைத்
தண்டா தமர்செய் திடுசா ரதர்கள்
கண்டார் எதிரே கடிதே நடவா
அண்டார் தொகைஅச் சுறஆர்த் தனரே. - 60
1774 - தருவுங் கதையுந் தருசூ லமுமால்
வரையுங் கொழுவும் மழுவும் எழுவுஞ்
சொரிகின் றனர்பல் வளனுந் தொலையா
எரியின் மிசையே இடுமந் தணர்போல். - 61
1775 - தொடுகின் றகழல் தொருசா ரதர்கள்
விடுவின் றவெலாம மிசைவந் திடலும்
அடுகின் றசினத் தவுணன் தழலில்
படுகின் றசரம் பலதூண் டினனே. - 61
1776 - பணிபட டகனற் படைதூண் டுதலும்
திணிபட் டகணத் திறலோர் வரைகள்
அணிபட் டதருக் குலமா தியெலாம்
துணிபட் டனவே துகள்பட் டனவே. - 63
1777 - கல்லும் தருவும் கதையும் பிறவும்
சொல்லும் திறலும் துகன்பட் டிடலும்
வெல்லும் தகுவன் மிகுசா ரதர்மேல்
செல்லும் படிவெங் கணைசிந் தினனே. - 64
1778 - சிந்துற் றிடுசெங் கனல்வெங் கணைகள்
பொந்துற் றிடுகின் றபுயங் கமென
வந்துற் றுடன்முற் றும்வருத் துதலால்
நொந்துற் றனர்அற் றனர்நோன் மையெலாம் - 65
1779 - விடுகின் றகனற் கணைவெந் திறலோர்
உடலம் புழைசெய் திடவுற் றனரால்
படரும் குறியோன் கதைப· றுளையா
அடுதொல் கிரவுஞ் சமதா மெனவே. - 66
1780 - தெரிகுற் றகனற் கணைசென் றுபுகப்
பொருகொற் றமகற் றியபூ தர்மிசைப்
பெருகுற் றதுசோ ரிபெருங் கருவிண்
டுருகுற் றிடுசெம் பொழுகும் படிபோல். - 67
1781 - கதிரும் கனல்வெங் கணைசா ரதர்மெய்
புதைகின் றுழிசெம் புனல்வந் தெழுவ
உதிரம் பிறவுற் றிடுதீ யுறவால்
எதிர்வந் தவைதன் னிடனுய்ப் பதுபோல். - 68
1782 - விடமெய்க் கணைமா ரிகள்தம் மிசையே
படவெய்த் தனர்சிந் தைபதைத் திடுவார்
கடவுட் கதிரைக் கனலும் கொடியோற்
குடைவுற் றனரால் உறுபூ தரெலாம். - 69
1783 - வேறு
நிலைய ழிந்து நெடுங்கடல் பாரிடம்
தொலைய முன்னம் தொலைந்திடு தானவர்
வலிதெ ரிந்து வயம்புனை தானவர்
தலைவன் முன்வந்து சார்ந்தனர் என்பவே. - 70
1784 - ஆய காலை அழிந்துவெம் பூதர்கள்
போய வாறும் புரையறு சூர்தரு
சேய வன்திறல் செய்கையும் நோக்கினான்
காயும் வெவ்வெரி கான்றிடு கண்ணினான். - 71
1785 - மலைக்கு லக்கொடி வாமத்தன் மைந்தராம்
இலக்க வீரருள் ஏனைய மைந்தருள்
தலைக்கண் நின்ற சயங்கெழு மொய்ம்பினான்
விலக்கில் தேரொடும் வெய்தென ஏகினான். - 72
1786 - ஆதி தந்த அறுமுகத் தெம்பிரான்
பாத முன்னிப் பரவிக் கடிதுபோய்
மேத குங்கதிர் வெம்பகை தானையாம்
ஓத முட்கக் குனித்தனன் ஓர்சிலை. - 73
1787 - காமர் மொய்ம்பினன் கைத்தனுக் கோட்டலும்
தாமு னிந்து தகுவர்தந் தானைகள்
தோம ரங்கதை சூலம்வை வாளிவேல்
நேமி யாதி நெருக்குற வீசினார். - 74
1788 - வீசு கின்ற வியன்படை மாய்ந்துகத்
தேசு லாவு திறலுடை மொய்ம்பினான்
ஓசை கொண்டதன் சாபம் உமிழ்ந்தென
ஆசு கங்கள் அளப்பில தூண்டினான். - 75
1789 - தூண்டும் வாளி துணிபடச் செய்தலும்
மாண்டு போயின மற்றவர் வெம்படை
ஈண்டு தானவர் யாரும் மறைந்திட
மீண்டும் வார்கணை வீசினன் வீரனே. - 76
1790 - கற்றை வார்சடைக் கண்ணுத லோன்சுதன்
கொற்ற வில்லுமிழ் கூர்ங்கணை விட்டன
பற்ற லார்மெய் படுதலும் அன்னவர்க்
கிற்ற தாள்முடி தோள்புயம் யாவுமே. - 77
1791 - ஆர ழிந்தன ஆழி அழிந்தன
தேர ழிந்தன திண்பரி கைமுகக்
கார ழிந்த கடுந்தொழில் தானவர்
போர ழிந்த புகுந்த சோரியே. - 78
1792 - மற்ற வெல்லை வலியநந் தானைகள்
இற்ற வேகொல் இவன்சிலை யாலெனாச்
செற்ற நீரொடு செங்கதிர் மாற்றலன்
ஒற்று தேர்வல வற்கிவை ஓதுவான். - 79
1793 - அடுத்து நம்படை அட்டவன் முன்னுற
விடுத்தி தேரை வலவனை வெய்தென
வடித்த விஞ்சையன் வன்மையின் அன்னதேர்
நடத்தி யார்த்தனன் நாகர் நடுங்கவே. - 80
1794 - மாண்ட கொள்கை அவுணன் வலவன்முன்
தூண்டு தேர்மிசைத் துண்ணென நண்ணியே
பூண்ட தன்சிலை கோட்டிப் பொருஞசினம்
மூண்டு மேலவன் முன்னிது கூறுவான். - 81
1795 - எஞ்ச லின்றிய என்பெருந் தானைகள்
துஞ்சும் வண்ணந் தொலைத்தனை நீயினி
உஞ்சு போகரி துன்றனை அட்டிட
வஞ்சி னங்கொடு வந்தனன் யானென்றான். - 82
1796 - என்ற லோடும் இருந்திறன் மொய்ம்பினான்
பொன்று வோரையும் போர்த்தொழில் செய்துபின்
வென்று ளோரையும் விண்ணவர் காண்குவர்
நின்று தாழ்க்கலை நேருதி போர்க்கென்றான். - 83
1797 - விளைத்த சீற்றத்து வெந்திறற் சூர்மகன்
வளைத்த வில்லிடை வார்கணை ஆயிரந்
தளைத்த பூந்தொடை வாகையன் தன்னுரந்
துளைத்தி டும்படி பூட்டுபு தூண்டினான். - 84
1798 - ஆக மூழ்கி அடற்கணை போழ்ந்துபின்
ஏக வென்றும் இளையவன் பின்னவன்
சோக மோடுதன் தொல்சிலை வாங்கியே
நாகர் போற்றிட நாணொலிக் கொண்டனன். - 85
1799 - நாணொ லிக்கொடு நஞ்சழல் கான்றெனத்
தூணி யுற்ற சுடுசரம் ஆயிரம்
வேணு யுய்த்து விரைவினில் தூண்டினான்
ஏணு டைக்கொடி யோன்புயத் தெய்தவே. - 86
1800 - ஆயி ரங்கணை அம்புயம் மூழ்கலும்
நோயு ழந்துள நொந்து நொடிப்பினில்
தீய வன்மகன் செஞ்சரம் நூற்றினால்
தூய வன்வில் துணிபடுத் தானரோ. - 87
1801 - திண்டி றற்புயன் செஞ்சிலை இற்றிட
அண்டர் அஞ்சினர் அன்னவன் ஓரயில்
கொண்டு ருத்துக் கொடுந்தொழிற் சூர்மகன்
முண்ட நெற்றியின் மொய்ம்புடன் வீசினான். - 88
1802 - வீசு வெம்படை வெய்யவற் சீறிய
நீசன் மாண்டகு நெற்றியுட் சேறலும்
மாசில் வான்மிசை வந்தெழு செக்கர்போல்
ஆசில் செம்புனல் ஆறெனச் சென்றதே. - 89
1803 - சென்ற காலையில் தீயவன் ஓரிறை
நின்று தேரின் நினைவில னாகியே
பின்றை முன்னுணர் வெய்தப் பெருந்தகை
ஒன்றொர் வெஞ்சிலை ஒல்லையில் வாங்கினான். - 90
1804 - வாங்கி வாயுவின் மாப்படை தூண்டலும்
ஆங்கவ் வெய்யனும் அப்படை யேவியே
தாங்கி வன்மை தணித்தலுந் தாவிலோன்
தீங்க னற்படை உய்த்தனன் சீறியே. - 91
1805 - மாரி யன்னகை மன்னவர் கோமகன்
ஆர ழற்படை அவ்வழி தூண்டலும்
வீர வாகு விடுத்திடு தீப்படை
போரி யற்றிப் பொருக்கென மீண்டதே. - 92
1806 - சுடுக னற்பஆஆ போந்திடச் சூர்மகன்
கடிது பின்னுங் கதிர்ப்படை தானெடா
அடுதி அன்னவன் ஆவியை நீயெனா
விடுத லோடும் விரைந்தது சென்றதே. - 93
1807 - விரைந்து சென்றதை வீரமொய்ம் புள்ளவன்
தெரிந்து சேணிடைச் செங்கதி ரோன்படை
துரந்து நீக்கலுஞ் சூர்மகன் பங்கயத்
திருந்த வன்படை ஏவினன் என்பவே. - 94
1808 - தேன்மு கத்துத் திருமல ரோன்படை
வான்மு கத்து வருதலும் ஆங்கவன்
ஊன்மு கப்படை ஒய்யெனத் தூண்டினான்
நான்மு கத்தன் அடற்கண நாயகன். - 95
1809 - தூண்டு வேதன் படைக்கலஞ் சூர்மகன்
ஆண்டு தொட்ட படையை அகற்றியே
மீண்டு வந்திட வெய்யவன் வீரன்மேல்
நீண்ட மாயன் நெடும்படை வீசினான். - 96
1810 - வீசும் அப்படை தன்னை விலக்கினான்
கேச வன்படை யால்கிளர் மொய்ம்புடை
மாசில் கேள்வியன் மற்றது நோக்கியே
நீசன் மாகன் உள்ளம் நினைகுவான். - 97
1811 - தொட்ட தொட்ட படைகள் தொலைவுற
விட்ட னன்படை மேலினி யாவையும்
அட்டு நல்கும் அரன்படை தூண்டுதறின்
ஒட்ட லன்கரத் துண்டது கண்டதே. - 98
1812 - ஆத லாரியான் அப்படை தூண்டிடல்
ஊதி யத்தை யுடைத்தன்று மாயையால்
ஏதி லானை இனியடல் செய்வதே
நீதி யென்று நினைந்தனன் நேரலன். - 99
1813 - விஞ்சை மமய வியன்முது மந்திரம்
நெஞ்ச மீது நெறிப்பட எண்ணியே
செஞ்சு டர்க்கதி ரைச்சிறை செய்திடு
வஞ்ச மைந்தன் மறைந்தனன் தேரொடும். - 100
1814 - பாங்கு முன்னரும் பின்னரும் பாய்கதிர்
தூங்கு தேரொடு துன்னலன் ஏகுறா
வீங்கும் ஆற்றல் விறலுஆ மொய்ம்பன்மேல்
வாங்கு விற்கணை மாரி வழங்கினான். - 101
1815 - சூறை யென்னத் திரிபவன் தூண்டிய
மாறில் வாளிப டப்பட வள்ளல்மெய்
ஊற தாகி உலப்பறு செம்புனல்
ஆற தென்ன வழிக்கொண்ட தாலரோ. - 102
1816 - அண்டர் நோக்கி அழிந்தனர் பாரிடா¢
தண்ட மோடு தளர்ந்தனர் சார்பினோர்
விண்டு விண்டு வெருவினர் அச்செயல்
கண்டு வீரன் கனலெனச் சீறினான். - 103
1817 - வேறு
ஒன்றொரு மாயை தன்னால் உய்ந்துமுன் வென்று போனான்
இன்றும துன்னி னானோ இனியது முடிக்க அற்றோ
நன்றிது நன்றி தம்மா நானிவன் தன்னை இன்னே
கொன்றிடு கிறபேன் என்னாக் குறித்தனன் குமரன் பின்னோன். - 104
1818 - ஈதுதன் புந்தி தேற்றி ஈங்கிவன் சூழ்ச்சி மாய்ந்து
போதரு கின்ற வாறு புரிகுவன் விரைவின் என்னாச்
சேதனங் கொண்ட துப்பின் தெய்வதப் படையைப் போற்றி
மேதகு வழிபா டாற்றி யவுணனைக் குறித்து விட்டான். - 105
1819 - பொருவருந் திறலோன் விட்ட போதகப் படையே பானாள்
இருளினை இரியல் செய்யும் இரவிபோற் சேற லோடும்
விரைவொடு விஞ்சை மாயம் விளிந்தது வேந்தன் மைந்தன்
ஒருபெருந் தேருந் தானு மாகியே உம்பர் நின்றான். - 106
1820 - தோன்றியே விண்ணின் நின்ற சூ£¢மகன் தொலைவில் ஆற்றல்
சான்றதன் மாயம் போன தன்மையுந் தடந்தோள் வீரன்
ஆன்றநல் வலியும் நோக்கி அயர்ந்தனன் அயர்ந்து முன்னம்
மான்றிடும் அமரர் யாரும் மனமகிழ் சிறந்து நின்றார். - 107
1821 - அவ்வழி வீர மொய்ம்பன் அந்தர வழிக்கண் நின்ற
மைவழி சிந்தை மைந்தன் மாண்பினை நோக்கி வஞ்ச
வெவ்வழி இனிநீ போதி யானிவண் அடுவன் என்னாக்
கைவழி வரிவில் வாங்கித் தேரொடுங் ககனஞ் சென்றான். - 108
1822 - விண்ணிடைப் புகுந்த வீரன் வெலற்கருஞ் சூரன் மைந்தன்
கண்ணுற முன்பு நேர்ந்து கணைபல கோடி தூர்த்தான்
நண்ணலன் அவனுஞ் சீறி நவின்றதோர் சாபம் வாங்கித்
துண்ணென விசிக மா£¤ சொரிந்தனன் சுரர்கள் அஞ்ச. - 109
1823 - நீரொடு கனலும் மாறாய் நெடுஞ்சினந் திருகி நின்று
போரினை இழைப்ப தென்ன இருவரும் பொருது நின்றார்
ஓரிரை அளவை தன்னில் ஒராயிர நூறு கோடி
சாரிகை திரிந்த அம்மா அனையவர் தடம்பொற் றேர்கள். - 110
1824 - ஏற்றிகல் புரியும் வீரா¢ எதிரெதிர் துரக்கும் வாளி
நாற்றிசை கொண்ட அண்டப் பித்திகை காறும் நண்ணி
மேற்றிகழ் பரிதிப் புத்தேள் வியன்கதிர் வரவு தன்னை
மாற்றியெவ் வுலகு ளோர்க்கு மலிதுயர் விளைத்த அன்றே. - 111
1825 - செற்றமொ டிவர்கள் வீசுந் திருநெடுங் கணைகள் யாண்டும்
முற்றிடு கின்ற காலத் துகுவன கவன மான்தேர்
அற்றன புரவி மாலை அவிந்தன களிற்றின் ஈட்டம்
இற்றன அவுணர் சென்னி இறுவன பூதர் யாக்கை. - 112
1826 - கிட்டுவ சேணிற் செல்வ கிளருவ கிடைத்துப் பின்னும்
முட்டுவ ஒன்றை யொன்றை இடம்வலம் முறையிற் சூழ்ந்து
வட்டணை புரிவ வானோர் மதிக்கவும் அரிய வல்லே
எட்டுள திசையும் விண்ணுந் திரிவன இருவர் தேரும். - 113
1827 - இகழுவர் முனிவர் வெஞ்சூள் இயம்புவர் வன்மை நோக்கிப்
புகழுவர் உரப்பி வீரம் புகன்றெடுத் தழைப்பர் பூசல்
மகிழுவர் நகைப்பர் வெற்றி வால்வளை முழக்கஞ் செய்து
திகழுவர் கணையின் மாரி சிந்துவர் தெழித்துச் செல்வர். - 114
1828 - புரந்தனை அட்ட செல்வன் புதல்வனும் அவுணன் சேயும்
விரைந்தெதிர் மலைந்த முறைமுறை வெகுண்டு விட்ட
வரந்தெறு பகழி மாரி அகிலமும் விரவிச் செல்லக்
கரந்தனன் இரவி திங்கள் கலைகளுங் குறைந்த தன்றே. - 115
1829 - வேறு
காலொப்பன கூற்றொப்பன கனலொப்பன கடுவின்
பாலொப்பன உருமொப்பன பணியார்புரம் பொடித்த
கோலொப்பன கதிரொப்பன குன்றந்தனைக் கொன்ற
வேலொப்பன இருவீரரும் விடலுற்றிடு விசிகம். - 116
1830 - வரைபுக்கக புயல்புக்கன வான்புக்கன மறிதெண்
டிரைபுக்கன கடல்பக்கன திசைபுக்கன திசைசூழ்
தரைபுக்கன அண்டத்துழை தனிற்புக்கன பிலத்தின்
நிரைபுக்கன இளையோனுடன் அவுணன்விடு நெடுங்கோல். - 117
1831 - திரிகின்றன இருவோர்விடு தீவாளியும் அவைபட்
டெரிகின்றன புயலின்குலம் இருநாற்றிசைக் கரியுங்
கரிகின்றன புவிவிண்டன கடல்வற்றிறின உடுமீன்
பொரிகின்றன உலகெங்கணும் புகைவிம்மிய தன்றே. - 118
1832 - பொடியோங்கியே திறன்மொய்ம்புடைப் புலவன்விடு சரத்தை
வடியோங்கிய கணைமாரியின் அருக்கன்பகை மாற்றம்
கொடியோன்மகன் விடுவாளியைக் குதைவெங்கணை மழையால்
நெடியோன்தனித் துணையானவன் அறுத்தேயுடன் நீக்கும். - 119
1833 - போரிவ்வகை இருவீரரும் பொரலுற்றிடு பொழுதில்
பாரின்றலை நின்றோர்களும் இமையோர்களும் பார்த்தார்
ஆரிங்குளர் இவரேயென அமர்செய்தவர் அடுபோர்
வீரந்தனில் எவரேயிவர்க் கிணையென்று வியந்தார். - 120
1834 - அவ்வேலையின் நூறாயிரம் அடுவெங்கணை அதனால்
மைவேலையில் வருபானுவைத் தளைபூட்டிய மைந்தன்
செவ்வேலவன் திருத்தூதுவன் தேரைப்பொடி படுத்தி
எவ்வேலையும் வெருக்கொண்டிட இடியேறென ஆர்த்தான். - 121
1835 - ஆ£¢க்கின்றுழ விறல்மொய்ம்புடை அறிவன்சினந் திருகிச்
சீர்க்கின்றவிண் மிசைமின்றுதன் சிலைகாலுற வாங்கிக்
கூர்க்குங்கணை ஓராயிரங் கொளுவித்துரந் திட்டுக்
கார்க்கின்றமெய் அவுணர்க்கிறை கடுந்தேர்துகள் கண்டான். - 122
1836 - வையந்துக ளாய்இற்றிட வானத்திடை நின்ற
வெய்யன்பெருஞ் சினஞ்செய்துவில் வீரன்தன துரத்தின்
ஐயஞ்சுநஞ் சயில்வாளிபுக் கழுந்தும்படி தூண்டிச
சையந்தனைக் கடந்தேவளர் தடந்தோள்புடைத் தா£¢த்தான். - 123
1837 - உரத்திற்புகு நெடுவாளியின் உளநொந்திடும் உரவோன்
கரத்திற்சிலை தனிலேழிரு கணைபூட்டினன் செலுத்தி
வரத்திற்றனக் கிணையில்லதொர் மன்னன்மகன் தனது
சிரத்திற்பொலி மகுடந்தனைச் சிந்தித்துகள் செய்தான். - 124
1838 - மாண்கொண்டிடு முடிசிந்திட வறியானெனத் திகழும்
ஏண்கொண்டிடு சூரன்மகன் ஏழேழ்கணை தூண்டித்
தூண்கொண்டிடு திறல்மொய்ம்புடைத தொல்லோன்உரம் பிணித்த
நாண்கொண்டிடு கவசந்தனை நடுவேதுணித் திட்டான். - 125
1839 - ஆகம்படு நெடுஞ்சாலிகை அழிவெய்தலும் அழல்கால்
நாகம்படு சடையோன்சுதன் நன்றீதென நகையாப்
பாகம்படு பிறைபோலெழு பகுவாய்க்கணை செலுத்தி
மேகம்படு மணிமேனியன் வில்லைத்துணி படுத்தான். - 126
1840 - வில்லொன்றிரு துணியாதலும் வெங்கூற்றினும் வெகுளா
அல்லொன்றிய மனத்தீயவன் அயன்முன்கொடுத் துள்ள
எல்லொன்றிய தனிவேலினை எடுத்தீங்கிவன் தன்னைக்
கொல்லென்றுரைத் துரவோன்மிசை குறித்துச்செல விடுத்தான். - 127
1841 - வேறு
விடுத்த காலையின் இத்திறந் தெரிந்திடும் விறலோன்
அடற்பெ ருங்கணை ஆயிர கோடிகள் அதனைத்
தடுத்தி டும்படி செலுத்தினன் அவையெலாந் தடிந்து
வடித்த வேற்படை வான்வழிக் கொண்டுவந் ததுவே. - 128
1842 - வந்த காலையில் அதன்வலி நோக்கியே வள்ளல்
இந்து சேகரன் உதவிய நாந்தகம் எடுத்துக்
கந்த வேளடி வழுத்தியே கருதலன் விடுத்த
குந்த வெம்படை இருதுணி பட்டிடக் குறைத்தான். - 129
1843 - குறைத்த காலையில் அமரர்கள் ஆடினர் கொடியோன்
திறத்த ராகிய அவுணர்கள் ஏங்கியே திகைத்தார்
அறத்தை யாற்றிடும் இளையவன் அங்கது நோக்கி
எறித்த ருஞ்சுடர் வாளினை உறையகத் திட்டான். - 130
1844 - அள்ளி லைத்தனி வேற்படை இறுதலும் அதனைக்
கள்ள விஞ்சைகள் பயின்னறிடு சூர்மகன் காணாத்
தௌ¢ளி தம்மவோ என்படை வலியெனச் செப்பிப்
பொள்ளெ னக்கர வாளமொன் றெடுத்தனன் பொருவான். - 131
1845 - கருமு கிற்புரை மேனியன் கரத்தில்வாள் பற்றி
விரவு மின்னுவின் கொடியென விதிர்த்துமுன் வீசி
உருமி டிக்குலத் தாவலங் கொட்டியார்த் துருத்துச்
செருமு யற்சியாற் சீரிளங் கோவின்முன் சென்றான். - 132
1846 - சென்ற காலையில் இளையவன் தன்பெருஞ் சிலைகால்
ஒன்ற வாங்கியே பகழிபல் லாயிரம் உய்த்து
வென்றி வாட்படை யானுரங் கிழித்திட விடர்செய்
குன்றில் வீழ்தரும் அருவிபோல் வீழ்ந்த குருதி. - 133
1847 - பரிதி மமற்றலன் மிசைவரு பகழியும் பாரான்
குருதி வீழ்வதும் உரம்பகிர் வுற்றதுங் குறியான்
ஒருதன் மானமுந் தானுமா யோடினன் குறுகிச்
சுருதி யன்னவன் சிலையினை வாளினால் துணித்தான். - 134
1848 - வில்லி றுத்திடு விறலினோன் மிசைபடக் கிளர்ந்து
செல்லெ னத்தெழித் தொருதன்வாள் வீசினன் திரிய
அல்ல லுற்றிடும் இமையவர் அங்கது நோக்கி
இல்லை மற்றிவன் இறந்தபின் அமரென்ப தென்றார். - 135
1849 - அங்க வெல்லையில் வீரவா குப்பெயர் அறிஞன்
திங்கள் சூடிய உலகடுந் தாதையிற் சீறித்
துங்க மிக்கதன் வாளுரீஇக் கறங்கெனச் சுற்றி
எங்கண் ஏகுதி என்றுபோய் அவுணனை எதிர்த்தான். - 136
1850 - ஏற்றெ திர்ந்திடும் எல்லையின் இரவியம் பகைஞன்
காற்றெ னச்சென்று நேர்ந்தனன் இருவருங் கலந்து
சீற்ற நீர்மையால் வாளமர் உழந்தனர் செங்கட்
கூற்றும் அங்கியுஞ் சமர்புரி கின்றகோட் பென்ன. - 137
1851 - மாறு மாறுசென் றடிமுதல் உறுப்பினை வாளால்
வேறு செய்திட எறிகுவர் அன்னது விலக்கி
ஊறு செய்திற நாடுவர் இடைதெரிந் துறாமல்
சூறை யாமெனச் சுற்றுவர் வட்டணை சூழ்வார். - 138
1852 - இன்ன தன்மையில இருவரும் வாளமர் இயற்றி
மன்னு காலையில் சூர்மகன் விஞ்சையின் வலியால்
தன்னை நேரிலா இளையவன் தடக்கைவாள் அகற்றி
அன்ன வன்திருத் தோள்மிசை எறிந்தனன் அன்றே. - 139
1853 - மாற்ற லன்கர வாளினால் எறிதலும் வள்ளல்
ஆற்றல் மொய்ம்பிடைக் குருதியா றிழிதர அதுகண்
டேற்றம் எய்தினன் சூ£¢மகன் இவன்றனக் கிளையோன்
தோற்றி டுங்கொலென் றிரங்கினர் வானவர் துளங்கி. - 140
1854 - அன்ன காலையில் இளையவன் அறுமுகத் தமலன்
பொன்னின் சேவடி புந்தியில் உன்னியே புகழ்ந்து
மின்னு வானதன் வாட்படை வீசியே விரைந்து
துன்ன லன்வலத் தோளினை வலியொடு துணித்தான். - 141
1855 - துணித்த காலையில் வலதுகை தன்னொடு தொடர்ந்த
பணித்த னிச்சுடர் வாளினை இடக்கையால் பறித்து
மணித்த சும்புகொள் மொய்ம்புடை அவுணர்கோன் மற்றும்
தணிப்ப ருஞ்சினந் தன்னொடு முயன்றனன் சமரே. - 142
1856 - தீய வன்றனி முயற்சியை நோக்கியே திறலோன்
தூய வள்கொடே அன்னவன் இடக்கையைத் துணிப்ப
மாயை தொல்படை விடுத்தி வேனென மதித்தான்
ஆய காலையில் அறிஞனும் அவன்தலை அறுத்தான். - 143
1857 - வாளில் அங்கவன் அடுதலுஞ் சென்னியும் வரைநேர்
தோளும் யாக்கையும் வீழ்ந்தன சூரியன் பகைஞன்
நாளு லந்தனன் அவனுயிர் வௌவியே நடுவன்
ஆளி மொய்ம்பனை வழுத்தியே தென்புலத் தடைந்தான். - 144
1858 - சூரன் மாமகன் முடிந்தது முனிவருஞ சுரரும்
ஆரும் நோக்கியே ஆடினா¢ பாடினர் ஆர்த்தார்
வீர வீரன்நீ யாமென இளவலை வியந்து
மாரி யாமென அவன்மிசை பொழிந்தனர் மலர்கள். - 145
1859 - நுவல ருந்திறல் சூர்மகன் பட்டது நோக்கி
அவலம் எய்தியே அழிந்திடு பூதர்கள் ஆத்துத்
தவல ருந்திறல் வீரனை வழுத்தினர் தனது
கவலை நீங்கியே களித்தனன் செங்கதிர்க் கடவுள். - 146
1860 - அன்ன காலையில் வீரவா குப்பெயா¢ அறிஞன்
தன்னு ளஞ்சிறந் தகலிரு விசும்பினைத் தணவா
இந்நி லத்திடை வந்துதன் துணைவர்தம் மினத்தைத்
துன்னி யாங்கவர் புகழ்ந்திட இனையன சொல்வான். - 147
1861 - ஆன தொல்பெரு மாயையால் நம்மைமுன் அலைத்த
பானு கோபனை அட்டனம் பகர்ந்தசூ ளுறவு
தானு முற்றிய தால்இனி எம்பிரான் தன்முன்
சேனை தன்னொடு மேவுதுஞ் செல்லுதி ரென்றான். - 148
1862 - மிக்க வீரனித் தன்மையை உரைத்தலும் வினவி
முக்கண் நாயகன் குமரவேள் இணையடி முன்னம்
புக்கு நென்னலுந் தொழுதில நன்றுநீ புகன்றாய்
தக்க தேயிது என்றனர் துணைவராந் தலைவர். - 149
1863 - ஆங்கவ் வெல்லையின் நம்பிதன் இளைஞரும் அடுபோர்
தாங்கு பூதருந் தானையந் தலைவரும் தழுவிப்
பாங்கர் வந்திடப் பொருகளம் ஒருவியே படாந்து
பூங்கி டங்குசூழ் பாசறை இருக்கையுட் புகுந்தான். - 150
1864 - சோதி நீடிய பாசறை புகுந்திடு தூயோன்
பூதர் தம்மொடுந் துணைவர்கள் தம்மொடும் போந்து
காத லாகியே அறுமுகத் தையனைக் கண்டு
பாத பங்கயந் தன்னிடைப் பனமுறை பணிந்தான். - 151
1865 - பரிந்து பன்முறை வணங்கியே எழுதலும் பகவன்
தெரிந்து நோக்கிநீ சூர்மக னோடுபோர் செய்து
வருந்தி ஆங்கவற் செற்றனை ஆதலின் மகிழ்ந்தாம்
விரைந்து கேண்மதி நல்குதும் வேண்டுவ தென்றான். - 152
1866 - என்று மூவிரு முகமுடைப் பண்ணவன் இயம்ப
நின்று போற்றிடும் இளையவன் எம்பிரான் நின்னை
அன்றி யான்செய்த செயலிலை ஆயினும் அடியேற்
கொன்று மற்றிவண் அருளிய வேண்டுமென் றுரைப்பான். - 153
1867 - கோல நீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன்
மேலை இந்திரன் அரசினைக் கனவினும் வெ·கேன்
மால யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன்
சால நின்பதத் தன்பையே வேண்டுவன் தமியேன். - 154
1868 - அந்த நல்வரம் முத்தியின் அரியதொன் றதனைச்
சிந்தை செய்திடு தவத்தரும் பெறுகிலர் சிறியேன்
உய்ந்தி டும்வகை அருள்செய வேண்டுமென் றுரைப்ப
எந்தை கந்தவேள் உனக்கது புரிந்தனம் என்றான். - 155
1869 - உடைய தொல்விறல் வாகுவுக் கிவ்வரம் உதவிப்
புடையி னில்தொழு துணைவர்க்கு நல்லருள் புரியா
அடைய மற்றவர் இருக்கைகள் வைகுவான் அருளி
விடைபு ரிந்தனன் யாவர்க்கு மேலதாம் விமலன். - 156
1870 - செங்க திர்ப்பகை அட்டவன் முதலிய திறலோர்
புங்க வன்றனைத் தொழுதுதம் இருக்கையிற் போனார்
இங்கு மற்றிது நின்றிட அவுணர்தம் இறைவற்
கங்கண் உற்றிடு செய்கையை மேலினி அறைவாம். - 157
1871 - வேறு
ஈதிவர் புரிந்ததேல் இறைவன் தன்னையுங்
காதுவர் என்பது கருத்துட் கொண்டெழா
வாதுவர் கவனமா வழிக்கொண் டாலெனத்
தூதுவர் ஓடினர் துளங்கு நெஞ்சினார். - 158
1872 - மதிதொடு கடிமதில் மகேந்தி ரப்புரத்
ததிர்தரு முரசொலி யவிந்து துன்பினான்
முதிர்வுறும் அழுகுரல் முழங்கும் வீதிபோய்க்
கதுமென அரசவைக் களத்துள் ஏகினார். - 159
1873 - துன்னிய பெரும்புனல் தூண்டு கண்ணினர்
உன்னருந் துயரினர் உயிர்க்கு நாசியர்
மன்னவன் இணையடி வணங்கி உன்மகன்
முன்னுறு தூதனால் முடிவுற் றானென்றார். - 160
1874 - தாழ்ந்தவர் மொழிந்திடு தன்மை கேட்டலுஞ்
சூழ்ந்திடு திருவுடைச் சூரன் என்பவன்
ஆழ்ந்திடு துயர்க்கடல் அழுந்தி ஓவெனா
வீழ்ந்தனன் புரண்டனன் உயிர்ப்பு வீங்கினான். - 161
1875 - நக்குறு சுடரென நடுககம் உள்ளுற
மிக்கெழு குருதிநீர் விழிகள் கான்றிடத்
தொக்குடல் வியர்ப்பொடு துளக்கங் கொண்டிட
அக்கணம் மயங்கினன் அறிவு சோர்ந்துளான். - 162
1876 - தளர்ந்துடல் வெதும்புறத் தன்கண் சோர்வுற
உளந்திரி வுறஉயிர் ஊசல் ஆடிட
விளிந்தவ ராமென வீழ்ந்து மான்றவன்
தௌ¤ந்தனன் இரங்கினன் இனைய செப்பினான். - 163
1877 - வேறு
மைந்தவோ என்றன் மதகளிறோ வல்வினையேன்
சிந்தையோ சிந்தை தெவிட்டாத தௌ¢ளமுதோ
தந்தையோ தந்தைக்குத் தந்தையிலான் கொன்றனனோ
எந்தையோ சின்னை இதற்கோ வளர்த்தனனே. - 164
1878 - வன்னச் சிறுவர்பலர் மாய்ந்தார் அவர்மாய்ந்து
முன்னைத் துணையென் றுளங்கொண் டிருந்தனனால்
என்னைத் தனியேவைத் தெந்தையுமே குற்றனையேல்
பின்னைத் தமியேன் பிழைக்கும் படிஉண்டோ. - 165
1879 - ஒன்னார் சிறையைவிடின் உய்வுண்டாம் என்றுமுனஞ்
சொன்னாய் அதுவும் இகழந் துன்னைத் தோற்றனனால்
என்னாம் இனியதனை எண்ணுவதி யாவருக்குந்
தன்னால் வராத வினையுளதோ தக்கோனே. - 166
1880 - நன்றீ தலசமர்க்கு நண்ணுவது நண்ணலர்மேல்
என்றீர மாகஇசைத் தாயான் ஏகாமல்
சென்றீ எனவே செலுத்தியுனைப் போக்கினனால்
ஒன்றீங் குளதோ பிழையுன் மிசைஐயா. - 167
1881 - கைப்பேபப கொண்டு கடவுளர்க ளெல்லோரும்
முப்போதும் வந்து முறையால் வழிபடுவார்
ஒப்போதல் இல்லா உனதுமே லுள்ளபகை
இப்போ துடன்நீங்கி யேமுற் றிருந்தாரோ. - 168
1882 - உன்னா ணைக்கஞ்சி உறங்கா துழன்றிடுமால்
இந்நாள் தனிலநீ இறந்தா யெனமகிழ்ந்து
பன்னாகப் பாயல் படுத்திருவர் கால்வருடத்
தொன்னாள் எனவே கவலையின்றித் துஞ்சானோ. - 169
1883 - நந்தா னவர்குலத்து நாயகமே நண்ணினர்க்கோர்
சிந்தா மணியே திருவேயென் தௌ¢ளமுதே
எந்தாய் தனியேபோய் எங்கிருந்தாய் அங்கேயான்
வந்தாலும் உன்றன் மதுரமொழ கேட்பேனோ. - 170
1884 - சோராத சூழச்சித் துணைவர்சிறார் எல்லாருஞ்
சேரார் பொருதலைப்பச் சென்றொழிந்து போயினரால்
ஆராய்ந் தெனதுதுயர் ஆற்றுவதற் காருமிலை
வாராய் புதல்வா கடிதோடி வாராயே. - 171
1885 - நீடித் திகழ்கதிரால் தீண்டி நினதுசிறை
வீடிச் சதுர்முகத்தோன் வேண்டிடநீ விட்டபின்னர்
வாடித் தளர்ந்து வசைபடைத்த வெய்யவனார்
ஓடிக் ககனத் துளமகிழ்ந்து செல்லாரோ. - 172
1886 - பற்றார் அடித்தொண்டு பேணிப் பரந்துழலும்
ஒற்றா னவனோ உனைத்தான் அடவல்லான்
அற்றார் தமதுடலுக் காவியாயச் சென்றிடவே
கற்றா யேல்என்னை மறந்திடவுங் கற்றாயோ. - 173
1887 - மாகொற்ற மைந்தன் மடிந்தான் எனக்கேட்டும்
ஏகிற் றிலையால் இருக்கின்ற தின்னும்உயிர்
வேகுற்ற துள்ளம் மிகுதுயரம் வந்தவழிச்
சாகுற்ற தோர்வரமுஞ் சங்கரன்பாற் பெற்றிலனே. - 174
1888 - வெற்றி யுளமதலை வீந்தால் விளியாமல்
மற்றும் எனதுயிரும் வைகும் வலிதாகச்
செற்றி டலும்ஆகா தென்செய்கேன் அழியாமல்
பெற்ற வரமும் பிழையாய் முடிந்ததுவே. - 175
1889 - ஆவியே கண்ணே அரசே உனைச்சமருக்
கேவியே இவ்வா றிரங்குதற்கோ இங்கிருந்தேன்
கூவியே கொண்டுசெலுங் கூற்றுவன்ஒற் றோஅறியேன்
பாவியேன் இந்தப் பதிபுகுந்த தூதுவனே. - 176
1890 - கூற்றோன் நகரில் குறுகினையோ அன்னதன்றேல்
வேற்றோர் இடந்தன்னில் மேவினையோ யானொன்றுந்
தேற்றேன் தனியே தியங்குகின்றேன் இத்துயரம்
ஆற்றேன் அரசேயென் னாருயிரரே வாராயோ. - 177
1891 - என்னா இரங்கி இறைவன் வருந்துதலும்
அன்னான் உழையில் அவுணர் சிலரோடித்
துன்னார் களத்தில் துணிவுற்ற சீர்மதலை
பொன்னார் உடலங் கொடுபுலம்பிப் போந்தனரால். - 178
1892 - வேறு
சேந்த குஞ்சிச் சிலதர்செஞ் ஞாயிறு
பாய்ந்த அண்ணல் படிவ மிசைக்கொளா
வேந்தன் முன்னுற உய்த்து விரைந்தவன்
பூந்தண் சேவடி பூண்டு புலம்பினார். - 179
1893 - அண்டர் தம்மை அருஞ்சிறை வீட்டியே
தண்ட கஞ்செய் தனிக்குடை மன்னவன்
துண்ட மாகிய தோன்றல்தன் யாக்கையைக்
கண்ட ரற்றிக் கலுழ்ந்து கலங்கினான். - 180
1894 - அற்ற மைந்தன் சிரத்தினை யாங்கையால்
பற்று நெல்லெழில் பார்த்திடுங் கண்களில்
ஒற்றும் முத்தம் உதவும் உரனிலாப்
புற்ற ராவில் உயிர்க்கும் புரளுமால். - 181
1895 - துஞ்ச லாகித் துணிவுற்றுந் தெவ்வர்மேல்
நெஞ்சு கொண்ட நெடுஞ்சினந் தீர்கிலை
விஞ்சு மானமும் வீரமும் வன்மையும்
எஞ்சு மேகொல் இனிஉன்னொ டென்னுமால். - 182
1896 - கையி ªª£ன்றைக் கதுமெனப் பற்றிடாச்
செய்ய கட்படு செம்புனல் ஆட்டியே
வெய்ய வற்கொடு விண்ணினுந் தந்தகை
ஐய ஈதுகொ லோவென் றரற்றுமே. - 183
1897 - வாள ரம்படு வாளிகள் மூழ்கலில்
சார ரங்க ளெனப்பழை தங்கிய
தோளை மார்பினை நோக்கும் தொலைவிலா
ஆளை நீயல தாருள ரேயெனும். - 184
1898 - பாறு லாய பறந்தலை தன்னிடை
வேறு வேறது வாகநின் மெய்யினைக்
கூறு செய்தவன் ஆவி குடித்தலால்
ஆறு மோவென் னகததுயர் என்றிடும். - 185
1899 - மூண்ட போ£¢த்தொழில் முற்றிய என்மகன்
ஈண்டு வந்ததொர் தூதுவன் எற்றிட
மாண்டு ளானென் துரைத்திடின் மற்றியான்
ஆண்ட பேரர சாற்றல்நன் றேயெனும். - 186
1900 - சிரத்தை மார்பினைச் செங்கையைத் தொன்மைபோல்
பொருத்தி நோக்கிப் புரளுமென் புந்தியை
வருத்தும் ஆகுலம் மற்றது கண்டுநீ
இருத்தி யோவுயி ரேயின்னும் என்றிடும். - 187/tr>
1901 - மருளும் அங்கை மறிக்கும் மதலையை
அருளின் நோக்கி அழும்விழுஞ் சோர்வுறும்
புரளும் வாயிற் புடைக்கும் புவியிடை
உருளும் நீட வுயிர்க்கும் வியர்க்குமே. - 188
1902 - மன்னர் மன்னவன் மற்றிது பான்மையால்
இன்னல் எய்தி இரங்கலும் அச்செயல்
கன்னி மாநகர்க் காப்பினுள் வைகிய
அனனை கேட்டனள் ஆகுலம் எய்தினாள். - 189
1903 - நிலத்தில் வீழ்ந்து சா¤ந்து நெடுமயிர்
குலைத்த கையள் குருதிபெய் கண்ணினள்
அலைத்த வுந்தியள் ஆற்றருந் துன்பினள்
வலைத்த லைப்படு மஞ்ஞையின் ஏங்கினாள். - 190
1904 - அல்லல் கூர்ந்த அவுணன்றன் காதலி
தொல்லை வைகிய சூழலை நீங்கியே
இல்லை யாகிய என்மகற் காண்பனென்
றொல்லை ஆவலித் தோடினள் ஏகினாள். - 191
1905 - மாவ லிக்கு மடங்கெலொப் பான்தனிக்
காவ லிக்குத் துயர்வந்த கன்னிமீர்
நாவ லிக்ண நண்ணுதிர் என்றுகூய்
ஆவ லித்தனர் ஆயிழை மாரெலாம். - 192
1906 - வாங்கு பூநுதல் மன்னவன் தேவிதன்
பாங்கர் மங்கையர் பற்பல ருங்குழீஇக்
கோங்க மன்ன முலைமுகங் கொட்டியே
ஏங்கி யேதுயர் எய்தி இரங்கினார். - 193
1907 - இந்தி ரைக்கு நிகர்வரும் ஏந்திழை
அந்த மில்லதொ ராயிழை மாரொடு
முந்தி யேகி முடிந்து துணிந்திடு
மைந்தன் மீமிசை வீழ்ந்து மயங்கினாள். - 194
1908 - மயங்கி னாள்பின் மனந்தௌ¤ வெய்தினாள்
உயங்கி னாள்மிக ஓவென் றரற்றினாள்
தியங்கி னாள்உரும் ஏறு திளைத்திடு
புயங்க மென்னப் புரண்டு புலம்பினாள். - 195
1909 - வேறு
வெய்யோன் என்றூழ் தீண்டுத லோடும் விண்ணிற்போய்க்
கையோ டன்னாற் பற்றினை வந்தென் கண்முன்னம்
மொய்யோ டன்று வெஞ்சிறை செய்த முருகாவோ
ஐயோ கூற்றுக் கின்றிரை யாவ தறியேனே. - 196
1910 - பண்டே வானஞ் செந்தழல் மூட்டிப் பகைமுற்றுங்
கொண்டே சென்றாய் அப்பகல் உன்றல் கோலத்தைக்
கண்டேன்இன்றே இக்கிடை தானுங் காண்பேனோ
விண்டேன் அல்லேன் இவ்வுயிர் தன்னை வினையேனே. - 197
1911 - செந்தேன் மல்கும் பூமகள் செங்கைக் கிளியொன்று
முந்தே நின்னை வேண்டிட மொய்ம்பால் அதுவாங்கித்
தந்தாய் நொந்தேற் கின்றொரு மாற்றந் தருகில்லாய்
அந்தோ அந்தோ செய்வகை ஒன்றும் அறியேனே. - 198
1912 - பாபத் தாலோ விண்ணவ ரானோர் பலர்கூறுஞ்
சாபத் தாலோ யாரினும் மேலாந் தனிமூவர்
கோபத் தாலோ எவ்வகை யாலோ குறியேன்யான்
சோபத் தீயால் வாடினன் நின்னைத் தோற்றேனே. - 199
1913 - பொன்போல மேனிக் கந்தனை இவ்வூர் புகுவித்துக்
கொன்போ£¢ மூட்டி மைந்தரை எல்லாங் கொல்வித்துத்
துன்போ டிந்நாள் நீயும் இறப்பச் சூழ்ந்தாரே
என்போ லாக வானவர் மாதர் எல்லோரும். - 200
1914 - வான்றா வுற்ற வச்சிர மொய்ம்பன் வடவைத்தீக்
கான்றா லிக்கும் வன்னி முகத்துக் கழல்வீரன்
மூன்றா நூற்றுப் பத்தினர் யார்க்கும் முதல்வந்த
தோன்றா லென்றே நின்னை இறைஞ்சிச் சூழ்ந்தாரோ. - 201
1915 - துன்றேர் பெற்ற மெய்யொடு புந்தி துணிவாகச்
சென்றே வானிற் புக்கனை நின்பாற் செலும்வண்ணம்
ஒன்றே உள்ளந் தான்துணி யாதால் உலைவெய்து
நன்றே நன்றே சிந்தையும் யானும் நண்பம்மா. - 202
1916 - கருந்தேன் மொய்த்த வண்டென மின்னார் கட்கெல்லாம்
விருந்தே யாகும் நின்னடை காணும் விதியற்றேன்
மருந்தே அன்னாய் நின்னை இழந்தேன் மற்றிங்ஙன்
இருந்தேன் அல்லேன் துஞ்சினன் அன்றோ இனியானே. - 203
1917 - நையா நிற்குந் தேவர் தமக்கு நனிதுன்பஞ்
செய்யா நிற்றல் நன்றல என்றேன் அதுதேரா
தையா நின்னைத் தோற்றனன் மன்னன் அவனுந்தான்
உய்வான் கொல்லோ தன்னுயிர் தானும் ஒழியாதே. - 204
1918 - வேறு
என்றிவை பன்னித் தேவி இரங்கினள் இரங்க லொடு
நின்றிடு துணைவி மாரும் நீடுதொல் கிளைஞர் யாரும்
கண்றொழி புனிற்கு என்னக் கதறினர் காமர் மூதூர்
வென்றியை நீங்கி அந்நாள் விழுமநோய் மிக்க தன்றே. - 205
1919 - அன்னது காலை தன்னில் அவுணர்கோன் இரக்கம் நீங்கிப்
பன்னருஞ் சிறப்பின் மிக்க பதுமையே முதலோர் தம்மைத்
தொன்னிலை இருக்கை உய்த்துத் துண்ணெனச் சீற்றங் கொண்டு
தன்னுழைத் தொழுது நின்ற தானவர்க் கிதனைச் சொல்வான். - 206
1920 - மாற்றலர் தொகையை யெல்லாம் வல்லையில் இன்றே செற்றுச்
சீற்றமாய்க் குருதி வீட்டித் தீமகம் ஒன்றை ஆற்றி
ஈற்றுறு மைந்தன் தன்னை எழுப்புவன் இந்த மெய்யை
வீற்றொரு சாரியின் இட்டு விடாதுபோற் றிடுதி ரென்றான். - 207
1921 - அன்னது பலருங் கேளா அழகிதென் றெடுத்து மைந்தன்
பொன்னுடல் ஒருசார் உய்த்துப் பொற்றினர் போற்ற லோடும்
மன்னவன் வெகுண்டு நந்தம் மாற்றலர் தொகையை யெல்லாம்
என்னிளை யோனுக் கூணா அளிப்பனென் றெண்ணங்கொண்டான். - 208
1922 - தும்பையஞ் சுழியல் வேய்ந்த சூர்முதல் இவ்வா றுன்னிச்
செம்புன லொழுகு பைங்கண் தூதரில் சிலரை நோக்கி
அம்புதி வடாது பாங்கர் ஆசுரத் தரசு செய்யும்
எம்பியை வல்லை ஓடிக் கொணருதிர் ண்டை என்றான். - 209
ஆகத் திருவிருத்தம் - 1922
---------
This file was last updated on 16 Jan. 2008